search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அஜித்"

    • மே 1 ஆம் தேதி அஜித் குமார் 53- வது பிறந்தநாளை கொண்டாடவுள்ளார்.
    • 2011 ஆம் ஆண்டு அஜித், திரிஷா, அர்ஜூன், பிரேம்ஜி, அரவிந்த் ஆகாஷ், மகத், என பலர் நடித்து வெளியான திரைப்படம் மங்காத்தா.

    வெங்கட் பிரபு தற்பொழுது விஜய் நடிக்கும் கோட் திரைப்படத்தை இயக்கி வருகிறார். கோட் திரைப்படம் இந்தாண்டு செப்டம்பர் 5 ஆம் தேதி வெளியாகவுள்ளது. படத்தின் முதல் பாடலான விசில் போடு சில நாட்களுக்கு முன் வெளியாகி மிக வைரலானது.

    வெங்கட் பிரபு இயக்கும் படங்கள் அனைத்தும் காமெடிக் கலந்து வித்தியாசமான கதைக்களத்துடன் இருக்கும். அந்த வகையில் 2011 ஆம் ஆண்டு அஜித், திரிஷா, அர்ஜூன், பிரேம்ஜி, அரவிந்த் ஆகாஷ், மகத், என பலர் நடித்து வெளியான திரைப்படம் மங்காத்தா.

    இன்ஸ்பக்டர் விநாயக் மகாதேவ் என்ற கதாப்பாத்திரத்தில் நடிகர் அஜித் மிகவும் மாறுபட்ட நடிப்பை வெளிப்படுத்திருப்பார். ஒரு கடத்தல்காரனை தப்பிக்க விட்டதற்காக அவரை ச்ஸ்பண்ட் செய்து விடுவார்கள். அப்பொழுது அவர் ஒரு கும்பலை சந்திக்கிறார். அவர்கள் 500 கோடி ரூபாய் பணத்தொகையை கடத்த திட்டம் போடுகிறார்கள். அதற்கு அஜித் உதவுவதாக கூறுவார் அதற்கு அடுத்து என்ன நடந்தது என்பதே கதைக்களம்.

    இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்தார். படத்தின் பின்னணி இசை மிரட்டலாக இருக்கும். படத்தில் இடம் பெற்றுள்ள ஸ்டண்ட் காட்சிகளும், அஜித் ஒற்றை வீலில் பைக் ஓட்டும் காட்சிகள் மக்களை பிரமிக்க வைத்தது.

    மே 1 ஆம் தேதி அஜித் குமார் 53- வது பிறந்தநாளை கொண்டாடவுள்ளார். அதை மேலும் சிறப்பிக்கும் வகையில் மங்காத்தா படத்தை மீண்டும் ரிலீஸ் செய்ய பட்க்குழு திட்டமிட்டுள்ளனர். இதனால் அஜித் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • இந்த படத்தில் சண்டை காட்சியில் 'டூப்' இல்லாமல் துணிச்சலாக நடித்து அசத்தி இருந்தார்.
    • தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நவம்பர் 1-ந் தேதி இப்படத்தை 'ரிலீஸ்' செய்ய திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

    பிரபல நடிகர் அஜித்குமார்- திரிஷா நடிக்கும் புதிய படம் 'விடாமுயற்சி'. இப்படத்தை இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கி வருகிறார்.அஜித்தின் 62 - வது ஆக்ஷன் படமாக இது உருவாகி வருகிறது.

    இப்படத்தில் வில்லனாக ஆக்ஷன் கிங் நடிகர் அர்ஜுன்,மற்றும் ஆரவ் , நடிகைகள் ரெஜினா கசாண்ட்ரா, பிரியா பவானி ஷங்கர் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். இப்படத்தை 'லைகா' நிறுவனம் சார்பில் சுபாஸ்கரன் தயாரிக்கிறார். அனிருத் இசையமைக்கிறார்.




    இதன் படப்பிடிப்புகள் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அஜர்பைஜானில் தொடங்கியது. அதன் பின் வடமாநிலம் உள்ளிட்டபல்வேறு இடங்களில் இதன் படப்பிடிப்பு நடந்து வருகிறது.

    இந்நிலையில் 'விடாமுயற்சி' படத்தின் 'பர்ஸ்ட் லுக்' கடந்த 14-ந்தேதி வெளியிடப்பட்டது. மேலும் இந்த படத்தில் சண்டை காட்சியில் 'டூப்' இல்லாமல் துணிச்சலாக நடித்து அசத்தி இருந்தார்.

    சமீபத்தில் அஜித்தின் ஒரு துணிச்சலான கார் 'ஸ்டண்ட்' இணைய தளத்தில் வைரலாக பரவியது. அஜித்தின் அர்ப்பணிப்பு மிக்க இந்த நடிப்பை பார்த்து ரசிகர்கள் பாராட்டினர்.அதைத் தொடர்ந்து இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகி உள்ளது.




    இந்நிலையில் 'விடாமுயற்சி' பட தயாரிப்புக்குழு வருகிற தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நவம்பர் 1-ந் தேதிஇப்படத்தை 'ரிலீஸ்' செய்ய திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • பிரபல நடிகர் அஜித்குமார்- திரிஷா நடிக்கும் புதிய படம் 'விடாமுயற்சி' .
    • டிரிப்பில் அஜித் தனது நண்பர்களுக்கு பிரியாணி சமைத்து தரும் வீடியோ டிரெண்டிங் ஆனது.

    பிரபல நடிகர் அஜித்குமார்- திரிஷா நடிக்கும் புதிய படம் 'விடாமுயற்சி' . இதனை இயக்குநர் மகிழ் திருமேனி இயக்குகிறார்.

    இப்படத்தில் வில்லனாக ஆக்ஷன் கிங் அர்ஜுன் மற்றும் ஆரவ் நடிக்கின்றனர். மேலும் நடிகை ரெஜினா கசெண்ட்ரா நடிக்கிறார். இப்படத்தை 'லைகா' நிறுவனம் சார்பில் சுபாஸ்கரன் தயாரிக்கிறார். அனிருத் இசையமைக்கிறார்.

    இதன் படப்பிடிப்பு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அஜர்பைஜானில் தொடங்கியது. படப்பிடிப்பின் போது ஆரவ் எடுத்த அஜித் குமாரின் புகைப்படம் இன்ஸ்டாகிராமில் வைரலானது.

    அஜித் குமார் அவர்களின் நண்பர்களோடு பைக் டூர் செல்லும் பழக்கம் உடையவர். சமீபத்தில் அவர் மீண்டும் நண்பர்களுடன் பைக் டிரிப் சென்றார். அதில் நடிகர் ஆரவும் உடனிருந்தார். அந்த டிரிப்பில் அஜித் தனது நண்பர்களுக்கு பிரியாணி சமைத்து தரும் வீடியோ டிரெண்டிங் ஆனது.

    கடந்த வாரம் விடாமுயற்சி படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட ஸ்டண்ட் காட்சி ஒன்றின் வீடியோவை படக்குழு வெளியிட்டது. விடாமுயற்சி படப்பிடிப்பில் இருந்து அஜித் குமாரும் ஆரவும் மிக நல்ல நண்பர்களாக இருக்கின்றனர்.

    இந்நிலையில் அஜித் குமார் ஆரவுக்கு ரூ. 35 லட்சம் மதிப்பிளான ரேசிங் பைக்கை பரிசளித்துள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது. இருவரும் விடாமுயற்சி படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் நடித்து வருகின்றனர் என்பது குறிப்படத்தக்கது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அஜித்தின் 62 - வது படம் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது.
    • இந்நிலையில் விடாமுயற்சி படத்தின் ஒரு ஸ்டண்ட் காட்சியை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

    பிரபல நடிகர் அஜித்குமார்- திரிஷா நடிக்கும் புதிய படம் 'விடாமுயற்சி' . இதனை இயக்குனர் மகிழ் திருமேனி இயக்குகிறார். அஜித்தின் 62 - வது படம் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது.

    இப்படத்தில் வில்லனாக ஆக்ஷன் கிங் அர்ஜுன் மற்றும் ஆரவ் நடிக்கின்றனர். மேலும் நடிகை ரெஜினா கசெண்ட்ரா நடிக்கின்றனர். இப்படத்தை 'லைகா' நிறுவனம் சார்பில் சுபாஸ்கரன் தயாரிக்கிறார். அனிருத் இசையமைக்கிறார்.

    இதன் படப்பிடிப்புகள் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அஜர்பைஜானில் தொடங்கியது. படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பையும் அங்கு நடத்தி முடிக்க திட்டமிடப்பட்டது. தொடர்ந்து 3 மாதம் அங்கு ஷூட்டிங் நடந்தது.

    ஷூட்டிங் நடைப்பெற்ற போது ஆரவ் எடுத்த புகைப்படம் இன்ஸ்டாகிராமில் வைராலிகியது. பின் அஜித்திற்கு உடலில் சிறிய பிரச்சனை இருந்ததால் அதற்கு அறுவை சிகிச்சை செய்தார்.

    அடுத்ததாக ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி படத்தில் நடிக்கவுள்ளார்.

    இந்நிலையில் விடாமுயற்சி படத்தின் ஒரு ஸ்டண்ட் காட்சியை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். அக்காட்சியில் ஆரவ் சீட்டில் கட்டப்பட்டு இருக்கிறார். அஜித் ஜீப்பை ஓட்டுகிறார். சில நிமிடங்களில் அந்த ஜீப் கவிழ்கிறது. இக்காட்சியை ஸ்டண்ட் டூப் உதவி இல்லாமல் அவரே நடித்து இருப்பது பிரமிக்க வைக்கிறது. இக்காட்சி இப்பொழுது இணையதளத்தில் வைரலாகியது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • பிறந்தநாள் பார்ட்டியின் போது நடிகர் அஜித்துக்கு நடராஜன் கேக் ஊட்டினார்
    • முக்கிய நடிகர்களுடன் கிரிக்கெட் வீரர் நடராஜன் நல்ல நட்பில் இருந்து வருகிறார்.

    இந்தியன் பிரீமியர் லீக்கில் (IPL) சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக வேகப்பந்து வீச்சாளர் நடராஜன் விளையாடி வருகிறார். நாளை ( 5- ந்தேதி)  சென்னை சூப்பர் கிங்ஸ் உடனான போட்டிக்காக அவர் ஐதராபாத்தில் உள்ளார்.

    இந்நிலையில் இன்று நடராஜன் தனது 33-வது பிறந்தநாளை பிரபல நடிகர் அஜித் குமாருடன் கேக் வெட்டி ஐதராபாத்தில் கொண்டாடினார்.

    பிறந்தநாள் பார்ட்டியின் போது நடிகர் அஜித்துக்கு நடராஜன் கேக் ஊட்டினார். இருவரும் மாறி, மாறி கேக் ஊட்டி மகிழ்ந்தனர். பிறந்தநாள் பார்ட்டியின் போது அஜித் - நடராஜன் இருவரும் வெள்ளை நிற உடையில் இருந்தனர்.



    அப்போது இலங்கையைச் சேர்ந்த பிரபல சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரனும் உடனிருந்தார். இந்த புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    தமிழ் சினிமாவின் முக்கிய நடிகர்களுடன் கிரிக்கெட் வீரர் நடராஜன் நல்ல நட்பில் இருந்து வருகிறார். சமீபத்தில் சிவகார்த்திகேயன், யோகி பாபு ஆகியோருடன் கிரிக்கெட் விளையாடிய புகைப்படங்கள் வெளியாகின.

    தற்போது பிரபல நடிகர் அஜித், நடராஜனின் பிறந்தநாள் பார்ட்டியில் கலந்து கொண்டது ரசிகர்களிடையே பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு ஓராண்டுக்கும் மேலாக நடைபெற்று வருகிறது.
    • அஜித் நடித்த துணிவு படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

    தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் அஜித். இவர் சினிமா மட்டுமின்றி பைக் ரேசிங், புகைப்படம் எடுப்பது மற்றும் டிரோன்களை இயக்குவது என பலதுறைகளில் ஆர்வம் கொண்டவர் என்பது அனைவரும் அறிந்ததே. சமீப ஆண்டுகளில் இந்தியா மற்றும் உலகின் பல்வேறு நாடுகளுக்கு பைக் பயணம் மேற்கொள்வதை அஜித் வாடிக்கையாக கொண்டிருக்கிறார்.

    பைக் ரைடிங் மோகம் அதிகரித்த போதிலும், சினிமாவிலும் அஜித் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் இவர் விடாமுயற்சி என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை மகிழ் திருமேனி இயக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு ஓராண்டுக்கும் மேலாக நடைபெற்று வருகிறது.

     


    இந்த நிலையில், நடிகர் அஜித் மீண்டும் பைக் பயணத்தை துவங்குவதை உணர்த்தும் வகையில் புகைப்படம் ஒன்று வெளியிடப்பட்டது. இந்த புகைப்படத்தில் நடிகர் அஜித் பைக் பயணத்திற்கு ஏற்ற உடையில் காணப்பட்டார்.

    இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், அஜித் பைக் ரைடிங் செய்பவருக்கு டிப்ஸ் கொடுக்கும் வீடியோ தற்போது வெளியிடப்பட்டு இருக்கிறது. வீடியோவின் படி நடிகர் அஜித் பைக் ரைடர் ஒருவருக்கு பாடம் எடுக்கும் காட்சிகளும், டிப்ஸ் கொடுக்கும் காட்சிகளும் இடம்பெற்றுள்ளன. இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.


    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்

    • பைக் பயணம் மேற்கொள்வதை அஜித் வாடிக்கையாக கொண்டிருக்கிறார்.
    • இந்த படத்தின் படப்பிடிப்பு ஓராண்டுக்கும் மேலாக நடைபெற்று வருகிறது.

    தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் அஜித். இவர் சினிமா மட்டுமின்றி பைக் பிரியர் என்பது அனைவரும் அறிந்ததே. இந்தியா மற்றும் உலகின் பல்வேறு நாடுகளுக்கு பைக் பயணம் மேற்கொள்வதை அஜித் வாடிக்கையாக கொண்டிருக்கிறார்.

    இவர் நடிப்பில் கடைசியாக வெளியான துணிவு படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதைத் தொடர்ந்து இவர் விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை மகிழ் திருமேனி இயக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு ஓராண்டுக்கும் மேலாக நடைபெற்று வருகிறது.

    சமீபத்தில் இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்ததாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து நடிகர் அஜித் சென்னை திரும்பி குடும்பத்துடன் நேரத்தை செலவிட்டார். சில தினங்களுக்கு முன்பு அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொண்ட நடிகர் அஜித் அதன் பிறகு தனது மகனின் பள்ளிக்கு சென்றார்.

    இந்த நிலையில், நடிகர் அஜித் அடுத்தக்கட்ட பைக் பயணத்தை துவங்கி இருப்பதை சூசகமாக தெரிவிக்கும் வகையில் புகைப்படம் ஒன்று வெளியாகி உள்ளது. அந்த புகைப்படத்தில் நடிகர் அஜித் பைக் பயணத்திற்கு ஏற்ற உடையில் காணப்படுகிறார். இதோடு அவர் பைக் பயணம் செல்லவிருப்பதை தெரிவிக்கும் வகையில், புகைப்படத்திற்கு தலைப்பிடப்பட்டு உள்ளது. இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்


    • சென்னையில் உள்ள ரிசார்ட்டில் நண்பர்கள், உறவினர்களுக்கு விருந்து வழங்கி கொண்டாடினர்
    • அவர்களுக்கு பிடித்த 'உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு' என்ற பாடல் வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது

    நடிகர் அஜித், நடிகை ஷாலினி இருவரும் முதன்முதலில் ஜோடியாக நடித்த படம் அமர்க்களம். இயக்குனர் சரண் இப்படத்தை இயக்கினார்.

    இந்நிலையில் பட ஷூட்டிங்கில் ஷாலினி காயம் ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்தபோது அஜித் அவரை பாசத்துடன் பார்த்துக்கொண்டார். இதனால் ஷாலினிக்கு அஜித் மீது காதல் உருவானது.

    மேலும், பட ஷூட்டிங் நேரத்தில் இருவருக்கும் இடையே காதல் அதிகரித்தது. இதனையடுத்து, கடந்த 2000-ம் ஆண்டில் பெற்றோர் சம்மதத்துடன் இருவரும் திருமணம் செய்துகொண்டனர்.

    தமிழ் பட டிரெண்டிங் ஹீரோயினாக இருந்து வந்த ஷாலினி நடித்த படம் அனைத்தும் 'ஹிட்' ஆகியது. அவருக்கு பட வாய்ப்புகள் வழங்க ஏராளமான தயாரிப்பாளர்கள் காத்து கிடந்தனர். ஆனால், ஷாலினி இனிமேல் சினிமாவில் நடிக்க மாட்டேன் என அறிவித்தார். அதைத் தொடர்ந்து சினிமாவில் இருந்தும் விலகினார்.



     

    அதன் பின்னர் குடும்ப வாழ்க்கையில் கவனத்தை செலுத்தினார். ஷாலினிக்கு கடந்த 2008-ம் ஆண்டில் பெண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு அனோஷ்கா என பெயரிட்டனர். இதையடுத்து 7 ஆண்டுகள் கழித்து அஜித் - ஷாலினி ஜோடிக்கு 2-வதாக ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு 'ஆத்விக்' என பெயரிட்டனர். 

    இந்நிலையில், தற்போது அஜித்- ஷாலினிக்கு காதல் திருமணமாகி 25 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதனையொட்டி சென்னையில் உள்ள ரிசார்ட்டில் நண்பர்கள், உறவினர்களுக்கு விருந்து வழங்கி கொண்டாடினர்.

    மேலும், அஜித் - ஷாலினி ஜோடியாக கேக் வெட்டி தங்களது 25-வது ஆண்டு காதல் திருமணத்தை கொண்டாடி மகிழ்ந்தனர். அப்போது அவர்களுக்கு பிடித்த 'உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு' என்ற பாடல் ஒலிப்பது போன்ற வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அஜித்தின் அடுத்த படமான ஏகே 63 படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கவுள்ளார்
    • தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கும் இப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கின்றனர்

    பிரபல நடிகர் அஜித் - திரிஷா நடிக்கும் புதிய படம் விடாமுயற்சி. இதனை இயக்குனர் மகிழ் திருமேனி இயக்குகிறார். இப்படத்தில் வில்லனாக ஆக்ஷன் கிங் அர்ஜூன் மற்றும் ஆரவ் நடிக்கின்றனர். இப்படத்தை லைகா நிறுவனம் சார்பில் சுபாஸ்கரன் தயாரிக்கிறார். அனிரூத் இப்படத்திற்கு இசையமைக்கிறார். இதன் படப்பிடிப்புகள் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அஜர்பைஜானில் தொடங்கியது. தொடர்ந்து 3 மாதம் அங்கு ஷூட்டிங் நடந்தது. அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகியது.

    இந்நிலையில்அஜித்தின் அடுத்த படமான ஏகே 63 படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கவுள்ளார். அப்படத்தின் டைட்டில் இப்பொழுது அதிகாரப்பூர்வமாக படக்குழுவுனரிடம் இருந்து வெளியிடப் பட்டுள்ளது. படத்திற்கு 'குட் பேட் அக்லி' என பெயரிட்டுள்ளனர். தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கும் இப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கின்றனர். படம் 2025-ஆம் ஆண்டு பொங்கல் தினத்தில் வெளியிடப்படுகிறது. இதனால் அஜித் ரசிகர்கள் மிகவும் கொண்டாட்டத்தில் சமூக வலைத்தளங்களில் படத்தின் டைட்டில் போஸ்டரை பகிர்ந்து வருகின்றனர்.




     


    • அஜித்தின் தீவிர ரசிகரான 'மார்க் ஆண்டனி' பட இயக்குனரான ஆதிக் ரவிச்சந்திரன், ஏகே-63 படத்தை இயக்குகிறார்
    • ஏகே-63 படம் இந்த ஆண்டின் பிற்பகுதியில் வெளியிடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டு உள்ளது

    பிரபல நடிகர் அஜித்குமார்- திரிஷா நடிக்கும் புதிய படம் 'விடாமுயற்சி' . இதனை இயக்குனர் மகிழ் திருமேனி இயக்குகிறார்.அஜித்தின் 62 - வது பிரம்மாண்ட படமாக இது உருவாகி வருகிறது.

    இப்படத்தில் வில்லனாக ஆக்ஷன் கிங் அர்ஜுன் மற்றும் ஆரவ் நடிக்கின்றனர். மேலும் நடிகை ரெஜினா கசெண்ட்ரா நடிக்கின்றனர். இப்படத்தை 'லைகா' நிறுவனம் சார்பில் சுபாஸ்கரன் தயாரிக்கிறார். அனிருத் இசையமைக்கிறார்.

    இதன் படப்பிடிப்புகள் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அஜர்பைஜானில் தொடங்கியது. படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பையும் அங்கு நடத்தி முடிக்க திட்டமிடப்பட்டது. தொடர்ந்து 3 மாதம் அங்கு ஷூட்டிங் நடந்தது.

    இந்நிலையில் அஜித்தின் அடுத்த படமான ஏகே-63 படம் குறித்த புது அப்டேட் இன்று இணையதளத்தில் வெளியானது. அஜித்தின் தீவிர ரசிகரான 'மார்க் ஆண்டனி' பட இயக்குனரான ஆதிக் ரவிச்சந்திரன், ஏகே-63 படத்தை இயக்குகிறார்.

    'விடுதலை: படத்தின் தயாரிப்பாளரான ஆர்.எஸ்.இன்ஃபோடெயின்மென்ட்' பட நிறுவனம் சார்பில் எல்ரெட்குமார் இப்படத்தை தயாரிக்கிறார்.ஏகே-63 படம் இந்த ஆண்டின் பிற்பகுதியில் வெளியிடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டு உள்ளது.




     


    மேலும் இந்த படம் பற்றிய கூடுதல் தகவல்கள் விரைவில் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.அஜித்தின் ஏகே-63 படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று இணையதளத்தில் வெளியானதை தொடர்ந்து அஜித் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

    • 'விடாமுயற்சி' படத்தின் 'பர்ஸ்ட் லுக்' ரிலீஸ் குறித்த தகவல் சமூக வலைதளத்தில் பரவி வருகிறது
    • முன்அறிவிப்பு இல்லாமல் தற்போது 'விடாமுயற்சி' படக்குழுவும் அதே பாணியை கடைபிடிக்கும் என நம்பப்படுகிறது.

    பிரபல நடிகர் அஜித்குமார்- திரிஷா நடிக்கும் புதிய படம் 'விடாமுயற்சி' . இதனை இயக்குனர் மகிழ் திருமேனிஇயக்குகிறார்.அஜித்தின் 62 - வது பிரம்மாண்ட படமாக இது உருவாகுகிறது.

    இப்படத்தில் வில்லனாக ஆக்ஷன் கிங் அர்ஜுன் மற்றும் ஆரவ் நடிக்கின்றனர். மேலும் நடிகை ரெஜினா கசெண்ட்ராவ் நடிக்கின்றனர். இப்படத்தை 'லைகா' நிறுவனம் சார்பில் சுபாஸ்கரன் தயாரிக்கிறார். அனிருத் இசையமைக்கிறார்.

    இதன் படப்பிடிப்புகள் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அஜர்பைஜானில் தொடங்கியது. படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பையும் அங்கு நடத்தி முடிக்க திட்டமிடப்பட்டது. தொடர்ந்து 3 மாதம் அங்கு ஷூட்டிங் நடந்தது.

    இந்நிலையில் அஜர்பைஜானில் வானிலை மோசம் அடைந்ததால் அங்கு 'ஷூட்டிங்' நடத்த முடியாத சூழல் உருவானது. இதனால் படப்பிடிப்பை ரத்து செய்துவிட்டு படக்குழு கடந்த ஜனவரி மாதம் சென்னை திரும்பியது. அதன்பின்னர் ஒரு மாதத்திற்கு மேலாக ' விடாமுயற்சி' பட ஷூட்டிங் தொடங்கப்படவில்லை.

    இந்நிலையில் நடிகர் அஜித் கடந்த வாரம் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.இதனால் படப்பிடிப்பு தொடங்குவதில் மேலும் தாமதம் ஆகியது. மேலும் 'விடாமுயற்சி' படம் தொடர்பான 'அப்டேட்' எதுவும் வெளியிடப்படாமல் ரகசியமாக வைக்கப்பட்டது.

    இந்நிலையில் தற்போது 'விடாமுயற்சி' படத்தின் 'பர்ஸ்ட் லுக்' ரிலீஸ் குறித்த தகவல் சமூக வலைதளத்தில் பரவி வருகிறது. நாளை (14-ந் தேதி) ஆச்சர்யப்படதக்க வகையில் 'பர்ஸ்ட் லுக்' வெளியிடப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

    மேலும் அஜித் நடிப்பில் வெளியான 'வலிமை', 'துணிவு' உள்ளிட்ட படங்களின் அப்டேட்டுகள் எவ்வித முன்அறிவிப்பு இல்லாமல் வெளியிடப்பட்டதால், தற்போது 'விடாமுயற்சி' படக்குழுவும் அதே பாணியை கடைபிடிக்கும் என நம்பப்படுகிறது.

    • சமீபத்தில் நடிகர் கமலஹாசன் தென்னிந்திய நடிகர் சங்க கட்டுமான பணிகளை மேற்கொள்ள 1 கோடி ரூபாய் நிதி வழங்கினார்
    • நடிகர் சங்கத்தின் கட்டுமான பிரச்சனை 2017 ஆம் ஆண்டில் இருந்து தொடர்ந்து கொண்டு இருக்கிறது.

    நடிகர் சங்கத்தின் கட்டுமான பிரச்சனை 2017 ஆம் ஆண்டில் இருந்து தொடர்ந்து கொண்டு இருக்கிறது. 2017 ஆம் ஆண்டு தமிழ் நடிகர் சங்கம் தங்களுக்கான கட்டுமான பணியை தொடங்கியது. நடிகர் ரஜினிகாந்த் இதற்கு அடிக்கல் நாட்டினார். ஆனால் சில பிரச்சனையினால் கட்டுமான பணிகள் பாதிக்கப்பட்டன.

    சமீபத்தில் நடிகர் கமலஹாசன் தென்னிந்திய நடிகர் சங்க கட்டுமான பணிகளை மேற்கொள்ள 1 கோடி ரூபாய் நிதி வழங்கினார். நடிகர் சங்கத்தின் முக்கிய பொறுப்பில் உள்ள நடிகர் நாசர், விஷால், கார்த்தி, பூச்சி முறுகன் அந்த தொகையை பெற்றுக் கொண்டனர்.

    தற்போது தென்னிந்திய நடிகர் சங்க கட்டட பணிகளைத் தொடர ஏதுவாக நடிகர் விஜய் அவரது சொந்த நிதியிலிருந்து ரூபாய் ஒரு கோடியை நடிகர் சங்க வளர்ச்சிக்காக நன்கொடையாக வழங்கியுள்ளார். அவருக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் நன்றி தெரிவிக்கும் விதமாக ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.

    ×