என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திருச்செங்கோடு"

    • திமுக அரசு திருச்செங்கோடு தொகுதிக்கு எதுவும் செய்யவில்லை.
    • கொரோனா பரவல் காலத்தில் மாணவர்களை ஆல் பாஸ் ஆக்கியது அதிமுக அரசு.

    மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் தமிழகம் முழுவதும் எடப்பாடி பழனிசாமி தேர்தல் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.

    அந்த வகையில் இன்று மாலை, நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு சட்டமன்றத் தொகுதியில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பரப்புரை நடத்தினார்.

    அப்போது அவர் உரையாற்றியதாவது:-

    திருச்செங்கோடு தொகுதியில் அதிமுகவின் வெற்றி உறுதியாகிவிட்டது. அதிமுக எங்கு கூட்டம் நடத்தினாலும் அது வெற்றி கூட்டமாக இருக்கும்.

    திமுக அரசு திருச்செங்கோடு தொகுதிக்கு எதுவும் செய்யவில்லை. திருச்செங்கோடு தொகுதிக்கு அதிமுக ஆட்சி காலத்தில் நிறைய திட்டங்கள் கொண்டுவரப்பட்டன.

    கொரோனா பெருந்தொற்று காலத்திலும் அதிமுக அரசு மக்களை காப்பாற்றியது. கொரோனா பரவல் காலத்தில் மாணவர்களை ஆல் பாஸ் ஆக்கியது அதிமுக அரசு.

    அதிமுக ஆட்சிக்கு வந்தால் ஆட்டோ வாங்க ரூ.75,000 மானியம், தாலிக்கு தங்கம் திட்டத்தில் பட்டு வேட்டி, பட்டுச் சேலை வழங்கப்படும்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • விபத்தில் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
    • போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

    திருச்செங்கோடு:

    திருச்சி அரியமங்கலத்தில் இருந்து கொல்லிமலை அடிவாரத்தில் உள்ள மாசி பெரியண்ணசாமி கோவிலில் சாமி கும்பிட 5 பேர் ஒரு காரில் வந்தனர். பின்னர் அவர்கள் சாமி கும்பிட்டு விட்டு திருச்செங்கோட்டில் உள்ள நண்பர் ஒருவரை பார்க்க வந்தனர்.

    திருச்செங்கோட்டில் நண்பரை பார்த்துவிட்டு மீண்டும் அவர்கள் திருச்சி அரியமங்கலத்துக்கு புறப்பட்டனர். இரவு 8 மணியளவில் கார் திருச்செங்கோடு உஞ்சனை அருகே சென்றது.

    அப்போது காரை ஓட்டிவந்த யுவராஜன் என்பவர் தூங்கி உள்ளார். இதனால் நிலை தடுமாறிய கார் பஸ் நிறுத்தம் அருகே இருந்த தள்ளுவண்டி கடை மீது மோதியது. மேலும் அந்த பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார்சைக்கிள் மற்றும் மொபட் மீதும் மோதி இழுத்து சென்றது.

    பின்னர் இந்த பகுதியில் ரோட்டோரத்தில் இருந்த முருகேசன் என்பவரது வீட்டின் சுற்றுச்சுவரை இடித்து கொண்டு கார் வீட்டுக்குள் நுழைந்தது. அப்போது வீட்டுக்கு முன்பு அமர்ந்திருந்த முருகேசன் (67) என்பவர் மீது கார் மோதி நின்றது. இதில் சம்பவ இடத்திலேயே நாற்காலியில் அமர்ந்தபடி முருகேசன் பலியானார்.

    இதுபற்றி தெரிய வந்ததும் அந்த பகுதி பொதுமக்கள் ஓடி வந்தனர். பின்னர் காரில் இருந்தவர்களை மீட்டனர். இந்த விபத்தில் கார் டிரைவர் யுவராஜன் மற்றும் காரில் பயணித்த சரவணன் ஆகிய 2 பேர் படுகாயம் அடைந்தனர். பின்பக்கம் அமர்ந்திருந்த 3 பேர் காயமின்றி தப்பினர்.

    இதுபற்றி தெரிய வந்ததும் திருச்செங்கோடு ஊரக போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். காயம் அடைந்த 2 பேரையும் மீட்டு திருச்செங்கோட்டில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்தில் பலியான முருகேசன் உடலை மீட்டு திருச்செங்கோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    • மகன்கள் 2 பேரும் தேர்வில் தேர்ச்சி பெறாததால் மனம் உடைந்து தந்தை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    • தகவல் அறிந்த திருச்செங்கோடு போலீசார் சம்பவம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

    திருச்செங்கோடு:

    நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அடுத்த ஆன்றாபட்டி அருகே உள்ள குப்பாண்டாம் பாளையம் ஊராட்சி வன்னியர் கோவில் மேடு பகுதியை சேர்ந்தவர் கபில் ஆனந்த் (வயது 41) லாரி டிரைவர்.

    இவருக்கு நதியா என்ற மனைவியும், ஹரி ரஞ்சித், விக்னேஷ் ஆகிய 2 மகன் உள்ளனர்.

    திருச்செங்கோடு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 12-ம் வகுப்பு படிக்கும் ஹரி ரஞ்சித், அதே பள்ளியில் 10-ம் வகுப்பு படிக்கும் விக்னேஷ் ஆகியோர் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியான பிளஸ்-2 மற்றும் 10-ம் வகுப்பு பொது தேர்வுகளில் தோல்வி அடைந்தனர். தனது இரு மகன்களும் தேர்ச்சி பெறாததால் மன வருத்தத்தில் கபில் ஆனந்த் இருந்து வந்தார்.

    தான் படிக்கவில்லை என்றாலும் தனது மகன்களாவது படிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இருந்த கபில் ஆனந்த் மகன்கள் தேர்வில் தோல்வி பேரதிர்ச்சியாக இருந்தது. இதுகுறித்து நேற்று மாலை வீட்டிலிருந்தவர்களுடன் பேசிக் கொண்டிருந்தார். இந்த நிலையில் திடீரென வீட்டுக்குள் சென்ற கபில் ஆனந்த் கதவை சாத்திவிட்டு கொக்கியில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனால் மனைவி கதறி அழுத சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்து கடப்பாறை கொண்டு கதவை உடைத்து கபில் ஆனந்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் கபில் ஆனந்த் ஏற்கனவே இறந்துவிட்டார் என டாக்டர்கள் தெரிவித்தனர்.

    இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக திருச்செங்கோடு அரசு மருத்துவ மனையில் வைக்கப்பட்டுள்ளது. இது குறித்த தகவல் அறிந்த திருச்செங்கோடு போலீசார் சம்பவம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

    தனது மகன்கள் 2 பேரும் தேர்வில் தேர்ச்சி பெறாததால் மனம் உடைந்து தந்தை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஆன்றாபட்டி பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • ஒரே குடும்பத்தில் 3 பேர் தற்கொலை செய்த சம்பவம் நடுப்பாளையம் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    • போலீசார் விரைந்து வந்து, கதவை உடைத்து உள்ளே சென்று 3 பேரின் பிணத்தை மீட்டனர்.

    திருச்செங்கோடு:

    நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே உள்ள வையப்பமலை நடுப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் நடேசன் (வயது 65), தச்சுத்தொழிலாளி. இவரது மனைவி சிந்தாமணி (52). இவர்களுக்கு சசிரேகா என்ற மகள், ஜெயப்பிரகாஷ், நந்தகுமார், கோபி ஆகிய 3 மகன்கள் இருந்தனர்.

    இதில் சசிரேகா, ஜெயபிரகாஷ் ஆகியோர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டனர். மகன் கோபி திண்டுக்கல்லில் தச்சுவேலை செய்து வருகிறார். மற்றொரு மகன் நந்தகுமார் (35) பெற்றோருடன் வசித்து வந்தார். இந்த நிலையில் நடேசனுக்கும், நந்தகுமாருக்கும் சர்க்கரை நோய் பாதிப்பு ஏற்பட்டது.

    இதற்காக அவர்கள் பல இடங்களில் வைத்தியம் பார்த்தனர். நடேசனுக்கு தச்சு தொழிலில் போதிய வருமானம் இல்லாததால், கடன் வாங்கி சிகிச்சை செய்யும் நிலை ஏற்பட்டது. பலரிடம் அவர் கடன் வாங்கி இருந்தார்.

    இதனிடையே கடன் கொடுத்தவர்கள் நடேசனிடம் பணத்தை கேட்டு நெருக்கடி கொடுத்தனர். ஏற்கனவே போதிய வருமானம் இல்லாமலும், நோய் பாதிப்பாலும் அவதிப்பட்ட நிலைியல் கடன் நெருக்கடி காரணமாக தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். விரக்தியில் இருந்த அவர் தனது மனைவி, மகனிடமும் இதை கூறியுள்ளார். இதனால் அவர்கள் குடும்பத்தோடு தற்கொலை செய்ய முடிவெடுத்ததாக தெரிகிறது.

    இந்த நிலையில் நேற்றிரவு அவர்கள் வீட்டை பூட்டிக்கொண்டு தூங்கச் சென்றனர். இன்று அதிகாலை வெகுநேரமாகியும் அவர்களது வீட்டின் கதவு திறக்கப்படாமல் பூட்டியே கிடந்தது. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர் வீட்டின் உள்ளே பார்த்தனர்.

    அங்கு நடேசன், சிந்தாமணி, நந்தகுமார் ஆகிய 3 பேரும் தூக்கில் பிணமாக தொங்கியதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி எலச்சிபாளையம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து, கதவை உடைத்து உள்ளே சென்று 3 பேரின் பிணத்தை மீட்டனர்.

    பின்பு பிரேத பரிசோதனைக்காக உடல்களை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். 3 பேரின் உடல்களை பார்த்து உறவினர்கள் கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இருந்தது. ஒரே குடும்பத்தில் 3 பேர் தற்கொலை செய்த சம்பவம் வையப்பமலை நடுப்பாளையம் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • குறையற்ற இல்லறத்தையும், செல்வங்களையும் பெறலாம்
    • மூலவருக்கு முன்னால் மரகத லிங்கம், உள்ளது.

    தீபாவளியை யொட்டி வரக்கூடிய கேதார கவுரி விரதத்துக்கும், அர்த்தநாரீஸ்வரருக்கும் நெருங்கிய தொடர்புண்டு. ஐப்பசி மாத கிருஷ்ணபட்சம் - தேய்பிறை சதுர்த்தசியில், பார்வதி தேவியை எண்ணி நோன்பிருந்தால் நல்ல சுணவனையும். திருமணமாகி இருந்தால் கணவனின் அன்பையும், குறையற்ற இல்லறத்தையும், செல்வங்களையும் பெறலாம் என்பதற்காகத் தொடங்கியதே கேதார கவுரி விரதமாகும்.

    இந்த விரதத்தை முதலில் கடைப்பிடித்தவள் உமையவளே. விரதப் பலனாக ஐயனிடமிருந்து பிரிக்கப்பட முடியாத வகையில், அவரின் இட பாகத்தைப் பெற்று பாகம்பிரியாள் என்று பெயர் பெற்றாள். இங்ஙனம் ஆனொரு பாதியும், பெண்ணொரு பாதியுமாக அகிலத்தின் ஆதார உண்மையை வெளிப்படுத்தும் அர்த்தநாரீஸ்வர வடிவம் கொண்டு ஆண் இருக்குமிடம் திருச்செங்கோடு.

    இங்குள்ள அர்த்தநாரீஸ்வரர் திருமேனி - வெள்ளை பாஷாணத்தால் ஆன திருவருவம். இடப்பாதியில் பெண்மையின் நளினமும், வலப்பாதியில் ஆண்மையின் கம்பீரமும் இழையோடும். கண்களில்கூட, வலக்கண்ணுக்கும் இடக்கண்ணுக்கும் துல்லியமான வித்தியாசம் தெரிகிறது.

    மூலவர் திருமேனிக்குக் கீழே நீர் கரந்து கொண்டே இருக்கிறது. இதையே தீர்த்த பிரசாதமாக எல்லோருக்கும் தருகிறார்கள். அர்த்தநாரீஸ்வரர் மூலவருக்கு முன்னால் மரகத லிங்கம், உள்ளது. தவசீலரான பிருங்கி மகரிஷியின் உருவமும் உள்ளது. தீபாவளியை யொட்டி கேதார கவுரி நோன்பிருக்கும் பெண்மணிகள் அவசியம் திருச்செங்கோடு சென்று அர்த்தநாரீஸ்வரரை வழிபட்டு வாருங்கள். உங்களின் விரத பலன் பன்மடங்காகக் கிடைக்கும்.

    • வட இமயம் தொடங்கி தென் குமரி வரை உள்ள சிவத்தலங்கள் 1008.
    • செந்நிறம் கொண்ட மலை என்பதால் செங்கோடு என அழைக்கப்பட்டது.

    காலத்தால் அளவிட முடியாத பழம் பெருமையும், புராண வரலாறும் கொண்டது திருச்செங்கோடு என்ற திருக்கொடி மாட செங்குன்றூர். வட இமயம் தொடங்கி தென் குமரி வரை உள்ள சிவத்தலங்கள் 1008. இதில் பாடல் பெற்ற தலங்கள் என்னும் புகழ் பெற்றவை 274 கோவில்கள்.

    இதில் தமிழகத்தில் குறிப்பாக கொங்கு மண்டலத்தில் திருப்புக்கொளியூர் என்னும் அவினாசி, திருமுருகன் பூண்டி, திருநனா என்றழைக்கப்படும் பவானி, திருக்கொடி மாடச் செங்குன்றூர் என்றழைக்கப்படும் திருச்செங்கோடு அர்த்தனாரீஸ்வரர். திருவெஞ்சாமக்கூடல், திருப்பாண்டி, கொடுமுடி, திருக்கருவூரணி நிலை என்னும் கரூர் ஆகிய 7 தலங்கள் பாடல் பெற்ற தலங்கள் ஆகும்.

    செந்நிறம் கொண்ட மலை என்பதால் செங்கோடு என அழைக்கப்பட்டது என்றாலும், செந்நிறமாக திகழ புராணம் சொல்லும் காரணம் என்ன தெரியுமா?

    திரிபுரம் எரிக்க புறப்பட்ட சிவபெருமான் மேரு மலையை வில்லாக்கி, வாசுகி என்னும் பாம்மை நாணாக்கி, அக்கினி தேவனை அம்பு முனையில் பொருத்தி, வாயுவை விசையாக்கி எடுத்து சென்றார். எல்லாம் சிவம் என்றிருக்க நம் துணையின்றி சிவனால் முப்புரத்தை எரிக்க முடியாது என மேரு, வாசுகி, அக்கினி, வாயு ஆகியோர் ஆணவம் கொண்டனர்.

    இதனை உணர்ந்த எம் பெருமான் இவர்கள் துணையின்றி தம் சிரிப்பாலேயே முப்புரத்தையும் எரித்து அழித்தார். இந்த நிலையில் வாயுவுக்கும் மும்மூர்த்திகளின் ஆபரணமாக திகழும் ஆதிசேஷனுக்கும் தங்களுக்குள் யார் பெரியவர் என்ற பெரும் போட்டி, சண்டை எழ இதில் தலையிட்ட தேவர்கள் மேரு மலையை வாயு தன் பலத்தால் தகர்க்க வேண்டும்.

    ஆதிசேஷன் தன் பலத்தாலும் படத்தாலும் அதனை தடுக்க வேண்டும் எனவும் அவ்வாறு போட்டியிட்டு வெல்பவர்களே பலசாலி என்று கூறினார்கள். அதன்படி மேரு மலையை ஆதிசேஷன் பற்றிக் கொள்ள,வாயுதேவன் தன் பலம் முழுவதையும் பிரயோகித்தும் வெற்றி காண முடியவில்லை.

    தோல்வியில் ஆத்திரம் கொண்ட வாயுதேவன் தன் சக்தியால் ஈரேழு லோகங்களிலும் காற்றே இல்லாமல் செய்கிறான். சுவாசிக்க காற்று இல்லாமல் உயிரினங்களும், பயிரினங்களும் மயங்கி விழ பயந்து போன தேவர்கள் வாயுவிடம் மன்றாடினார்கள்.

    வாயுதேவன் மறுக்கவே தெய்வ குணம் கொண்ட ஆதிசேஷனை போட்டியில் விட்டுக் கொடுக்கும்படி வேண்டினார்கள். மனமிறங்கிய ஆதிசேஷன் தன் பிடியை தளர்த்த வாயு தன் பலத்தால் மோதி ஆதிசேஷனின் தலையையும், மேருமலையின் சில பாகங்களையும் பிய்த்து கொண்டு போகும் படி செய்தார்.

    இதில் ஆதிசேஷனின் ஐந்து தலைகளும், மேருவின் ஐந்து மலைகளும் பெயர்ந்து விழுந்தது. ஆதிசேஷனின் நடுநாயகமான தலையும், அதில் இருந்து பீறிட்ட ரத்தம் தோய்ந்து விழுந்ததால் செங்குன்றூர் எனவும், பின்னர் திருக்கொடி மாடச்செங்குன்றூர் எனவும் வழங்கப்பட்டு காலப் போக்கில் மருவி திருச்செங்கோடானது. 

    • மலைப் பாதை ஓரத்தில் தடுப்பு சுவரும் அமைக்கப்பட்டுள்ளது.
    • மாற்றுப்பாதை வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக இருந்து வந்தது.

    திருச்செங்கோடு:

    நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் மலைக்கோவிலுக்கு படி வழியாக ஏறிச் செல்ல ஒரு வழியும், வாகனங்களில் செல்ல ஏதுவாக மலைப்பாதையும் அமைக்கப்பட்டுள்ளது.

    மலைப் பாதை ஓரத்தில் தடுப்பு சுவரும் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த வழியாக வந்து செல்லும் வாகனங்கள் குறைந்த வேகத்தில் இயக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் ஆங்காங்கே பாதுகாப்புக்காக குவி லென்சுகளும் பொருத்தப்பட்டுள்ளது.

    திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் மார்கழி மாதம் முழுவதும் அதிகாலை 3.30 மணி முதல் காலை 6 மணி வரை மரகத லிங்க தரிசனம் நடைபெறும். இதைக்காண அதிகாலை நேரத்திலேயே ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்து செல்கின்றனர்.

    அதேபோல் இன்று காலை திருச்செங்கோடு சீதாராம்பாளையம் பகுதியை சேர்ந்த தரம்ஸ்ரீ என்பவர் தனது மனைவி மற்றும் மகளுடன் காரில் மலைப்பாதை வழியாக கோவிலுக்கு வந்து கொண்டிருந்தார்.

    அதிகாலை நேரத்தில் கட்டுப்பாட்டை இழந்த அவரது கார் எதிர்பாராத விதமாக தடுப்பு சுவர் மீது ஏறி அந்தரத்தில் தொங்கியபடி நின்றது. இதில் அதிர்ஷ்டவசமாக அவர்கள் 3 பேரும் தப்பினர்.

    இதைப்பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவித்தனர். நிலைய அலுவலர் கரிகாலன் தலைமையில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் காரை கிரேன் உதவியுடன் மீட்டனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது.

    மலைப் பாதையில் முகூர்த்த நாட்கள் மற்றும் திருவிழா நாட்களில் மலைக்குச் செல்பவர்கள் அதிகமாக இருப்பதால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதனால் மாற்றுப்பாதை வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக இருந்து வந்தது.

    இதனைத் தொடர்ந்து ரோப் கார் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆய்வு செய்தபோது ரோப் கார் அமைக்க ஏதுவான இடமில்லை என திட்டம் கைவிடப்பட்டது. அதனை தொடர்ந்து மாற்றுப் பாதை வேண்டுமென்ற கோரிக்கை வலுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

    ×