search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சேமிப்பு கிடங்குடன் கூடிய விதை சுத்திகரிப்பு நிலையத்தில் கலெக்டர் ஆய்வு
    X

    நம்பியூர் ஊராட்சி ஒன்றியம் கெட்டிச்செவியூர், சின்னாரிபாளையம் பகுதியில் ஏர்முனை கூட்டுப்பண்ணைய உற்பத்தியாளர் நிறுவனத்தின் சார்பில் செயல்படும் சேமிப்பு கிடங்குடன் கூடிய விதைசுத்திகரிப்பு நிலையத்தில் கலெக்டர் கிருஷ்ணனுண்ணி ஆய்வு மேற்கொண்டார்.

    சேமிப்பு கிடங்குடன் கூடிய விதை சுத்திகரிப்பு நிலையத்தில் கலெக்டர் ஆய்வு

    • விதை சுத்திகரிப்பு நிலையத்தினை கலெக்டர் கிருஷ்ணனுண்ணி ஆய்வு மேற்கொண்டார்.
    • வளர்ச்சி திட்டப்பணிகளை விரைவாக முடித்திட அலுல வர்களுக்கு அறிவுறுத்தினார்.

    ஈரோடு:

    ஈரோடுமாவட்டம் நம்பியூர் ஊராட்சி ஒன்றியம் கெட்டிச்செவியூர், சின்னாரி பாளையம் பகுதியில் வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறையின் கீழ் ரூ.60 லட்சம் மதிப்பீட்டில் ஏர்முனை கூட்டுப்ப ண்னைய உற்பத்தியாளர் நிறுவனத்தின் சார்பில் செயல்படும் சேமிப்பு கிடங்குடன் கூடிய விதை சுத்திகரிப்பு நிலையத்தினை கலெக்டர் கிருஷ்ணனுண்ணி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொ ண்டார்.

    இந்த ஆய்வின் போது கலெக்டர் கிருஷ்ணனுண்ணி நிருபர்களிடம் கூறியதாவது:

    ஈரோடு மாவட்டத்தில் உள்ள வேளாண்மை - உழவர் நலத்துறை, தோட்ட க்கலை மற்றும் மலைப்ப யிர்கள் துறை, வேளாண் பொறியியல் துறை மற்றும் வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணி கத்துறை ஆகிய துறைகளின் சார்பில் பல்வேறு திட்டப்ப ணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    அதன்படி, மாநில வேளாண்மை மேம்பாட்டு திட்டத்தின் கீழ், தரச்சான்று டன் கூடிய தரமான விதைகள் விவசாயிகளுக்கு கிடைக்கும் நோக்குடன் ஈரோடு மாவட்டத்தில் 6 உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கு சேமிப்புக் கிடங்குடன் கூடிய விதை சுத்திகரிப்பு நிலையங்கள் அமைத்திட விதை மற்றும் விதைப்பொருட்கள் பெருக்க துணை திட்டத்தில் ரூ.3.60 கோடி ஒதுக்கீட்டில் 2021-22-ல் ஒரு உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்திற்கும் மற்றும் 2022-23-ல் 5 உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தி ற்கும் என சுமார் 6 உழவர் உற்பத்தியாளர் நிறுவன ங்களுக்கும் தலா ரூ.60 லட்சம் வீதம் வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்து றை மூலம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

    மேலும் 6 உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்க ளுக்கும் தெரிவு செய்ய ப்பட்டு பணிகள் தொடங்க ப்பட்டு ரூ2.94 கோடி இது வரையில் வழங்கப்பட்டுள்ளது.

    இதில் 4 உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களான ஈரோடு துல்லியபண்ணைய உழவர் உற்பத்தியாளர் நிறுவனம், ஏர்முனை கூட்டு ப்பண்ணைய உழவர் உற்பத்தியாளர் நிறுவனம், நவரத்தினா கூட்டு ப்பண்ணைய உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் மற்றும் பாசம் உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் ஆகியவைகளில் எந்திரங்கள் நிறுவப்பட்டு விதை உற்பத்திக்கு தயார் நிலையில் உள்ளது.

    மற்றும் 2 உழவர் உற்ப த்தியாளர் நிறுவனங்களான கழனி உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் மற்றும் உழவன் உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் ஆகிய கட்டிடப்பணிகள் முடிவுற்று எந்திரங்கள் நிறுவிட தயார் நிலையில் உள்ளன.

    மேலும் அரசு மற்றும் உழவர் உற்பத்தியாளர் நிறுவன ங்கள் மூலமாக தரமான விதைகள், விவசாயிகளுக்கு உரிய பருவத்தில் கிடைத்திட சீரான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்ப ட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தொடர்ந்து கலெக்டர் கிருஷ்ணனுண்ணி நம்பியூர் பேரூராட்சிக்குட்பட்ட நம்பியூர் வாரச்சந்தை வளாகத்தில் கலைஞர் நகர்ப்புறமேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.460.63 லட்சம் மதிப்பீட்டில் வாரச்சந்தை கட்டிடம் கட்டும் பணியினையும்,

    நம்பியூர் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தினையும், நம்பியூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு ட்பட்ட அஞ்சானூர் ஊராட்சி, ஓணான் குட்டை பகுதியில் 15-வது நிதிக்குழுமானிய திட்டத்தின் கீழ் ரூ.1.77 லட்சம் மதிப்பீட்டில் கசடுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டுள்ளதையும்,

    ஓணான்குட்டை ஊராட்சி ஒன்றிய தொட க்கப்பள்ளியில் ரூ.1.69 லட்சம் மதிப்பீட்டில் பள்ளி சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதையும்,

    சுண்டக்கா ம்பாளையம் ஊராட்சி, சுண்டக்காம் பாளையத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிதிட்டத்தின் கீழ் ரூ.23.57 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடத்தி னையும், சட்டைய ம்பாளை யம் பகுதியில் பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.39.20 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் சமுதாய நல கூடத்தினையும் மற்றும் கு.கலத்தூர் ஊராட்சி பகுதியில் ஊராட்சி ஒன்றிய பொதுநிதி திட்டத்தின் கீழ் ரூ.4.60 லட்சம் மதிப்பீட்டில் பேவர் பிளாக் அமைக்கப்ப ட்டுள்ளதையும் நேரில் சென்று பார்வை யிட்டு ஆய்வு மேற்கொண்டு, மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை விரைவாக முடித்திட அலுல வர்களுக்கு அறிவுறுத்தினார்.

    தொடர்ந்து கரட்டுப்பா ளையம் ஊ ராட்சி, கரட்டு ப்பாளையம் பகுதியில் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் சார்பில் தேசிய வேளா ண்மை வளர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.40 ஆயிரம் மானிய உதவியுடன் நிரந்தரகல் பந்தல் அமைக்கப்பட்டுள்ளதையும் மற்றும் தேசிய தோட்டக்கலை இயக்கம் சார்பில் ரூ.75 ஆயிரம் மானிய உதவியுடன் வழங்க ப்பட்டுள்ள மினி டிராக்ட ரையும் பார்வை யிட்டு, இவற்றின் பயன்பாடு கள் குறித்து விவசாயிடம் கலெக்டர் கிருஷ்ணனுண்ணி கேட்டறிந்தார்.

    இந்த ஆய்வின்போது உதவி இயக்குநர் (வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை) ஜீவதயாளன், நிர்வாக அலுவலர் (வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்து றை) அபிநயா, நம்பியூர் வட்டார வளர்ச்சி அலுவல ர்கள் பெருமாள், சுபா, வட்டார மருத்துவ அலுவலர் மரு.குமார் உள்பட துறை சார்ந்த அலுலவர்கள் உடன் இருந்தனர்.

    Next Story
    ×