என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

திருச்செங்கோடு தொகுதியில் அ.தி.மு.க.-வின் வெற்றி உறுதியாகிவிட்டது- எடப்பாடி பழனிசாமி
- திமுக அரசு திருச்செங்கோடு தொகுதிக்கு எதுவும் செய்யவில்லை.
- கொரோனா பரவல் காலத்தில் மாணவர்களை ஆல் பாஸ் ஆக்கியது அதிமுக அரசு.
மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் தமிழகம் முழுவதும் எடப்பாடி பழனிசாமி தேர்தல் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.
அந்த வகையில் இன்று மாலை, நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு சட்டமன்றத் தொகுதியில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பரப்புரை நடத்தினார்.
அப்போது அவர் உரையாற்றியதாவது:-
திருச்செங்கோடு தொகுதியில் அதிமுகவின் வெற்றி உறுதியாகிவிட்டது. அதிமுக எங்கு கூட்டம் நடத்தினாலும் அது வெற்றி கூட்டமாக இருக்கும்.
திமுக அரசு திருச்செங்கோடு தொகுதிக்கு எதுவும் செய்யவில்லை. திருச்செங்கோடு தொகுதிக்கு அதிமுக ஆட்சி காலத்தில் நிறைய திட்டங்கள் கொண்டுவரப்பட்டன.
கொரோனா பெருந்தொற்று காலத்திலும் அதிமுக அரசு மக்களை காப்பாற்றியது. கொரோனா பரவல் காலத்தில் மாணவர்களை ஆல் பாஸ் ஆக்கியது அதிமுக அரசு.
அதிமுக ஆட்சிக்கு வந்தால் ஆட்டோ வாங்க ரூ.75,000 மானியம், தாலிக்கு தங்கம் திட்டத்தில் பட்டு வேட்டி, பட்டுச் சேலை வழங்கப்படும்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.






