search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நெமிலியில் விவசாயிகள் கலந்தாய்வு கூட்டம்
    X

    நெமிலியில் விவசாயிகள் கலந்தாய்வு கூட்டம்

    • மண் நல மையம் சார்பில் நடந்தது
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    நெமிலி:

    நெமிலி அருகே கீழ்வெங்கடாபுரம் கிராமத்தில் வேலூரை தலைமையிடமாக கொண்ட மண் நல மையம் உள்ளது.

    இந்த மையத்தின் மூலம் வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணா மலை, திருப்பத்தூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டு வருகிறது.

    அதன்படி மையத்தின் சார்பில் மேற்கண்ட மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகள் கலந்தாய்வு கூட்டம் முரளிகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது.

    கூட்டத்தில் கேபிள் டி.வி. சங்கம் தாமோதரன், கீழ்வெங்கடாபுரம் ஊராட்சி மன்றதலைவர் அம்மு தட்சணாமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் இயற்கை விவசாயத்தில் ஏற்படும் பின்னடைவுகளை மேம்படுத்த தேவையான ஆலோசனைகள் வழங்கப் பட்டன. இயற்கை விவசாயம் செய்பவர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு முறையான பயிற்சி வழங்கவேண்டும். ஒவ்வொரு ஊராட்சியிலும் விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்க குழு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என தெரி விக்கப்பட்டது.

    கூட்டத்தில் நெமிலி முன்னாள் ஒன்றிய குழு துணை தலைவர் சுப்பிரமணி உள்ளிட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×