search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இடம் தேர்வு"

    • வருவாய்துறை அதிகாரிகள் ஈடுபட்டனர்
    • புதியதாக அமைக்கப்பட்ட தரை மட்ட நீர் தேக்க தொட்டியை சோதனை

    ஜோலார்பேட்டை:

    நாட்டறம்பள்ளி அருகே பச்சூரில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைக்கப்படும் என தமிழக முதல்- அமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

    இந்த அறிவிப்பை தொடர்ந்து அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கட்டுவதற்கான இடம் தேர்வு செய்யும் பணியில் வருவாய்துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

    அதன்படி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கட்டிடம் கட்ட கே.பந்தாரப்பள்ளி, மல்லபள்ளி மற்றும் பணியாண்டப்பள்ளி ஆகிய கிராமங்களில் மாவட்ட வருவாய் அலுவலர் வளர்மதி ஆய்வு மேற்கொண்டார்.

    இதனைத் தொடர்ந்து நாட்டறம்பள்ளி மற்றும் சந்திரபுரம் ஆகிய பகுதிகளில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் புதியதாக அமைக்கப்பட்ட தரை மட்ட நீர் தேக்க தொட்டியையும் மாவட்ட வருவாய் அலுவலர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    அப்போது உடன் நாட்டறம்பள்ளி தாசில்தார் குமார், மண்டல துணை தாசில்தார் நடராஜன், வருவாய் ஆய்வாளர் அன்னலட்சுமி, கிராம நிர்வாக அலுவலர் சந்தீப் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

    • போக்குவரத்து அலுவலகத்திற்கு தற்காலிக இடம் தேர்வு செய்யப்பட்டது.
    • இடம் தேர்வு செய்த எம்.எல்.ஏ தங்கபாண்டியனை பொதுமக்கள் பாராட்டினார்கள்.

    ராஜபாளையம்

    தமிழ்நாடு சட்ட மன்ற பேரவைக் ககூட்டத்தொடரில் போக்குவரத்துத்துறை மானியக்கோரிக்கையில், ராஜபாளையத்தில் புதியதாக வட்டார போக்குவரத்து கிளை அலுவலகம் அமைக்கப்படும் என அறிவிப்பு வெளி யானது.

    இதைத்தொடர்ந்து அலுவலகம் தற்காலிமாக ராஜபாளையம் தென்காசி ரோட்டில் யூனியன் ஆபிஸ் எதிரே உள்ள கட்டிடத்தில் தொடங்க எம்.எல்.ஏ தங்கபாண்டியனின் ஆலோசனைப்படி இடம் தேர்வு செய்யப்பட்டது. அந்த இடத்தில் போக்கு வரத்து துணை ஆணையர் ரவிச்சந்திரன் ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டார போக்குவரத்து அலுவலர் இளங்கோ, எம்.எல்.ஏ தங்கப்பாண்டியன், வட்டாட்சியர் ராமச்சந்திரன் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.

    ராஜபாளையம் வட்டார போக்குவரத்து கிளை அலுவலகம் தற்போது 6 மாத காலத்திற்கு தற்காலிகமாக வாடகைக்கு கட்டிடத்தில் தொடங்கப்பட்டு பின் அலுவலகத்திற்கென தனியாக புதியதாக சொந்த கட்டிடம் கட்டி முடிக்கப்படும் என தீர்மானிக்கப்பட்டது.

    இதில் நகர செயலாளர் (தெற்கு) ராமமூர்த்தி, மாவட்ட மகளிரணி அமைப்பாளர் சுமதிராமமூர்த்தி, மாவட்ட மாணவரணி அமைப்பாளர் வேல்முருகன், துணை அமைப்பாளர் இக்சாஸ் மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி துணை அமைப்பாளர் மாரிமுத்து மாணவரணி நாகேஷ்வரன் கலந்து கொண்டனர்.

    பொதுமக்கள் எளிதில் வந்து செல்லும் வகையில் இடம் தேர்வு செய்த எம்.எல்.ஏ தங்கபாண்டியனை பொதுமக்கள் பாராட்டினார்கள்.

    • சிவகங்கை கலெக்டர் அலுவலக வளாகத்தில் மத்திய கூட்டுறவு வங்கியின் தலைமை அலுவலகம் கட்ட இடம் தேர்வு செய்யப்பட்டது.
    • இதனை அமைச்சர் பெரியகருப்பன் ஆய்வு செய்தார்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் செயல்பாடுகள் மற்றும் மேம்படுத்த வேண்டிய கட்டமைப்பு வசதிகள் குறித்து கலெக்டர் மதுசூதன் ரெட்டியுடன் அமைச்சர் பெரியகருப்பன் ஆய்வு செய்தார்.

    பின்னர் அவர் கூறியதாவது:-

    சிவகங்கை மாவட்டத்தில் கூட்டுறவுத்துறையின் சார்பில் செயல்பட்டு வரும் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் கீழ் 32 கிளைகள், இணைப்பு சங்கங்களான 125 தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள், 56 பணியாளர் கூட்டுறவு சிக்கன நாணய சங்கங்கள் ஆகியவை செயல்பட்டு வருகின்றன.

    சிவகங்கையை தலைமை யிடமாக கொண்டு செயல்பட்டு வரும் சிவகங்கை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் செயல்பாடுகள் குறித்தும், மேம்படுத்த வேண்டிய வசதிகள் மற்றும் நியமிக்கப்பட வேண்டிய பணியாளர்கள், காலிப்பணியிடங்கள் ஆகியவை குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

    தற்பொழுது தற்காலிகமாக காந்தி வீதியில் செயல்பட்டு வரும் மத்திய வங்கியின் தலை மையக வங்கி கிளையில் 7 ஆயிரத்து 926 வங்கி வாடிக்கையாளர் கணக்குகளுடன் ரூ.110 கோடிக்கு இட்டுவைப்புகள் நிலுவை உள்ளதையும், அரசு திட்ட கடன்களான சிறுவணிக கடன்கள், மாற்றுத்திறனாளி கடன்கள், மகளிர் சுயஉதவிக்குழு கடன்கள் மற்றும் இதர கடன்களுடன் ரூ.84 கோடிக்கு கடன்கள் வழங்கப்பட்டுள்ளது குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.

    ஏ.டி.எம்., தனிநபர் பாதுகாப்பு பெட்டகம் மற்றும் மொபைல் பேங்கிங் வசதிகளுடன் செயல்பட்டு வருவது குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது. ஐ.எம்.பி.எஸ். மற்றும் யு.பி.ஐ. சேவைகள் விரைவில் செயல்படுத்தப்பட உள்ளது தொடர்பாகவும் தெரிவிக்கப்பட்டது.

    மத்திய கூட்டுறவு வங்கியின் தலைமை அலுவலகத்திற்கு திருப்பத்தூர் சாலையில் அமைந்துள்ள கலெக்டர் அலுவலகம் பெருந்திட்ட வளாகத்தில் நவீன வசதிகளுடன் கூடிய புதிய கட்டிடம் கட்டுவதற்கு இடம் தேர்வு தேர்வு செய்வது தொடர்பாகவும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னதாக அமைச்சர் பெரியகருப்பன் காந்தி வீதியில் உள்ள சிவகங்கை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் பழுதடைந்த தலைமையக கட்டிடத்தை ஆய்வு செய்தார். அந்த கட்டிடத்தை இடித்து விட்டு, மத்திய வங்கி தலைமையக கிளைக்கு புதிய கட்டிடம் கட்டுவதற்கும், அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

    இந்த ஆய்வின்போது மத்திய வங்கியின் மேலாண்மை இயக்குநர் ரவிச்சந்திரன், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் கோ.ஜீனு, பொது மேலாளர் (பொறுப்பு) மாரிச்சாமி மற்றும் பலர் உடனிருந்தனர்.

    • வேலுநாச்சியார் பெயரில் பெண் போலீசாருக்கான பயிற்சி கல்லூரி அமைக்க இடம் தேர்வு செய்யப்படுகிறது.
    • வேலுநாச்சியார் நினைவு மண்டபத்தில் உள்ள அவரது சிலைக்கு அமைச்சர் பெரியகருப்பன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    சிவகங்கை

    வீரமங்கை வேலு நாச்சியாரின் 293-வது பிறந்த நாளை முன்னிட்டு, சிவகங்கை-சூரக்குளத்தில் அமைந்துள்ள வேலு நாச்சியாரின் நினைவு மண்டபத்தில் அவரது சிலைக்கு, அமைச்சர் பெரியகருப்பன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    அதனைத்தொடர்ந்து கலெக்டர் மதுசூதன் ரெட்டி, கார்த்திசிதம்பரம் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் தமிழரசி, மாங்குடி மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், பிரமுகர்கள் மாலை அணிவித்து மரி யாதை செலுத்தினர்.

    அதனைத்தொடர்ந்து, அதே வளாகத்தில் உள்ள வீரத்தாய் குயிலியின் நினைவுச்சின்னத்திலும் அனைவரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் பெரியகருப்பன் பேசியதாவது:-

    இந்திய வரலாற்றில் முதல் பெண்மணியாக சுதந்திரத்திற்காக தனித்து நின்று போராடிய வீர மங்கை வேலுநாச்சியார் பிறந்த சிவகங்கை மாவட்டத்தில், இந்த வீரப் பெண்மணிக்கு நினைவு மண்டபம் அமைத்து, ஆண்டுதோறும் அவரது பிறந்தநாள் அரசு விழாவாக கொண்டாடப்படுகிறது.

    இந்திய விடுதலைப் போரில் தமிழர்களின் பங்களிப்பை வெளிக்கொ ணரவும், தமிழ் சமூகத்தின் கலாச்சாரம், பண்பாட்டை மீட்டெடுக்கும் நடவடிக்கையாகவும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வீரமங்கை வேலுநாச்சியாரின் வரலாறு கூறும் இசையார்ந்த நாடகத்தை சென்னையில் தொடங்கி வைத்தார்.

    அந்த நிகழ்ச்சி தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் நடந்தது.

    இதுபோன்று சுதந்திரப் போராட்ட தியாகிகளை போற்றும் வகையில் அவர்களை கவுரவிக்கும், இளைய தலைமுறையினருக்கு முன்மாதிரியாக திகழும் வகையிலும், முதல்-அமைச்சர் சிறப்பான நடவ டிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

    சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர், சிவகங்கை மாவட்டத்தில் வீரமங்கை வேலுநாச்சியார் பெண்கள் காவலர் பயிற்சி கல்லூரி அமைத்துத்தருமாறு அரசிடம் வைத்துள்ள கோரிக் கையின் அடிப்படையில், அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளும் வகையில், இடம் தேர்வு செய்தல் போன்ற நடவடிக்கைகளும் பரிசீலிக்கப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    விழாவில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார், செய்தி- மக்கள் தொடர்பு அலுவலர் சண்முகசுந்தரம், சிவகங்கை ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் மஞ்சுளா பாலசந்தர், சிவகங்கை நகர்மன்றத் தலைவர் துரைஆனந்த், ஆவின் பால்வளத்தலைவர் சேங்கைமாறன், காஞ்சிரங்கால் ஊராட்சி மன்றத்தலைவர் மணிமுத்து மற்றும் பலர் கலந்து கொண்டனர். 

    • சிங்கம்புணரி பேரூராட்சி அலுவலகத்தில் புதிய அலுவலக கட்டிடம் கட்ட இடம் தேர்வு செய்வது குறித்து அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது.
    • அதன் அருகிலேயே இடம் கொடுத்து அவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

    சிங்கம்புணரி

    சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி பேரூராட்சி அலுவலகத்தில் புதிய அலுவலக கட்டிடம் கட்ட இடம் தேர்வு செய்வது குறித்து அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது. இதில் தி.மு.க., அ.தி.மு.க., காங்கிரஸ், பா.ஜ.க., கம்யூனிஸ்டு, தே.மு.தி.க., ம.தி.மு.க. உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    பேரூராட்சி தலைவர் அம்பலமுத்து, துணை சேர்மன் இந்தியன் செந்தில் தலைமையில் செயல் அலுவலர் ஜான்முகமது முன்னிலையில் கூட்டம் நடந்தது.

    இதில் பேரூராட்சியின் தற்போதைய கட்டிடம் பழைமையான கட்டிடம் என்பதாலும், அங்கு போதிய இடவசதி இல்லாத கார ணத்தாலும் புதிய கட்டிடம் கட்டுவதற்கான இடம் சீரணி அரங்கம் பகுதியில் தேர்வு செய்யப்படுவதாக பேரூராட்சி தலைவர் தெரிவித்தார்.

    இது சம்பந்தமாக நடைபெற்ற ஆேலாசனை கூட்டத்தில் அனைத்து கட்சி நிர்வாகிகளும் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களை தெரிவித்தனர். பின்னர் தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

    அ.தி.மு.க. நகர செயலாளர் வாசு பேசும்போது, புதிய பேரூராட்சி கட்டிடத்தை தவிர வர்த்தக பயன்பாட்டிற்காக வேறு எந்த ஒரு கட்டிடமும் கட்டக் கூடாது என்று கேட்டுக் கொண்டார். அதனைத்தொடர்ந்து காங்கிரஸ், பா.ஜ.க., கம்யூனிஸ்டு உள்ளிட்ட கட்சி நிர்வாகி களும் பேசினர்.

    கூட்டத்தில் சிறுவர் பூங்கா அருகே மஞ்சு விரட்டு மணி செய்யும் தொழிலாளர்களை மாற்று இடத்திற்கு மாற்றவேண்டும் என்ற கோரிக்கையை பா.ஜ.க. நிர்வாகி விடுத்தார். அதற்கு தி.மு.க. கவுன்சிலர் மணிசேகரன் கூறும்போது, சிங்கம்புணரி நகருக்கான கோவில் ஊழியம் செய்யும் சிறு தொழில் செய்யும் அவர்களின் வாழ்வா தாரத்தை நசுக்ககூடாது. அவர்களுக்கு அதன் அருகிலேயே இடம் கொடுத்து அவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்தினார். உடனே பேரூராச்சி தலைவர் அவர்களுக்கு நல்ல இடம் தேர்வு செய்யப்பட்டு வழங்கப்படும் என உறுதி அளித்தார்.

    • முதல் - அமைச்சர் மு. க. ஸ்டாலின் ஈரோடு மாவட்டத்தில் நடக்கும் கருணாநிதியின் சிலை திறப்பு விழா மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வருக்கிறார்.
    • பெருந்துறை -கோவை ரோட்டில் உள்ள ஏரி கருப்பன் கோவில் பகுதிக்கு அமைச்சர் சு.முத்துசாமி, மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி ஆகியோர் சென்று இடத்தை பார்வையிட்டனர்.

    பெருந்துறை:

    முதல் - அமைச்சர் மு. க. ஸ்டாலின் வருகிற 25, 26-ந் தேதிகளில் ஈரோடு மாவட்டத்தில் நடக்கும் முன்னாள் முதல் - அமைச்சர் கருணாநிதியின் சிலை திறப்பு விழா மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வருக்கிறார்.

    26-ந் தேதி ஈரோடு சோலாரில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார் என முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது 26-ந் தேதி ஈரோடுக்கு பதில் பெருந்துறையில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதைத் தொடர்ந்து நிகழ்ச்சி நடைபெறும் இடத்தை தேர்வு செய்வதற்காக பெருந்துறை -கோவை ரோட்டில் உள்ள ஏரி கருப்பன் கோவில் பகுதிக்கு அமைச்சர் சு.முத்துசாமி, மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி ஆகியோர் சென்று இடத்தை பார்வையிட்டனர்.

    தி.மு.க வடக்கு மாவட்ட செயலாளர் நல்லசிவம், முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாச்சலம், பெருந்துறை தெற்கு ஒன்றிய செயலாளர் சாமி, வடக்கு ஒன்றிய செயலாளர் சின்னசாமி, கருமா ண்டிசெல்லிபாளையம் பேரூராட்சி தலைவர் செல்வன், துணைத் தலைவர் சக்தி குமார்,

    யூனியன் கவுன்சிலர்கள் துடுப்பதி நவபாரதி, செந்தில்குமார் பெருந்துறை பேரூராட்சி தலைவர் ராஜேந்திரன், திருவாச்சி ஊராட்சி மன்ற தலைவர் சோளி பிரகாஷ், வார்டு கவுன்சிலர்கள் கோகுல், நல்லசிவம், பால விக்னேஷ், சரவணன், சுப்பிரமணியன், ஜெயந்தி வாட்டர் கோபால்,

    நந்தினி செல்வகுமார், துரைராஜ், வைகை சுரேஷ், தங்கமுத்து, சதீஷ் பிரவீன் குமார், பழனிசாமி, சுப்பிரமணி, ஒசப்பட்டி பொன்னுச்சாமி, ஈரோடு தெற்கு மற்றும் வடக்கு மாவட்ட நிர்வாகிகள் ஒன்றிய நிர்வாகிகள், பேரூர் நிர்வாகிகள் உள்பட பலர் உடன் இருந்தனர்.

    • ஆர்.டி.ஓ அலுவலகத்தில் போதிய இடவசதி இல்லாததால் நொச்சிப்பாளையம் செல்லும் சாலையில் உள்ள தனியார் இடத்தில் வாகனங்கள் ஆய்வு மற்றும் விண்ணப்பதாரர்கள் பணிகள் நடைபெறுகின்றன.
    • வாகன ஒட்டிகளும் பொதுமக்களும் இடத்தை தேடி கண்டுபிடித்துவர வேண்டியுள்ளது.

    திருப்பூர் :

    திருப்பூர் வீரபாண்டி பிரிவு அருகே திருப்பூர் தெற்கு ஆர். டி.ஓ. அலுவலகம் அமைந்துள்ளது. தினசரி ஏராளமான வாகனங்கள் பதிவு, வாகன உரிமம் , தரச்சான்று புதுப்பிப்பு உள்ளிட்ட பணிகளுக்காக வருகின்றனர். ஆர்.டி.ஓ அலுவலகத்தில் போதிய இடவசதி இல்லாததால் வீரபாண்டி பிரிவு அடுத்த நொச்சிப்பாளையம் செல்லும் சாலையில் உள்ள தனியார் இடத்தில் வாகனங்கள் ஆய்வு மற்றும் விண்ணப்பதாரர்கள் எட்டு போட்டு காட்டுதல் போன்றவை நடைபெறுகின்றன.நொச்சிப்பாளையம் சாலையில் ஆர்.டி.ஓ.ஆய்வு பணிகள் நடந்து வரும் இடம் மிகவும் குறுகலானது. மேலும் வாகன ஒட்டிகளும் பொதுமக்களும் இடத்தை கண்டுபிடித்துவர வேண்டியுள்ளது.

    தெற்கு ஆர்.டி. ஓ அலுவலகத்திற்கு புதிய இடம் தேர்வு செய்யப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. விரைவாக இடம் தேர்வு செய்து பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என வாகன ஒட்டிகளும் பொதுமக்களும் கோரிக்கை வைத்துள்ளார்கள்.

    ×