என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ப.சிதம்பரம்"

    • ராகுல்காந்தி பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என்று ஞானேஷ் குமார் தெரிவித்தார்.
    • எதிர்க்கட்சித் தலைவருக்கு சவால் விடக் கூடாது என மூவரும் பேசியுள்ளனர்.

    நிதிஷ் குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம்-பா.ஜ.க. கூட்டணி ஆட்சி நடைபெறும் பீகாரில் அக்டோபரில் சட்டசபை தேர்தல் நடக்கிறது. இதையொட்டி அங்கு தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை மேற்கொண்டது.

    அதன்படி 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டனர். இதற்கு காங்கிரஸ்-ராஷ்ட்ரீய ஜனதா தளம் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்தன

    அப்போது இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார், "வாக்குத் திருட்டு விவகாரத்தில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும்" என்று தெரிவித்தார்.

    இந்நிலையில், ஞானேஷ் குமாருக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் பல கேள்விகளை எழுப்பி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

    அவரது பதிவில், " வாக்குத் திருட்டு விவகாரத்தில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பேசியதை முன்னாள் தேர்தல் ஆணையர்கள் S.Y.குரேஷி, O.P.ராவத், அசோக் லவாசா ஆகியோர் கடுமையாக விமர்சித்ததுள்ளனர்.

    குடிமகனோ, தேர்தலில் பங்களிப்பாளராக இருப்பவரோ குற்றச்சாட்டு முன்வைக்கும்போது அதை விசாரிப்பதே தேர்தல் ஆணையத்தின் வேலையே தவிர, எதிர்க்கட்சித் தலைவருக்கு சவால் விடக் கூடாது என மூவரும் பேசியுள்ளனர்.

    மதிக்கத்தக்க இந்த மூன்று பேரது விமர்சனத்திற்கு ஞானேஷ் குமார் என்ன பதில் சொல்லப்போகிறார்?" என்று பதிவிட்டுள்ளார்.

    • தேர்தல் ஆணையம் நாட்டில் தேர்தல் நடத்துவதற்கான ஒரு சுதந்திரமான அமைப்பு மட்டும் தான்.
    • சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலுக்கு சரியான வாக்காளர் பட்டியல் அவசியம்.

    புதுடெல்லி:

    தேர்தல் ஆணையம் நாட்டில் தேர்தல் நடத்துவதற்கான சுதந்திரமான அமைப்பு மட்டும்தான். அது கோர்ட்டு அல்ல என முன்னாள் நிதி மந்திரி ப.சிதம்பரம் தனது எக்ஸ் வலைதளத்தில் தேர்தல் ஆணையத்தை கடுமையாக விமர்சித்துள்ளார்.

    வாக்காளர் பட்டியல் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர்களில் ஒருவரும் பாராளுமன்ற எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி கடந்த வாரம் பத்திரிகையாளர்களை சந்தித்தார்.

    அப்போது கடந்த காலங்களில் நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. கட்சி வாக்குகளை திருடித்தான் ஆட்சியைப் பிடித்தது.

    குறிப்பாக கர்நாடகாவின் மத்திய தொகுதியில் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட போலி வாக்காளர்கள் ஓட்டுப்போட்டதாகவும், ஒருவரே 2 முறை வாக்களித்ததாகவும் ஆதாரங்களுடன் விளக்கினார்.

    இந்த வாக்கு திருட்டில் பா.ஜ.க.விற்கு தேர்தல் ஆணையம் உடந்தையாக செயல்பட்டதாகவும் தேர்தல் ஆணையத்தை கடுமையாக குற்றம் சுமத்தி பேசியிருந்தார்.

    ராகுல் காந்தியின் பேச்சுக்கு பா.ஜ.க. கட்சியினரிடம் இருந்தும், தேர்தல் ஆணையத்திடம் இருந்தும் எதிர்ப்பு குரல் வந்தன. பெங்களூருவில் ராகுல் காந்தி சமீபத்தில் நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பில் தேர்தல் ஆணையத்தின் தரவுகள் என சில ஆவணங்களை காட்டினார். அதில் ஒரு வாக்காளர் 2 முறை வாக்களித்ததாக அந்த தரவில் கூறப்பட்டுள்ளது.


    தேர்தலில் போலி வாக்குப் பதிவு நடந்திருப்பது உண்மையென்றால், வாக்கு திருட்டு நடந்திருப்பது உண்மை என்றால் ராகுல் காந்தி அவரது குற்றச்சாட்டுகளுடன் உறுதிமொழி பத்திரத்தை சமர்ப்பிக்க வேண்டும். இல்லையென்றால் நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது.

    இந்த நிலையில் ராகுல் காந்திக்கு ஆதரவாக தேர்தல் ஆணையத்தை கடுமையாக விமர்சித்து காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் நிதி மந்திரி ப.சிதம்பரம் தனது எக்ஸ் பக்கத்தில் செய்தி ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    தேர்தல் ஆணையம் நாட்டில் தேர்தல் நடத்துவதற்கான ஒரு சுதந்திரமான அமைப்பு மட்டும் தான். அதற்கு நியாமான முறையில் தேர்தல் நடத்துவதற்கான பொறுப்பு உள்ளது. மாறாக கேள்வி கேட்பதற்கு அது கோர்ட்டு அல்ல.

    1960-ம் ஆண்டு வாக்காளர் பதிவு விதிகள் 20(3)(பி) கீழ் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படுவதற்கான உரிமைக் கோரலை ஏற்றுக்கொள்வது அல்லது நிராகரிப்பது குறித்த வழக்குக்கு மட்டுமே இது பொருந்தும்.

    ஒரு முழு சட்டமன்றத் தொகுதியின் வாக்காளர் பட்டியலில் பெரிய அளவில் முறைகேடு நடந்ததாகக் கூறப்படும் பட்சத்தில் இது பொருந்தாது என்று பதிவிட்டுள்ளார்.

    தேர்தல் ஆணையத்தின் கருத்துக்கு ராகுல் காந்தியும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலுக்கு சரியான வாக்காளர் பட்டியல் அவசியம். தேர்தல் ஆணையத்திடம் எங்கள் கோரிக்கை தெளிவாக உள்ளது. வெளிப்படையாக இருங்கள், டிஜிட்டல் வாக்காளர் பட்டியலை வெளியிடுங்கள், இதனால் மக்களும் கட்சிகளும் அவற்றைத் தணிக்கை செய்ய முடியும்" என்று ராகுல் காந்தி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

    • அதிக நிதி கொடுத்தாகவும் இருப்பினும் இங்கு சிலர் அழுதுகொண்டிருக்கிறார்கள் என்றும் பேசியிருந்தார்.
    • பொருளாதார அளவுகோல்' என்பது முந்தைய ஆண்டுகளை விட, நடப்பாண்டில் நிச்சயம் அதிகமாகத்தான் இருக்கும்.

    இன்று ரமேஷாரத்தில் பாம்பன் புதிய பாலத்தை திறந்து வைத்தபின் நடந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி தமிழகத்துக்கு முந்திய ஆட்சிகளை விட அதிக நிதி கொடுத்தாகவும் இருப்பினும் இங்கு சிலர் அழுதுகொண்டிருக்கிறார்கள் என்றும் பேசியிருந்தார்.

    இந்நிலையில் மோடியின் பேச்சுக்கு முன்னாள் மத்திய நிதியமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் எதிர்வினை ஆற்றியுள்ளார்.

    அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "2004-14 ஆம் ஆண்டில் வழங்கப்பட்டதை விட 2014-24 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டிற்கு அதிக நிதியை வழங்கியதாக பிரதமரும் மத்திய அமைச்சர்களும் தொடர்ந்து கூறி வருகின்றனர்.

    உதாரணமாக, தமிழ்நாட்டில் ரெயில்வே திட்டங்களுக்கு தனது அரசு முன்பை விட ஏழு மடங்கு அதிகமாக நிதியை வழங்கியுள்ளதாக பிரதமர் கூறினார். 'பொருளாதார அளவுகோல்' என்பது முந்தைய ஆண்டுகளை விட, நடப்பாண்டில் நிச்சயம் அதிகமாகத்தான் இருக்கும்.

    முதல் ஆண்டு பொருளாதாரம் படிக்கும் மாணவரைக் கேட்டால் கூட இதைச் சொல்வார். GDP, ஒன்றிய பட்ஜெட், அரசின் செலவினம் என அனைத்தும் ஒரு ஆண்டை விட அடுத்த ஆண்டில் அதிகமாகத்தான் இருக்கும்.

    எண்கள் என்ற அடிப்படையில் அதிகமாக இருப்பது முக்கியமல்ல. ஒட்டுமொத்த GDP, செலவினத்தின் விகிதாச்சார அடிப்படையில் அதிக நிதி வழங்கப்பட்டுள்ளதா? என்பதே முக்கியம்" என்று தெரிவித்துள்ளார்.

    • கேரளம், தமிழ்நாடு, மேற்கு வங்காளம் ஆகிய மூன்று மாநிலங்களுக்கு முறையே ரூ.328 கோடி, ரூ.2151 கோடி, ரூ.1745 கோடி மத்திய அரசு மறுத்திருக்கிறது.
    • இந்தத் தொகைகளை உடனடியாகக் கொடுக்க வேண்டும் என்று நாடாளுமன்றக் கல்வித்துறை நிலைக்குழு அறிவுறுத்தியிருக்கிறது.

    காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், மத்திய முன்னாள் அமைச்சரும், மாநிலங்களவை எம்.பி.யுமான ப.சிதம்பரம் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

    கேரளம், தமிழ்நாடு, மேற்கு வங்காளம் ஆகிய மூன்று மாநிலங்களுக்கு முறையே ரூ.328 கோடி, ரூ.2151 கோடி, ரூ.1745 கோடி மத்திய அரசு மறுத்திருக்கிறது.

    இந்தத் தொகைகளை உடனடியாகக் கொடுக்க வேண்டும் என்று நாடாளுமன்றக் கல்வித்துறை நிலைக்குழு அறிவுறுத்தியிருக்கிறது.

    தேசிய கல்விக் கொள்கையுடன் இந்தத் தொகைகளை அளிப்பதைப் பிணைக்கக்கூடாது என்றும் நிலைக்குழு அறிவுறுத்தியிருக்கிறது.

    இந்த அறிவுரையை ஏற்று பணங்களை மத்திய அரசு அளிக்கப்போகிறதா அல்லது நிலைக்குழுவின் அறிவுரையைப் புறக்கணிக்கப் போகிறதா என்று பார்க்கலாம்.

    இவ்வாறு ப.சிதம்பரம் தெரிவித்துள்ளது.

    • ஆட்சியில் இருக்கும் போது சிந்தித்து இருந்தால் செயல்படுத்தி இருக்கலாம்.
    • அது பெரிய சிதம்பர ரகசியமாக இருப்பது ஏன் என்று எனக்கு தெரியவில்லை.

    புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியுள்ளதாவது:

    எப்படி புற்று நோய் உடலுக்கு கெடுதலோ அதுபோல தீவிரவாதம் என்பது தேசத்தின் புற்று நோய். அதை அப்படியே  விட்டு விட்டால், அது தேசம் முழுவதும் பரவி விடக் கூடாது. அதனால்தான் என்.ஐ.ஏ.அலுவலகம் எல்லா மாநிலங்களிலும் அமைக்கப்படும் என்று உள்துறை அமைச்சர்கள் மாநாட்டில் மத்திய உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பு ஒரு ஆரோக்கியமான சூழலை உருவாக்கும்.

    மத்திய மாநில அரசுகள் இணைந்துதான் தீவிரவாதத்தையும், தீவிரவாத முயற்சிகளையும் கட்டுப்படுத்த முடியும். ஆகவே இதில் அரசியல் புகுத்தாமல், எந்த சமூகத்தை சார்ந்தவர், எந்த இயக்கத்தை சார்ந்தவர் எந்த பின்புலத்தை சார்ந்தவர் என்று இல்லாமல் தீவிரவாதத்தை வேரடி மண்ணோடு வீழ்த்த வேண்டும். அப்போதுதான் நாட்டில் உள்ள எல்லோருக்கும் பாதுகாப்பை தர முடியும். ஒட்டுமொத்தமாக தீவிரவாதம் இல்லாத பாரத தேசம் உருவாக்கப்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

    அப்போது வெளிநாடுகளில் எல்லாம் இரண்டு முதல் 4 மொழிகள் அரசாட்சி மொழியாக இருக்கும் போது இந்தியாவில் மட்டும் ஏன் ஒரு மொழியை தேசிய மொழியாக அறிவிக்க வேண்டும் என முன்னாள் நிதி மந்திரி ப.சிதம்பரம் கேள்வி எழுப்பி உள்ளதாக செய்தியாளர்கள் சுட்டிக்காட்டினர். அதற்கு தமிழிசை கூறியதாவது:

    சிதம்பரம் இன்னைக்குத்தான் அரசியலுக்கு வந்தாரா...நேற்றுதான் வந்தாரா...முந்தாநாள் வந்தாரா...பல ஆண்டுகளாக இந்த நாட்டை ஆண்ட அரசாங்கத்தில் அங்கமாக அவர் இருந்து வந்துள்ளார். இதை ஏன் அன்றைக்கு அவர் சிந்திக்கவில்லை என்பதுதான் எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. ஆட்சியில் இருக்கும் போது சிந்தித்து இருந்தால் பல நடைமுறைகளை செயல்படுத்தி இருக்கலாம். அது பெரிய சிதம்பர ரகசியமாக இருப்பதுதான் ஏன் என்று எனக்கு தெரியவில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • இந்தியாவை சேதப்படுத்தும் எதையும் முந்தைய அரசு செய்யவில்லை.
    • பலர் பயத்தின் காரணமாக ஒரு கட்சியிலிருந்து மற்றொரு கட்சிக்கு மாறுகிறார்கள்.

    தனியார் இந்தி தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் நிதி மந்திரியுமான ப.சிதம்பம் கூறியுள்ளதாவது:

    கடந்த சில ஆண்டுகளாக பன்முகத்தன்மை கொண்ட இந்தியா என்ற எண்ணம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. மதச்சார்பின்மை என்ற எண்ணம் சிதைக்கப்பட்டு, ஒரு மதத்தைத் தழுவுவது என்று சுருக்கப்பட்டுள்ளது. அரசியல் கட்சிகள் உட்பட சமூகத்தின் அனைத்துத் தூண்களும் அச்சத்தின் பிடியில் சிக்கியுள்ளன.

    இந்தியாவுக்கு என்ன நடக்கிறது என்பதைப் பற்றி மக்கள் கவலைப்படுகிறார்கள். பலர் ஒரு கட்சியிலிருந்து மற்றொரு கட்சிக்கு மாறுகிறார்கள், மாறவில்லை என்றால் குடும்பத்தினர் துன்புறுத்தப்படுவார்கள் என்ற பயத்தில் அவர்கள் உள்ளனர்.

    முந்திய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு இந்தியாவை சேதப்படுத்தும் எதையும் செய்யவில்லை, இந்தியாவின் பொருளாதாரத்திற்கு, கல்விக்கோ, விளையாட்டிற்கோ கூட தவறுகளை நாங்கள் செய்துள்ளோம். அவை ஆட்சியின் தோல்விகள்.  ஆனால், இந்தியாவுக்கு சேதம் விளைவிக்கும் வகையில் நாங்கள் எதையும் செய்யவில்லை.

    இன்று இந்தியாவில் என்ன நடக்கிறது என்பது பொதுவானது, ஆனால் மிகவும் தீவிரமானது மற்றும் மிகவும் கவலையானது. கடந்த இரண்டரை ஆண்டுகளில் இந்தியா குறித்த பொதுவான எண்ணத்தை சிதைக்கும் வகையில் சில சக்திகள் செயல்பட்டு வருகின்றன.

    இந்திய அரசியலமைப்பின் முன்னுரையில், சமூகம், பொருளாதாரம், அரசியல் என அனைத்து தரப்பு மக்களுக்கும் நீதி வழங்கும் நாடு இந்தியா என்பது இடம் பெற்றுள்ளது. கடந்த சில வருடங்களில் இவை மிக மோசமாக சேதமடைந்துள்ளன.

    அவற்றில சில சரி செய்ய முடியாதவை. உதாரணமாக, மதச்சார்பின்மை மோசமாக சேதமடைந்துள்ளது. அதாவது இந்த நாட்டில் அனைத்து உரிமைகளையும் அனுபவிக்க விரும்பினால் நீங்கள் ஒரு குறிப்பிட்ட மதத்தை தழுவ வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • சிங்கம்புணரி அரசு ஆஸ்பத்திரியில் டயாலிசிஸ் சிகிச்சை பிரிவு கட்டிடம் கட்டும் இடத்தை ப.சிதம்பரம் ஆய்வு செய்தார்.
    • காங்கிரஸ் கட்சி பிரமுகர்கள் உடனிருந்தனர்.

    சிங்கம்புணரி

    சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனை களில் தேவகோட்டை, காரைக்குடி, சிவகங்கை போன்ற மருத்துவமனை களில் மட்டுமே டயாலிசிஸ் பிரிவு சிகிச்சைக்கான தனி பிரிவு உள்ளது.

    ஆனால் திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பொதுமக்கள் டயாலிசிஸ் சிகிச்சை முறை செய்து கொள்ள வேண்டிய நோயாளிகள் மதுரை, சிவகங்கை போன்ற நகரங்க ளுக்கு செல்ல வேண்டிய நிலையில் இருந்தனர்.

    எனவே சிங்கம்புணரி பகுதியில் உள்ள டயாலிசிஸ் தேவைப்படும் நோயாளி களுக்காக சிங்கம்புணரி அரசு பொது மருத்துவ மனையில் டயாலிசிஸ் பிரிவு சிகிச்சை கொண்டுவர அரசுக்கு பொதுமக்கள் சார்பில் கோரிக்கை விடப்பட்டது.

    அதன்அடிப்படையில் முன்னாள் மத்திய நிதி அமைச்சரும் மாநிலங்க ளவை எம்.பி.யுமான ப.சிதம்பரம் பொது நிதியின் கீழ் ரூ.80 லட்சம் செலவில் சிங்கம்புணரி அரசு தாலுகா தலைமை மருத்துவமனை வளாகத்தில் ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகை யில் டயாலிசிஸ் சிகிச்சை பிரிவு கட்டிடம் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது.

    அதற்கான இடம் தேர்வு செய்ய ஆய்வு மேற்கொள்ள மாநிலங்கள் அவை உறுப்பினர் ப.சிதம்பரம் தலைமையில் அரசு மருத்துவமனையில் ஆய்வு பணி நடைபெற்றது.

    முன்னதாக சிங்கம்புணரி அரசு பொது மருத்துவ மனையின் தலைமை மருத்துவர் அய்யன்ராஜ் வரவேற்றார். மருத்துவ மனை வளாகத்தை ஆய்வு செய்த ப.சிதம்பரம் டயாலிசிஸ் சிகிச்சைக்கான புதிய கட்டிடம் கட்டப்படும் இடம் குறித்து தலைமை மருத்துவர் மற்றும் அதிகாரி களுடன் ஆலோசனை செய்தார்.

    ஆய்வின்போது முன்னாள் எம்.எல்.ஏ. ராம அருணகிரி, பேரூராட்சி கவுன்சிலரும் சிங்கம்புணரி நகர காங்கிரஸ் தலைவரு மான தாயுமானவன், மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜெயராமன் மற்றும் காங்கி ரஸ் கட்சி பிரமுகர்கள் உடனிருந்தனர்.

    • ஒடிசா ரெயில் விபத்து குறித்து பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கடிதம் எழுதியுள்ளார்.
    • இந்தக் கடிதத்துக்கு கர்நாடகத்தை சேர்ந்த 4 பா.ஜ.க. பாராளுமன்ற உறுப்பினர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

    புதுடெல்லி:

    ஒடிசாவில் நடந்த 3 ரெயில்கள் மோதிக் கொண்ட கோர விபத்து உலகையே உலுக்கியது. பல உயிர்களை பலி வாங்கிய இந்த விபத்து சம்பந்தமாக காங்கிரஸ் கட்சி தலைவர்கள் ஆளும் பா.ஜ.க. மீது கடும் விமர்சனங்களை வைத்துள்ளனர்.

    இதுதொடர்பாக, பிரதமர் நரேந்திர மோடிக்கு மூத்த காங்கிரஸ் தலைவரும், ராஜ்யசபா எதிர்க்கட்சித் தலைவருமான மல்லிகார்ஜுன கார்கே பல கேள்விகளை எழுப்பி ஒரு கடிதம் எழுதியிருந்தார்.

    அந்தக் கடிதத்தில், ரெயில்வேயின் அடித்தளத்தை பலப்படுத்துவதற்கு பதில் ஊடகங்களில் எப்பொழுதும் காட்சியளிப்பதற்காகவே மேலோட்டமான பூச்சு வேலைகள் மட்டும் நடைபெற்றதாகவும், ரெயில் பாதுகாப்பு சம்பந்தமாக ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவின் பாதுகாப்பு குறித்த கோஷங்கள் அனைத்தும் வெற்று கூற்றுக்கள் என வெட்ட வெளிச்சமாகியுள்ளது என தெரிவித்திருந்தார்.

    இதற்கு பதிலளிக்கும் விதமாக முன்னாள் கர்நாடக முதல்வர் சதானந்த கவுடா உட்பட கர்நாடகத்தை சேர்ந்த 4 பா.ஜ.க. பாராளுமன்ற உறுப்பினர்கள், கார்கேயின் கடிதம், உண்மைக்கு மாறாகவும் வெற்று கோஷங்கள் மட்டுமே நிறைந்ததாகவும் இருப்பதாக குற்றம் சாட்டியிருந்தனர்.

    பி.சி.மோகன், எஸ்.முனிஸ்வாமி, தேஜஸ்வி சூர்யா, சதானந்த கவுடா ஆகியோர் கார்கேவிற்கு எழுதியுள்ள பதில் கடிதத்தில் "தங்களைப் போன்ற உயர்ந்த தலைவர் ஒருவர், 'வாட்ஸ் அப் பல்கலைக்கழகம்' தருகின்ற ஆதாரமற்ற செய்திகளை தருவது உங்கள் அந்தஸ்துக்கு பொருந்தாத செயல். இருப்பினும், ஒருவேளை வாட்ஸ் அப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தராகி விட்ட காரணத்தினாலோ என்னவோ, அதில் படிப்பதை அப்படியே உங்கள் கடிதத்தில் தாங்கள் கொட்டிவிட்டீர்கள்" என எழுதியிருந்தனர்.

    இந்நிலையில், கர்நாடக எம்.பி.க்களின் கடிதத்தை காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கண்டித்துள்ளார்.

    எந்த விமர்சனத்தையும் பொறுத்துக் கொள்ள முடியாத காவிக் கட்சி பா.ஜ.க. கார்கேவின் கேள்விகளுக்கு பதிலாக பா.ஜ.க. எம்.பி.க்கள் எழுதியுள்ள பதில் கடிதம் ஆதாரபூர்வமற்றதாகவும், பலமில்லாத தர்க்கவாதங்களைக் கொண்டதாகவும் உள்ளது.

    ராஜ்யசபை எதிர்க்கட்சி தலைவராக உள்ள கார்கே அவர்களுக்கு பிரதமருக்கு கடிதம் எழுத எல்லா உரிமையும் உண்டு. ஜனநாயகம் உள்ள நாட்டில் பிரதமர் இதுபோன்ற கடிதத்திற்கு பதிலளிக்க வேண்டும். ஆனால் நம் நாட்டு ஜனநாயகத்தில் பிரதமர் பதில் கடிதம் எழுத வேண்டிய அளவிற்கு காங்கிரஸ் கடிதம் முக்கியத்துவம் வாய்ந்தது அல்ல என கருதுகிறார். பிரதமருக்கு பதிலாக 4 எம்.பி.க்கள் பதில் கடிதம் எழுதுகின்றனர்.

    கார்கே எழுதியுள்ள கடிதத்திற்கு சான்றாக தலைமை கணக்கு தணிக்கையாளர் டிசம்பர் 2022 அன்று சமர்ப்பித்த கடிதங்களே போதுமானது. தென்மேற்கு ரெயில்வேயின் தலைமை செயல் அதிகாரி 2023, பிப்ரவரி 9 அன்று எழுதிய கடிதம் பாலசோரில் நடந்த விபத்துகளை முன்கூட்டியே எச்சரித்து இருந்தது. ஆனால் அக்கடிதம் தொடப்படாமல் இருந்திருக்கிறது. அதன்மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என 4 உறுப்பினர்களும் சொல்வார்களா?

    குற்றங்களை துப்பு துலக்குவதற்குத்தான் சி.பி.ஐ. உள்ளதேயன்றி ரெயில் விபத்துக்களை துப்பறிவதற்கு அல்ல. சி.பி.ஐ. உள்பட சட்டத்தை அமலாக்கும் எந்த துறையும் தொழில்நுட்ப ரீதியான, அமைப்பு ரீதியான மற்றும் அரசியல் ரீதியான குறைபாடுகளை கண்டுபிடித்து, எவரையும் பொறுப்பேற்க செய்யமுடியாது. அதுமட்டுமல்லாமல் ரெயில்வே துறையில் உள்ள பாதுகாப்பு, சமிக்ஞைகள் மற்றும் பராமரிப்பு நடைமுறைகள் சம்பந்தமானவை பற்றிய தொழில்நுட்ப திறன் சி.பி.ஐ. வசம் கிடையாது என தெரிவித்துள்ளார்.

    • விமான டிக்கெட்டுகளின் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதாக பயணிகள் தெரிவித்தனர்.
    • பயண கட்டணங்கள் உயர்வுக்கு விமான நிறுவனங்களை ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார்.

    சென்னை:

    சமீப காலமாக விமான டிக்கெட்டுகளின் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதாக பயணிகள் தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில், டெல்லி - சென்னை விமானங்களுக்கு 63,000 ரூபாய் வரை டிக்கெட் கட்டணம் வசூலிக்கப்படுவதாக முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார்.

    இதுதொடர்பாக ப.சிதம்பரம் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், டெல்லி - சென்னை பிசினஸ் கிளாஸ் விமான டிக்கெட்டுகள் விஸ்தாராவில் 6,300 ரூபாய்க்கும், ஏர் இந்தியாவில் 5,700 ரூபாய்க்கும் நியாயமான விலைக்கு விற்பனை செய்யப்படுகின்றன.

    மன்னிக்கவும், விஸ்தாராவில் 63,000 ரூபாய்க்கும், ஏர் இந்தியாவில் 57,000 ரூபாய்க்கும் டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

    பொதுவாக சுதந்திர சந்தைகளில் தேவை அதிகரிக்கும்போதெல்லாம் விநியோகமும் அதிகரிக்கும். ஆனால் இந்தியாவின் சுதந்திர சந்தையில் தேவை அதிகரிக்கும்போதெல்லாம் விலை அதிகரிக்கிறது.

    விமான நிறுவனங்கள் தங்களது வழித்தடங்களை விரிவாக்கம் செய்துவிட்டு, பழைய வழித்தடங்களில் விமானங்களை குறைத்து, டிக்கெட் கட்டணத்தை உயர்த்துகின்றனர். ஏகபோக முதலாளித்துவத்தில் மட்டும் உலகிற்கே இந்தியா விஷ்வகுருவாக மாறும் என பதிவிட்டுள்ளார்.

    • மாநில அரசு மற்றும் சட்டமன்றத்தின் அதிகாரங்கள் மீது ஆக்கிரமிப்பு செய்யும் மற்றுமொரு மோசமாக நிகழ்வாகும்.
    • தேசிய மருத்துவக் கழகம் அறிவித்தது உண்மை என்றால், அது நல்ல செயல்பாட்டை தண்டிப்பதாக அமைந்துவிடும்.

    சென்னை:

    மத்திய அரசின் முன்னாள் நிதித்துறை மந்திரி ப.சிதம்பரம் தனது எக்ஸ் சமூகவலைதளத்தில் பதிவு செய்த கருத்து வருமாறு:-

    தமிழ்நாட்டிற்கு இனி புதிய மருத்துவ கல்லூரிகளுக்கு அனுமதி கிடையாது என்றும் ஏற்கனவே தமிழகத்தில் இயங்கும் மருத்துவக் கல்லூரிகளுக்கு கூடுதல் கல்வி இடங்கள் அளிக்கப்படாது என்றும் தேசிய மருத்துவக் கழகம் அறிவித்தது உண்மை என்றால், அது நல்ல செயல்பாட்டை தண்டிப்பதாக அமைந்துவிடும்.

    இது, மாநில அரசு மற்றும் சட்டமன்றத்தின் அதிகாரங்கள் மீது ஆக்கிரமிப்பு செய்யும் மற்றுமொரு மோசமாக நிகழ்வாகும். ஏன் மாநில அரசு தனது சொந்த மாணவர்களுக்காக தனது சொந்த நிதியை பயன்படுத்தி புதிய மருத்துவக் கல்லூரியை தொடங்கக் கூடாது?

    மத்திய அரசும் அதன் முகமைகளும், கூட்டாட்சித் தத்துவத்தின் அடிப்படையை அறுக்கின்றன. மோடி அரசின் ஆட்சியில், மாநில உரிமைகளின் மீது அடி விழுவது தொடர்கிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • நாட்டில் மதக்கலவரத்தை ஏற்படுத்தி மீண்டும் ஆட்சிக்கு வர பா.ஜனதா எண்ணுகிறது என்று ப.சிதம்பரம் கூறி உள்ளார்.
    • இந்தியாவில் 8.1 சதவீதம் வேலையின்மை உள்ளது.

    ராமேசுவரம்

    ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தில் அகில இந்திய மீனவர் காங்கிரஸ் கட்சி சார்பில் இந்திய ஒற் றுமை பயண ஓராண்டு நிறைவு விழா மற்றும் மக்கள் விரோத பா.ஜ.க. அரசை கண்டித்து கண்டன பொதுக்கூட்டம் பேருந்து நிலையம் முன்பு நடைபெற் றது. கூட்டத்திற்கு அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினரும், மீனவர் காங்கிரஸ் தேசிய தலைவர் எஸ்.ஆர்ம்ஸ்ட்ராங் பெர் ணாண்டோர் தலைமை தாங்கினார்.

    தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி ஒழுங்கு நடவடிக்கை குழு தலைவர் கே.ஆர்.ராம சாமி, மாவட்ட பொறுப்புக் குழு தலைவர் மலேசியா பாண்டியன், திருவாடானை சட்டப்பேரவை உறுப்பினர் கருமாணிக்கம், மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பி னர்கள் ராஜராம்பாண்டி யன், தெய்வேந்திரன், ரமேஸ்பாபு, கோட்டை முத்து, மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் வேலுச் சாமி, மாநில பொதுக்குழு உறுப்பினர் சோ.பா.ரெங்க நாதன் ஆகியோர் முன் னிலை வகித்தனர்.

    நகர் தலைவர் ஜோ.ராஜீவ்காந்தி வரவேற்றார். கூட்டத்தில் முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் கலந்துகொண்டு பேசியதா வது:-

    இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி மூத்த உறுப்பினர் ராகுல்காந்தி எம்.பி., இந்திய ஒற்றுமை பயணத்தை துவங்கி 4,000 கிலோ மீட்டர் நடைபயணம் நடைபெற்றது. இந்த நடைபயணம் நாடு முழுவதிலும் பெரும் வர வேற்றை பெற்று மன வலி மையை நிருபித்து காட்டிய வர் ராகுல் காந்தி. பிரதமர் மோடி ஆண்டுக்கு 2 கோடி வேலை வாய்ப்பை ஏற்ப டுத்துவதாக தெரிவித்தார். ஆனால் இன்று நாட்டில் வேலை இல்லாத நிலை அதி கரித்துள்ளது.

    இளைஞர்கள் 22 சதவீதம் வேலையின்மை, பட்டதாரி கள் மத்தியில் 42 சதவீதம் வேலையின்மை என மொத் தமாக இந்தியாவில் 8.1 சதவீதம் வேலையின்மை உள்ளது. இதுவே செயல் இழந்த அரசு என்பதற்கு உதாரணம். பா.ஜ.க. ஆட்சி யில் கடந்த பத்து ஆண்டுகள் இந்திய பூமி கலவர பூமியாக மாறிவிட்டது. மணிப்பூர் மாநிலம் கடந்த 150 நாட்க ளாக பற்றி எரிகிறது. 60 ஆயிரம் பேர் உள்நாட்டில் அகதிகளாக இருந்து வரு கின்றனர். 600-க்கும் மேற் பட்டவர்கள் உயிரிழந்துள் ளனர்.

    பெண்கள் பாலியலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். மாணவர்கள் கொலை செய்யப்படுகின்றனர். ஆனால் எத்தனையே நாடு கள் மற்றும் பல்வேறு மாநிலங்களுக்கு செல்லும் பிரதமர் மணிப்பூர் மாநி லத்திற்கு மட்டும் செல்லாதது அரசியல் ஆதாயத்தை தேடு கிறார் என்பதை காட்டுகிறது.

    நாட்டில் மதக்கலவரத்தை ஏற்படுத்தி மீண்டும் ஆட் சிக்கு வந்துவிடலாம் என எண்ணுவதை தடுக்க வேண் டும். பா.ஜ.க. கொண்டு வந்துள்ள பெண்க ளுக்கான இட ஒதுக்கீடு சில திருத் தங்கள் கொண்டு வந்த காங்கிரஸ் கட்சி தான் நிறை வேற்றும்.

    இவ்வாறு அவர் பேசி னார்.

    • காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கைக் குழுவை காங்கிரஸ் தலைவர் அமைத்துள்ளார்.
    • ஆன்லைன், ஆஃப்லைனில் மக்கள் கருத்துகளை பெற்று காங்கிரஸ் தேர்தல் அறிக்கை உருவாக்கம்.

    பாராளுமன்ற தேர்தலுக்கான காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை, மக்களின் தேர்தல் அறிக்கையாக இருக்கும் என அக்கட்சியின் தேர்தல் அறிக்கை குழு தலைவர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கைக் குழுவை காங்கிரஸ் தலைவர் அமைத்துள்ளார். அதன் தலைவராக நான் இருக்கிறேன். ஒருங்கிணைப்பாளராக சிங் தியோ இருக்கிறார். இக்குழுவில் 15 பேர் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். இக்குழு ஏற்கெனவே இருமுறை கூடி ஆலோசித்திருக்கிறது. பணிகள் உறுப்பினர்களிடையே பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன. இதையடுத்து, நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருக்கும் குழுவின் உறுப்பினர்கள் தங்கள் பணியை மேற்கொண்டு வருகிறார்கள்.

    தேர்தல் அறிக்கைக்காக பொதுமக்களின் ஆலோசனைகளைப் பெற இருக்கிறோம். இந்தத் தேர்தல் அறிக்கை மக்களின் தேர்தல் அறிக்கையாக இருக்கும். எனவே, அதிக எண்ணிக்கையில் மக்களின் கருத்துகளைப் பெற நடவடிக்கை எடுத்துள்ளோம் எனக் கூறினார்.

    தொடர்ந்து பேசிய அவர், மக்களின் கருத்துகளைக் கேட்டுப் பெறுவதற்கான மேலும் இரு வழிகளை இன்று நாங்கள் அறிமுகப்படுத்த உள்ளோம். ஒன்று, இதற்காக https://awaazbharatki.in என்ற இணையதளத்தை நாங்கள் தொடங்கி இருக்கிறோம். இந்த இணையதளத்தில் சென்று அதில் உள்ள பிரிவுகளின்படி மக்கள் தங்கள் கருத்துகளைத் தெரிவிக்கலாம். இரண்டாவது வழி, awaazbharatki@inc.in என்ற இ-மெயில் ஐடி மூலம் மக்கள் தங்கள் கருத்துக்களை எங்களுக்கு அனுப்பலாம்.

    நாட்டு மக்கள் தங்கள் கருத்துகளை வழங்க நாங்கள் வரவேற்கிறோம். இ-மெயில் மூலம் வரும் கருத்துகளை பல்வேறு பிரிவுகளாக பிரித்து, அவற்றில் சொல்லப்பட்டுள்ள யோசனைகளை எந்த அளவுக்கு முடியுமோ அந்த அளவுக்கு தேர்தல் அறிக்கையில் சேர்ப்போம். காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்யைில் மக்களை இணைக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தல் அறிக்கை, உண்மையான மக்களின் தேர்தல் அறிக்கையாக இருக்க வேண்டும் என்பதே இதன் நோக்கம் என்று ப.சிதம்பரம் தெரிவித்தார்.

    ×