என் மலர்

    உள்ளூர் செய்திகள்

    வாக்காளர் பட்டியல் மேற்பார்வையாளர் கலந்தாய்வு
    X

    வாக்காளர் பட்டியல் மேற்பார்வையாளர் கலந்தாய்வு

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • வாக்காளர் பட்டியல் மேற்பார்வையாளர் கலந்தாய்வு கூட்டம் நடந்தது.
    • மதுரை, சிவகங்கை, விருதுநகர் மற்றும் ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு வாக்காளர் பட்டியல் மேற்பார்வையாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

    சிவகங்கை

    தமிழக அரசின் கூடுதல் ஆணையர் (நில சீர்திருத்த ஆணையகம்) சாந்தா வாக்காளர் பட்டியல் மேற்பார்வையாளராக மதுரை, சிவகங்கை, விருதுநகர் மற்றும் ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு நியமிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து அவர் சிவகங்கை மாவட்டத்தில் நடந்து வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறைத் திருத்தம்-2023 பணிகள் தொடர்பாக, மாவட்டத்தில் வாக்காளர் பதிவு அலுவலர்களாக உள்ள சிவகங்கை வருவாய் கோட்டாட்சியர் மற்றும் தேவகோட்டை வருவாய் கோட்டாட்சியர், உதவி வாக்காளர் பதிவு அலுவலர்களாக உள்ள வட்டாட்சியர்கள், நகராட்சி ஆணையாளர்கள், தேர்தல் தனித்துணை வட்டாட்சியர்கள் மற்றும் இதர வருவாய் அலுவர்கள் ஆகியோர்களுடன் கலெக்டர் மதுசூதன்ரெட்டி தலைமையில் கலந்தாய்வுக் கூட்டம் நடத்தினார்.

    இதில் ஐ.ஏ.எஸ். அதிகாரியான சாந்தா, வாக்காளர் சரிபார்ப்பு பட்டியலை ஏற்பளிப்பு செய்து அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து அறிவுறுத்தினார். மாவட்ட வருவாய் அலுவலர் மணிவண்ணன், வருவாய் கோட்டாட்சியர்கள் சுகிதா (சிவகங்கை), பால்துரை (தேவகோட்டை), தனி வட்டாட்சியர் (தேர்தல்) மாணிக்கவாசகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×