என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

பாராளுமன்ற நிலைக்குழு அறிவுறுத்தல்: மத்திய அரசு தமிழ்நாட்டுக்கு நிதியை விடுவிக்குமா?- ப.சிதம்பரம்
- கேரளம், தமிழ்நாடு, மேற்கு வங்காளம் ஆகிய மூன்று மாநிலங்களுக்கு முறையே ரூ.328 கோடி, ரூ.2151 கோடி, ரூ.1745 கோடி மத்திய அரசு மறுத்திருக்கிறது.
- இந்தத் தொகைகளை உடனடியாகக் கொடுக்க வேண்டும் என்று நாடாளுமன்றக் கல்வித்துறை நிலைக்குழு அறிவுறுத்தியிருக்கிறது.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், மத்திய முன்னாள் அமைச்சரும், மாநிலங்களவை எம்.பி.யுமான ப.சிதம்பரம் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-
கேரளம், தமிழ்நாடு, மேற்கு வங்காளம் ஆகிய மூன்று மாநிலங்களுக்கு முறையே ரூ.328 கோடி, ரூ.2151 கோடி, ரூ.1745 கோடி மத்திய அரசு மறுத்திருக்கிறது.
இந்தத் தொகைகளை உடனடியாகக் கொடுக்க வேண்டும் என்று நாடாளுமன்றக் கல்வித்துறை நிலைக்குழு அறிவுறுத்தியிருக்கிறது.
தேசிய கல்விக் கொள்கையுடன் இந்தத் தொகைகளை அளிப்பதைப் பிணைக்கக்கூடாது என்றும் நிலைக்குழு அறிவுறுத்தியிருக்கிறது.
இந்த அறிவுரையை ஏற்று பணங்களை மத்திய அரசு அளிக்கப்போகிறதா அல்லது நிலைக்குழுவின் அறிவுரையைப் புறக்கணிக்கப் போகிறதா என்று பார்க்கலாம்.
இவ்வாறு ப.சிதம்பரம் தெரிவித்துள்ளது.
Next Story






