என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
கிராம ஊராட்சி மன்றத் தலைவர்களுக்கான கலந்தாய்வு கூட்டம்
- அரசின் திட்டங்கள் அனைத்தும் பொதுமக்களுக்கு கிடைத்திடுவதை தொடர்புடைய ஊராட்சி மன்றத் தலைவர்கள் உறுதி செய்திட வேண்டும்
- தெருவிளக்குகளை அவ்வப்போது சரி செய்ய ஊராட்சி மன்றத் தலைவர்கள் முனைப்போடு செயல்பட வேண்டும்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், ஓசூர், தளி, சூளகிரி, கெலமங்கலம் மற்றும் வேப்பனப்பள்ளி ஆகிய 5 ஊராட்சி ஒன்றியங்களை சேர்ந்த 173 கிராம ஊராட்சி மன்றத் தலைவர்களுக்கான மாவட்ட அளவிலான கலந்தாய்வு கூட்டம் நடந்தது.
கூட்டத்திற்கு கலெக்டர் சரயு தலைமை தாங்கி பேசியதாவது:-
கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள 333 கிராம ஊராட்சிகளில் 5 வட்டாரத்தில் இருந்து 173 கிராம ஊராட்சி மன்றத்தலைவர்களுக்கு மாவட்ட அளவிலான இந்த கலந்தாய்வுக் கூட்டம் நடைபெறுகிறது. இணைவழி வரி வசூல், பொதுக் கழிப்பிடங்களைச் சுத்தமாகவும், தங்களது ஊராட்சியில் தேங்கும் குப்பைகளை நாள்தோறும் அப்புறப்படுத்தி சுத்தம் செய்து, பிளாஸ்டிக் பயன்பாட்டினை கட்டுப்படுத்தியும், சுற்றுப்புறங்களை தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும்.
மேலும் பொதுமக்களுக்கு நாள்தோறும் வழங்கப்படும் குடிநீர் முறையாக விநியோகம் செய்யவும், தெருவிளக்குகளை அவ்வப்போது சரி செய்ய ஊராட்சி மன்றத் தலைவர்கள் முனைப்போடு செயல்பட வேண்டும்.
அரசின் திட்டங்கள் அனைத்தும் பொதுமக்களுக்கு எவ்விதப் பாகுபாடு இல்லாமல் சமமாகக் கிடைத்திடுவதை தொடர்புடைய ஊராட்சி மன்றத் தலைவர்கள் உறுதி செய்திட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
இந்த கூட்டத்தில் உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) குருராஜன் மற்றும் ஊராட்சி மன்றத் தலைவர்கள் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்