search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "New 'update'"

    • 'டைட்டில்', போஸ்டரில் சிவப்பு நிறத்தில்,ஹெல்மெட் காட்டப்பட்டுள்ளது.
    • இந்த போஸ்டர் ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டும் வகையில் அமைந்துள்ளது.

    மாநகரம்' படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களை கவர்ந்த இயக்குநர் லோகேஷ் கனகராஜ், `கைதி', `மாஸ்டர்', `விக்ரம்' மற்றும் `லியோ' படங்களை இயக்கி குறுகிய காலத்திலேயே பிரபல இயக்குனரானார்.

    தற்போது ரஜினியின் 171 -வது படத்தின் 'ஸ்கிரிப்ட் ' தயார் செய்யும் பணியில் லோகேஷ் ஈடுபட்டு உள்ளார். மேலும் ஜி ஸ்குவாட் (G Squad)' தயாரிப்பு என்ற பெயரிலான சொந்த தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி 2023 -ல் 'பைட் கிளப்' மூலம் தயாரிப்பாளரானார்.




    இந்நிலையில் தமிழ்ப் புத்தாண்டு தினமான இன்று லோகேஷ் கனகராஜ் தனது 2- வது புதிய படம் தயாரிப்பு குறித்து இணைய தளத்தில் அறிவித்துள்ளார். 'பென்ஸ்' என்ற புதிய படத்தில் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடிக்கிறார்.

    இப்படத்தை ரெமோ மற்றும் சுல்தான் பட புகழ் இயக்குனர் பாக்கியராஜ் கண்ணன் இயக்குகிறார். 'பென்ஸ்' படத்தை விரைவில் வெள்ளித் திரையில் பார்க்க வேண்டும் என்பது தனது 'ஆசை' என்று லோகேஷ் தெரிவித்து உள்ளார்.




    மேலும் இப்படத்தில் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடிப்பது மிகவும் மகிழ்ச்சியை தருகிறது. ரசிகர்களுக்கு தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் என லோகேஷ் தெரிவித்துள்ளார்

    இப்படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்கள் மற்றும் குழுவினர் பற்றிய விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை. படத்தின் ஸ்ட்ரீமிங் உரிமையை Netflix நிறுவனம் பெற்றுள்ளது. 'டைட்டில்', போஸ்டரில் சிவப்பு நிறத்தில்,ஹெல்மெட் காட்டப்பட்டுள்ளது. இந்த போஸ்டர் ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டும் வகையில் அமைந்துள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • இயக்குனர் சுந்தர்.சி இயக்கத்தில் அரண்மனை 4 திரைப்படம் உருவாகி உள்ளது.
    • படத்திற்கு ஹிப் ஹாப் ஆதி இசையமைத்துள்ளார்.

    சுந்தர்.சி இயக்கத்தில் கடந்த 2021-ம் ஆண்டு வெளியான திரைப்படம் 'அரண்மனை 3'. இந்த படத்தில் ஆர்யா, ராஷி கன்னா, ஆண்ட்ரியா, சாக்சி அகர்வால் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். அவ்னி சினிமேக்ஸ் நிறுவனம் சார்பில் குஷ்பு தயாரித்திருந்த இப்படத்தை உதயநிதி ஸ்டாலின், ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிட்டது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் பல்வேறு விதமான விமர்சனங்களை பெற்றது.

    இந்நிலையில், இயக்குனர் சுந்தர்.சி இயக்கத்தில் அரண்மனை 4 திரைப்படம் உருவாகி உள்ளது. இப்படத்தின் முந்தைய மூன்று பாகங்களில் நடித்துள்ள சுந்தர்.சி இந்த பாகத்திலும் நடித்துள்ளார். மேலும் இதில் தமன்னா, ராஷி கண்ணா, யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஹிப் ஹாப் ஆதி இசையமைத்துள்ளார்.சமீபத்தில் இந்த படத்தின் டிரைலர் வெளியானது.

    இந்த நிலையில் , 'அரண்மனை 4 ' படத்தின்' அச்சச்சோ' என்ற பாடல் இன்று காலை 10 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இன்று பாடல் வெளியாகும் நிலையில் ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்தில் உள்ளனர். இந்நிலையில் படம் இந்த மாதம் இறுதியில் வெளியாகும் என எதிர்பாக்கப்படுகிறது.

    • இந்த படத்தில் சண்டை காட்சியில் 'டூப்' இல்லாமல் துணிச்சலாக நடித்து அசத்தி இருந்தார்.
    • தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நவம்பர் 1-ந் தேதி இப்படத்தை 'ரிலீஸ்' செய்ய திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

    பிரபல நடிகர் அஜித்குமார்- திரிஷா நடிக்கும் புதிய படம் 'விடாமுயற்சி'. இப்படத்தை இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கி வருகிறார்.அஜித்தின் 62 - வது ஆக்ஷன் படமாக இது உருவாகி வருகிறது.

    இப்படத்தில் வில்லனாக ஆக்ஷன் கிங் நடிகர் அர்ஜுன்,மற்றும் ஆரவ் , நடிகைகள் ரெஜினா கசாண்ட்ரா, பிரியா பவானி ஷங்கர் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். இப்படத்தை 'லைகா' நிறுவனம் சார்பில் சுபாஸ்கரன் தயாரிக்கிறார். அனிருத் இசையமைக்கிறார்.




    இதன் படப்பிடிப்புகள் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அஜர்பைஜானில் தொடங்கியது. அதன் பின் வடமாநிலம் உள்ளிட்டபல்வேறு இடங்களில் இதன் படப்பிடிப்பு நடந்து வருகிறது.

    இந்நிலையில் 'விடாமுயற்சி' படத்தின் 'பர்ஸ்ட் லுக்' கடந்த 14-ந்தேதி வெளியிடப்பட்டது. மேலும் இந்த படத்தில் சண்டை காட்சியில் 'டூப்' இல்லாமல் துணிச்சலாக நடித்து அசத்தி இருந்தார்.

    சமீபத்தில் அஜித்தின் ஒரு துணிச்சலான கார் 'ஸ்டண்ட்' இணைய தளத்தில் வைரலாக பரவியது. அஜித்தின் அர்ப்பணிப்பு மிக்க இந்த நடிப்பை பார்த்து ரசிகர்கள் பாராட்டினர்.அதைத் தொடர்ந்து இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகி உள்ளது.




    இந்நிலையில் 'விடாமுயற்சி' பட தயாரிப்புக்குழு வருகிற தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நவம்பர் 1-ந் தேதிஇப்படத்தை 'ரிலீஸ்' செய்ய திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • ரஜினி- 171 புதிய படம் குறித்த சுவாரஸ்ய தகவல் தற்போது வெளியாகி உள்ளது.இந்தப் படத்தில் ரஜினிகாந்த் தங்கக் கடத்தல் மாபியா தாதாவாக நடிக்கிறார்.
    • இணைய தளத்தில் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்து வாழ்த்துகள் பதிவு செய்து வருகின்றனர்.

    தமிழ் திரைப்பட உலகில் சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து வருபவர் நடிகர் ரஜினிகாந்த். இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

    கடந்த சில வருடங்களாக 'ஹிட்ஸ்' குறைந்து உள்ளது.சமீபத்தில் வெளியான ஜெயிலர், லால்சலாம் உள்ளிட்ட படங்கள் எதிர்பார்த்த அளவு அமைய வில்லை. தற்போது ரஜினிகாந்த் வேட்டையன்' படத்தில் நடித்து வருகிறார்.

    இந்நிலையில் ரஜினி- 171 புதிய படத்தை பிரபல இயக்குனர் லோகேஷ் கனகராஜ் விரைவில் இயக்க உள்ளார். வருகிற ஏப்ரல் 22- ந்தேதி இந்த படத்திற்கான "டைட்டில்" அறிவிக்கப்பட உள்ளது. சில தினங்களுக்கு. முன் வெளியான ரஜினியின் 'ப்ரீ-லுக்' ரசிகர்களிடம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.



    இந்நிலையில் ரஜினி- 171 புதிய படம் குறித்த சுவாரஸ்ய தகவல் தற்போது வெளியாகி உள்ளது.இந்தப் படத்தில் ரஜினிகாந்த் தங்கக் கடத்தல் மாபியா தாதாவாக நடிக்கிறார்.

    40 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் தங்கக் கடத்தல் அதிகமாக இருந்தது. சிங்கப்பூர், துபாய், அமெரிக்கா மற்றும் பிற நாடுகளில் இருந்து ரகசியமாக கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான தங்கம் இந்தியாவுக்கு புழக்கத்திற்கு வந்தது.

    அந்தநேரத்தில் விமான நிலைய பாதுகாப்பு , சோதனை முறையில் நவீன வசதிகள் இல்லாததால் அதை கட்டுப்படுத்த முடியவில்லை. இதனால் தங்கம் கடத்தல் அதிகரித்தது. பஸ், ரெயில்கள் வழியாகவும் கடத்தல் நடந்தது.




    இந்த சம்பவத்தை மையமாக கொண்டு இந்த படத்தின் கதை உருவாக்கப்பட்டு உள்ளது. இதில் ரஜினி தங்க கடத்தல் 'தாதா' வேடத்தில் நடிக்க உள்ளார். இதற்கான 'ஸ்கிரிப்' தயார் செய்யும் பணியில் இயக்குனர் லோகேஷ்கனகராஜ் ஈடுபட்டு வருகிறார்.

    இந்த படத்தில் விரைவில் ரஜினி உள்ளதை யொட்டி தற்போது இணைய தளத்தில் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்து வாழ்த்துகள் பதிவு செய்து வருகின்றனர்.


    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.



    • அமீர்கானுடன் ஜெனிலியா முதல் முறையாக இப்படத்தில் ஜோடியாக இணைந்து உள்ளார்.
    • அமீர்கான் - ஜெனிலியா படப்பிடிப்பின் போது உற்சாகமாக அமர்ந்து இருப்பது போன்ற புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி உள்ளது.

    பிரபல இந்தி நடிகர் அமீர்கான்- ஜெனிலியா தேஷ்முக் ஜோடியாக நடிக்கும் இந்தி படம் 'சிதாரே ஜமீன் பர்'. இந்த படத்தை இயக்குனர் பிஆர்.எஸ்.பிரசன்னா இயக்கி வருகிறார்.

    'லால் சிங் சதா' படத்தை தொடர்ந்து ஒரு வருட இடைவெளிக்கு பின் தற்போது இந்த புதிய படத்தில்  அமீர்கான் நடிக்க தொடங்கி உள்ளார்.மேலும் இந்த படத்தின் நடிகர்கள் பற்றிய கூடுதல் விவரங்கள் வெளியிடப்பட வில்லை.அமீர்கானுடன் ஜெனிலியா முதல் முறையாக இப்படத்தில் ஜோடியாக இணைந்து உள்ளார்.

    இந்த ஆண்டு இறுதியில் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு இப்படம் வெளியிடப்படுகிறது.இந்நிலையில் அமீர்கான் - ஜெனிலியா இருவரும் படப்பிடிப்பின் போது செட்டில் உற்சாகமாக அமர்ந்து இருப்பது போன்ற புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி உள்ளது.

    அந்த புகைப்படத்தில் ஜெனிலியா வெள்ளை நிற மேலாடை மற்றும் நீல நிற ஜீன்ஸ் அணிந்து மிக உற்சாகமாக சிரிப்பது போன்றும் அமீர்கான் கருப்பு நிற டி-ஷர்ட் அணிந்து அருகில் அமர்ந்து இருப்பது போன்றும் காணப்படுகிறது.இந்த புகைப்படத்தை இணையதளத்தில் பார்த்து ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

    2008 -ல், ஜெனிலியா இம்ரான் கானுடன் 'ஜானே து...யா ஜானே' படத்தில் நடித்து இருந்தார். இந்நிலையில் நீண்ட இடைவெளிக்குப் பின் தற்போது அமீர்கானுடன் இப்படத்தில் நடித்து வருகிறார்               

        உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    ×