search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கலந்தாய்வு கூட்டம்
    X

    கலந்தாய்வு கூட்டம்

    • போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த கலந்தாய்வு கூட்டம் நடந்தது.
    • பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு நல்கிட வேண்டுமென்றும் கோரிக்கை வைக்கப்பட்டது.

    கீழக்கரை

    கீழக்கரையில் நிலவிவரும் போக்குவரத்து நெரி சலை கட்டுப்படுத்திட நடவ டிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இது தொடர்பாக வெல்பேர் கமிட்டி சார்பில் மாவட்ட நீதிமன்றத்தில் தாக் கல் செய்யப்பட்ட மனுவின் அடிப்படையில் நகராட்சி நிர்வாகத்தால் கீழக்கரை நகராட்சி அலுவலகத்தில் நகர் மன்ற தலைவர் செஹனாஸ் ஆபிதா தலைமையில் ஆணையாளர் செல்வராஜ் முன்னிலையில் போக்கு வரத்து நெரிசல் குறித்த கலந்தாய்வு கூட்டம் நடை பெற்றது.

    போக்குவரத்தை ஒழுங்கு படுத்தும் வகையில் ஒரு பக்க பார்க்கிங் விஷயத்தில் காவல்துறை முனைப்பு காட்டுவதோடு நோ பார்க் கிங் ஏரியாவில் போக்குவரத்துக்கு இடையூறாக ரோட்டில் நிறுத்தும் பைக், ஆட்டோ, கார் போன்ற வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட வேண்டும் என கோரிக்கையை ஏற்று கொண்ட போலீசார் இது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை உண்டாக் கும் வகையில் பிரச்சா ரம் செய்யுமாறு கேட்டு கொண்டனர்.

    பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்களின் நலன் கருதி போக்குவரத்து நெரிசலை தவிர்க்க எடுக்கப் படும் நடவடிக்கைகளுக்கு வியாபாரிகள், பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு நல்கிட வேண்டுமென்றும் கோரிக்கை வைக்கப்பட்டது.

    முக்குரோட்டிலிருந்து குயின் டிராவல்ஸ் அலுவல கம் வரை ரோட்டின் இரு பக்கமும் உள்ள ஆக்கிர மிப்புகளை முழுமையாக அகற்றுவதோடு இனி எந்த காலத்திலும் ஆக்கிரமிப்புகள் ஏற்படாதவாறு தொடர்ந்து கண்காணிக்கப்படு மென்றும், மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க படுமென்றும் தீர்மானிக்கப் பட்டது.

    கூட்டத்தில் போலீஸ் ஆய்வாளர் சரவணன், சுகா தாரத்துறை ஆய்வாளர் பரக்கத்துல்லா, கே.எல்.கே. வெல்பேர் கமிட்டி நிர்வாகி கள், நகர்மன்ற உறுப்பினர் கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×