search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆர்.டி.ஓ."

    • தாரமங்கலம் வெள்ளாளர் தெரு பகுதியை சேர்ந்தவர் முருகன், கூலித்தொழிலாளி. இவரது மனைவி தேவி
    • அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் தேவி ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இது பற்றி பெத்தநாயக்கன் பாளையத்தில் உள்ள தேவியின் தாய் சரோஜா தாரமங்கலம் போலீசில் புகார் அளித்தார்.

    தாரமங்கலம்:

    சேலம் மாவட்டம் தாரமங்கலம் வெள்ளாளர் தெரு பகுதியை சேர்ந்தவர் முருகன், கூலித்தொழிலாளி. இவரது மனைவி தேவி (25). இவர்களுக்கு 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி 3 வயதில் பெண் குழந்தை உள்ளது.

    குடிப்பழக்கம் உள்ள முருகன் வீட்டில் தேவியிடம் அடிக்கடி தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு தேவி வீட்டில் தூக்கில் பிணமாக தொங்கினார். இதை பார்த்த உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் தேவி ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இது பற்றி பெத்தநாயக்கன் பாளையத்தில் உள்ள தேவியின் தாய் சரோஜா (50) தாரமங்கலம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தேவிக்கு திருமணம் ஆகி 4 ஆண்டுகளே ஆவதால் மேட்டூர் ஆர்.டி.ஓ. தணிகாசலம் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.Salem District News, இளம்பெண், தற்கொலை, ஆர்.டி.ஓ., விசாரணை, Young girl, suicide, RDO, Investigation

    • சோதனையில் கணக்கில் வராத ரூ.61 ஆயிரத்தை பறிமுதல் செய்தனா்.
    • 10 க்கும் மேற்பட்டோரிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

    திருப்பூர் :

    தமிழகம் முழுவதும் பத்திர பதிவுத்துறை, வட்டாரப் போக்குவரத்துத் துறை உள்ளிட்ட முக்கிய அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினா். இதன் ஒரு பகுதியாக திருப்பூா் நெருப்பெரிச்சலில் உள்ள ஒருங்கிணைந்த பத்திரப் பதிவுத் துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை டி.எஸ்.பி., தட்சிணாமூா்த்தி தலைமையிலான போலீசாா் சோதனை நடத்தினா்.

    இதில் பணியில் இருந்த பதிவாளா், சாா் பதிவாளா்கள், ஊழியா்கள் உள்ளிட்ட அனைவரிடமும் சோதனை நடத்தினா். இந்த சோதனையில் கணக்கில் வராத ரூ.61 ஆயிரத்தை பறிமுதல் செய்தனா்.

    அதேபோல திருப்பூா் சிறுபூலுவபட்டியில் உள்ள வடக்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை காவல் ஆய்வாளா் விஜயலட்சுமி தலைமையிலான போலீசார் சோதனை நடத்தினா். மேலும், வஞ்சிபாளையம் சாலையில் உள்ள வட்டாரப் போக்குவரத்துக் கழக அலுவலகத்துக்கு சொந்தமான மையத்துக்குச் சென்று அங்கு பணியில் இருந்த வாகன ஆய்வாளா்கள், இடைத்தரகா்கள், வாகன ஓட்டிகளிடமும் சோதனை நடத்தினா்.இந்த சோதனையில் கணக்கில் வராத ரூ.1.48 லட்சம் என மொத்தம் ரூ.2.09 லட்சத்தை பறிமுதல் செய்தனா்.இது தொடா்பாக ஆர்.டி.ஓ. மற்றும் பத்திரப்பதிவுத்துறை அதிகாரிகள் சுமாா் 10 க்கும் மேற்பட்டோரிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா். 

    • சங்ககிரி ஒன்றியத்தில் ரேசன்கடைகளில் ஆர்.டி.ஓ. திடீர் ஆய்வு செய்தார்.
    • அங்கன்வாடி பணியாளர்களிடம் பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகளையும், குழந்தைகளின் வருகை எண்ணிக்கை குறித்தும் ஆர்.டி.ஓ. கேட்டறிந்தார்.

    சங்ககிரி:

    சங்ககிரி ஊராட்சி ஒன்றியம் தேவண்ணக்கவுண்டனூர் ஊராட்சி, எம்ஜிஆர் நகரில் உள்ள அங்கன்வாடி மையத்தில் ஆர்.டி.ஓ. சௌம்யா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர், அங்கன்வாடி பணியாளர்களிடம் பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகளையும், குழந்தைகளின் வருகை எண்ணிக்கை குறித்தும் கேட்ட றிந்தார். பின்னர், அங்கன்வாடி மையத்தில் உள்ள சமையல் கூடத்தில் வழங்கப்பட்டு வரும் உணவுகள் விவரங்கள் கேட்டறிந்து, உணவை சாப்பிட்டு பார்த்தார்.

    அதனையடுத்து அங்கு குடிநீர் வசதி உடனடியாக செய்து தருவதாக அங்கன்வாடி பணியாளர்களிடம் ஆர்டிஓ கூறினார். இதனைத் தொடர்ந்து கஸ்தூரிபா காந்தி பாலிகா வித்யாலயா உண்டு உறைவிட பள்ளியில் ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது பள்ளியில் குழந்தைகள் தங்கும் வசதிகள், பராமரிப்புகள் குறித்து கேட்டு அறிந்தார்.

    புதூர் பகுதியில் உள்ள பகுதிநேர ரேஷன் கடையில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அரிசி, பருப்பு, பாமாயில் உள்ளிட்ட உணவுப் பொருட்களின் இருப்புகள் குறித்து ஆய்வு செய்தார். அனைத்து பொருட்களும் சரியான முறையில் விநியோகிக்கப்படுகிறதா? என பொதுமக்களிடம் கேட்டறிந்தார்.

    இந்த ஆய்வின்போது சங்ககிரி ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் ராஜகணேஷ், பி.டி.ஓ. முத்து, கிழக்கு ஆர்.ஐ .,ராஜு, வி.ஏ.ஓ., முருகன் ஆகியோர் உடன் இருந்தனர்.

    • கோபிசெட்டிபாளையம் ஆர்.டி.ஓ. அலுவலகம் மற்றும் சத்தியமங்கலம் தாசில்தார் அலுவலகத்தில் கலெக்டர் கிருஷ்ணனுண்ணி திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
    • ஆர்.டி.ஓ அலுவலகத்தில் பராமரிக்க ப்பட்டு வரும் கோப்புகளான தடையாணை பதிவேட்டில் பதிவு செய்துள்ள நிலம் மற்றும் தொடர்புடைய கோப்புகளை ஆய்வு செய்தார்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் ஆர்.டி.ஓ. அலுவலகம் மற்றும் சத்தியமங்கலம் தாசில்தார் அலுவலகத்தில் கலெக்டர் கிருஷ்ணனுண்ணி திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

    ஆய்வின் போது கலெக்டர் கிருஷ்ண னுண்ணி கோபிசெட்டி பாளையம் ஆர்.டி.ஓ அலுவலகத்தில் பராமரிக்க ப்பட்டு வரும் கோப்புகளான தடையாணை பதிவேட்டில் பதிவு செய்துள்ள நிலம் மற்றும் தொடர்புடைய கோப்புகளை ஆய்வு செய்தார்.

    மேலும் குற்றவியல் விசாரணை முறை சட்டம் தொடர்பான பதி வேடுகள் மற்றும் தொடர்புடைய கோப்புகள், படைக்கல உரிமம், வெடிபொருள் உரிமம் மற்றும் பெட்ரோலிய பொருட்கள் தொடர்பான பதிவேடுகள் மற்றும் கோப்புகள், அரசு நிலங்களில் ஏற்படுத்த ப்பட்டுள்ள ஆக்கிரமிப்பு தொடர்பான கோப்புகள், நிலவரி இனங்கள் தொடர்பான கோப்புகள், நிலம், கனிமம் மற்றும் பதிவறை தொடர்பான பதிவேடுகளை ஆய்வு மேற்கொண்டார்.

    இதனையடுத்து கோட்ட அளவில் நடைபெறும் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிக ளிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கை மனுக்கள் மீதான நடவடிக்கைகள் குறித்தும், பட்டா மேல் முறையீட்டு நடவடிக்கைகள் குறித்தும், இலவச வீட்டு மனை பட்டா மற்றும் முதியோர் உதவித்தொகை உள்ளிட்டவை தொடர்பாகவும் மற்றும் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் இணைப்பு தொடர்பான பணி முன்னேற்றம் மற்றும் தணிக்கை பதிவேடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

    தொடர்ந்து சத்தியமங்கலம் தாசில்தார் அலுவலகத்தினை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, அங்கு பராமரிக்கப்பட்டு வரும் கோப்புகள் குறித்து பார்வையிட்டார்.

    தொடர்ந்து சத்திய மங்கலம் நகராட்சிக்குட்பட்ட தினசரி சந்தை வளாகத்தில் கலைஞரின் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.4.69 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் தினசரி சந்தை கட்டிட கட்டுமான பணிகளையும் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, பணிகளை விரைவாக முடித்திட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

    இந்த ஆய்வின்போது, கோபிசெட்டிபாளையம் ஆர்.டி.ஓ. திவ்யபிரிய தர்ஷினி, தாசில்தார்கள் ஆயிஷா (கோபிசெட்டிபாளையம்), ரவிசங்கர் (சத்தியமங்கலம்), சத்தியமங்கலம் நகராட்சி ஆணை யாளர் சரவணக்குமார் உள்பட தொடர்புடைய துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.

    • சிலைகளை நிறுவுதல் மற்றும் ஊர்வலத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய வழிமுறைகள் குறித்து கலந்தாய்வுக் கூட்டம் நடந்தது.
    • சிலைகள் சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில் களிமண்ணால் ஆனதாக இருக்க வேண்டும்.

    உடுமலை :

    உடுமலை விநாயகர் சதுர்த்தி விழாவில் சிலைகளை நிறுவுதல் மற்றும் ஊர்வலத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய வழிமுறைகள் குறித்து இந்து அமைப்பு நிர்வாகிகளுடன் உடுமலை ஆர்டிஓ. தலைமையில் கலந்தாய்வுக் கூட்டம்நடந்தது. கூட்டத்திற்கு ஆர்டிஓ. ஜஸ்வந்த் கண்ணன் தலைமை வகித்தார். டிஎஸ்பி .,தேன்மொழிவேல், ஆர்டிஓ. வின் நேர்முக உதவியாளர் விவேகானந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் பி. ஏ. பி. பொறியாளர், மின்வாரிய பொறியாளர், தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை அலுவலர், இந்து முன்னணி, இந்து சாம்ராஜ்யம் உள்ளிட்ட என்று அமைப்புகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் ஆர்டிஓ. ஜஸ்வந்த்கண்ணன் பேசியதாவது:-

    விநாயகர் சிலை அமைப்பாளர்கள் சிலைகளை அமைப்பதற்கு அந்தந்த காவல் நிலையங்கள் மற்றும் ஆர்டிஓ. விடம் உரிய அனுமதி பெற வேண்டும். சிலைகள் சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில் களிமண்ணால் ஆனதாக இருக்க வேண்டும். சிலைகளுக்கு நீர் நிலைகளை மாசு படுத்தாத இயற்கை வர்ணங்கள் மட்டுமே பூசப்பட்டு இருக்க வேண்டும். ரசாயன வர்ணம் பூச்சு மற்றும் பிளாஸ்டர் ஆப் பாரிஸ் போன்றவற்றால் ஆன சிலைகளை பயன்படுத்தக் கூடாது. பிரதிஷ்டை செய்யப்படும் சிலைகளின் உயரம் பீடம் மற்றும் மேடையுடன் சேர்த்து அதிகபட்சம் 10 அடிக்கும் மேலாக இருக்கக் கூடாது. விநாயகர் சிலை நிறுவப்படும் இடங்களில் எளிதில் தீப்பற்றக் கூடிய பொருட்களைக் கொண்டு மேற்கூரை மற்றும் பக்கவாட்டில் தடுப்புகள் அமைக்க கூடாது. இதர மத வழிபாட்டுத்தலங்கள் ,கல்வி நிலையங்கள் ,மருத்துவமனைகள் ஆகியவற்றின் அருகில் சிலைகளை நிறுவுதல் கூடாது .சிலைகளை வைக்கும் அமைப்பினர் ஒவ்வொரு சிலைக்கும் 24 மணி நேரமும் சிலையின் பாதுகாப்பிற்கு பொறுப்பு ஏற்கும் வகையில் பொறுப்பாளர்கள் நியமிக்க வேண்டும். ஊர்வலத்தில் பங்கு ஏற்கும் சிலைகள் போலீசார் அனுமதி அளிக்கப்பட்ட பாதையில் தான் செல்ல வேண்டும். ஊர்வலத்தின் போது போலீசார் அனுமதி மறுக்கப்பட்ட இடங்கள் வழியாக எந்த காரணத்தை கொண்டும் ஊர்வலம் செல்லக்கூடாது. தவறும் பட்சத்தில் சட்டரீதியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும். ஊர்வலத்தில் பட்டாசு வெடிகள் போன்றவற்றை உபயோகிக்க கூடாது.

    ஊர்வலத்தின் போது பிற மதத்தினரை குறிப்பிட்டு அல்லது மற்றவர்களது மனம் புண்படியோ கோஷம் இடக்கூடாது. கரைப்பதற்காக விநாயகர் சிலைகளை நான்கு சக்கர வாகனங்களான மினி வேன், டிராக்டர் போன்றவற்றில் மட்டுமே எடுத்துச் செல்ல வேண்டும். மாட்டு வண்டி மற்றும் 3 சக்கர வாகனங்களில் சிலைகளை எடுத்து செல்லக்கூடாது என ஆர்டிஓ. கூறினார்.

    • கிராம அலுவலர்களுக்கான பணிமாறுதல் கலந்தாய்வு கூட்டம் நடந்தது.
    • திருமங்கலம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் ஆர்.டி.ஓ. அபிநயா தலைமையில் இந்த கலந்தாய்வு நடந்தது.

    திருமங்கலம்

    திருமங்கலம் வருவாய் கோட்டத்திற்குட்பட்ட திருமங்கலம், திருப்பரங்குன்றம் மற்றும் கள்ளிக்குடி தாலுகாக்களை சேர்ந்த கிராமநிர்வாக அலுவலகர்களுக்கான பணிமாறுதலுக்கான கலந்தாய்வு நடந்தது.

    திருமங்கலம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் ஆர்.டி.ஓ. அபிநயா தலைமையில் இந்த கலந்தாய்வு நடந்தது. ஏ பிரிவு கிராமத்தில் ஓராண்டு பணிபுரிந்த வி.ஏ.ஓ.க்கள், பி பிரிவு கிராமத்தில் 3 ஆண்டுகள் பணிபுரிந்த வி.ஏ.ஓ.க்கள் இதில் கலந்து கொண்டனர். திருமங்கலம் தாலுகாவிற்குட்பட்ட பணிமாறுதல் செய்யப்பட்ட வி.ஏ.ஓ.க்கள் விவரம் வருமாறு:-

    காங்கேயநத்தம் கிராமத்தை சேர்ந்த வி.ஏ.ஓ. ரமேஷ் அங்கிருந்து வடகரைக்கு பணிமாறுதல் பெற்றார். வடகரை வி.ஏ.ஓ. சுகுமார், திரளி பிட் 1 வி.ஏ.ஓ.வாக மாற்றப்பட்டார். மைக்குடி வி.ஏ.ஓ. ராஜா திருமங்கலம் நகருக்கும், திருமங்கலம் பாலமுருகன், மைக்குடி வி.ஏ.ஓ.வாகவும் பணிமாறுதல் பெற்றனர்.

    கரடிக்கல் சேகரன், குன்னனம்பட்டிக்கும் அங்கிருந்த பூமாரி கரடிக்கல் வி.ஏ.ஓ.வாகவும் பணிமாறுதல் பெற்றனர். திரளி பிட் 1 ரவிச்சந்திரன், கிண்ணி மங்கலத்துக்கு வி.ஏ.ஓ.வாக பணிமாறுதல் பெற்றார்.

    கள்ளிக்குடி தாலுகாவில் தூம்பகுளம் முருகேசன், குராயூர் பிட் 1 வி.ஏ.ஓ.வாக செல்கிறார். குராயூர் பிட் 1 வைரன் இடையநத்தம் வி.ஏ.ஓ.வாக மாறியுள்ளார். இடையநத்தம் அருணோதயா, மருதங்குடி வி.ஏ.ஓ.வாக சென்றுள்ளார்.

    திருப்பரங்குன்றம் தாலுகா முல்லாகுளம் சக்திவேலு, மேலநெடுங்குளம் வி.ஏ.ஓ.வாகவும், மேலநெடுங்குளம் தமிழரசி முல்லாகுளம் வி.ஏ.ஓ.வாகவும் பணிமாறுதலாகி சென்றனர். 

    • ஆர்.டி.ஓ அலுவலகத்தில் போதிய இடவசதி இல்லாததால் நொச்சிப்பாளையம் செல்லும் சாலையில் உள்ள தனியார் இடத்தில் வாகனங்கள் ஆய்வு மற்றும் விண்ணப்பதாரர்கள் பணிகள் நடைபெறுகின்றன.
    • வாகன ஒட்டிகளும் பொதுமக்களும் இடத்தை தேடி கண்டுபிடித்துவர வேண்டியுள்ளது.

    திருப்பூர் :

    திருப்பூர் வீரபாண்டி பிரிவு அருகே திருப்பூர் தெற்கு ஆர். டி.ஓ. அலுவலகம் அமைந்துள்ளது. தினசரி ஏராளமான வாகனங்கள் பதிவு, வாகன உரிமம் , தரச்சான்று புதுப்பிப்பு உள்ளிட்ட பணிகளுக்காக வருகின்றனர். ஆர்.டி.ஓ அலுவலகத்தில் போதிய இடவசதி இல்லாததால் வீரபாண்டி பிரிவு அடுத்த நொச்சிப்பாளையம் செல்லும் சாலையில் உள்ள தனியார் இடத்தில் வாகனங்கள் ஆய்வு மற்றும் விண்ணப்பதாரர்கள் எட்டு போட்டு காட்டுதல் போன்றவை நடைபெறுகின்றன.நொச்சிப்பாளையம் சாலையில் ஆர்.டி.ஓ.ஆய்வு பணிகள் நடந்து வரும் இடம் மிகவும் குறுகலானது. மேலும் வாகன ஒட்டிகளும் பொதுமக்களும் இடத்தை கண்டுபிடித்துவர வேண்டியுள்ளது.

    தெற்கு ஆர்.டி. ஓ அலுவலகத்திற்கு புதிய இடம் தேர்வு செய்யப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. விரைவாக இடம் தேர்வு செய்து பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என வாகன ஒட்டிகளும் பொதுமக்களும் கோரிக்கை வைத்துள்ளார்கள்.

    ×