search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தாசில்தார் அலுவலகத்தில்"

    • நம்பியூர் தாசில்தார் அலுவலகத்தில் கலெக்டர் கிருஷ்ணனுண்ணி ஆய்வு மேற்கொண்டார்.
    • நிலுவையில் உள்ள கோப்புகளை உடனடியாக முடித்திட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் நம்பியூர் தாசில்தார் அலுவலகத்தில் 2019-2021-ம் ஆண்டிற்கான ஆண்டு தணிக்கையில் அலுவலகத்தில் பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகளை கலெக்டர் கிருஷ்ணனுண்ணி பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    இந்த ஆய்வில் 2019-2021-ம் ஆண்டிற்கான தன்பதிவேடு, முன்கொணர் தன்பதிவேடு, பட்டா, இ-பட்டா, முதியோர் உதவித்தொகை, கனிமம் தொடர்பான கோப்புகள், வழக்கு பதிவேடு,

    நீண்டகால நிலுவையில் உள்ள அலுவலக கோப்புகள் உள்ளிட்ட முக்கிய அலுவலக நடைமுறை கோப்புகள் மற்றும் பதிவேடுகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    ஒவ்வொரு இருக்கைக்கு உரிய கோப்புகள் முன்கொணர் பதிவேட்டின் படியம் மற்றும் நிலஅளவைத் துறையில் உள்ள அளவீட்டு நிலுவை இனங்கள் ஆகியவை குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்.

    தொடர்ந்து குடிமைப்பொருள், சமூக பாதுகாப்பு திட்டம், கோட்டகலால், நிலஅளவைபிரிவு, ஆதார் சேவை மையம், பதிவறை, கோட்ட புள்ளியியல் பிரிவுகளை தணிக்கை செய்தார்.

    மேலும் ஓராண்டிற்கு மேலாக நிலுவையில் உள்ள கோப்புகளை உடனடியாக முடித்திட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

    மேலும் தாசில்தார் அலுவலக சுற்றுப்புறங்களை தூய்மையாக வைத்து கொள்ளுமாறும் அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

    இந்த ஆய்வின் போது, நம்பியூர் தாசில்தார் பெரியசாமி, சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் துரைசாமி உள்பட துறை சார்ந்த அலுவலர்கள் உடன் இருந்தனர்.

    • கோபிசெட்டிபாளையம் ஆர்.டி.ஓ. அலுவலகம் மற்றும் சத்தியமங்கலம் தாசில்தார் அலுவலகத்தில் கலெக்டர் கிருஷ்ணனுண்ணி திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
    • ஆர்.டி.ஓ அலுவலகத்தில் பராமரிக்க ப்பட்டு வரும் கோப்புகளான தடையாணை பதிவேட்டில் பதிவு செய்துள்ள நிலம் மற்றும் தொடர்புடைய கோப்புகளை ஆய்வு செய்தார்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் ஆர்.டி.ஓ. அலுவலகம் மற்றும் சத்தியமங்கலம் தாசில்தார் அலுவலகத்தில் கலெக்டர் கிருஷ்ணனுண்ணி திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

    ஆய்வின் போது கலெக்டர் கிருஷ்ண னுண்ணி கோபிசெட்டி பாளையம் ஆர்.டி.ஓ அலுவலகத்தில் பராமரிக்க ப்பட்டு வரும் கோப்புகளான தடையாணை பதிவேட்டில் பதிவு செய்துள்ள நிலம் மற்றும் தொடர்புடைய கோப்புகளை ஆய்வு செய்தார்.

    மேலும் குற்றவியல் விசாரணை முறை சட்டம் தொடர்பான பதி வேடுகள் மற்றும் தொடர்புடைய கோப்புகள், படைக்கல உரிமம், வெடிபொருள் உரிமம் மற்றும் பெட்ரோலிய பொருட்கள் தொடர்பான பதிவேடுகள் மற்றும் கோப்புகள், அரசு நிலங்களில் ஏற்படுத்த ப்பட்டுள்ள ஆக்கிரமிப்பு தொடர்பான கோப்புகள், நிலவரி இனங்கள் தொடர்பான கோப்புகள், நிலம், கனிமம் மற்றும் பதிவறை தொடர்பான பதிவேடுகளை ஆய்வு மேற்கொண்டார்.

    இதனையடுத்து கோட்ட அளவில் நடைபெறும் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிக ளிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கை மனுக்கள் மீதான நடவடிக்கைகள் குறித்தும், பட்டா மேல் முறையீட்டு நடவடிக்கைகள் குறித்தும், இலவச வீட்டு மனை பட்டா மற்றும் முதியோர் உதவித்தொகை உள்ளிட்டவை தொடர்பாகவும் மற்றும் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் இணைப்பு தொடர்பான பணி முன்னேற்றம் மற்றும் தணிக்கை பதிவேடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

    தொடர்ந்து சத்தியமங்கலம் தாசில்தார் அலுவலகத்தினை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, அங்கு பராமரிக்கப்பட்டு வரும் கோப்புகள் குறித்து பார்வையிட்டார்.

    தொடர்ந்து சத்திய மங்கலம் நகராட்சிக்குட்பட்ட தினசரி சந்தை வளாகத்தில் கலைஞரின் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.4.69 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் தினசரி சந்தை கட்டிட கட்டுமான பணிகளையும் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, பணிகளை விரைவாக முடித்திட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

    இந்த ஆய்வின்போது, கோபிசெட்டிபாளையம் ஆர்.டி.ஓ. திவ்யபிரிய தர்ஷினி, தாசில்தார்கள் ஆயிஷா (கோபிசெட்டிபாளையம்), ரவிசங்கர் (சத்தியமங்கலம்), சத்தியமங்கலம் நகராட்சி ஆணை யாளர் சரவணக்குமார் உள்பட தொடர்புடைய துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.

    ×