search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    போக்குவரத்து  பணியாளர் திறன் மேம்பாடு கலந்தாய்வு கூட்டம்
    X

    போக்குவரத்து பணியாளர் திறன் மேம்பாடு கலந்தாய்வு கூட்டம்

    • அரசு போக்குவரத்து கழகத்தின் பணியாற்றும் ஓட்டுநர்கள், நடத்துணர்கள் பணியின் போது பயணிகளை எவ்வாறு அணுகி நட்புடன் பழகுவது குறித்து விளக்கப்படடது.
    • நீண்ட நாள்களாக பணிக்கு வராமல் இருக்கும் பணியாளர்களை குடும்பத்துடன் சந்தித்து, அவர்களின் குறைகளை கேட்டறிந்து, மீண்டும் பணிக்கு வர ஆலோசனைக்கள் வழங்கப்பட்டன.

    கிருஷ்ணகிரி,

    தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் பணியாளர்களுக்கான திறன் மேம்பாடு கூட்டம், கிருஷ்ணகிரியில் உள்ள நகர பணிமனை கூட்ட அரங்கில் நேற்று நடைபெற்றது.

    இந்த கூட்டத்துக்கு அரசு போக்குவரத்துக் கழக நிர்வாக இயக்குநர் பொன்முடி தலைமை தாங்கினார். பொது மேலாளர் ரவி லட்சுமணன் முன்னிலை வகித்தார்.

    அரசு போக்குவரத்து கழகத்தின் பணியாற்றும் ஓட்டுநர்கள், நடத்துணர்கள் பணியின் போது பயணிகளை எவ்வாறு அணுகி நட்புடன் பழகுவது, மனச் சுமை இல்லாமல் பணியாற்றுவது எப்படி, நீண்ட நாள்களாக பணிக்கு வராமல் இருக்கும் பணியாளர்களை குடும்பத்துடன் சந்தித்து, அவர்களின் குறைகளை கேட்டறிந்து, மீண்டும் பணிக்கு வர ஆலோசனைக்கள் வழங்கப்பட்டன.

    இந்தக் கூட்டத்தில் அரசு போக்குவரத்துக் கழக துணை மேலாளர்கள் ராஜராஜன், கலைவாணன், கோட்ட மேலாளர் தமிழரசன், உதவி மேலாளர் ஹர்ஷ்பாபு மற்றும் அலுவலர்கள் பங்கேற்றனர்.

    Next Story
    ×