search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "எதிர்க்கட்சிகள்"

    • மத்திய அரசுக்கு எதிராக காங்கிரசின் நிலைப்பாடு என்ன?- ஆம் ஆத்மி
    • அனைத்து கட்சிகளும் காங்கிரசிடம் கேள்வி கேட்க அரவிந்த் கெஜ்ரிவால் வலியுறுத்தல்

    டெல்லி மாநில அரசுக்கு எதிராக மத்திய அரசு கொண்டு வந்துள்ள அவசர சட்டத்தை பாராளுமன்றத்தில் எதிர்க்க வேண்டும் என ஆம் ஆத்மி கட்சியின் அரவிந்த் கெஜ்ரிவால் எதிர்க்கட்சிகளின் ஆதரவை கேட்டு வருகிறார். மம்தா பானர்ஜி உள்ளிட்ட தலைவர்களை சந்தித்துள்ளார். தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் பாராளுமன்றத்தில் எதிர்ப்பு தெரிவிக்க சம்மதம் தெரிவித்துள்ளனர். காங்கிரஸ் இன்னும் வாய் திறக்கவில்லை.

    இன்று பாட்னாவில் எதிர்க்கட்சித் தலைவர்கள் கூட்டம் நடைபெற இருக்கிறது. இந்த கூட்டத்திற்கு முன்பாக பா.ஜனதா அரசு கொண்டு வந்துள்ள அவசர சட்டத்தில் தங்களுடைய நிலைப்பாட்டை காங்கிரஸ் அறிவிக்க வேண்டும். இல்லையெனில் கூட்டத்தை புறக்கணிக்க நேரிடும் என ஆம் ஆத்மி கட்சி தெரிவித்திருந்தது.

    இந்த நிலையில் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே புறப்பட்டார். அப்போது, மத்திய அரசு கொண்டு வந்துள்ள அவசர சட்டம் குறித்த காங்கிரசின் நிலைப்பாடு என்ன? என கேள்வி எழுப்பப்பட்டது.

    அப்போது அவர் கூறுகையில் ''பா.ஜனதாவிற்கு எதிராக ஒன்றிணைந்து, ஆட்சியில் இருந்து அக்கட்சியை அப்புறப்படுத்த வேண்டும். இதுதான் எங்களுடைய முக்கிய நோக்கம்.

    மத்திய அரசு கொண்டு வந்துள்ள சட்டம் திருத்தம் விவகாரத்தில் ஆம் ஆத்மிக்கு ஆதரவு அளிப்பது குறித்து நாடாளுமன்ற கூட்டத்திற்கு முன் முடிவு எடுக்கப்படும்'' என்றார்.

    • திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் உள்பட 18-க்கும் மேற்பட்ட கட்சித் தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள்
    • நாடாளுமன்ற தேர்தல் குறித்து முக்கிய ஆலோசனை நடத்தப்படுகிறது

    இந்திய நாடாளுமன்ற மக்களவை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கிறது. நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கான ஏற்பாடுகளை முக்கியமான கட்சிகள் தொடங்கி உள்ளன. இந்தத் தேர்தலில் தொடர்ந்து மூன்றாவது முறையாக வெற்றி பெற்று 'ஹாட்ரிக்' சாதனை படைக்க மத்தியில் ஆளும் பா.ஜ.க. கங்கணம் கட்டிக்கொண்டு செயல்படத் தொடங்கி உள்ளது. தேர்தலுக்கான வியூகங்களை வகுப்பதில் அந்தக் கட்சி தீவிரம் காட்டி வருகிறது.

    அதேநேரத்தில், எதிர்தரப்பில் பா.ஜ.க.வுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் அனைத்தையும் ஒரே அணியாக திரட்டி, பா.ஜ.க.வுக்கு எதிராக பொது வேட்பாளரை நிறுத்துவதற்கு அதிரடி முயற்சி நடக்கிறது.

    குறிப்பாக இமாசல பிரதேசத்திலும், கர்நாடகத்திலும் நடந்த சட்டசபை தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி வெற்றிபெற்று ஆட்சியைப் பிடித்துள்ள நிலையில், பா.ஜ.க. தோற்கடிக்க முடியாத கட்சி அல்ல என்ற எண்ணம் உருவாகி, மக்களவை தேர்தலுக்காக எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரளும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    எதிர்க்கட்சிகளை ஓரணியில் திரட்டுவதில் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவரும், பீகார் முதல்- மந்திரியுமான நிதிஷ் குமார் மும்முரமாக செயல்பட்டு வருகிறார். இந்த விஷயத்தில் அவர் எற்கனவே காங்கிரஸ் கட்சியின் தலைவர் கார்கே, முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி என முக்கிய எதிர்க்கட்சித் தலைவர்களை ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சித்தலைவரும், பீகார் துணை முதல்-மந்திரியுமான தேஜஸ்வி யாதவுடன் சென்று சந்தித்து முதல் கட்ட பேச்சுவார்த்தை நடத்தினார்.

    எதிர்க்கட்சிகள் கூட்டம் அதன் அடுத்த கட்டமாக, மக்களவை தேர்தல் குறித்து முக்கிய ஆலோசனை நடத்துவதற்காக நிதிஷ் குமார், எதிர்க்கட்சி தலைவர்களின் கூட்டத்தை பாட்னாவில் கூட்டி உள்ளார். பாட்னாவில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெறுகிற இந்தக் கூட்டம் அரசியல் அரங்கில் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி உள்ளது.

    இதில் காங்கிரஸ் கட்சி தலைவர் கார்கே, முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, தமிழக முதல்-அமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின், மேற்கு- வங்காள முதல்- மந்திரியும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி, தேசியவாத காங்கிரஸ்தலைவர் சரத் பவார், ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் கெஜ்ரிவால், ஜார்கண்ட் முக்தி மோர்ச்சாவின் தலைவர் ஹேமந்த் சோரன், மராட்டிய முன்னாள் முதல்-மந்திரியும் சிவசேனா (உத்தவ்) தலைவருமான உத்தவ் தாக்கரே, உ.பி. முன்னாள் முதல்- மந்திரியும், சமாஜ்வாடி கட்சி தலைவருமான அகிலேஷ் யாதவ், உள்ளிட்ட 20 கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்தக் கூட்டத்தில் மக்களவை தேர்தல் தொடர்பாக முக்கிய முடிவு எடுப்பதுடன், தீர்மானமும் நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • பிரதமர் மோடியே அவரது தோல்விக்கு காரணமாக இருப்பார்
    • மத்திய பிரதேச தேர்தலில் பா.ஜனதா தோல்வியை சந்திக்கும்

    பா.ஜனதா கட்சி இரண்டு முறை நாடாளுமன்ற தேர்தலில் தொடர்ச்சியாக வெற்றி பெற்று ஆட்சி செய்து வருகிறது. இரண்டு முறையும் மோடியே பிரதமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அடுத்த வருடம் நாடாளுமன்ற தேர்தல் வர இருக்கிறது. இந்த முறையும் பா.ஜனதா பிரதமர் மோடி தலைமையில் எதிர்கொள்ள தயாராகி வருகிறது.

    பா.ஜனதாவின் வெற்றியை முறியடிக்க எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்து கூட்டணி அமைக்க முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றன. டெல்லி மாநில அதிகாரம் தொடர்பான விவகாரத்தில் கெஜ்ரிவால் மேற்கு வங்காள முதலமைச்சர் மம்தா பானர்ஜி, தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆகியோரை சந்தித்து பா.ஜனதாவுக்கு எதிராக ஆதரவு திரட்டினார். மேலும் சில எதிர்க்கட்சி தலைவர்கள் இந்த முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    பா.ஜனதாவுக்கு உத்தர பிரதேசம் (62), மத்திய பிரதேசம் (28), பீகார் (17), ராஜஸ்தான் (24), குஜராத் (26), மகாராஷ்டிரா (23) மாநிலங்கள் மிகப்பெரிய அளவில் வெற்றியை கொடுத்துள்ளன. தற்போது மகாராஷ்டிராவில் சிவசேனா கட்சி உடைக்கப்பட்டுள்ளது. இதற்கு பா.ஜனதா கட்சிதான் காரணம் என உத்தவ் தாக்கரே குற்றம்சாட்டி வருகிறார். அவர் பா.ஜனதாவை மிகப்பெரிய எதிரியாக கருதுகிறார்.

    இந்த நிலையில் உத்தவ் தாக்கரேயின் சிவசேனா கட்சிப் பத்திரிகையான சாம்னா, பிரதமராகும் ஆசை எதிர்க்கட்சி தலைவரகளுக்கு இல்லையென்றால், பா.ஜனதாவை தோற்கடிக்க முடியும் என தலையங்கம் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

    மேலும் ராகுல் காந்தியை வெகுவாக பாராட்டிய நிலையில் அவரது பொறுமையை மக்கள் விரும்ப தொடங்கியுள்ளனர். பிரதமர் மோடியுடன் காந்தி குடும்பத்தை சேர்ந்தவருடன் ஒப்பிட்டு பார்க்க முடியாது என்ற பிம்பத்தில் இருந்து ஒவ்வொருவரும் வெளியே வர வேண்டும்.

    கர்நாடகா தேர்தலில் பா.ஜனதா தோல்வியடைந்தது 2024-ம் ஆண்டுக்கான பா.ஜனதாவின் கெட்ட சகுனம். வரவிருக்கும் மத்திய பிரதேச தேர்தலில் பா.ஜனதா தோல்வியை சந்திக்கும். சத்தீஸ்காரில் காங்கிரஸ் ஆட்சியை தக்க வைக்கும். ராஜஸ்தானில் முதலமைச்சர் அசோக் கெலாட், பா.ஜனதா கட்சியுடன் போட்டியை கடுமையாக்குவார் எனத் தெரிவித்துள்ளது.

    வட இந்தியாவில் ராகுல்காந்தி தன்னந்தனியாக பிரசாரத்தை மேற்கொண்டால், தற்போதைய நிலை காங்கிரஸ் கட்சி மாறலாம். 2024-ம் ஆண்டு பா.ஜனதா தோல்விக்கு மோடியே காரணமாக இருப்பார். அதற்கு அமித் ஷா பங்களிப்பார். மோடி- அமித் ஷா மீது கோபம் உள்ளது. பா.ஜனதாவை தோற்கடிக்க வேண்டும் என மக்கள் நினைத்து விட்டார்கள் என எழுதியுள்ளது.

    இருந்தாலும், மோடிக்கு எதிராக பிரதமர் வேட்பாளர் யார்? என்ற கேள்வி மீண்டும் எழுகிறது. அது அரசியலமைப்பு மற்றும் இந்திய தாயாக இருக்கும். தலைவர் மக்களிடையே இருந்து உருவாகுவார்.

    இலங்கை மன்னர் ராவணனை வீழ்த்த வானர் கூட்டம் உதவியது போல், தற்போது வானர் சேவை அவசியமானது எனத் குறிப்பிட்டுள்ளது.

    • பாராளுமன்ற கட்டிடத்தை ஜனாதிபதி திரவுபதி முர்மு திறந்து வைக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்துகின்றன.
    • ஆந்திராவின் ஆளுங்கட்சியான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியும் திறப்பு விழாவில் பங்கேற்பதை உறுதி செய்துள்ளது.

    புதுடெல்லி:

    புதிய பாராளுமன்ற கட்டிடத்தை பிரதமர் மோடி மே 28ம் தேதி திறந்து வைக்க உள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 19 எதிர்க்கட்சிகள் திறப்பு விழாவை புறக்கணிக்க உள்ளதாக அறிவித்துள்ளன. பாராளுமன்ற கட்டிடத்தை பிரதமர் மோடி திறந்து வைக்கக்கூடாது என்றும், ஜனாதிபதி திரவுபதி முர்மு திறந்து வைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளன. இந்த விவகாரம் நாடு முழுவதும் விவாதப்பொருளாகி உள்ளது.

    இந்நிலையில், புதிய பாராளுமன்ற கட்டிட திறப்பு விழாவில் ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கின் பிஜு ஜனதா தளம் பங்கேற்க உள்ளது. இதன்மூலம் எதிர்க்கட்சிகளின் புறக்கணிப்புத் திட்டத்தை பிஜு ஜனதா தளம் நிராகரித்துள்ளது. அத்துடன், ஜனாதிபதி பதவி மற்றும் பாராளுமன்றம் இரண்டும் புனிதமானவை என்றும், பிரச்சனைகள் பின்னர் விவாதிக்கப்படலாம் என்றும் அக்கட்சி கூறி உள்ளது.

    இதன்மூலம் பாஜக கூட்டணியில் இல்லாத கட்சிகளில் பாராளுமன்ற திறப்பு விழாவில் பங்கேற்பதை உறுதி செய்த முதல் கட்சி பிஜு ஜனதா தளம் என்பது குறிப்பிடத்தக்கது.

    இதேபோல் ஆந்திராவின் ஆளுங்கட்சியான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியும் திறப்பு விழாவில் பங்கேற்பதை உறுதி செய்துள்ளது.

    • எதிர்க்கட்சிகள் தங்கள் முடிவை மறுபரிசீலனை செய்யவேண்டும் என மத்திய மந்திரி பிரகலாத் ஜோஷி கேட்டுக்கொண்டுள்ளார்.
    • இதுபோன்ற நிகழ்வுகளை காமாலை கண்களுடன் பார்ப்பது நியாயமில்லை என பட்னாவிஸ் கூறி உள்ளார்.

    மும்பை:

    டெல்லியில் கட்டப்பட்டுள்ள புதிய பாராளுமன்ற கட்டிடத்தை பிரதமர் மோடி வரும் 28ம் தேதி திறந்து வைக்க உள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 19 எதிர்க்கட்சிகள் திறப்பு விழாவை புறக்கணிக்க உள்ளதாக அறிவித்துள்ளன. பாராளுமன்ற கட்டிடத்தை பிரதமர் மோடி திறந்து வைக்கக்கூடாது என்றும், ஜனாதிபதி திரவுபதி முர்மு திறந்து வைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளன. இந்த விவகாரம் நாடு முழுவதும் விவாதப்பொருளாகி உள்ளது. எதிர்க்கட்சிகள் தங்கள் முடிவை மறுபரிசீலனை செய்யவேண்டும் என மத்திய மந்திரி பிரகலாத் ஜோஷி கேட்டுக்கொண்டுள்ளார்.

    எதிர்க்கட்சிகளின் நிலைப்பாடு குறித்து மகாராஷ்டிர மாநில துணை முதல்வரும் பாஜக தலைவருமான தேவேந்திர பட்னாவிஸ் கூறியதாவது:-

    இதுபோன்ற நிகழ்வுகளை காமாலை கண்களுடன் பார்ப்பது நியாயமில்லை. புதிய பாராளுமன்ற கட்டிடம் நாட்டின் பெருமை. திறப்பு விழாவில் பங்கேற்க போவதில்லை என்று கூறுபவர்கள் சொல்லும் காரணங்கள் அபத்தமானவை. மோடி மீதான வெறுப்பு காய்ச்சலால் எதிர்க்கட்சிகள் பாதிக்கப்பட்டுள்ளன. புதிய பாராளுமன்ற கட்டிடம் குறுகிய காலத்தில் கட்டமைக்கப்பட்டு நாட்டின் பலத்தை வெளிப்படுத்தி உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சாவர்க்கரின் பிறந்தநாளில் புதிய பாராளுமன்ற கட்டிடம் திறப்பு விழா நடைபெறுவதால் எதிர்க்கட்சிகளுக்கு கோபத்தை ஏற்படுத்தி உள்ளது.
    • இல்லாத பிரச்சினையை எதிர்க்கட்சிகள் ஏற்படுத்துவது துரதிர்ஷ்டவசமானது என்று பிரகலாத் ஜோஷி தெரிவித்துள்ளார்.

    புதுடெல்லி:

    புதிய பாராளுமன்ற கட்டிடத்தை வரும் 28ம் தேதி பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளார். இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. புதிய பாராளுமன்ற கட்டிடத்தை ஜனாதிபதிதான் திறந்து வைக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளன. அத்துடன், சாவர்க்கரின் பிறந்தநாளில் புதிய பாராளுமன்ற கட்டிடம் திறப்பு விழா நடைபெறுவதால், எதிர்க்கட்சிகளுக்கு கோபத்தை ஏற்படுத்தி உளள்து.

    எனவே, புதிய பாராளுமன்ற கட்டிட திறப்பு விழாவை புறக்கணிக்கப் போவதாக காங்கிரஸ், திமுக, விசிக, மதிமுக, தேசியவாத காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட 19 எதிர்க்கட்சிகள் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளன. அதில், ஜனாதிபதி திரவுபதி முர்முவை ஒதுக்கி வைத்துவிட்டு, புதிய பாராளுமன்றக் கட்டிடத்தை தானே திறந்து வைக்கும் பிரதமர் மோடியின் முடிவு, கடும் அவமதிப்பு மட்டுமின்றி, நமது ஜனநாயகத்தின் மீதான நேரடி தாக்குதல் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த கூட்டறிக்கையில் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவின் பாரத் ராஷ்டிர சமிதி கட்சி கையெழுத்திடவில்லை. அதேசமயம் புதிய பாராளுமன்ற கட்டிட திறப்பு விழாவை புறக்கணிக்க உள்ளது.

    நாட்டின் மிக முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வை எதிர்க்கட்சிகள் ஒட்டுமொத்தமாக புறக்கணிப்பது நாடு முழுவதும் விவாதப்பொருளாகி உள்ளது.

    இந்நிலையில், திறப்பு விழாவை புறக்கணிக்கும் முடிவை 19 எதிர்க்கட்சிகளும் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என பாராளுமன்ற விவகாரத்துறை மந்திரி பிரகலாத் ஜோஷி கேட்டுக்கொண்டுள்ளார். இதற்கு முன்பும் பாராளுமன்ற வளாகத்தில் கட்டிடங்களை பிரதமர்கள் திறந்து வைத்திருக்கிறார்கள் என்றும், இல்லாத பிரச்சினையை எதிர்க்கட்சிகள் ஏற்படுத்துவது துரதிர்ஷ்டவசமானது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

    'மக்களவை சபாநாயகர் தான் பாராளுமன்றத்தின் பொறுப்பாளர், அவர்தான் பிரதமரை அழைத்துள்ளார். புதிய பாராளுமன்ற கட்டிட திறப்பு விழா வரலாற்று நிகழ்வு. ஒவ்வொரு நிகழ்வையும் அரசியலாக்குவது நல்லதல்ல. கிட்டத்தட்ட நூறு ஆண்டுகளுக்கு பிறகு ஒரு வரலாற்று நிகழ்வு நடக்கிறது' என்றும் ஜோஷி தெரிவித்தார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • திமுகவும் விழாவை புறக்கணிப்பதாக அக்கட்சியின் எம்.பி திருச்சி சிவா இன்று அறிவிப்பு வெளியிட்டார்.
    • கூட்டறிக்கையில் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவின் பாரத் ராஷ்டிர சமிதி கட்சி கையெழுத்திடவில்லை.

    புதுடெல்லி:

    புதிய பாராளுமன்றம் கட்டுவதற்காக கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பர் 10-ந் தேதி, பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். கட்டுமான பணிகள் முடிவடைந்த நிலையில், வரும் 28ம் தேதி பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளார். இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. புதிய பாராளுமன்ற கட்டிடத்தை ஜனாதிபதிதான் திறந்து வைக்க வேண்டும். பிரதமர் அல்ல, என்று ராகுல் காந்தி கூறியிருந்தார். 'ஜனாதிபதிதான் நாட்டின் அரசியலமைப்புத் தலைவர். எனவே, புதிய பாராளுமன்றக் கட்டிடத்தை ஜனாதிபதி திறந்து வைப்பதே முறையானதாக இருக்கும்' என ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் கூறியுள்ளார். குறிப்பாக சாவர்க்கரின் பிறந்தநாளில் புதிய பாராளுமன்ற கட்டிடம் திறப்பு விழா நடைபெறுவதால், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளுக்கு கோபத்தை ஏற்படுத்தி உளள்து.

    எனவே, புதிய பாராளுமன்ற கட்டிட திறப்பு விழாவை புறக்கணிக்கப் போவதாக திரிணாமுல் காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்டு கட்சிகள் அறிவித்தன. திமுகவும் விழாவை புறக்கணிப்பதாக திமுக தரப்பில் அக்கட்சியின் எம்.பி திருச்சி சிவா இன்று அறிவிப்பு வெளியிட்டார். இதையடுத்து விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பிலும் புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவினை புறக்கணிக்க உள்ளதாக அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் அறிவித்தார்.

    இந்நிலையில், புதிய பாராளுமன்ற கட்டிட திறப்பு விழாவை 19 எதிர்க்கட்சிகள் புறக்கணிக்க முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக காங்கிரஸ், திமுக, விசிக, மதிமுக, தேசியவாத காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட 19 எதிர்க்கட்சிகள் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளன. அதில், ஜனாதிபதி திரவுபதி முர்முவை ஒதுக்கி வைத்துவிட்டு, புதிய பாராளுமன்றக் கட்டிடத்தை தானே திறந்து வைக்கும் பிரதமர் மோடியின் முடிவு, கடும் அவமதிப்பு மட்டுமின்றி, நமது ஜனநாயகத்தின் மீதான நேரடி தாக்குதல் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த கூட்டறிக்கையில் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவின் பாரத் ராஷ்டிர சமிதி கட்சி கையெழுத்திடவில்லை. அதேசமயம் புதிய பாராளுமன்ற கட்டிட திறப்பு விழாவை புறக்கணிக்க உள்ளது.

    • எதிர்க்கட்சி தலைவர்களை குறிவைத்து விசாரணை நடத்துவதாக புள்ளி விவரங்களை பட்டியலிட்டனர்.
    • வழக்குகளின் உண்மைகளைக் கருத்தில் கொள்ளாமல் பொதுவான வழிகாட்டுதல்களை வழங்க முடியாது என நீதிபதிகள் தெரிவித்தனர்.

    புதுடெல்லி:

    சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை போன்ற அமைப்புகளை தவறாக பயன்படுத்துவதை தடுக்க கோரி காங்கிரஸ், திமுக உள்ளிட்ட 14 எதிர்க்கட்சிகள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த அமைப்புகள் எதிர்க்கட்சி தலைவர்களை குறிவைத்து விசாரணை நடத்துவதாக கூறி, அது தொடர்பான புள்ளி விவரங்களையும் பட்டியலிட்டனர்.

    இந்நிலையில் இந்த மனுவை தலைமை நீதிபதி டிஒய் சந்திரசூட், நீதிபதி பர்திவாலா ஆகியோர் கொண்ட அமர்வு பரிசீலனை செய்தது. அப்போது, மனுவை விசாரணைக்கு ஏற்க மறுத்த நீதிபதிகள், மனுவை திரும்ப பெற அனுமதி அளித்தனர்.

    பாதிக்கப்பட்ட தனிநபர்கள் யாராக இருந்தாலும், சட்ட வாய்ப்புகளை பயன்படுத்தி நீதிமன்றத்தை அணுகி தீர்வு காணலாம். ஆனால் தனிப்பட்ட வழக்குகளின் உண்மைகளைக் கருத்தில் கொள்ளாமல் பொதுவான வழிகாட்டுதல்கள் எதுவும் வழங்க முடியாது எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர். 

    • சீன அத்துமீறல் பிரச்சினை குறித்து விவாதிக்க எதிர்க்கட்சிகள் கோரிக்கை.
    • அவை நடவடிக்கையை ஒத்தி வைத்து விவாதிக்க கோரி நோட்டீஸ்

    அருணாச்சல பிரதேச மாநில எல்லை பகுதியில் சீன ராணுவத்தினரின் அத்துமீறல் குறித்து விவாதம் நடத்த வேண்டும் என்று பாராளுமன்ற மாநிலங்களவையில் காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. இது தொடர்பாக பல்வேறு கட்சிகள் சார்பில் வழங்கப்பட்ட ஒத்தி வைப்பு தீர்மான நோட்டீஸ்கள் அவைத் தலைவரின் பரிசீலனையில் இருந்தன. 

    இந்நிலையில் இன்று காலை பாராளுமன்றம் கூடியதும், மாநிலங்களவையில் சீன பிரச்சினையை எழுப்பிய எதிர்க்கட்சிகளின் எம்.பி.க்கள் அவை நடவடிக்கைகளை ஒத்திவைத்து விவாதிக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். அப்போது 267 விதியின் கீழ் எதிர்க்கட்சிகள் அளித்த நோட்டீஸ்கள் சரியான முறையில் இல்லை என்று கூறிய அவைத் தலைவர் ஜக்தீப் தன்கர், அவற்றை நிராகரித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ், திமுக, இடதுசாரி கட்சிகளின் எம்.பி.க்கள் வெளிநடப்புச் செய்தனர்.

    • தேசிய சின்னத்தை திறந்து வைக்கும் பெருமை எனக்கு கிடைத்தது.
    • கட்டிடப்பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களின் பங்கு நம் நினைவில் இருக்கும்.

    தலைநகர் டெல்லியில் ரூ.971 கோடி செலவில் அதிநவீன வசதியுடன் புதிய பாராளுமன்ற கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. இந்த கட்டிடத்தின் மேற்கூரையில் தேசிய சின்னம் அமைக்கப்பட்டுள்ளது. வெண்கலத்தால் ஆன 6.5 மீ உயரம் உள்ள தேசிய சின்னத்தின் எடை சுமார் 9500 கிலோ ஆகும். இதை தாங்கும் வகையில் சுமார் 6500 கிலோ எடையுள்ள எஃகு தூண்கள் நான்கு புறங்களிலும் கட்டப்பட்டுள்ளன.

    இந்த தேசிய சின்னத்தை பிரதமர் மோடி நேற்று திறந்து வைத்தார். முன்னதாக அங்கு நடைபெற்ற பூஜையிலும் அவர் கலந்து கொண்டார். 

    பாராளுமன்ற கட்டிடப்பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுடன் பிரதமர் உரையாடினார்.இது தொடர்பாக பிரதமர் தனது டுவிட்டர் பதிவில், புதிய பாராளுமன்ற கட்டிடத்தின் மேற்கூரையில் தேசிய சின்னத்தை திறந்து வைக்கும் பெருமை எனக்கு கிடைத்தது. கட்டிடப்பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுடன் உரையாடினேன். அவர்களுடைய முயற்சிகள் கண்டு நாம் பெருமை அடைகிறோம். நமது நாட்டிற்கான அவர்களின் பங்கு என்றும் நம் நினைவில் இருக்கும் என்று கூறியுள்ளார்.

    இந்நிலையில், தேசிய சின்னத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தது தொடர்பாக, காங்கிரஸ்,மார்க்சிஸ்ட் மற்றும் ஏஐஎம்ஐஎம் போன்ற எதிர்க்கட்சிகள் விமர்சித்துள்ளன. இது அரசியலமைப்பு மீறல் என்று அந்த கட்சிகள் கூறியுள்ளன. இதற்கு பாஜக பதிலடி கொடுத்துள்ளது. எதிர்க்கட்சிகளின் விமர்சனங்கள் அரசியல் உள்நோக்கம் கொண்டவை என்று செய்தியாளர்களிடம் பேசிய பாஜக தலைமை செய்தித் தொடர்பாளரும் தேசிய ஊடகப் பொறுப்பாளருமான அனில் பலுனி தெரிவித்தார்.

    புதிய பாராளுமன்றத்திற்கு அடித்தளம் அமைத்தது மோடி என்றும், ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை எதிர்க்கட்சிகள் வெளியிட்டது துரதிர்ஷ்டவசமானது என்றும், அவர் குறிப்பட்டார். கட்டுமான பணிகள் முடிந்ததும், கடடிடம், பாராளுமன்ற நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

    திறப்பு விழாவை கேள்வி கேட்கும் எதிர்க்கட்சிகள், நிர்வாக செயல்முறையை புரிந்து கொள்ள வேண்டும் என்றும், பாராளுமன்றத்தின் வடிவமைப்பு முதல் நிதி மற்றும் கட்டுமான மேற்பார்வை வரை, முழு வேலைகளும் நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகத்தின் வரம்பிற்கு உட்பட்டது என்றும் பலூனி குறிப்பிட்டார்.

    • ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் அடுத்த மாதத்துடன் நிறைவடைகிறது.
    • ஜனாதிபதி தேர்தல் ஜூலை 18-ம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

    புதுடெல்லி:

    இந்தியாவின் 15-வது ஜனாதிபதியாக ராம்நாத் கோவிந்த் கடந்த 2017-ம் ஆண்டு பதவியேற்றார். அவரது பதவிக்காலம் ஜூலை 24-ம் தேதி முடிவடைகிறது. இதனால் அடுத்த ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் ஜூலை 18-ம் தேதி நடைபெறும் என இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்தது.

    இதையடுத்து, ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளரை நிறுத்துவது தொடர்பாக எதிர்க்கட்சிகளுடன் டெல்லியில் நேற்று முன்தினம் மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜி ஆலோசனை நடத்தினார். எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக சரத்பவாரை அனைவரும் முன்மொழிந்த நிலையில், உடல்நிலை சரியில்லாததால் தன்னால் நிற்க முடியாது என சரத்பவார் மறுத்துவிட்டார்.

    இந்நிலையில், ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக எதிர்க்கட்சிகள் ஜூன் 21-ம் தேதி மீண்டும் ஆலோசனை நடத்த முடிவு செய்துள்ளனர். இதில் எதிர்க்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளரை தேர்வு செய்வது குறித்து ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகின.

    பாராளுமன்ற தேர்தலில் பிரதமர் மோடி, அமித்ஷாவை வீழ்த்துவதற்காக 1996-ம் ஆண்டுக்கு பிறகு பாரதிய ஜனதாவுக்கு எதிராக அனைத்து எதிர்க்கட்சிகளும் ஓர் அணியில் திரள்கின்றனர். #KumaraswamySwearingIn
    புதுடெல்லி:

    1996-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் நரசிம்மராவ் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி தோல்வியை சந்தித்தது. அந்த தேர்தலில் எந்த கட்சிக்கும் மெஜாரிட்டி கிடைக்கவில்லை. ஆனால், பாரதிய ஜனதா கட்சி 161 இடங்களை கைப்பற்றி முதலிடத்தை பிடித்தது. காங்கிரஸ் கட்சி 140 தொகுதிகளில் வெற்றி பெற்று இருந்தது. மற்றொரு எதிர்கட்சியான ஜனதா தளம் 46 இடங்களில் வென்றிருந்தது.

    அப்போது தனிப்பெரும் கட்சியான பாரதிய ஜனதா ஆட்சி அமைக்க உரிமை கோரியது. வாஜ்பாய் பிரதமர் ஆனார். ஆனால், அந்த ஆட்சியை நீடிக்க விடக்கூடாது என்பதற்காக எதிர்கட்சிகள் அனைத்தும் ஒன்று சேர்ந்தன. காங்கிரஸ், ஜனதா தளம், கம்யூனிஸ்டு கட்சிகள் மற்றும் பல மாநில கட்சிகள் ஒரே அணியில் திரண்டன. இதனால் எதிர்க்கட்சிகள் வரிசையில் அதிக உறுப்பினர்கள் இருந்தனர். 16 நாட்களே ஆட்சியில் இருந்த வாஜ்பாய் அரசு கவிழ்ந்தது.

    இதற்கு பிறகு ஒரு போதும் எதிர்க்கட்சிகள் இதே போல் ஒரே அணியில் திரளவில்லை. இப்போது பிரதமர் மோடிக்கு எதிராக எதிர்க்கட்சிகள் அனைத்தும் 1996-ம் ஆண்டு போல் ஒரே அணியில் திரண்டு இருக்கின்றன.

    நேற்று பெங்களூரில் நடந்த குமாரசாமி பதவி ஏற்பு விழாவில் எதிர்கட்சி தலைவர்கள் ஒன்று சேர்ந்து ஒரு புதிய அணியாக கை கோர்த்து இருக்கிறார்கள்.


    நேற்றைய நிகழ்ச்சியில் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், இந்திய கம்யூனிஸ்டு தலைவர் சீத்தாராம் யெச்சூரி, கர்நாடக முதல்- மந்திரி குமாரசாமி, ராஷ்டீரிய ஜனதா தளம் தேஜஸ்வி யாதவ், சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் யாதவ், சரத் யாதவ், அஜித்சிங் ஆகியோர் ஒரே மேடையில் இருந்து கைகோர்த்து தங்கள் ஒரே அணியில் திரண்டு இருப்பதை காட்டினார்கள்.

    அதே நேரத்தில் நேற்றைய விழாவில் கலநது கொண்ட ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு, மேற்கு வங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜி டெல்லி முதல்- மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால், இந்திய கம்யூனிஸ்டு செயலாளர் டி.ராஜா ஆகியோர் எதிர்க்கட்சி தலைவர்கள் அணிவகுப்பில் பங்கேற்கவில்லை.

    அவர்களும் பாரதிய ஜனதாவுக்கு எதிராக இருந்தாலும் காங்கிரசுடன் சேர்ந்து பாரதிய ஜனதாவை எதிர்ப்பதில் தயக்கம் காட்டுகிறார்கள். இதனால் அவர்கள் மற்றவர்களுடன் கை கோர்த்து நிற்கவில்லை.

    அதே போல தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகரராவும் இந்த அணியில் சேருவதற்கு தயக்கம் காட்டி நேற்றைய விழாவில் பங்கேற்கவில்லை. அவர் ஒரு நாள் முன்கூட்டியே வந்து வாழ்த்திவிட்டு சென்றார்.


    மம்தா பானர்ஜி சந்திரசேகரராவ் ஆகியோர் காங்கிரஸ் அல்லாத 3-வது அணியில் எதிர்கட்சிகள் ஒன்று திரள வேண்டும் என்று கருதுகிறார்கள். சந்திரபாபு நாயுடுவும் காங்கிரஸ் அணியில் இருப்பதற்கு தயக்கம் காட்டுகிறார்.

    மற்ற தலைவர்கள் அனைவரும் இப்போதே ஒன்று திரண்டுவிட்டார்கள். பாராளுமன்ற தேர்தல் நெருங்கும் போது, அவர்களும் இந்த அணிக்கு வருவதற்கோ அல்லது அந்த அணியோடு இணைந்து செயல்படுவதற்கோ வாய்ப்பு உள்ளது.

    இந்த வகையில் மோடிக்கு எதிராக அனைத்து கட்சிகளும் ஒன்று திரளும் நிலை உருவாகி இருக்கிறது. இதற்கு நேற்றைய பெங்களூர் நிகழ்ச்சி தொடக்கத்தை ஏற்படுத்தி கொடுத்துள்ளது. அது நீடிக்குமா? பாரதிய ஜனதாவுக்கு எதிரான அனைத்து கட்சிகளும் ஒரே அணியில் நிரந்தரமாக நிற்குமா? என்பது போகப் போகத்தான் தெரியும்.

    இவ்வாறு எதிர்கட்சிகள் அனைத்தும் ஒன்று சேருவது பாரதிய ஜனதாவுக்கு கடும் சவாலாக இருக்கும்.

    மோடி- அமித்ஷா அணி இதை எப்படி தடுக்க போகிறது என்பது அவர்கள் வகுக்கும் வியூகங்களை பொருத்து அமையும். #KumaraswamySwearingIn #UnitedInVictory
    ×