என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
பரமத்தி மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்தில் சுற்றுலா வாகன உரிமையாளர்களுக்கான கலந்தாய்வு கூட்டம்
- பரமத்தி மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்தில் சுற்றுலா வாகன உரிமையாளர்களுக்கான கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
- ஓட்டுநர்கள் உரிமையாளர்கள் மற்றும் சுற்றுலா வாகன உரிமையாளர்கள், ஓட்டுநர்கள் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்ட கலந்தாய்வு கூட்டம் நேற்று நடை பெற்றது.
பரமத்திவேலுார்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா பரமத்தி மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்தில் சுற்றுலா வாகன உரிமையாளர்களுக்கான கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
பரமத்தி வேலூர் தாலுக்கா பகுதிகளில் சொந்த வாகனங்களை சுற்றுலா வாகனங்களாக இயக்கப்பட்டு வருவதாக நாமக்கல் மாவட்ட கலெக்ட ரிடம் மக்கள் குறை தீர்க்கும் நாளில் சுற்றுலா பேருந்து வாகன உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர் சங்கங்க ளின் சார்பாக அளிக்கப் பட்ட புகாரினை தொடர்ந்து, பரமத்தி வேலூர் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்தில் நாமக்கல் தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலர் முருகன் தலைமையில், மோட்டார் வாகன ஆய்வா ளர்கள் சரவணன், உமா மகேஸ்வரி ஆகியோர் முன்னிலையில், ஓட்டுநர்கள் உரிமையாளர்கள் மற்றும் சுற்றுலா வாகன உரிமை யாளர்கள், ஓட்டுநர்கள் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்ட கலந்தாய்வு கூட்டம் நேற்று நடை பெற்றது.
இக்கூட்டத்தில் வாகன ஓட்டுனர்கள் மற்றும் உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகளிடம் வட்டார போக்குவரத்து அலுவலக களப்பணியா ளர்கள் மூலம் சொந்த வாகனங்களை வாடகை வாகனமாக இயக்கப்படுவது தொடர்பாக ஆய்வு மேற்கொண்டு தொடர்ந்து கண்காணிக்கப்படும் எனவும், அவ்வாறு வாக னங்கள் இயக்கப்பட்டால் வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு ஓட்டுநர் உரிமம் தகுதி இழப்பு போன்ற கடுமையான நட வடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டது.
மேலும் நாமக்கல் மாவட்ட சுற்றுலா வாகன உரிமையாளர் சங்க நிர்வா கிகள் மற்றும் உறுப்பினர்க ளிடம் தகுதி சான்று, காப்புச் சான்று, அனுமதிச்சீட்டு, பசுமை வரி, புகைச்சான்று, ஓட்டுனர் உரிமம், ஆகிய அனைத்து ஆவணங்களும் நடப்பில் உள்ளதா என சரி பார்த்து மோட்டார் வாகன சட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டு சீட் பெல்ட் மற்றும் சீருடை அணிந்தும் பாதுகாப்பான முறையில் வாகனங்கள் இயக்கப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்