search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "RTO office"

    • சப்-கலெக்டராக இருப்பவர் விஷ்ணுராஜ். போர்ட் கொச்சி ஆர்.டி.ஓ. அலுவலகத்ததில் பணிபுரிந்து வருகிறார்.
    • ஒரு அரசு அதிகாரி இவ்வளவு குறுகிய காலத்தில், இவ்வளவு நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளை எதிர்கொண்டுள்ளது இதுவே முதன்முறை என்று கூறப்படுகிறது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் சப்-கலெக்டராக இருப்பவர் விஷ்ணுராஜ். போர்ட் கொச்சி ஆர்.டி.ஓ. அலுவலகத்ததில் பணிபுரிந்து வருகிறார். இவர் கேரள ஐகோர்ட்டு பிறப்பித்த ஏராளமான உத்தரவுகளை அமல்படுத்தவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் கடந்த 2 ஆண்டுகளில் 243 நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளை சப்-கலெக்டர் விஷ்ணுராஜ் எதிர்கொண்டுள்ளார். ஒரு அரசு அதிகாரி இவ்வளவு குறுகிய காலத்தில், இவ்வளவு நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளை எதிர்கொண்டுள்ளது இதுவே முதன்முறை என்று கூறப்படுகிறது.

    கேரள மாநிலத்தை பொறுத்தவரை, போர்ட் கொச்சி ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் நில மறுவகைப்படுத்துதல் வழக்குகள் அதிகம் என்பதால் 35 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் இருப்பதாகவும், பல்லாயிரக்கணக்கான விண்ணப்பங்கள் இருப்பதால் கோர்ட்டு விதிக்கும் காலக்கொடுவுக்குள் தீர்ப்பை அமல்படுத்த முடியாததால் சப்-கலெக்டர் இத்தனை கோர்ட்டு அவமதிப்பு வழக்குகளை எதிர்கொண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

    • ஆர்.டி.ஓ அலுவலகத்தில் போதிய இடவசதி இல்லாததால் நொச்சிப்பாளையம் செல்லும் சாலையில் உள்ள தனியார் இடத்தில் வாகனங்கள் ஆய்வு மற்றும் விண்ணப்பதாரர்கள் பணிகள் நடைபெறுகின்றன.
    • வாகன ஒட்டிகளும் பொதுமக்களும் இடத்தை தேடி கண்டுபிடித்துவர வேண்டியுள்ளது.

    திருப்பூர் :

    திருப்பூர் வீரபாண்டி பிரிவு அருகே திருப்பூர் தெற்கு ஆர். டி.ஓ. அலுவலகம் அமைந்துள்ளது. தினசரி ஏராளமான வாகனங்கள் பதிவு, வாகன உரிமம் , தரச்சான்று புதுப்பிப்பு உள்ளிட்ட பணிகளுக்காக வருகின்றனர். ஆர்.டி.ஓ அலுவலகத்தில் போதிய இடவசதி இல்லாததால் வீரபாண்டி பிரிவு அடுத்த நொச்சிப்பாளையம் செல்லும் சாலையில் உள்ள தனியார் இடத்தில் வாகனங்கள் ஆய்வு மற்றும் விண்ணப்பதாரர்கள் எட்டு போட்டு காட்டுதல் போன்றவை நடைபெறுகின்றன.நொச்சிப்பாளையம் சாலையில் ஆர்.டி.ஓ.ஆய்வு பணிகள் நடந்து வரும் இடம் மிகவும் குறுகலானது. மேலும் வாகன ஒட்டிகளும் பொதுமக்களும் இடத்தை கண்டுபிடித்துவர வேண்டியுள்ளது.

    தெற்கு ஆர்.டி. ஓ அலுவலகத்திற்கு புதிய இடம் தேர்வு செய்யப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. விரைவாக இடம் தேர்வு செய்து பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என வாகன ஒட்டிகளும் பொதுமக்களும் கோரிக்கை வைத்துள்ளார்கள்.

    ரெட்டேரி ஆர்.டி.ஓ.ஆபீசில் ஆன்லைன் குளறுபடியால் சாலை வரி செலுத்த முடியாமல் வாகன உரிமையாளர்கள் அவதியடைந்துள்ளனர். #Rtooffice

    சென்னை:

    கார், வேன் போன்ற 4 சக்கர வாகனங்களுக்கும் லாரி, ‘ட்ரக்’ போன்ற கனரக வாகனங்களுக்கும் காலாண்டு, அரையாண்டு, முழு ஆண்டு என சாலை வரி 3 விதமாக வசூலிக்கப்படுகிறது.

    சாலை வரிசெலுத்தும் முறை கடந்த மாதம் வரை ஆன்லைன் மற்றும் நேரடியாக செலுத்தும் முறை இருந்து வந்தது. ஆனால் இந்த மாதம் 1-ந்தேதி முதல் ஆன்லைனில் மட்டுமே செலுத்த வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    அக்டோபர், நவம்பர், டிசம்பர் ஆகிய 3 மாத காலாண்டு வரி இந்த மாதம் முதல் செலுத்த வேண்டும். இந்த காலத்தில் எப்.சி. காட்ட வேண் டிய வாகனங்களுக்கு சாலை வரி செலுத்தினால் மட்டுமே எப்.சி.க்கு செல்ல முடியும்.

    ஆனால் கடந்த 1-ந்தேதி முதல் ஆன்லைனில் சாலை வரி செலுத்துவதற்கு வாகன உரிமையாளர்கள் தயாராக இருந்தும் சாப்ட்வேர் பிரச்சினையால் செயல்படாமல் உள்ளது. இதனால் 10 நாட்களாக சாலை வரி செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

    ரெட்டேரி வட்டார போக்கு வரத்து அலுவலகத்தில் மட் டும் தான் இந்த பிரச்சினை ஏற்பட்டு இருக்கிறது. மற்ற ஆர்.டி.ஓ. அலுவலகங்களில் கவுண்டர்களில் பணமாகவோ, வரை வோலையாகவோ பெற்றுக் கொள்கிறார்கள். ரெட்டேரி ஆபீசில் பணம் பெற மறுத்து ஆன்லைனில் தான் செலுத்த வேண்டும் என்று கூறி வருகின்றனர்.

    ஆன்லைன் குளறுபடியை சரி செய்யாமல் காலம் தாழ்த்தி வருவதால் வாகனங்களை இயக்க முடியாமலும், எப்.சி. காட்ட முடியாமலும் உரிமையாளர்கள் திண்டாடுகிறார்கள்.

    இதுகுறித்து லாரி உரிமையாளர் வக்கீல் ஜெ.சத்திய மூர்த்தி கூறியதாவது:-

    வாகனங்களுக்கான சாலை வரியை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும் என்று ரெட்டேரி ஆர்.டி.ஓ. தெரிவித்த போதிலும் அதனை செலுத்த கடந்த 10 நாட்களாக முயற்சி செய்கிறோம். ஆனால் பணம் செலுத்த முடியவில்லை. சாப்ட்வேர் குளறுபடியால் அதிக கட்டணம் செலுத்து மாறு காட்டுகிறது.

    ஆன்லைனில் செலுத்த முடியாமல் நூற்றுக்கணக்கான லாரிகளை இயக்க முடியாமல் நிறுத்தி வைத்துள்ளோம். சாப்ட்வேர் பிரச்சினை என்றால் கவுண்டரில் பணத்தை பெற்று கொண்டு வாகனங்களை எப்.சி.க்கு அனுமதிக்க வேண்டும்.

    அவ்வாறு செய்யாமல் ஆன்லைன் இன்று சரியாகி விடும் என்று சாக்கு போக்கு சொல்லி வருகிறார்கள். இதனால் லாரி உரிமையாளர்கள் பாதிக்கப்படுகிறோம். மற்ற வட்டார போக்கு வரத்து அலுவலகங்களில் இந்த பிரச்சினை இல்லை. ரெட்டேரியில் மட்டும் தான் உள்ளது. ஆதலால் கவுண்டரில் சாலை வரியை பெறுவதற்கு போக்குவரத்து துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். #Rtooffice

    தஞ்சை ஆர் டி ஓ அலுவலகத்தில் நடந்த விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்துக்கு அதிகாரி வராததை கண்டித்து கருகிய பயிற்களை கைகளில் எந்தி விவசாயிகள் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
    தஞ்சாவூர்:

    தஞ்சை ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் இன்று விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறுவதாக இருந்தது.

    இதற்காக தஞ்சை, திருவையாறு, பூதலூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த சுமார் 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் ஆர்.டி.ஓ. ஏலுவலத்துக்கு முன்பு திரண்டு இருந்தனர்.

    காலை 10 மணிக்கு தொடங்க வேண்டிய கூட்டம், ஆர்.டி.ஓ. சுரேஷ் வராததால் நடைபெறாமல் இருந்தது. நேரம் செல்ல.. செல்ல விவசாயிகளும் மனம் தளராமல் காத்து கொண்டு இருந்தனர்.

    பின்னர் மதியம் 12 மணியை தாண்டியும் ஆர்.டி.ஓ. வராததால் விவசாயிகள் பொறுமை இழந்தனர்.

    இதையடுத்து ஆர்.டி.ஓ. அலுவலகம் முன்பு தமிழ்நாடு விவசாய தொழிலாளர் சங்க மாநில துணை தலைவர் வக்கீல் ஜீவக்குமார் தலைமையில் விவசாயிகள் திடீரென முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அப்போது விவசாயிகள், காய்ந்த பயிர்களை கைகளில் ஏந்தி கொண்டு அதிகாரியை கண்டித்து கோ‌ஷமிட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    இதையடுத்து போலீசார் விரைந்து வந்து விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    கர்நாடக அரசிடம் 1 டி.எம்.சி. தண்ணீருக்காக காத்திருந்தோம். தற்போது மேட்டூர் அணை 3 முறை நிரம்பி உள்ளது. ஆனால் எத்தனையோ டி.எம்.சி. தண்ணீர் கடலுக்கு வீணாக செல்கிறது. அந்த தண்ணீரை சேமிக்க தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை.

    தற்போது உழவுக்கு தண்ணீர் இல்லாமல் விவசாயிகள் கஷ்டப்பட்டு வருகிறார்கள். தண்ணீர் தேவையான நேரத்தில் கடைமடை பகுதிகள் எல்லாம் காய்ந்து போனது.

    முக்கொம்பு அணையை சீரமைக்கிறோம் என்று தண்ணீரை திறக்க மறுக்கிறார்கள். பயிர்கள் காய்ந்து வருவதால் இன்று அதிகாரியை சந்தித்து முறையிடலாம் என்று வந்தோம் . ஆனால் 12 மணியை தாண்டியும் அதிகாரியை காணவில்லை. டெல்டா மாவட்டங்களை காப்பாற்ற கடைமடை பகுதி வரை தண்ணீர் செல்ல அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். #tamilnews
    திருச்செங்கோடு ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் விடிய, விடிய நடந்த லஞ்ச ஒழிப்பு சோதனையில் கணக்கில் வராத ரூ.3½ லட்சம் சிக்கியது.
    திருச்செங்கோடு:

    நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே வரகூராம்பட்டியில் வட்டார போக்குவரத்து அலுவலகம் உள்ளது. இங்கு சிலர் லஞ்சம் வாங்குவதாக புகார்கள் எழுந்தன. இதையடுத்து நேற்று மாலை நாமக்கல் லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெயகுமார், இன்ஸ்பெக்டர் நல்லம்மாள் மற்றும் 10 பேர் கொண்ட குழுவினர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் அதிரடியாக புகுந்து சோதனை நடத்தினார்கள்.

    இச்சோதனையின் போது அலுவலகத்தில் இருந்த வட்டார போக்குவரத்து அதிகாரி ராமலிங்கம், மோட்டார் வாகன ஆய்வாளர் செந்தில்குமார் மற்றும் அலுவலர்கள், பணியாளர்கள், அலுவலகத்திற்கு வந்திருந்த பொதுமக்கள் ஆகியோர் வெளியே செல்ல அனுமதி மறுக்கப்பட்டது.

    இதனால் அவர்கள் அனைவரும் அலுவலகத்திலேயே அமர்ந்திருந்தனர். அலுவலகத்திற்கு அதிகாரிகள் பூட்டு போட்டனர். பின்னர் பூட்டிய அறைக்குள் சோதனை நடந்தது. அங்கிருந்த கோப்புகள், ஆர்.சி.புக், மேஜை அறை, உணவு பாக்ஸ் மற்றும் கழிப்பிடங்களை சோதனை செய்தனர்.

    மேலும் ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் இருந்த அனைவரையும் தனித்தனியாக போட்டோ எடுத்து பதிவு செய்தனர். விடிய, விடிய இந்த சோதனை நடந்தது. இந்த சோதனையின்போது கட்டு, கட்டாக கணக்கில் வராத பணம் சிக்கியது. ஆர்.டி.ஓ. ஆபிசில் இருந்த அலுவலர்கள் மற்றும் அவர்களது இருக்கையில் இருந்த ரொக்கப்பணத்தை பறிமுதல் செய்தனர்.

    மேலும் ஆபீஸ் கழிவறையில் வீசப்பட்டிருந்த ரூபாய் நோட்டுகளையும் லஞ்ச ஒழிப்பு போலீசார் பறிமுதல் செய்தனர். மொத்தம் 3½ லட்சம் ரூபாய் கைப்பற்றப்பட்டது. இது தொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் திருச்செங்கோடு பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #tamilnews
    ×