search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விடாமுயற்சி"

    • பிரபல நடிகர் அஜித்குமார்- திரிஷா நடிக்கும் புதிய படம் 'விடாமுயற்சி' .
    • டிரிப்பில் அஜித் தனது நண்பர்களுக்கு பிரியாணி சமைத்து தரும் வீடியோ டிரெண்டிங் ஆனது.

    பிரபல நடிகர் அஜித்குமார்- திரிஷா நடிக்கும் புதிய படம் 'விடாமுயற்சி' . இதனை இயக்குநர் மகிழ் திருமேனி இயக்குகிறார்.

    இப்படத்தில் வில்லனாக ஆக்ஷன் கிங் அர்ஜுன் மற்றும் ஆரவ் நடிக்கின்றனர். மேலும் நடிகை ரெஜினா கசெண்ட்ரா நடிக்கிறார். இப்படத்தை 'லைகா' நிறுவனம் சார்பில் சுபாஸ்கரன் தயாரிக்கிறார். அனிருத் இசையமைக்கிறார்.

    இதன் படப்பிடிப்பு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அஜர்பைஜானில் தொடங்கியது. படப்பிடிப்பின் போது ஆரவ் எடுத்த அஜித் குமாரின் புகைப்படம் இன்ஸ்டாகிராமில் வைரலானது.

    அஜித் குமார் அவர்களின் நண்பர்களோடு பைக் டூர் செல்லும் பழக்கம் உடையவர். சமீபத்தில் அவர் மீண்டும் நண்பர்களுடன் பைக் டிரிப் சென்றார். அதில் நடிகர் ஆரவும் உடனிருந்தார். அந்த டிரிப்பில் அஜித் தனது நண்பர்களுக்கு பிரியாணி சமைத்து தரும் வீடியோ டிரெண்டிங் ஆனது.

    கடந்த வாரம் விடாமுயற்சி படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட ஸ்டண்ட் காட்சி ஒன்றின் வீடியோவை படக்குழு வெளியிட்டது. விடாமுயற்சி படப்பிடிப்பில் இருந்து அஜித் குமாரும் ஆரவும் மிக நல்ல நண்பர்களாக இருக்கின்றனர்.

    இந்நிலையில் அஜித் குமார் ஆரவுக்கு ரூ. 35 லட்சம் மதிப்பிளான ரேசிங் பைக்கை பரிசளித்துள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது. இருவரும் விடாமுயற்சி படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் நடித்து வருகின்றனர் என்பது குறிப்படத்தக்கது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அஜித்தின் 62 - வது படம் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது.
    • இந்நிலையில் விடாமுயற்சி படத்தின் ஒரு ஸ்டண்ட் காட்சியை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

    பிரபல நடிகர் அஜித்குமார்- திரிஷா நடிக்கும் புதிய படம் 'விடாமுயற்சி' . இதனை இயக்குனர் மகிழ் திருமேனி இயக்குகிறார். அஜித்தின் 62 - வது படம் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது.

    இப்படத்தில் வில்லனாக ஆக்ஷன் கிங் அர்ஜுன் மற்றும் ஆரவ் நடிக்கின்றனர். மேலும் நடிகை ரெஜினா கசெண்ட்ரா நடிக்கின்றனர். இப்படத்தை 'லைகா' நிறுவனம் சார்பில் சுபாஸ்கரன் தயாரிக்கிறார். அனிருத் இசையமைக்கிறார்.

    இதன் படப்பிடிப்புகள் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அஜர்பைஜானில் தொடங்கியது. படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பையும் அங்கு நடத்தி முடிக்க திட்டமிடப்பட்டது. தொடர்ந்து 3 மாதம் அங்கு ஷூட்டிங் நடந்தது.

    ஷூட்டிங் நடைப்பெற்ற போது ஆரவ் எடுத்த புகைப்படம் இன்ஸ்டாகிராமில் வைராலிகியது. பின் அஜித்திற்கு உடலில் சிறிய பிரச்சனை இருந்ததால் அதற்கு அறுவை சிகிச்சை செய்தார்.

    அடுத்ததாக ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி படத்தில் நடிக்கவுள்ளார்.

    இந்நிலையில் விடாமுயற்சி படத்தின் ஒரு ஸ்டண்ட் காட்சியை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். அக்காட்சியில் ஆரவ் சீட்டில் கட்டப்பட்டு இருக்கிறார். அஜித் ஜீப்பை ஓட்டுகிறார். சில நிமிடங்களில் அந்த ஜீப் கவிழ்கிறது. இக்காட்சியை ஸ்டண்ட் டூப் உதவி இல்லாமல் அவரே நடித்து இருப்பது பிரமிக்க வைக்கிறது. இக்காட்சி இப்பொழுது இணையதளத்தில் வைரலாகியது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு ஓராண்டுக்கும் மேலாக நடைபெற்று வருகிறது.
    • அஜித் நடித்த துணிவு படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

    தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் அஜித். இவர் சினிமா மட்டுமின்றி பைக் ரேசிங், புகைப்படம் எடுப்பது மற்றும் டிரோன்களை இயக்குவது என பலதுறைகளில் ஆர்வம் கொண்டவர் என்பது அனைவரும் அறிந்ததே. சமீப ஆண்டுகளில் இந்தியா மற்றும் உலகின் பல்வேறு நாடுகளுக்கு பைக் பயணம் மேற்கொள்வதை அஜித் வாடிக்கையாக கொண்டிருக்கிறார்.

    பைக் ரைடிங் மோகம் அதிகரித்த போதிலும், சினிமாவிலும் அஜித் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் இவர் விடாமுயற்சி என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை மகிழ் திருமேனி இயக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு ஓராண்டுக்கும் மேலாக நடைபெற்று வருகிறது.

     


    இந்த நிலையில், நடிகர் அஜித் மீண்டும் பைக் பயணத்தை துவங்குவதை உணர்த்தும் வகையில் புகைப்படம் ஒன்று வெளியிடப்பட்டது. இந்த புகைப்படத்தில் நடிகர் அஜித் பைக் பயணத்திற்கு ஏற்ற உடையில் காணப்பட்டார்.

    இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், அஜித் பைக் ரைடிங் செய்பவருக்கு டிப்ஸ் கொடுக்கும் வீடியோ தற்போது வெளியிடப்பட்டு இருக்கிறது. வீடியோவின் படி நடிகர் அஜித் பைக் ரைடர் ஒருவருக்கு பாடம் எடுக்கும் காட்சிகளும், டிப்ஸ் கொடுக்கும் காட்சிகளும் இடம்பெற்றுள்ளன. இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.


    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்

    • பைக் பயணம் மேற்கொள்வதை அஜித் வாடிக்கையாக கொண்டிருக்கிறார்.
    • இந்த படத்தின் படப்பிடிப்பு ஓராண்டுக்கும் மேலாக நடைபெற்று வருகிறது.

    தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் அஜித். இவர் சினிமா மட்டுமின்றி பைக் பிரியர் என்பது அனைவரும் அறிந்ததே. இந்தியா மற்றும் உலகின் பல்வேறு நாடுகளுக்கு பைக் பயணம் மேற்கொள்வதை அஜித் வாடிக்கையாக கொண்டிருக்கிறார்.

    இவர் நடிப்பில் கடைசியாக வெளியான துணிவு படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதைத் தொடர்ந்து இவர் விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை மகிழ் திருமேனி இயக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு ஓராண்டுக்கும் மேலாக நடைபெற்று வருகிறது.

    சமீபத்தில் இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்ததாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து நடிகர் அஜித் சென்னை திரும்பி குடும்பத்துடன் நேரத்தை செலவிட்டார். சில தினங்களுக்கு முன்பு அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொண்ட நடிகர் அஜித் அதன் பிறகு தனது மகனின் பள்ளிக்கு சென்றார்.

    இந்த நிலையில், நடிகர் அஜித் அடுத்தக்கட்ட பைக் பயணத்தை துவங்கி இருப்பதை சூசகமாக தெரிவிக்கும் வகையில் புகைப்படம் ஒன்று வெளியாகி உள்ளது. அந்த புகைப்படத்தில் நடிகர் அஜித் பைக் பயணத்திற்கு ஏற்ற உடையில் காணப்படுகிறார். இதோடு அவர் பைக் பயணம் செல்லவிருப்பதை தெரிவிக்கும் வகையில், புகைப்படத்திற்கு தலைப்பிடப்பட்டு உள்ளது. இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்


    • 'விடாமுயற்சி' படத்தின் 'பர்ஸ்ட் லுக்' ரிலீஸ் குறித்த தகவல் சமூக வலைதளத்தில் பரவி வருகிறது
    • முன்அறிவிப்பு இல்லாமல் தற்போது 'விடாமுயற்சி' படக்குழுவும் அதே பாணியை கடைபிடிக்கும் என நம்பப்படுகிறது.

    பிரபல நடிகர் அஜித்குமார்- திரிஷா நடிக்கும் புதிய படம் 'விடாமுயற்சி' . இதனை இயக்குனர் மகிழ் திருமேனிஇயக்குகிறார்.அஜித்தின் 62 - வது பிரம்மாண்ட படமாக இது உருவாகுகிறது.

    இப்படத்தில் வில்லனாக ஆக்ஷன் கிங் அர்ஜுன் மற்றும் ஆரவ் நடிக்கின்றனர். மேலும் நடிகை ரெஜினா கசெண்ட்ராவ் நடிக்கின்றனர். இப்படத்தை 'லைகா' நிறுவனம் சார்பில் சுபாஸ்கரன் தயாரிக்கிறார். அனிருத் இசையமைக்கிறார்.

    இதன் படப்பிடிப்புகள் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அஜர்பைஜானில் தொடங்கியது. படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பையும் அங்கு நடத்தி முடிக்க திட்டமிடப்பட்டது. தொடர்ந்து 3 மாதம் அங்கு ஷூட்டிங் நடந்தது.

    இந்நிலையில் அஜர்பைஜானில் வானிலை மோசம் அடைந்ததால் அங்கு 'ஷூட்டிங்' நடத்த முடியாத சூழல் உருவானது. இதனால் படப்பிடிப்பை ரத்து செய்துவிட்டு படக்குழு கடந்த ஜனவரி மாதம் சென்னை திரும்பியது. அதன்பின்னர் ஒரு மாதத்திற்கு மேலாக ' விடாமுயற்சி' பட ஷூட்டிங் தொடங்கப்படவில்லை.

    இந்நிலையில் நடிகர் அஜித் கடந்த வாரம் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.இதனால் படப்பிடிப்பு தொடங்குவதில் மேலும் தாமதம் ஆகியது. மேலும் 'விடாமுயற்சி' படம் தொடர்பான 'அப்டேட்' எதுவும் வெளியிடப்படாமல் ரகசியமாக வைக்கப்பட்டது.

    இந்நிலையில் தற்போது 'விடாமுயற்சி' படத்தின் 'பர்ஸ்ட் லுக்' ரிலீஸ் குறித்த தகவல் சமூக வலைதளத்தில் பரவி வருகிறது. நாளை (14-ந் தேதி) ஆச்சர்யப்படதக்க வகையில் 'பர்ஸ்ட் லுக்' வெளியிடப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

    மேலும் அஜித் நடிப்பில் வெளியான 'வலிமை', 'துணிவு' உள்ளிட்ட படங்களின் அப்டேட்டுகள் எவ்வித முன்அறிவிப்பு இல்லாமல் வெளியிடப்பட்டதால், தற்போது 'விடாமுயற்சி' படக்குழுவும் அதே பாணியை கடைபிடிக்கும் என நம்பப்படுகிறது.

    • மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் 'விடாமுயற்சி' படத்தில் நடித்து வருகிறார்
    • அஜித் படப்பிடிப்புக்காக வெளிநாடுகளுக்கு செல்லும் முன்பு முழு உடல் பரிசோதனை செய்து கொள்வது வழக்கம்.

    மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் 'விடாமுயற்சி' படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு அஜர்பைஜானில் நடந்தது. படப்பிடிப்பு முடிவடைந்து அஜித் சென்னை திரும்பினார். இரண்டாம் கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது. அஜித் படப்பிடிப்புக்காக வெளிநாடுகளுக்கு செல்லும் முன்பு முழு உடல் பரிசோதனை செய்து கொள்வது வழக்கம். அந்த வகையில் பரிசோதனைக்காக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    இந்த நிலையில் அவரது முழு உடலையும் பரிசோதனை செய்தபோது அவரது காதுக்கு கீழ் பகுதியில் சிறிய வீக்கம் இருந்தது. அதனை கண்டறிந்த மருத்துவர்கள் நவீன சிகிச்சையின் மூலம் அந்த வீக்கத்தை அரை மணி நேரத்தில் சரிசெய்து அகற்றினார்கள். பின்னர் சிகிச்சை முடிந்து இன்று காலை நடிகர் அஜித்குமார் வீடு திரும்பினார்.

    இந்நிலையில், நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் நேற்றைய தினமே அஜித் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது தொலைபேசியில் அழைத்து நலம் விசாரித்துள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
    • காதுக்கு கீழ் பகுதியில் இருந்த கட்டி கண்டறியப்பட்டு அரை மணிநேரத்தில் நவீன சிகிச்கையின் மூலம் டாக்டர்கள் அகற்றினர்.

    நடிகர் அஜித்குமார் கடந்த 2 நாட்களுக்கு முன் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அப்போது அவருக்கு எடுக்கப்பட்ட பரிசோதனையில் அவரது காதுக்கு கீழ் பகுதியில் இருந்த கட்டி கண்டறியப்பட்டு அரை மணிநேரத்தில் நவீன சிகிச்கையின் மூலம் டாக்டர்கள் அகற்றினர்.

    இதையடுத்து மருத்துவர்களின் கண்காணிப்பில் இருந்த அஜித் பூரண நலம் பெற்று வீடு திரும்ப வேண்டும் என அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா ஆகியோர் தெரிவித்து இருந்தனர்.

    இந்நிலையில், நடிகர் அஜித் சிகிச்சை முடிந்து இன்று அதிகாலை வீடு திரும்பியுள்ளதாக அவரது மேலாளர் சுரேஷ் சந்திரா தெரிவித்துள்ளார்.

    மேலும், அடுத்த வாரம் வெளிநாட்டில் நடக்கும் 'விடாமுயற்சி' திரைப்படத்தின் படப்பிடிப்புக்கு நடிகர் அஜித் செல்ல உள்ளார் என்றும் கூறியுள்ளார்.

    • காதுக்கு கீழ் பகுதியில் இருந்த வீக்கம் கண்டறியப்பட்டு அரை மணிநேரத்தில் நவீன சிகிச்கையின் மூலம் டாக்டர்கள் அகற்றியுள்ளனர்.
    • நடிகர் அஜித் இன்று மாலை அல்லது நாளை வீடு திரும்புவார் என அவரது தரப்பில் இருந்து தகவல் வெளியானது.

    சென்னை :

    நடிகர் அஜித்குமார் முழு உடல் பரிசோதனை செய்து கொள்வது வழக்கம். அந்த வகையில் பரிசோதனைக்காக அப்பல்லோ மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்டார். அப்போது அவருக்கு எடுக்கப்பட்ட பரிசோதனையில் அவரது காதுக்கு கீழ் பகுதியில் இருந்த வீக்கம் கண்டறியப்பட்டு அரை மணிநேரத்தில் நவீன சிகிச்கையின் மூலம் டாக்டர்கள் அகற்றியுள்ளனர்.

    இதையடுத்து சாதாரண வார்டில் உள்ள நடிகர் அஜித் இன்று மாலை அல்லது நாளை வீடு திரும்புவார் என அவரது தரப்பில் இருந்து தகவல் வெளியானது.

    இந்நிலையில் நடிகர் அஜித்குமார் பூரண நலம் பெற வாழ்த்துகிறேன் என எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

    இதுதொடர்பாக எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தள பக்கத்தில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் சகோதரர் நடிகர் அஜித்குமார் விரைவில் பூரண நலம் பெற வாழ்த்துகிறேன் என தெரிவித்துள்ளார்.

    • அஜித் முழு உடலையும் பரிசோதனை செய்தபோது அவரது காதுக்கு கீழ் பகுதியில் சிறிய வீக்கம் இருந்தது.
    • சிகிச்சை முடிந்து சாதாரண வார்டுக்கு நேற்று மாற்றப்பட்டார்.

    மகிழ்திருமேனி இயக்கத்தில் அஜித் 'விடாமுயற்சி' படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு அஜர்பைஜானில் நடந்தது. படப்பிடிப்பு முடிவடைந்து அஜித் சென்னை திரும்பினார். இரண்டாம் கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது. அஜித் படப்பிடிப்புக்காக வெளிநாடுகளுக்கு செல்லும் முன்பு முழு உடல் பரிசோதனை செய்து கொள்வது வழக்கம். அந்த வகையில் பரிசோதனைக்காக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    இந்த நிலையில் அவரது முழு உடலையும் பரிசோதனை செய்தபோது அவரது காதுக்கு கீழ் பகுதியில் சிறிய வீக்கம் இருந்தது. அதனை கண்டறிந்த மருத்துவர்கள் நவீன சிகிச்சையின் மூலம் அந்த வீக்கத்தை அரை மணி நேரத்தில் சரிசெய்து அகற்றினார்கள்.

    சிகிச்சை முடிந்து சாதாரண வார்டுக்கு நேற்று மாற்றப்பட்டார். இதனையடுத்து நடிகர் அஜித் இன்று மாலை வீடு திரும்புவார் என்று அவரது தரப்பில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.

    • படத்தை லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது.
    • விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜானில் நடந்த முடிந்துள்ளது.

    'விடாமுயற்சி' படத்தில் கதாநாயகனாக அஜித் நடித்து வருகிறார். அவருடன் இணைந்து திரிஷா உள்ளிட்ட நடிகர்கள் நடித்து வருகின்றனர். இப்படத்தை மகிழ்திருமேனி இயக்கி வருகிறார். இப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது.

    இப்படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜானில் நடந்த முடிந்த நிலையில், அடுத்து ஜார்ஜியாவில் 2-வது கட்ட படப்பிடிப்பு என தகவல் வெளியானது.

    இந்நிலையில், நடிகர் அஜித் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    அவர் வழக்கமான உடல் பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், நாளை வீடு திரும்புவார் என்றும் அஜித் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

    • செல்ல மகன் ஆத்விக்கின் 9-வது பிறந்தாளை கொண்டாட சென்னை வந்திருந்தார் அஜித்.
    • அவருக்கு பிடித்த ஃபுட்பால் வடிவத்தில் பிறந்தநாள் கேக்கையும்.ஆத்விக் ஃபுட்பால் ஜெர்சியை அணிந்து இருப்பதை நாம் இந்த புகை படத்தில் காண முடியும்.

    தமிழ் சினிமாவில் செல்லமாக 'தல' என்று அழைக்கபடும் நடிகர் அஜித்குமார் தற்போது விடாமுயற்சி என்ற படம் நடித்து வருகிறார் அதன் முதல் கட்ட படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் அவர் தனது குடும்பத்துடன்  நேரங்களை செலவழிக்க எண்ணி அவரின் கடைகுட்டி சிங்கமான  செல்ல மகன் ஆத்விக்கின் 9-வது பிறந்தாளை கொண்டாட சென்னை வந்திருந்தார் அஜித். அவர்களின் மனைவி ஷாலினி மூத்த மகளான அனுஷ்காவுடன் மிகவும் மகிழ்ச்சியாக பிறந்தாநாளை கொண்டாடியுள்ளார்.

    ஆத்விக் ஃபுட்பால் விளையாட்டில் மிகவும் தீவிரமாக இருக்கும் நபர் என்பதால். அவருக்கு பிடித்த ஃபுட்பால் வடிவத்தில் பிறந்தநாள் கேக்கையும்.ஆத்விக் ஃபுட்பால் ஜெர்சியை அணிந்து இருப்பதை நாம் இந்த புகை படத்தில் காண முடியும்.

    அதன் புகை படத்தை ஷாலினி அவரின் இன்ஸ்டாகிராம்  பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் அஜித்குமார் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வர வேற்ப்ப்பை பெற்று இருக்கிறது. சமூக வலை தலங்களில் வைரலாக பரவி வருகிறது.

    • 24 வருடங்களுக்குப் பிறகு டிஜிட்டல் முறையில் மாற்றம் செய்யப்பட்டு 5.1 சிஸ்டத்தில் ‘வாலி’ படம் மீண்டும் திரைக்கு வந்துள்ளது.
    • புதுச்சேரி காமராஜர் சாலையில் உள்ள திரையரங்கில் ‘வாலி’ திரைப்படம் வெளியானது.

    புதுச்சேரி:

    நடிகர் அஜித் நடித்த 'வாலி' திரைப்படம் 1999-ம் ஆண்டு வெளிவந்தது.

    அஜித் இரட்டை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். படம் மிகப்பெரிய வெற்றியை தந்தது. எஸ்.ஜே.சூர்யாவுக்கும் அஜித்துக்கும் பெரிய திருப்புமுனையாக இந்த படம் அமைந்தது.

    இந்நிலையில் 24 வருடங்களுக்குப் பிறகு டிஜிட்டல் முறையில் மாற்றம் செய்யப்பட்டு 5.1 சிஸ்டத்தில் 'வாலி' படம் மீண்டும் திரைக்கு வந்துள்ளது.

    புதுச்சேரியில் 'வாலி' திரைப்படம் மீண்டும் வெளியாகி உள்ளது.

    புதுச்சேரி காமராஜர் சாலையில் உள்ள திரையரங்கில் 'வாலி' திரைப்படம் வெளியானது. அந்த திரையரங்கம் முன்பு நடிகர் அஜித் ரசிகர்கள் திரண்டர். அங்கு பட்டாசு வெடித்து அஜித் பேனருக்கு பால் அபிஷேகம் செய்தனர்.



    தொடர்ந்து விடாமுயற்சி படம் டைட்டில் வெளியாகி 300 நாள் ஆச்சு. படத்தோட அப்டேட் என்ன ஆச்சு என்ற பேனரை பிடித்தனர்.

    அதில் திரைப்பட தயாரிப்பு நிறுவனமான லைக்காவை காணவில்லை என்றும் கண்டுபிடித்து தந்தால் தக்க சன்மானம் வழங்கப்படும் என எழுதப்பட்டிருந்தது.

    ×