search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கலந்தாய்வு கூட்டம்"

    • பார்வையாளர் சரவணவேல்ராஜ் பங்கேற்பு
    • “18 வயது நிரம்பிய தகுதியான அனைவரும் வாக்காளர் பட்டியலில் இடம்பெற வேண்டும்.

    நாகர்கோவில், நவ.26-

    நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு குமரி மாவட்ட வாக்காளர் பட்டியல் தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடனான கலந்தாய்வு கூட்டம் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலக நாஞ்சில் கூட்டரங்கில் இன்று நடந்தது. கூட்டத்துக்கு கலெக்டர் ஸ்ரீதர் தலைமை தாங்கினார். குமரி மாவட்ட வாக்காளர் பட்டியல் பார்வையாளர் சரவண வேல்ராஜ் பங்கேற்று அரசியல் கட்சி பிரதிநிதி களுடன் ஆலோசனை நடத்தினார்.

    அப்போது "குமரி மாவட்டத்தில் 7 லட்சத்து 61 ஆயிரத்து 883 ஆண் வாக்காளர்களும், 7 லட்சத்து 60 ஆயிரத்து 10 பெண் வாக்காளர்களும், 143 இதர வாக்காளர்களும் என மொத்தம் 15 லட்சத்து 22 ஆயிரத்து 36 வாக்காளர்கள் உள்ளனர். 1698 வாக்குச்சா வடிகள் உள்ளன" என்ற தகவல் தெரிவிக்கப்பட்டது.

    இதைத்தொடர்ந்து அரசியல் கட்சியினர் கூறியதாவது:-தேர்தலுக்கு முந்தைய நாள் வரை 18 வயது நிரம்பிய தகுதியா னவர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்க வேண்டும். வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்கம் செய்யும்போது அந்த வாக்காளர் குறித்த விவரங்கள் முழுமையாக தெரிந்த பிறகு நீக்கம் செய்ய வேண்டும். நாகர்கோவில் மாநகர பகுதியில் பல இடங்களில் வாக்காளர் பட்டியலில் பெயர்கள் மாறி உள்ளது. அதை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். தர்மபுரம் ஊராட்சிக்குட்பட்ட காற்றாடிதட்டு பகுதியில் சில வாக்காளர்கள் 3 கிலோ மீட்டர் தூரம் சென்று வாக்களிக்க வேண்டி யுள்ளது. எனவே அந்த வாக்காளர்களை அருகில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வாக்கா ளர் பட்டியலில் பெயர் நீக்கம் தற்போது அதிகமாக செய்யப்பட்டு வருகிறது. வீடுகள் மாறி இருந்தால் கூட அதிகாரிகள் அந்த வாக்காளர்களின் பெயர் களை நீக்கி விடுகிறார்கள்.

    எனவே முறையாக ஆய்வு செய்து பெயர் நீக்கம் செய்ய வேண்டும். குமரி மாவட்டத்தில் வழக்கமாக ஆண்கள், பெண்கள் மற்றும் பொது என பிரிக்கப்பட்டு எத்தனை வாக்குச்சாவடிகள் உள்ளது? என்று தெரிவிக்கப்படும். ஆனால் தற்போது வரை அந்த தகவல் தெரிவிக்கவில்லை. அதை தெரிவிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர். இதற்கு பதிலளித்து வாக்காளர் பட்டியல் பார்வையாளர் சண்முக வேல்ராஜ் பேசியபோது, "18 வயது நிரம்பிய தகுதியான அனைவரும் வாக்காளர் பட்டியலில் இடம்பெற வேண்டும். யாரும் விடுபட்டு விடக்கூடாது. இதற்கு அரசியல் கட்சியினர் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். வாக்காளர் பட்டியலில் நீக்கம் செய்யும்போது அதற்கான படிவங்கள் முறையாக வழங்கப்பட்டால் மட்டுமே வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்கம் செய்யப்படும். அரசியல் கட்சியினர் தெரிவித்த கருத்துக்கள் அனைத்தும் தலைமை தேர்தல் அதிகாரி யின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். குமரி மாவட்டத்தை பொறுத்த வரை ஒரு வாக்குச்சாவடியில் 1,500-க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் இல்லை. 1,500 வாக்காளர்களுக்கு மேல் இருந்தால் மட்டுமே ஆண், பெண் மற்றும் பொது என வாக்காளர்கள் பிரிக்கப்பட்டு வாக்குச்சாவடிகள் பிரிக்கப்பட வேண்டும்" என்றார்.

    முன்னதாக டதி பள்ளி மற்றும் பெண்கள் கிறிஸ்தவ கல்லூரியில் நடந்த வாக்காளர் பட்டியல் திருத்த முகாமை வாக்காளர் பட்டியல் பார்வையாளர் சண்முகவேல்ராஜ் மற்றும் கலெக்டர் ஸ்ரீதர் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

    கூட்டத்தில் வருவாய் அதிகாரி பாலசுப்பிரமணி யம், சப்-கலெக்டர் கவுசிக், ஆர்.டி.ஓ. சேதுராமலிங்கம், தி.மு.க. சார்பில் வர்கீஸ், பா.ஜனதா சார்பில் ஜெகதீசன், அ.தி.மு.க. சார்பில் ஜெயகோபால், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் கண்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் இசக்கிமுத்து, தே.மு.தி.க. சார்பில் மணிகண்டன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • ராமநாதபுரத்தில் கலந்தாய்வு கூட்டம் நடந்தது.
    • முடிவில் கிழக்கு மாவட்ட தலைவர் காதர்கனி நன்றி கூறினார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரத்தில் சோசியல் டெமாக்ரடிக் கிரேடு யூனியன் தொழிற்சங்கத்தின் சார்பாக ஊரக பணியாளர்களின் கலந்தாய்வு கூட்டம் நடந்தது. மேற்கு மாவட்ட தலைவர் யூசுப் தலைமை தாங்கினார். மாநில தலைவர் முகமது ஆஷாத், மாநில பொது செயலாளர் ரவூப் நிஸ்தார், மாநிலத் துணைத் தலைவர் அப்துல் சிக்கந்தர் மற்றும் மாவட்ட நிர்வாகிகள், எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாவட்ட நிர்வாகிகள், விமன் இந்தியா மூவ்மெண்ட் மாவட்ட கமிட்டி உறுப்பினர் கார்த்திகை செல்வி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இந்த கலந்தாய்வு கூட்டத்தில் கடந்த 4.10.2023-ல் ஊரக வாழ்வாதார இயக்கத்தின் 15-வது குழும கூட்டத்தின் அறிக்கை சம்பந்தமாக விவாதிக்கப்பட்டது.

    கடந்த 2010 முதல் பணியாளர்களாக தேர்வு செய்யப்பட்டவர்கள் 8-வது கல்வி தகுதி பெற்றவர்களை பணியில் தேர்வு செய்தனர்.அவர்களை அதே தகுதியில் பணியில் நீடிக்க செய்ய வேண்டும் என்றும் புதிதாக எடுப்பவர்களை 12-வது கல்வி தகுதியில் தேர்ந்தெடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டது. கடந்த பல ஆண்டுகளாக பணி செய்து வரும் ஊரக சமூகப் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டது. ஊரக சமூக களப் பயிற்றுனர்க ளுக்கு கொடுக்கப்பட்ட ஊக்கத்தொகை ரூ.2500-ல் இருந்து ரூ.10 ஆயிரமாக உயர்த்தி தர வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. முடிவில் கிழக்கு மாவட்ட தலைவர் காதர்கனி நன்றி கூறினார்.

    • கலந்தாய்வு கூட்டம் அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரி கலையரங்கத்தில் நடைபெற்றது.
    • 15-வது தேசிய மாநாடு நிகழ்வுகள் பற்றி பேசப்பட்டது.

    மார்த்தாண்டம் :

    சர்வதேச உரிமைகள் கழகத்தின் சார்பாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களின் நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம் அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரி கலையரங்கத்தில் நடைபெற்றது.

    சிறப்பு விருந்தினராக நிறுவன தலைவர் டாக்டர் சுரேஷ் கண்ணன் கலந்து கொண்டார்.கழகத் தலைவர் அசோக் குமார், பொதுச் செயலாளர் செந்தில் குமார், துணை தலைவர் சிவா மற்றும் மாநில மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கலந்தாய்வு கூட்டத்தில் வருகின்ற டிசம்பர் 10-ந் தேதி வேலூர் மாவட்டத்தில் நடைபெறும் 15-வது தேசிய மாநாடு நிகழ்வுகள் பற்றி பேசப்பட்டது.

    கூட்டத்திற்கான ஏற்பாடுகளை மாநில துணை பொதுச்செயலாளர் லாரன்ஸ், மாவட்ட தலைவர்கள் சுரேஷ்குமார், பச்சைமால், மாவட்ட துணை தலைவர்கள் தாஸ், ரமேஷ், மாவட்ட செயலாளர்கள் செல்வின் பாபு, செந்தில்குமார், நஜ்முதீன், ராஜகுமார், கிங்ஸ்லி, ஜெரால்ட், குளச்சல் தொகுதி பொறுப்பாளர் ஸ்ரீ பிரபி மற்றும் குமரி மாவட்ட அனைத்து நிர்வாகிகளும் செய்து இருந்தனர். கூட்ட முடிவில் மோகனகுமார் அனைவருக்கும் நன்றி கூறினார்.

    • காளீஸ்வரி கல்லூரியில் பெற்றோர்-ஆசிரியர் கலந்தாய்வு கூட்டம் நடந்தது.
    • பெற்றோர் ஆசிரியர் கழக ஒருங்கிணைப்பாளர் ஸ்வப்னா இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்.

    சிவகாசி

    சிவகாசி காளீஸ்வரி கல்லூரியின் ஆங்கிலத் துறை சார்பாக பெற்றோர் ஆசிரியர் கலந்தாய்வு கூட்டம் நடந்தது. உதவி பேராசிரியை பரிதா பேகம் வரவேற்றார். ஆங்கிலத் துறை தலைவர் பெமினா தலைமை தாங்கி ஆங்கில மொழியின் முக்கியத்துவம் குறித்து பேசினார். உதவி பேராசிரியை அர்ச்சனா தேவி ஆங்கிலத் துறையின் செயல்பாடுகள் குறித்து எடுத்துரைத்தார்.

    அதைத் தொடர்ந்து பெற்றோர்கள் தங்களது மகன், மகளின் படிப்பு குறித்து ஆசிரியர்களுடன் கலந்துரையாடினர். உதவி பேராசிரியை நாகஜோதி நன்றி கூறினார். பெற்றோர் ஆசிரியர் கழக ஒருங்கிணைப்பாளர் ஸ்வப்னா இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்.

    • வார்டு உறுப்பினர்கள் குறைகளை தெரிவித்தனர்
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    கலவை:

    ராணிப்பேட்டை மாவட்டம் மேல்விஷாரம் நகராட்சி அலுவலகத்தில் மாதாந்திர கலந்தாய்வு கூட்டம் நகர மன்ற தலைவர் முகமது அமீன் தலைமையில் நடைபெற்றது.

    இந்நிகழ்ச்சியில் வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டு தங்கள் பகுதியில் உள்ள குறைகளை தெரிவித்தனர்.

    கூட்டத்தில், துணைத் தலைவர் குல்சர் அகமது, நகராட்சி ஆணையாளர் (பொறுப்பு)சந்தானம், பணி மேற்பார்வையாளர் கமலக்கண்ணன் மற்றும் நகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • டெங்கு கொசு ஒழிப்பு நடவடிக்கை மற்றும் சுற்றுப்புற சுகாதாரம் குறித்த கலந்தாய்வு கூட்டம் நடந்தது.
    • மருத்துவர் பூரணசந்திரன் ஆலோசனைகளை வழங்கினார்.

    சிவகிரி:

    சிவகிரி அரசு சமுதாய சுகாதார நிலையத்தில் டெங்கு கொசு ஒழிப்பு நடவ டிக்கை மற்றும் சுற்றுப்புற சுகாதாரம் குறித்த கலந்தாய்வு கூட்டம் நடந்தது.

    கொடுமுடி தாலுகாவை சேர்ந்த உள்ளாட்சி பிரதிநிதிகள் பங்கேற்ற இந்த கூட்டத்தில் கொடுமுடி அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களின் தலைமை மருத்துவர் பூரணசந்திரன் டெங்கு காய்ச்சல் மற்றும் தொற்ற நோய் பாதிப்புகளை தவிர்த்தல் குறித்து ஆலோசனைகளை வழங்கினார்.

    • துப்புரவு பணியாளர்களுக்கான கலந்தாய்வு கூட்டம் நாளை நடக்கிறது.
    • மேற்கண்ட தகவல்களை மதுரை சட்ட விழிப்புணர்வு ஒருங்கிணைப்புக்குழு நெறியாளர் சகாய பிலோ மின்ராஜ் தெரிவித்துள்ளார்.

    மதுரை

    மதுரையில் சட்ட விழிப்பு ணர்வு ஒருங்கிணைப்புக்குழு சார்பில் கிராமப்புற துப்புரவு பணியாளர்களுக்கு சட்டம் வழங்கும் அடிப்படை உரிமைகள் குறித்த மாநில அளவிலான கலந்தாய்வு கூட்டம் மதுரை அய்டியாஸ் மையத்தில் நாளை (9-ந்தேதி) காலை 9.30 மணிக்கு நடக்கிறது. இதில் குறைந்த பட்ச ஊதியம், துப்புரவு தொழிலாளர் களுக்கான அரசாணைகளை நடை முறைப்படுத்துதல், அரசு அதிகாரிகள் பங்களிப்பு, துப்புரவு பணியாளர் உரிமைகளை காக்க போராட்டங்களும், அவற்றின் தாக்கங்களும், பணி பாதுகாப்பு சட்டங்கள் -சவால்கள், அன்றாடம் சந்திக்கும் உரிமை மீறல்கள் போன்ற தலைப்புகளில் முக்கிய பிரமுகர்கள் பேச உள்ளனர். இதில் வழக்கறி ஞர்கள், சங்க பிரதிநிதிகள், அரசு ஊழியர்கள், மாண வர்கள் கலந்து கொள்கின் றனர்.

    மேற்கண்ட தகவல்களை மதுரை சட்ட விழிப்புணர்வு ஒருங்கிணைப்புக்குழு நெறியாளர் சகாய பிலோ மின்ராஜ் தெரிவித்துள்ளார்.

    • விபத்தில் தாய் அல்லது தந்தையை இழந்து கல்வி பயிலும் மாணவ-மாணவிகளுக்கான நிதியுதவி பத்திரங்களை மதிப்பீட்டு குழுத்தலைவர் அன்பழகன் வழங்கினார்.
    • கலெக்டர் அலுவலகம் ரூ.120 கோடியில் கட்டப் பட்டு இன்னும் 4 மாதங்களில் திறக்கும் நிலையில் உள்ளது.

    தென்காசி:

    தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட ரங்கில் தமிழ்நாடு சட்டமன்ற பேரவை மதிப்பீட்டு குழுத் தலைவர் அன்பழகன் தலைமையில் துறை சார்ந்த அலுவலர்களுடன் கலந்தாய்வு கூட்டம் நடை பெற்றது.

    உறுப்பினர்கள் ராஜேஷ் குமார், ஜவாஹிருல்லா, சிவக்குமார், மணியன், காந்திராஜன், சிந்தனை செல்வன் மற்றும் கலெக்டர் ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    அப்போது விபத்தில் தாய் அல்லது தந்தையை இழந்து கல்வி பயிலும் மாணவ-மாணவிக ளுக்கான நிதியுதவி வழங்கும் திட்டத்தின் கீழ் குறித்த கால வைப்புத் தொகையான ரூ.50 ஆயிரம் மற்றும் ரூ.75 ஆயிரத்துக்கான பத்திரங்களை மதிப்பீட்டு குழுத்தலைவர் அன்பழகன் வழங்கினார்.

    இக்கூட்டத்தில், தமிழ்நாடு சட்டமன்ற பேரவை மதிப்பீட்டுக்குழு தலைவர் அன்பழகன் தெரிவித்ததாவது:-

    தென்காசி மாவட்டத்தை பொறுத்தவரையிலும் பல்வேறு புதிய வளர்ச்சி திட்டப்பணிகள் நடைபெற்று வருகிறது. புதிதாக மாவட்ட கலெக்டர் அலுவலகம் ரூ.120 கோடியில் கட்டப் பட்டு இன்னும் 4 மாதங்களில் திறக்கும் நிலையில் உள்ளது. கால்நடை மருந்தகம் ரூ.48 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு விரைவாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினால் திறந்து வைக்கப்பட உள்ளது. அரசு தலைமை மருத்துவமனையில் 6 தளங்களுடன் 76 ஆயிரம் சதுர அடியில் ரூ.22 கோடியில் மகப்பேறு மற்றும் குழந்தைகள் நல மையம் கட்டப்பட்டு வருகிறது. தொகுதிக்கு ஒரு விளையாட்டு அரங்கம் என்ற முறையில் விளையாட்டு துறை அமைச்சர் மூலமாக ரூ.15 கோடியில் உள் விளையாட்டு அரங்கத்திற்கு ஒப்பந்தப்புள்ளி போடப்பட்டு விரைவாக இந்த பணி நடைபெற இருக்கிறது, காவல்துறையின் தலைமை கட்டிடம் ரூ.54 கோடி மதிப்பில் கட்டி திறக்கும் நிலையில் உள்ளது. ரூ.400 கோடிக்கும் மேல் தற்போது தென்காசியில் மட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    கூட்டத்தில், தென்காசி எம்.எல்.ஏ.க்கள் பழனிநாடார், ராஜா, தென்காசி நகர்மன்ற தலைவர் சாதிர், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாம்சன், மாவட்ட வருவாய் அலுவலர் பத்மாவதி, வன அலுவலர் முருகன், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் அழகிரிசாமி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொறுப்பு) ராஜமனோகரன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இளவரசி மற்றும் துறைசார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த கலந்தாய்வு கூட்டம் நடந்தது.
    • பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு நல்கிட வேண்டுமென்றும் கோரிக்கை வைக்கப்பட்டது.

    கீழக்கரை

    கீழக்கரையில் நிலவிவரும் போக்குவரத்து நெரி சலை கட்டுப்படுத்திட நடவ டிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இது தொடர்பாக வெல்பேர் கமிட்டி சார்பில் மாவட்ட நீதிமன்றத்தில் தாக் கல் செய்யப்பட்ட மனுவின் அடிப்படையில் நகராட்சி நிர்வாகத்தால் கீழக்கரை நகராட்சி அலுவலகத்தில் நகர் மன்ற தலைவர் செஹனாஸ் ஆபிதா தலைமையில் ஆணையாளர் செல்வராஜ் முன்னிலையில் போக்கு வரத்து நெரிசல் குறித்த கலந்தாய்வு கூட்டம் நடை பெற்றது.

    போக்குவரத்தை ஒழுங்கு படுத்தும் வகையில் ஒரு பக்க பார்க்கிங் விஷயத்தில் காவல்துறை முனைப்பு காட்டுவதோடு நோ பார்க் கிங் ஏரியாவில் போக்குவரத்துக்கு இடையூறாக ரோட்டில் நிறுத்தும் பைக், ஆட்டோ, கார் போன்ற வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட வேண்டும் என கோரிக்கையை ஏற்று கொண்ட போலீசார் இது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை உண்டாக் கும் வகையில் பிரச்சா ரம் செய்யுமாறு கேட்டு கொண்டனர்.

    பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்களின் நலன் கருதி போக்குவரத்து நெரிசலை தவிர்க்க எடுக்கப் படும் நடவடிக்கைகளுக்கு வியாபாரிகள், பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு நல்கிட வேண்டுமென்றும் கோரிக்கை வைக்கப்பட்டது.

    முக்குரோட்டிலிருந்து குயின் டிராவல்ஸ் அலுவல கம் வரை ரோட்டின் இரு பக்கமும் உள்ள ஆக்கிர மிப்புகளை முழுமையாக அகற்றுவதோடு இனி எந்த காலத்திலும் ஆக்கிரமிப்புகள் ஏற்படாதவாறு தொடர்ந்து கண்காணிக்கப்படு மென்றும், மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க படுமென்றும் தீர்மானிக்கப் பட்டது.

    கூட்டத்தில் போலீஸ் ஆய்வாளர் சரவணன், சுகா தாரத்துறை ஆய்வாளர் பரக்கத்துல்லா, கே.எல்.கே. வெல்பேர் கமிட்டி நிர்வாகி கள், நகர்மன்ற உறுப்பினர் கள் கலந்து கொண்டனர்.

    • கிருஷ்ணகிரியில் சமரசம் குறித்த முத்தரப்பு கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
    • கலந்தாய்வு கூட்டத்தில் நீதிமன்றத்தில் நிலுவையிலுள்ள வழக்குகளை சமரசம் மூலம், எளிய முறையில் தீர்வு காண அறிவுறுத்தப்பட்டன.

    கிருஷ்ணகிரி, 

    சென்னை உயர்நீதிமன்றம், தமிழ்நாடு மத்தியஸ்தம் மற்றும் சமரச மையத்தின் வழிகாட்டுதலின்படி, கிருஷ்ணகிரி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் மாவட்டத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களைச் சார்ந்த நீதிபதிகள், மத்தியஸ்தர்கள் மற்றும் வழக்கறிஞர்களுக்கு, சமரசம் குறித்த முத்தரப்பு கலந்தாய்வுக் கூட்டம் கிருஷ்ணகிரி மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்றது.

    இந்த கூட்டத்திற்கு மாவட்ட முதன்மை நீதிபதி வசந்தி தலைமை தாங்கி சமரச மையத்தின் செயல்பாடுகள் குறித்தும், சமரச மையத்தில் முடித்து வைக்கப்பட்ட வழக்குகளின் புள்ளி விவரங்கள் குறித்தும் பேசினார்.

    இதில் சிறப்பு அழைப்பாளராக சென்னை உயர்நீதிமன்ற மூத்த பயிற்சியாளர், மத்தியஸ்தர் கீதாராமசேஷன், சமரசம் குறித்த விழிப்புணர்வை வழங்கி, அனைத்து நீதிபதிகளுடன் சமரசம் குறித்து கலந்துரையாடினார். முன்னதாக, மக்கள் நீதிமன்றத் தலைவர் மற்றும் குடும்பநல நீதிமன்ற நீதிபதி நாகராஜன் வரவேற்றார்.

    இந்த கூட்டத்தில், நீதிமன்றத்தில் நிலுவையிலுள்ள வழக்குகளை சமரசம் மூலம், எளிய முறையில் தீர்வு காண அறிவுறுத்தப்பட்டன. முடிவில், மாவட்ட சமரச யைத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெனிபர் நன்றி கூறினார். இதில், 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    • டெங்கு காய்ச்சல் மற்றும் இதர காய்ச்சல் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் அறிவுறுத்தி உள்ளார்.
    • இதனையடுத்து வாழப்பாடி ஊராட்சி ஒன்றிய அலுவலக மன்ற கூட்ட அரங்கத்தில், வாழப்பாடி வட்டார அளவிலான காய்ச்சல் தடுப்பு கலந்தாய்வு கூட்டம் நேற்று நடைபெற்றது.

    வாழப்பாடி:

    மழைக்காலம் தொடங்கவுள்ள நிலையில், மாவட்டம் முழுவதும் டெங்கு காய்ச்சல் மற்றும் இதர காய்ச்சல் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் அறிவுறுத்தி உள்ளார்.

    இதனையடுத்து வாழப்பாடி ஊராட்சி ஒன்றிய அலுவலக மன்ற கூட்ட அரங்கத்தில், வாழப்பாடி வட்டார அளவிலான காய்ச்சல் தடுப்பு கலந்தாய்வு கூட்டம் நேற்று நடைபெற்றது.

    இக்கூட்டத்திற்கு, வட்டார வளர்ச்சி அலுவலர் அண்ணாதுரை தலைமை வகித்தார். வட்டார மருத்துவ அலுவலர் பொன்னம்பலம் முன்னிலை வகித்தார்.

    இக்கூட்டத்தில் காய்ச்சல் பரவாமல் தடுக்க கிராமங்கள், ஊராட்சிகளை தூய்மை செய்தல், டெங்கு கொசுக்கள் உருவாகும் காரணிகளை அப்புறப்படுத்துதல், குடிநீர் மற்றும் மேல்நிலைத்தொட்டிகள் பராமரித்தல் மற்றும் குளோரினேசன் செய்வது குறித்து விவாதிக்கப்பட்டது. கிராம மக்களுக்கு டெங்கு மற்றும் பிற காய்ச்சல் பரவாமல் தடுக்கும் முறைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த அறிவுறுத்தப்பட்டது.

    இக்கூட்டத்தில் அனைத்து கிராம ஊராட்சி மன்ற செயலர்கள், பேளூர் மற்றும் திருமனூர் ஆரம்ப சுகாதார நிலைய ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர்.

    • அரசு போக்குவரத்து கழகத்தின் பணியாற்றும் ஓட்டுநர்கள், நடத்துணர்கள் பணியின் போது பயணிகளை எவ்வாறு அணுகி நட்புடன் பழகுவது குறித்து விளக்கப்படடது.
    • நீண்ட நாள்களாக பணிக்கு வராமல் இருக்கும் பணியாளர்களை குடும்பத்துடன் சந்தித்து, அவர்களின் குறைகளை கேட்டறிந்து, மீண்டும் பணிக்கு வர ஆலோசனைக்கள் வழங்கப்பட்டன.

    கிருஷ்ணகிரி,

    தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் பணியாளர்களுக்கான திறன் மேம்பாடு கூட்டம், கிருஷ்ணகிரியில் உள்ள நகர பணிமனை கூட்ட அரங்கில் நேற்று நடைபெற்றது.

    இந்த கூட்டத்துக்கு அரசு போக்குவரத்துக் கழக நிர்வாக இயக்குநர் பொன்முடி தலைமை தாங்கினார். பொது மேலாளர் ரவி லட்சுமணன் முன்னிலை வகித்தார்.

    அரசு போக்குவரத்து கழகத்தின் பணியாற்றும் ஓட்டுநர்கள், நடத்துணர்கள் பணியின் போது பயணிகளை எவ்வாறு அணுகி நட்புடன் பழகுவது, மனச் சுமை இல்லாமல் பணியாற்றுவது எப்படி, நீண்ட நாள்களாக பணிக்கு வராமல் இருக்கும் பணியாளர்களை குடும்பத்துடன் சந்தித்து, அவர்களின் குறைகளை கேட்டறிந்து, மீண்டும் பணிக்கு வர ஆலோசனைக்கள் வழங்கப்பட்டன.

    இந்தக் கூட்டத்தில் அரசு போக்குவரத்துக் கழக துணை மேலாளர்கள் ராஜராஜன், கலைவாணன், கோட்ட மேலாளர் தமிழரசன், உதவி மேலாளர் ஹர்ஷ்பாபு மற்றும் அலுவலர்கள் பங்கேற்றனர்.

    ×