search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Collector inspection at"

    • மேம்பாட்டு பணியினையும் கலெக்டர் ராஜகோபால் சுன்கரா நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
    • பஸ்கள் குறித்தும் கேட்டறிந்து கட்டுமான பணியினை விரைவாக முடிக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

    ஈரோடு:

    ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் கட்டப்பட்டு வரும் பல்நோக்கு மருத்துவமனை கட்டிடத்தினையும் மற்றும் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ஈரோடு மாநகராட்சி மத்திய பஸ் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் மேம்பாட்டு பணியினையும் கலெக்டர் ராஜகோபால் சுன்கரா நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    இந்த ஆய்வின் போது கலெக்டர் ராஜகோபால் சுன்கரா ஈரோடு அரசு தலைமை மருத்துவ மனை யினை பார்வையிட்டு, அம்மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்தும் அங்கு நாள் தோறும் சிகிச்சைக்காக வரும் நோயாளிகள் எண்ணிக்கை மற்றும் அவர்களுக்கு மேற்கொ ள்ளப்பட்டு வரும் சிகிச்சைமுறைகள் குறித்தும் மருத்துவர்களிடம் கேட்டறி ந்தார்.

    மேலும் ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் ரூ.64.00 கோடி மதிப்பீட்டில் 2,32,602 ச.அடி பரப்பளவில் கட்டப்பட்டு வரும் 8 மாடிகள் கொண்ட பல்நோக்கு மருத்துவமனை கட்டிடத்தினை பார்வை யிட்டு, கட்டிடத்தினை விரைவாக முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

    தொடர்ந்து ஈரோடு மாநகராட்சி மத்திய பஸ் நிலையத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.43 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ள ப்பட்டு வரும் மேம்பாட்டு பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு பஸ் நிலையத்தில் கட்டப்பட்டு வரும் வணிக வளாகம் மற்றும் வாகன நிறுத்தம் ஆகியவற்றை பார்வையிட்டு, பஸ் நிலையத்தில் நடை பாதை மற்றும் இருக்கைகள் ஆகியவற்றை அமைத்து பயணாளிகள் எந்தஒரு இடையூறும் இல்லாமல் பயணம் மேற்கொள்ள வசதிகள் செய்து தர அலுவ லர்களுக்கு அறிவுறுத்தினார்.

    முன்னதாக ஈரோடு மாநகராட்சி சம்பத் நகர் பகுதியில் அமைந்துள்ள ரேஷன் கடையினை பார்வையிட்டு, கடையில் இருப்பு வைக்கப்பட்டுள்ள பொருட்களின் தரம் மற்றும் பொருட்கள் சுத்தமாக உள்ளதா என்றும், அங்கு பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகளை ஆய்வு செய்து, பதிவேடுகளில் உள்ள அளவுகளின் படி அரிசி, கோதுமை, சர்க்கரை, துவரம் பருப்பு மூட்டைகள் சரியாக உள்ளதா? என்பது குறித்தும், பொருட்கள் சரியான அளவில் வழங்கப்படுகிறதா? என்பது குறித்தும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    தொடர்ந்து ஈரோடு மாநகராட்சி சோலாரில் ரூ.63.50 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் புதிய பஸ் நிலையத்தை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு அங்கு மேற்கொள்ளப்பட்டு வரும் கட்டுமான பணிகளையும், வணிக வளாகம் மற்றும் வாகன நிறுத்தம் ஆகிய வற்றை பார்வையிட்டார். மேலும் இப்பஸ் நிலை யத்தின் மார்க்கமாக இயக்கப்பட உள்ள பஸ்கள் குறி த்தும் கேட்டறிந்து கட்டுமான பணியினை விரைவாக முடிக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

    இந்த ஆய்வின் போது பொதுப்பணித்துறை கட்டிடம் மற்றும் பராமரிப்பு தலைமை பொறியாளர் இளஞ்செழியன், இணை இயக்குநர் (குடும்பநலன்) ராஜசேகர், ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் ஜானகி ரவிச்சந்திரன், செயற்பொறியாளர்கள் கிருஷ்ணமூர்த்தி (பொதுப்பணித்துறை கட்டிடம் மற்றும் பராமரிப்பு) சண்முகவடிவு (மாநகராட்சி) உள்பட துறை சார்ந்த அலுவலர்கள் உடன் இருந்தனர்.

    • விதை சுத்திகரிப்பு நிலையத்தினை கலெக்டர் கிருஷ்ணனுண்ணி ஆய்வு மேற்கொண்டார்.
    • வளர்ச்சி திட்டப்பணிகளை விரைவாக முடித்திட அலுல வர்களுக்கு அறிவுறுத்தினார்.

    ஈரோடு:

    ஈரோடுமாவட்டம் நம்பியூர் ஊராட்சி ஒன்றியம் கெட்டிச்செவியூர், சின்னாரி பாளையம் பகுதியில் வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறையின் கீழ் ரூ.60 லட்சம் மதிப்பீட்டில் ஏர்முனை கூட்டுப்ப ண்னைய உற்பத்தியாளர் நிறுவனத்தின் சார்பில் செயல்படும் சேமிப்பு கிடங்குடன் கூடிய விதை சுத்திகரிப்பு நிலையத்தினை கலெக்டர் கிருஷ்ணனுண்ணி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொ ண்டார்.

    இந்த ஆய்வின் போது கலெக்டர் கிருஷ்ணனுண்ணி நிருபர்களிடம் கூறியதாவது:

    ஈரோடு மாவட்டத்தில் உள்ள வேளாண்மை - உழவர் நலத்துறை, தோட்ட க்கலை மற்றும் மலைப்ப யிர்கள் துறை, வேளாண் பொறியியல் துறை மற்றும் வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணி கத்துறை ஆகிய துறைகளின் சார்பில் பல்வேறு திட்டப்ப ணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    அதன்படி, மாநில வேளாண்மை மேம்பாட்டு திட்டத்தின் கீழ், தரச்சான்று டன் கூடிய தரமான விதைகள் விவசாயிகளுக்கு கிடைக்கும் நோக்குடன் ஈரோடு மாவட்டத்தில் 6 உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கு சேமிப்புக் கிடங்குடன் கூடிய விதை சுத்திகரிப்பு நிலையங்கள் அமைத்திட விதை மற்றும் விதைப்பொருட்கள் பெருக்க துணை திட்டத்தில் ரூ.3.60 கோடி ஒதுக்கீட்டில் 2021-22-ல் ஒரு உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்திற்கும் மற்றும் 2022-23-ல் 5 உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தி ற்கும் என சுமார் 6 உழவர் உற்பத்தியாளர் நிறுவன ங்களுக்கும் தலா ரூ.60 லட்சம் வீதம் வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்து றை மூலம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

    மேலும் 6 உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்க ளுக்கும் தெரிவு செய்ய ப்பட்டு பணிகள் தொடங்க ப்பட்டு ரூ2.94 கோடி இது வரையில் வழங்கப்பட்டுள்ளது.

    இதில் 4 உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களான ஈரோடு துல்லியபண்ணைய உழவர் உற்பத்தியாளர் நிறுவனம், ஏர்முனை கூட்டு ப்பண்ணைய உழவர் உற்பத்தியாளர் நிறுவனம், நவரத்தினா கூட்டு ப்பண்ணைய உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் மற்றும் பாசம் உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் ஆகியவைகளில் எந்திரங்கள் நிறுவப்பட்டு விதை உற்பத்திக்கு தயார் நிலையில் உள்ளது.

    மற்றும் 2 உழவர் உற்ப த்தியாளர் நிறுவனங்களான கழனி உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் மற்றும் உழவன் உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் ஆகிய கட்டிடப்பணிகள் முடிவுற்று எந்திரங்கள் நிறுவிட தயார் நிலையில் உள்ளன.

    மேலும் அரசு மற்றும் உழவர் உற்பத்தியாளர் நிறுவன ங்கள் மூலமாக தரமான விதைகள், விவசாயிகளுக்கு உரிய பருவத்தில் கிடைத்திட சீரான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்ப ட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தொடர்ந்து கலெக்டர் கிருஷ்ணனுண்ணி நம்பியூர் பேரூராட்சிக்குட்பட்ட நம்பியூர் வாரச்சந்தை வளாகத்தில் கலைஞர் நகர்ப்புறமேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.460.63 லட்சம் மதிப்பீட்டில் வாரச்சந்தை கட்டிடம் கட்டும் பணியினையும்,

    நம்பியூர் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தினையும், நம்பியூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு ட்பட்ட அஞ்சானூர் ஊராட்சி, ஓணான் குட்டை பகுதியில் 15-வது நிதிக்குழுமானிய திட்டத்தின் கீழ் ரூ.1.77 லட்சம் மதிப்பீட்டில் கசடுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டுள்ளதையும்,

    ஓணான்குட்டை ஊராட்சி ஒன்றிய தொட க்கப்பள்ளியில் ரூ.1.69 லட்சம் மதிப்பீட்டில் பள்ளி சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதையும்,

    சுண்டக்கா ம்பாளையம் ஊராட்சி, சுண்டக்காம் பாளையத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிதிட்டத்தின் கீழ் ரூ.23.57 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடத்தி னையும், சட்டைய ம்பாளை யம் பகுதியில் பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.39.20 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் சமுதாய நல கூடத்தினையும் மற்றும் கு.கலத்தூர் ஊராட்சி பகுதியில் ஊராட்சி ஒன்றிய பொதுநிதி திட்டத்தின் கீழ் ரூ.4.60 லட்சம் மதிப்பீட்டில் பேவர் பிளாக் அமைக்கப்ப ட்டுள்ளதையும் நேரில் சென்று பார்வை யிட்டு ஆய்வு மேற்கொண்டு, மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை விரைவாக முடித்திட அலுல வர்களுக்கு அறிவுறுத்தினார்.

    தொடர்ந்து கரட்டுப்பா ளையம் ஊ ராட்சி, கரட்டு ப்பாளையம் பகுதியில் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் சார்பில் தேசிய வேளா ண்மை வளர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.40 ஆயிரம் மானிய உதவியுடன் நிரந்தரகல் பந்தல் அமைக்கப்பட்டுள்ளதையும் மற்றும் தேசிய தோட்டக்கலை இயக்கம் சார்பில் ரூ.75 ஆயிரம் மானிய உதவியுடன் வழங்க ப்பட்டுள்ள மினி டிராக்ட ரையும் பார்வை யிட்டு, இவற்றின் பயன்பாடு கள் குறித்து விவசாயிடம் கலெக்டர் கிருஷ்ணனுண்ணி கேட்டறிந்தார்.

    இந்த ஆய்வின்போது உதவி இயக்குநர் (வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை) ஜீவதயாளன், நிர்வாக அலுவலர் (வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்து றை) அபிநயா, நம்பியூர் வட்டார வளர்ச்சி அலுவல ர்கள் பெருமாள், சுபா, வட்டார மருத்துவ அலுவலர் மரு.குமார் உள்பட துறை சார்ந்த அலுலவர்கள் உடன் இருந்தனர்.

    • நம்பியூர் தாசில்தார் அலுவலகத்தில் கலெக்டர் கிருஷ்ணனுண்ணி ஆய்வு மேற்கொண்டார்.
    • நிலுவையில் உள்ள கோப்புகளை உடனடியாக முடித்திட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் நம்பியூர் தாசில்தார் அலுவலகத்தில் 2019-2021-ம் ஆண்டிற்கான ஆண்டு தணிக்கையில் அலுவலகத்தில் பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகளை கலெக்டர் கிருஷ்ணனுண்ணி பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    இந்த ஆய்வில் 2019-2021-ம் ஆண்டிற்கான தன்பதிவேடு, முன்கொணர் தன்பதிவேடு, பட்டா, இ-பட்டா, முதியோர் உதவித்தொகை, கனிமம் தொடர்பான கோப்புகள், வழக்கு பதிவேடு,

    நீண்டகால நிலுவையில் உள்ள அலுவலக கோப்புகள் உள்ளிட்ட முக்கிய அலுவலக நடைமுறை கோப்புகள் மற்றும் பதிவேடுகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    ஒவ்வொரு இருக்கைக்கு உரிய கோப்புகள் முன்கொணர் பதிவேட்டின் படியம் மற்றும் நிலஅளவைத் துறையில் உள்ள அளவீட்டு நிலுவை இனங்கள் ஆகியவை குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்.

    தொடர்ந்து குடிமைப்பொருள், சமூக பாதுகாப்பு திட்டம், கோட்டகலால், நிலஅளவைபிரிவு, ஆதார் சேவை மையம், பதிவறை, கோட்ட புள்ளியியல் பிரிவுகளை தணிக்கை செய்தார்.

    மேலும் ஓராண்டிற்கு மேலாக நிலுவையில் உள்ள கோப்புகளை உடனடியாக முடித்திட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

    மேலும் தாசில்தார் அலுவலக சுற்றுப்புறங்களை தூய்மையாக வைத்து கொள்ளுமாறும் அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

    இந்த ஆய்வின் போது, நம்பியூர் தாசில்தார் பெரியசாமி, சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் துரைசாமி உள்பட துறை சார்ந்த அலுவலர்கள் உடன் இருந்தனர்.

    • கோபிசெட்டிபாளையம் ஆர்.டி.ஓ. அலுவலகம் மற்றும் சத்தியமங்கலம் தாசில்தார் அலுவலகத்தில் கலெக்டர் கிருஷ்ணனுண்ணி திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
    • ஆர்.டி.ஓ அலுவலகத்தில் பராமரிக்க ப்பட்டு வரும் கோப்புகளான தடையாணை பதிவேட்டில் பதிவு செய்துள்ள நிலம் மற்றும் தொடர்புடைய கோப்புகளை ஆய்வு செய்தார்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் ஆர்.டி.ஓ. அலுவலகம் மற்றும் சத்தியமங்கலம் தாசில்தார் அலுவலகத்தில் கலெக்டர் கிருஷ்ணனுண்ணி திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

    ஆய்வின் போது கலெக்டர் கிருஷ்ண னுண்ணி கோபிசெட்டி பாளையம் ஆர்.டி.ஓ அலுவலகத்தில் பராமரிக்க ப்பட்டு வரும் கோப்புகளான தடையாணை பதிவேட்டில் பதிவு செய்துள்ள நிலம் மற்றும் தொடர்புடைய கோப்புகளை ஆய்வு செய்தார்.

    மேலும் குற்றவியல் விசாரணை முறை சட்டம் தொடர்பான பதி வேடுகள் மற்றும் தொடர்புடைய கோப்புகள், படைக்கல உரிமம், வெடிபொருள் உரிமம் மற்றும் பெட்ரோலிய பொருட்கள் தொடர்பான பதிவேடுகள் மற்றும் கோப்புகள், அரசு நிலங்களில் ஏற்படுத்த ப்பட்டுள்ள ஆக்கிரமிப்பு தொடர்பான கோப்புகள், நிலவரி இனங்கள் தொடர்பான கோப்புகள், நிலம், கனிமம் மற்றும் பதிவறை தொடர்பான பதிவேடுகளை ஆய்வு மேற்கொண்டார்.

    இதனையடுத்து கோட்ட அளவில் நடைபெறும் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிக ளிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கை மனுக்கள் மீதான நடவடிக்கைகள் குறித்தும், பட்டா மேல் முறையீட்டு நடவடிக்கைகள் குறித்தும், இலவச வீட்டு மனை பட்டா மற்றும் முதியோர் உதவித்தொகை உள்ளிட்டவை தொடர்பாகவும் மற்றும் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் இணைப்பு தொடர்பான பணி முன்னேற்றம் மற்றும் தணிக்கை பதிவேடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

    தொடர்ந்து சத்தியமங்கலம் தாசில்தார் அலுவலகத்தினை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, அங்கு பராமரிக்கப்பட்டு வரும் கோப்புகள் குறித்து பார்வையிட்டார்.

    தொடர்ந்து சத்திய மங்கலம் நகராட்சிக்குட்பட்ட தினசரி சந்தை வளாகத்தில் கலைஞரின் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.4.69 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் தினசரி சந்தை கட்டிட கட்டுமான பணிகளையும் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, பணிகளை விரைவாக முடித்திட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

    இந்த ஆய்வின்போது, கோபிசெட்டிபாளையம் ஆர்.டி.ஓ. திவ்யபிரிய தர்ஷினி, தாசில்தார்கள் ஆயிஷா (கோபிசெட்டிபாளையம்), ரவிசங்கர் (சத்தியமங்கலம்), சத்தியமங்கலம் நகராட்சி ஆணை யாளர் சரவணக்குமார் உள்பட தொடர்புடைய துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.

    ×