search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அரசு கலை, அறிவியல் கல்லூரியில் 2-ம் கட்ட கலந்தாய்வு
    X

    கோப்புப்படம்

    அரசு கலை, அறிவியல் கல்லூரியில் 2-ம் கட்ட கலந்தாய்வு

    • 12, 13-ந் தேதிகளில் நடக்கிறது
    • கல்லூரி முதல்வர் தகவல்

    ஜோலார்பேட்டை:

    நாட்டறம்பள்ளி அடுத்த பச்சூர் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி புதிய தாக தொடங்கப்ப ட்டுள்ளது.

    இந்நிலையில் கல்வியாண்டிற்கான இளங்கலை (தமிழ், வணிகவியல்) இளமறிவியல் (புவியியல், தாவரவியல், கணினி அறிவியல்) ஆகிய பாடப் பிரிவுகளுக்கு 2-ம் கட்ட மாணவர் சேர்க்கை கலந்தாய்வு வருகிற 12-ந்தேதி பி.எஸ்.சி., தாவரவியல், பி.எஸ்.சி. கணினி அறிவியல், பி.எஸ்.சி. புவியியல் ஆகிய பாடபிரிவுகளுக்கும் மறுநாள் 13 -ந் தேதியும் பி.ஏ. தமிழ், பி.காம் வணிகவியல், ஆகிய பாடபிரிவுகளுககு கலந்தாய்வுக்கு மாணவர்கள் பங்கேற்க வேண்டும்.

    மேலும் கலந்தாய்வு வின் போது மாணவர்கள் கீழ்காணும் சான்றிதழ்களின் அசல் மற்றும் 3 நகல்களை எடுத்து வரவேண்டும்.

    இணையதளத்தில் விண்ணப்பித்த விண்ணப்ப படிவம், மாற்றுச்சான்றிதழ் மற்றும் 10, 11, மற்றும் 12-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்கள், ஜாதி சான்றிதழ் மற்றும் வருமானச் சான்றிதழ், ஆதார் அட்டை, பாஸ்போர்ட் சைஸ் போட்ட 4, வங்கி பாஸ்புக் நகல் முதல் பக்கம், சிறப்பு ஒதுக்கீட்டிற்கான சான்றிதழ், சேர்க்கை கட்டணம் ஆகியவற்றை எடுத்து வர வேண்டு மென நாட்டறம்பள்ளி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×