search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tiruchengode"

    திருச்செங்கோடு நகராட்சி குப்பை கிடங்கை அகற்ற வலியுறுத்தி அப்பகுதி மக்கள் வாக்களிப்பை புறக்கணித்து இன்று காலை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    திருச்செங்கோடு:

    நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அணிமூர் கிராமத்தில் நகராட்சிக்கு சொந்தமான குப்பை கிடங்கு உள்ளது.

    இந்த குப்பை கிடங்கை சுற்றி ஏராளமான வீடுகள் உள்ளன. இந்த நிலையில் குப்பை கிடங்கில் கொட்டப்படும் கழிவுகள் மூலமாக பல்வேறு நோய்கள் பரவுவதாகவும், எனவே, குப்பை கிடங்கை அகற்ற வேண்டும் எனவும் அந்த பகுதியில் வசித்து வரும் பொதுமக்கள் தொடர்ந்து புகார் தெரிவித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் அப்பகுதி மக்கள் வாக்களிப்பை புறக்கணித்து இன்று காலை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையறிந்த வருவாய் கோட்டாட்சியர் மணிராஜ், அணிமூர் கிராமத்திற்கு சென்று அவர்களிடம் சுமூக பேச்சுவார்த்தை நடத்தினார்.

    நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே நள்ளிரவு தனியார் வங்கியில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.15 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம் அடைந்தன. #BankFire

    திருச்செங்கோடு:

    நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே உள்ள வையப்பமலையில் தனியார் வங்கி கிளை ஒன்று இயங்கி வருகிறது.

    இந்த நிலையில் நேற்று இரவு 11 மணியளவில் வங்கியில் திடீரென தீப்பிடித்து, கரும்புகை குபு, குபு வென வெளியே வந்தது. இதை பார்த்த அக்கம், பக்கத்தினர் உடனே வங்கியில் தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க முயற்சி செய்தனர். ஆனால், வங்கியின் முன்பக்க கதவு மூடப்பட்டிருந்ததால் உட்புறம் பிடித்த தீயை அணைக்க முடியவில்லை.

    இதனால் வங்கி மேலாளர் சமீர் மற்றும் ராசிபுரம் தீயணைப்பு நிலையத்துக்கு பொதுமக்கள் போனில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு ராசிபுரம் தீயணைப்பு நிலைய அலுவலர் ராதாகிருஷ்ணன் தலைமையில் தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து வந்து 1 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

    அதற்குள் தீ மளமளவென பரவி வங்கியில் இருந்த கணினி, ஏ.சி., மேசை, நாற்காலி, தளவாடச் சாமான்கள், ஆவணங்கள் உள்ளிட்டவை எரிந்தது. இப்பொருட்களின் சேதமதிப்பு ரூ.15 லட்சம் இருக்கும் என்று வங்கி தரப்பில் கூறப்படுகிறது.

    தீ விபத்தில் வங்கியில் இருந்த சுமார் 20 லட்சம் பணம் தப்பியது. மேலும் அடமானத்திற்கு வாங்கி வைத்திருந்த நகைகள், தனி லாக்கரில் வாடிக்கையாளர்கள் வைத்திருந்த பொருட்கள் பத்திரமாக இருப்பதாக வங்கி அதிகாரிகள் தெரிவித்தனர்.

    தீ விபத்துக்கான காரணம் மின் கசிவா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என தெரியவில்லை. இது குறித்து எலச்சிப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இரவு நேரத்தில் ஏற்பட்ட இந்த தீ விபத்து அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.  #BankFire

    திருச்செங்கோடு ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் விடிய, விடிய நடந்த லஞ்ச ஒழிப்பு சோதனையில் கணக்கில் வராத ரூ.3½ லட்சம் சிக்கியது.
    திருச்செங்கோடு:

    நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே வரகூராம்பட்டியில் வட்டார போக்குவரத்து அலுவலகம் உள்ளது. இங்கு சிலர் லஞ்சம் வாங்குவதாக புகார்கள் எழுந்தன. இதையடுத்து நேற்று மாலை நாமக்கல் லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெயகுமார், இன்ஸ்பெக்டர் நல்லம்மாள் மற்றும் 10 பேர் கொண்ட குழுவினர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் அதிரடியாக புகுந்து சோதனை நடத்தினார்கள்.

    இச்சோதனையின் போது அலுவலகத்தில் இருந்த வட்டார போக்குவரத்து அதிகாரி ராமலிங்கம், மோட்டார் வாகன ஆய்வாளர் செந்தில்குமார் மற்றும் அலுவலர்கள், பணியாளர்கள், அலுவலகத்திற்கு வந்திருந்த பொதுமக்கள் ஆகியோர் வெளியே செல்ல அனுமதி மறுக்கப்பட்டது.

    இதனால் அவர்கள் அனைவரும் அலுவலகத்திலேயே அமர்ந்திருந்தனர். அலுவலகத்திற்கு அதிகாரிகள் பூட்டு போட்டனர். பின்னர் பூட்டிய அறைக்குள் சோதனை நடந்தது. அங்கிருந்த கோப்புகள், ஆர்.சி.புக், மேஜை அறை, உணவு பாக்ஸ் மற்றும் கழிப்பிடங்களை சோதனை செய்தனர்.

    மேலும் ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் இருந்த அனைவரையும் தனித்தனியாக போட்டோ எடுத்து பதிவு செய்தனர். விடிய, விடிய இந்த சோதனை நடந்தது. இந்த சோதனையின்போது கட்டு, கட்டாக கணக்கில் வராத பணம் சிக்கியது. ஆர்.டி.ஓ. ஆபிசில் இருந்த அலுவலர்கள் மற்றும் அவர்களது இருக்கையில் இருந்த ரொக்கப்பணத்தை பறிமுதல் செய்தனர்.

    மேலும் ஆபீஸ் கழிவறையில் வீசப்பட்டிருந்த ரூபாய் நோட்டுகளையும் லஞ்ச ஒழிப்பு போலீசார் பறிமுதல் செய்தனர். மொத்தம் 3½ லட்சம் ரூபாய் கைப்பற்றப்பட்டது. இது தொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் திருச்செங்கோடு பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #tamilnews
    திருச்செங்கோடு அருகே இன்று மொபட் மீது கார் மோதிய விபத்தில் ரிக் வண்டி டிரைவர் பலியானார்.

    திருச்செங்கோடு:

    நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே ஊஞ்சனையை அடுத்த குட்டிக்காபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் செங்கோட்டுவேல் (வயது 53), ரிக் வண்டி டிரைவர்.

    இன்று காலை இவர் ஊஞ்சனையில் இருந்து குட்டிக்காபாளையத்திற்கு மொபட்டில் சென்று கொண்டிருந்தார். நாமக்கல் - திருச்செங்கோடு 4 வழிச்சாலையில் குட்டிக்காபாளையம் பிரி வில் செங்கோட்டுவேல் வலதுபுறம் செல்வதற்காக தனது மொபட்டை திருப்பினார். அப்போது அந்த வழியாக வந்த ஒரு கார் மொபட் மீது பயங்கரமாக மோதியது.

    இதில் படுகாயம் அடைந்த செங்கோட்டுவேல் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இந்த விபத்து பற்றி அறிந்ததும் திருச்செங்கோடு ரூரல் இன்ஸ்பெக்டர் ஆரோக்கியராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து செங்கோட்டுவேல் பிணத்தை கைப்பற்றி மருத்துவ பரிசோதனைக்காக திருச்செங்கோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த நிலையில் குட்டிக்காபாளையம் பிரிவு பகுதியில் அடிக்கடி விபத்து நடப்பதாகவும், ரோட்டின் நடுவில் உள்ள தடுப்பு சுவர் உயரமாக இருப்பதால் இதுபோன்ற விபத்துக்கள் நிகழ்வதாகவும் கூறி அப்பகுதி பொதுமக் கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர்.

    இதையடுத்து இன்ஸ்பெக்டர் ஆரோக்கியராஜ் அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார். இனிமேல் விபத்தை தடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அவர் உறுதி அளித்தார். இதைத்தொடர்ந்து கிராம மக்கள் தங்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

    இந்த விபத்து சம்பவத்தை தொடர்ந்து காரை ஓட்டி வந்த பரமத்திவேலூர் இருக்கூர் பகுதியைச் சேர்ந்த அருள்குமார் என்பவரை போலீசார் கைது செய்தனர். இவர் திருப்பூரில் கார்மெண்ட்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    நாமக்கல் வடக்கு மாவட்ட தே.மு.தி.க. ஆலோசனைக் கூட்டம் கட்சியின் மாவட்ட அவைத் தலைவர் முத்துசாமி தலைமையில் நடந்தது.

    திருச்செங்கோடு:

    நாமக்கல் வடக்கு மாவட்ட தே.மு.தி.க. ஆலோசனைக் கூட்டம் கட்சியின் மாவட்ட அவைத் தலைவர் முத்துசாமி தலைமையில் நடந்தது. நகர செயலாளர் சின்னதம்பி வரவேற்றார். வடக்கு மாவட்ட பொருளார் ஈஸ்வரன், துணை செயலாளர்கள் பொங்கியண்ணன், விஜய கமல், ராஜா, தனலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    சிறப்பு அழைப்பாளர் களாக கட்சியின் மாநில அவைத் தலைவரும் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான அழகாபுரம் மோகன்ராஜ், மாநில ஆலோசனைக் குழு செயலாளர் வெங்கடேசன், கட்சியின் மாவட்ட பொறுப்பாளர் விஜயன் ஆகியோர் கலந்து கொண்டு கட்சி நிர்வாகிகளின் கருத்துக்களையும் கட்சியின் வளர்ச்சி குறித்தும் ஆலோசித்தனர்.

    நிகழ்ச்சியில் பேசிய தே.மு.தி.க. கட்சியின் மாநில அவைத் தலைவர் முன்னாள் எம்.எல்.ஏ. அழகாபுரம் மோகன்ராஜ் கூறியதாவது:-

    காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க போராட வேண்டிய சூழ்நிலையை உருவாக்கியதில் முக்கிய காரணம் தி.மு.க. தலைவர் கருணாநிதி தான் 1974-ல் காவிரி ஒப்பந்தந்தை புதுப்பித்து இருந்தால் இந்த நிலை வந்திருக்காது.

    அ.தி.மு.க. பல துண்டுகளாக உடைந்துள்ளது. தினகரன் ஆதரவு எம்.எல். ஏ.க்கள் பதவி நீக்கம் குறித்த தீர்ப்பு வந்தால் ஆட்சி இருக்காது என்ற நிலையில் மோடியின் தயவால் எடப்பாடி அரசு நீடிக்கிறது.

    பாராளுமன்றத் தேர்தலுடன் சட்டமன்றத் தேர்தல் உருவாகும் சூழ்நிலை உள்ளது. நமது வாக்கு வங்கி அப்படியே தான் உள்ளது. அதனை ஒருங்கிணைக்க கட்சி நிர்வாகிகள் கடுமையாக உழைக்க வேண்டும்.

    எந்த எதிர்ப்பார்ப்பும் இல்லாமல் உழைப்பவர்கள் தே.மு.தி.க. தொண்டர்கள் தான்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    ×