என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
அரசு கலை, அறிவியல் கல்லூரியில் 2-ம் கட்ட கலந்தாய்வு
ஜோலார்பேட்டை:
நாட்டறம்பள்ளி அடுத்த பச்சூர் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி புதிய தாக தொடங்கப்ப ட்டுள்ளது.
இந்நிலையில் கல்வியாண்டிற்கான இளங்கலை (தமிழ், வணிகவியல்) இளமறிவியல் (புவியியல், தாவரவியல், கணினி அறிவியல்) ஆகிய பாடப் பிரிவுகளுக்கு 2-ம் கட்ட மாணவர் சேர்க்கை கலந்தாய்வு வருகிற 12-ந்தேதி பி.எஸ்.சி., தாவரவியல், பி.எஸ்.சி. கணினி அறிவியல், பி.எஸ்.சி. புவியியல் ஆகிய பாடபிரிவுகளுக்கும் மறுநாள் 13 -ந் தேதியும் பி.ஏ. தமிழ், பி.காம் வணிகவியல், ஆகிய பாடபிரிவுகளுககு கலந்தாய்வுக்கு மாணவர்கள் பங்கேற்க வேண்டும்.
மேலும் கலந்தாய்வு வின் போது மாணவர்கள் கீழ்காணும் சான்றிதழ்களின் அசல் மற்றும் 3 நகல்களை எடுத்து வரவேண்டும்.
இணையதளத்தில் விண்ணப்பித்த விண்ணப்ப படிவம், மாற்றுச்சான்றிதழ் மற்றும் 10, 11, மற்றும் 12-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்கள், ஜாதி சான்றிதழ் மற்றும் வருமானச் சான்றிதழ், ஆதார் அட்டை, பாஸ்போர்ட் சைஸ் போட்ட 4, வங்கி பாஸ்புக் நகல் முதல் பக்கம், சிறப்பு ஒதுக்கீட்டிற்கான சான்றிதழ், சேர்க்கை கட்டணம் ஆகியவற்றை எடுத்து வர வேண்டு மென நாட்டறம்பள்ளி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்