search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Virat Kohli"

    • இந்திய அணி வீரர்கள் அமெரிக்காவில் இருந்து வெஸ்ட் இண்டீஸ் பயணம் மேற்கொண்டனர்.
    • ஜூன் 20-ம் தேதி இந்திய அணி தனது முதல் சூப்பர் 8 போட்டியில் ஆஃப்கானிஸ்தான் அணியுடன் மோதவுள்ளது.

    பர்படாஸ்:

    டி20 உலகக்கோப்பை தொடரின் சூப்பர் 8 சுற்று நாளை மறுநாள் வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் தொடங்கவுள்ளது. இதற்காக இந்திய அணி வீரர்கள் அமெரிக்காவில் இருந்து வெஸ்ட் இண்டீஸ் பயணம் மேற்கொண்டனர்.

    இதன்பின் ஓய்வெடுத்த இந்திய அணி வீரர்கள், இன்று பார்படாஸ் பீச்சில் உற்சாகமாக விளையாடியுள்ளனர். இந்திய அணியின் விராட் கோலி, ரிங்கு சிங், அர்ஷ்தீப் சிங், சிவம் துபே, ஹர்திக் பாண்டியா, சாஹல், யஷஸ்வி ஜெய்ஸ்வால், கலீல் அஹ்மத், சஞ்சு சாம்சன் உள்ளிட்டோர் விளையாடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    இதில் ஒரு பக்கம் ரிங்கு சிங் 6 பேக் உடலுடனும் இன்னொரு பக்கம் 8 பேக் உடற்கட்டுடன் விராட் கோலி உற்சாகத்துடன் பீச் வாலிபால் விளையாடி இருக்கிறார். இருவரின் புகைப்படங்களையும் பதிவிட்டு இந்திய வீரர்களின் ஃபிட்னஸை ரசிகர்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.

    ஜூன் 20-ம் தேதி இந்திய அணி தனது முதல் சூப்பர் 8 போட்டியில் ஆஃப்கானிஸ்தான் அணியுடன் மோதவுள்ளது.

    • கோலியின் ஆட்டத்திறன் குறித்து கவலைப்படுவதற்கு எதுவும் இல்லை.
    • அவர் ஐ.பி.எல். தொடரில் இருந்தே நன்றாக விளையாடி வருகிறார்.

    லாடெர்ஹில்:

    உலகக் கோப்பை கிரிக்கெட்டில் கனடாவுக்கு எதிரான கடைசி லீக் ஆட்டம் மழையால் ரத்தான பிறகு இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறுகையில், '

    இந்த உலகக் கோப்பை போட்டியில் விராட் கோலியின் (3 ஆட்டத்தில் 5 ரன்) பார்ம் குறித்து கேள்வி எழுப்புகிறீர்கள். அவர் நன்றாக ஆடினாலும், இல்லாவிட்டாலும் நான் உங்களை சந்திக்க வரும் போதெல்லாம் அவரை பற்றி நீங்கள் கேட்க தவறுவதில்லை. அது எனக்கு பிடித்திருக்கிறது.

    கோலியின் ஆட்டத்திறன் குறித்து கவலைப்படுவதற்கு எதுவும் இல்லை. அவர் ஐ.பி.எல். தொடரில் இருந்தே நன்றாக விளையாடி வருகிறார். ஓரிரு முறை ஆட்டமிழந்தது, எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தப்போவதில்லை. உண்மையில் இது அவரை இன்னும் கூடுதல் வேட்கையுடன் விளையாட தூண்டும். அவர் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தும் ஆவலில் உள்ளார்.

    இவ்வாறு ரத்தோர் கூறினார்.

    சூப்பர்8 சுற்றில் இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானுடன் வருகிற 20-ந்தேதி மோத உள்ளது.

    • விராட் கோலி பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவைத் திருமணம் செய்து கொண்டார்.
    • இந்த தம்பதிக்கு வமிகா என்ற பெண் குழந்தை உள்ளது.

    சர்வதேச கிரிக்கெட்டில் முன்னணி வீரர் விராட் கோலி. இந்திய அணிக்காக விளையாடி வரும் விராட் கோலி பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவைத் திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு வமிகா என்ற பெண் குழந்தை உள்ளது.

    இந்நிலையில், கடந்த பிப்ரவரி 15-ம் தேதி விராட் கோலி - அனுஷ்கா சர்மா தம்பதிக்கு இரண்டாவதாக அழகிய ஆண் குழந்தை பிறந்துள்ளது. தங்களது ஆண் குழந்தைக்கு அகாய் என பெயரிட்டுள்ளனர்.

    இன்று சர்வதேச தந்தையர் தினம் கொண்டாடப்படுகிறது. அதனையொட்டி, தனது மகள் வமிகா செய்த தந்தையர் தின வாழ்த்து அட்டையை அனுஷ்கா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் வமிகாவின் கால்தடம் வண்ணங்களால் பதிக்கப்பட்டுள்ளது.

    அதில், "ஒருவரால் எப்படி இதனை விஷயங்களில் இவ்வளவு திறமையாக இருக்க முடியும்" என்று கோலியை அனுஷ்கா புகழ்ந்துள்ளார்.

    • 3 போட்டிகளில் குறைந்த ரன்கள் எடுத்தார் என்பதற்காக அவர் சுமாராக பேட்டிங் செய்கிறார் என்று அர்த்தமல்ல.
    • நாம் அவர் மீது நம்பிக்கை வைக்க வேண்டும். விரைவில் அவர் மீண்டு வருவார் என்று நம்புவோம்.

    இந்திய கிரிக்கெட் அணி 2024 டி20 உலகக் கோப்பையில் தங்களுடைய முதல் 3 போட்டிகளிலும் வெற்றி கண்டுள்ளது. அதனால் குரூப் ஏ பிரிவிலிருந்து சூப்பர் 8 சுற்றுக்கு இந்தியா முதல் அணியாக தகுதி பெற்றுள்ளது.

    இருப்பினும் இந்த தொடரில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட விராட் கோலி இதுவரை 10 ரன்கள் கூட தாண்டாதது ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றமாக அமைந்தது. அவர் 1, 4, 0 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்துள்ளார்.

    இதனால் ரசிகர்கள் உள்பட பல முன்னாள் வீரர்கள் விராட் கோலீயை 3-வது இடத்தில் களமிறங்க வைக்க வேண்டும் என கோரிக்கை வைத்து வருகின்றனர்.

    இந்நிலையில் விராட் கோலி தடுமாறுவதற்காக யாரும் கவலைப்பட வேண்டியதில்லை என்றும் அவர் மீண்டு வருவார் எனவும் இந்திய அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    நாட்டுக்காக விளையாடும் எந்த வீரருக்கும் வெற்றி பெற வேண்டும் என்பதே மிகப்பெரிய உத்வேகமாக இருக்கும். அதை நீண்ட காலமாக செய்து வரும் விராட் கோலி பல போட்டிகளை வென்று கொடுத்துள்ளார். இந்தத் தொடரில் நாம் ஆரம்பத்தில் மட்டுமே இருக்கிறோம். இன்னும் சூப்பர் 8, அரையிறுதி, இறுதி போட்டி வரவுள்ளன. எனவே விராட் கோலி தற்போதைக்கு அமைதியாக இருந்து தன் மீது நம்பிக்கை வைக்க வேண்டும்.

    3 போட்டிகளில் குறைந்த ரன்கள் எடுத்தார் என்பதற்காக அவர் சுமாராக பேட்டிங் செய்கிறார் என்று அர்த்தமல்ல. சில நேரங்களில் நீங்கள் நல்ல பந்துகளை சந்திப்பீர்கள். எனவே எதைப் பற்றியும் கவலைப்பட வேண்டியதில்லை. நாம் அவர் மீது நம்பிக்கை வைக்க வேண்டும். விரைவில் அவர் மீண்டு வருவார் என்று நம்புவோம்.

    இவ்வாறு சுனில் கவாஸ்கர் கூறினார்.

    • விராட் முதல் போட்டியில் 1 ரன்னிலும் 2-வது மற்றும் 3-வது போட்டிகள் முறையே 4 மற்றும் 0 ரன்னில் ஆட்டமிழந்துள்ளார்.
    • ரசிகர்கள் உள்பட பல முன்னாள் வீரர்களும் அவரை 3-வது இடத்தில் விளையாடுமாறு வலியுறுத்தி வருகின்றனர்.

    டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்று வருகிறது. இதுவரை நடைபெற்ற லீக் போட்டிகள் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் ஒரு அணி சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. இந்தியா, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, வெஸ்டீஸ் அணிகள் அடுத்து சுற்றுக்கு முன்னேறி அசத்தி உள்ளது.

    இந்திய அணி சூப்பர் சுற்றுக்கு முன்னேறினாலும் தொடக்க வீரரான விராட் கோலியின் ஆட்டம் சற்று தடுமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. ஐபிஎல் தொடரில் மற்றும் தொடக்க வீரராக களமிறங்கிய வரும் அவர் இந்திய அணிக்காக முதல் முறையாக தொடக்க ஆட்டக்காரராக விளையாடி வருகிறார்.

    முதல் போட்டியில் 1 ரன்னிலும் 2-வது மற்றும் 3-வது போட்டிகள் முறையே 4 மற்றும் 0 ரன்னில் ஆட்டமிழந்துள்ளார். இதனால் ரசிகர்கள் உள்பட பல முன்னாள் வீரர்களும் அவரை 3-வது இடத்தில் விளையாடுமாறு வலியுறுத்தி வருகின்றனர்.

    இந்நிலையில் கோலி தொடக்க வீரராக விளையாடுவதை விட 3-வது விளையாட வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் வீரர் கைப் கூறியுள்ளார். 

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    ஐபிஎல் போல ஃபிளாட்டான பிட்ச்கள் இல்லையெனில் அங்கே நீங்கள் பேட்டிங் செய்வது மிகவும் கடினம். ஐபிஎல் தொடரில் அங்கே விராட் கோலி ஆக்ரோஷமாக விளையாடினார். ஆனால் இங்கே அவர் ஆக்ரோஷமாக விளையாடாமல் தன்னுடைய விக்கெட்டை பாதுகாத்து விளையாட வேண்டும். எனவே விராட் கோலி மூன்றாவது இடத்தில் தனது இயல்பான ஆட்டத்தை ஆட வேண்டும். கடந்த உலகக் கோப்பைகளில் அவருடைய புள்ளிவிவரங்கள் அற்புதமாக இருக்கிறது.

    மேலும் 5-வது இடத்திலிருந்து ரிஷப் பண்ட் 3-வது இடத்தில் விளையாட முடியுமானால் அவரால் ஓப்பனிங்கிலும் களமிறங்க முடியும்.

    இவ்வாறு பண்ட் கூறினார்.

    • கடந்த 2023-ம் ஆண்டு ஆசிய கோப்பையின் போதும் இந்தியா- பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான ஆட்டத்தை பார்க்க ரசிகை வந்திருந்தார்.
    • கேமரா கவனத்திற்காக இவ்வாறு நடப்பதாக ஒரு பயனரும், கோலி ஒரு உலகளாவிய ஐகான் என சில பயனர்களும் பதிவிட்டு வருகின்றனர்.

    உலக கோப்பை டி-20 கிரிக்கெட் போட்டிகள் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. இதில் உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதிய ஆட்டம் நேற்று முன்தினம் நியூயார்க் மைதானத்தில் நடைபெற்றது. பரபரப்பான இந்த ஆட்டத்தில் 6 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி திரில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியை மைதானத்தில் இருந்த இந்திய ரசிகர்கள் பெரிதும் கொண்டாடினர்.

    இந்நிலையில் இந்த போட்டியின் போது பாகிஸ்தான் ரசிகை ஒருவர், இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலியின் படம் மற்றும் அவரது ஜெர்சி எண் 18 ஆகியவற்றை குறிப்பிடும் வகையில் அணிந்திருந்த செயின் (லாக்கெட்) இணையத்தில் வைரலானது. அவரது படத்துடன் வைரலான வீடியோவில், நியூயார்க் மைதானத்தில் விராட் கோலியின் படத்துடன் கூடிய லாக்கெட்டை கழுத்தில் அணிந்திருந்த பாகிஸ்தான் ரசிகை என பதிவிடப்பட்டிருந்தது.

    இந்த ரசிகை ஏற்கனவே கடந்த 2023-ம் ஆண்டு ஆசிய கோப்பையின் போதும் இந்தியா- பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான ஆட்டத்தை பார்க்க வந்திருந்தார். அப்போது அவர் அளித்த பேட்டியில், பாகிஸ்தான் மற்றும் இந்தியா ஆகிய 2 அணிகளையும் நான் ஆதரிக்கிறேன் என அவர் பேட்டி அளித்தது சமூக வலைதளங்களில் வைரலாகி இருந்தது.

    இந்நிலையில் தற்போது அவர் கோலி படத்துடன் கூடிய லாக்கெட்டை அணிந்த வீடியோ வைரலான நிலையில் பயனர்கள் பலரும் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். கேமரா கவனத்திற்காக இவ்வாறு நடப்பதாக ஒரு பயனரும், கோலி ஒரு உலகளாவிய ஐகான் என சில பயனர்களும் பதிவிட்டு வருகின்றனர்.


    • பாகிஸ்தானுக்கு எதிராக விராட் கோலியின் சாதனையை ரிஷப் பண்ட் முறியடித்துள்ளார்.
    • 2014-ம் ஆண்டு டி20 உலகக் கோப்பை தொடரில் 36 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    9-வது டி20 உலகக் கோப்பை தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நேற்றைய ஆட்டத்தில் பாகிஸ்தானை 6 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வென்றது.

    கடந்த 2007-ம் ஆண்டு முதல் டி20 உலகக் கோப்பை தொடர் நடத்தப்பட்டு வருகிறது. இதில் முதல் சீசனில் டோனி தலைமையிலான இந்திய அணியானது டிராபியை கைப்பற்றியது. இந்த தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் ராபின் உத்தப்பா அதிக ரன்கள் குவித்தார். அவர் 39 பந்துகளில் 4 பவுண்டரி, 2 சிக்ஸர் உள்பட 50 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

    இந்தப் போட்டி டிராவில் முடிந்த நிலையில் பவுல் அவுட் முறையில் இந்தியா வெற்றி பெற்றது. இறுதிப் போட்டியில் கௌதம் காம்பீர் 54 பந்துகளில் 8 பவுண்டரி, 2 சிக்ஸர் உள்பட 75 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 2012-ம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக் கோப்பை தொடரில் விராட் கோலி 61 பந்துகளில் 8 பவுண்டரி, 2 சிக்ஸர் உள்பட 78 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    இதே போன்று 2014-ம் ஆண்டு டி20 உலகக் கோப்பை தொடரில் 36 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். 2016-ம் ஆண்டு உலகக் கோப்பை தொடரில் 55 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். 2021 ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பை தொடரில் 57 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். கடந்த 2022 -ம் ஆண்டு டி20 உலகக் கோப்பை தொடரில் விராட் கோலி 53 பந்துகளில் 6 பவுண்டரி, 4 சிக்ஸர் உள்பட 82 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    இந்த நிலையில் தான் 2024-ம் ஆண்டு டி20 உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் விராட் கோலி 4 ரன்களில் ஆட்டமிழக்கவே, ரிஷப் பண்ட் அதிகபட்சமாக 31 பந்துகளில் 6 பவுண்டரி உள்பட 42 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இதன் மூலமாக பாகிஸ்தானுக்கு எதிராக தொடர்ந்து 5 ஆண்டுகளாக விராட் கோலி படைத்து வந்த சாதனையை ரிஷப் பண்ட் முறியடித்துள்ளார்.

    • டி20 உலகக் கோப்பை தொடரில் நேற்றிரவு நடைபெற்ற போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின.
    • 120 ரன்களை இலக்காக துரத்திய பாகிஸ்தான் அணி கடைசி ஓவர் வரை போராடி தோல்வியை தழுவியது.

    டி20 உலகக் கோப்பை தொடரில் நேற்றிரவு நடைபெற்ற போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 119 ரன்களில் ஆல் அவுட் ஆனது.

    இதைத் தொடர்ந்து 120 ரன்களை இலக்காக துரத்திய பாகிஸ்தான் அணி கடைசி ஓவர் வரை போராடி தோல்வியை தழுவியது. இந்திய அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    பாகிஸ்தான் அணி போட்டியில் தோற்றது குறித்து முன்னாள் கிரிக்கெட் வீரரான ஷோயப் அக்தர் தனது அதிருப்தியை வெளிப்படுத்தி வீடியோ ஒன்றை எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

    அதில் "இந்த போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றிருக்க வேண்டும். இந்தியா 11 ஓவர்கள் முடிவில் 82 ரன்களில்தான் இருந்தார்கள். 160 ரன்கள் அடிக்க நினைத்த இந்திய அணியால் அதை செய்ய இயலவில்லை. ஆனால் பாகிஸ்தானிற்கு அப்படி கிடையாது அவர்கள் எளிதில் வெற்றி பெற்றிருக்கலாம், ரிஸ்வான் இன்னும் கூடுதலாக 20 ரன்கள் எடுத்து இருந்தால் போதுமானதாக இருந்திருக்கும்."

    "இந்த போட்டியில் வெற்றி எளிமையாகவே இருந்தது, கொஞ்சம் மூளையை உபயோகப்படுத்தி இருந்தால் ஜெயித்திருக்கலாம், 47 பந்துகளில் 46 ரன்கள் தேவை. ஃபகர் இன்னும் ஆட்டமிழக்காமல் இருக்கிறான் அப்படி இருந்தும் நம்மால் ஜெயிக்க முடியவில்லை. இது மிகவும் வருத்தமாக இருக்கிறது" என்று அவரது வேதனையையும் அதிருப்தியையும் வெளிப்படுத்தி உள்ளார்.

    இந்த வீடியோவுக்கு அவர், "ஏமாற்றப்பட்டேன், காயமுற்றேன்" போன்ற வார்த்தைகளை நான் பதிவிட தயாராக வைத்திருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்," என தலைப்பிட்டுள்ளார். இந்த வீடியோவை பலர் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

    • பாகிஸ்தான் அணி குடும்பங்கள் மற்றும் உறவினர்கள் அடிப்படையாக வைத்து உருவாக்கப்படுகிறது.
    • யாரும் நாட்டைப் பற்றி நினைப்பதில்லை. சில வீரர்களின் கேரியரில் நீங்கள் விளையாடினால் இதுவே நடக்கும்.

    டி20 உலகக் கோப்பை 2024 கிரிக்கெட் தொடரில் இன்று இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதுகிறது. இதில் முதலில் இந்திய அணி பேட்டிங் செய்து வருகிறது.

    இந்த தொடரில் பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் தங்களுடைய முதல் போட்டியிலேயே அமெரிக்காவிடம் தோற்றது.

    இந்நிலையில் கேப்டனாகவும் பேட்ஸ்மேனாகவும் சுமாராக செயல்படும் பாபர் அசாம் இந்திய வீரர் விராட் கோலியின் காலணிகளுக்கு கூட நெருங்க முடியாது என்று முன்னாள் பாகிஸ்தான் வீரர் டேனிஷ் கனேரியா கடுமையாக விமர்சித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-


    பாபர் அசாம் சதமடித்ததும் அடுத்த நாள் அவரை விராட் கோலியுடன் ஒப்பிடுவதை உங்களால் பார்க்க முடியும். ஆனால் அவரால் விராட் கோலியின் காலணிகளை கூட நெருங்க முடியாது. அமெரிக்க பவுலர்கள் அவரை சிக்க வைத்தனர். அவர்களுக்கு எதிராக பாபர் அசாம் விளையாட முடியாமல் திணறினார். 40+ ரன்களில் அவுட்டான அவர் கடைசி வரை நின்று வெற்றியை பெற்றுக் கொடுத்திருக்க வேண்டும். அது பாகிஸ்தான் ஒரு தலைப்பட்சமாக வெல்ல வேண்டிய போட்டியாகும். இந்தியாவை தோற்கடிக்கும் திறமை அவர்களிடம் இல்லை.

    உலகக் கோப்பை வரும் போதெல்லாம் அவர்கள் தங்களுடைய பவுலிங் பற்றி பாராட்டுகின்றனர். ஆனால் அது தான் முதல் போட்டியில் அவர்களுடைய தோல்விக்கு காரணமாகும். அவர்களுடைய ஈகோ எப்போதும் முடிவடைவதில்லை. பாகிஸ்தான் அணி குடும்பங்கள் மற்றும் உறவினர்கள் அடிப்படையாக வைத்து உருவாக்கப்படுகிறது. யாரும் நாட்டைப் பற்றி நினைப்பதில்லை. சில வீரர்களின் கேரியரில் நீங்கள் விளையாடினால் இதுவே நடக்கும்.

    இவ்வாறு கனேரியா கூறினார்.

    • அதிகம் எதிர்பார்க்கப்படும் போட்டியாக உள்ளது.
    • பயிற்சி ஆட்டத்தில் விராட் கோலி விளையாடவில்லை.

    டி20 உலகக் கோப்பை தொடரில் இன்றிரவு நடைபெற இருக்கும் போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதவுள்ளன. உலகக் கோப்பை தொடரின் அதிகம் எதிர்பார்க்கப்படும் போட்டிகளில் ஒன்றாக இந்தியா-பாகிஸ்தான் அணிகளின் மோதல் இருக்கிறது.

    அந்த வகையில், இன்றைய போட்டிக்கு முன் நடைபெற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பில் இந்திய கேப்டன் ரோகித் சர்மா ஒரு அணியாக அனைவரும் சிறப்பாக பங்காற்ற வேண்டும் என்று தான் நினைப்பதாக தெரிவித்தார்.

    இது குறித்து பேசிய அவர், "போட்டியில் வெற்றி பெற ஒன்றிரண்டு வீரர்களை மட்டும் சார்ந்திருக்க வேண்டாம் என்று நினைக்கிறேன். ஒரு அணியாக நான் உள்பட 11 பேரும் பங்காற்ற வேண்டும். அணியில் முக்கிய வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். அவர்கள் போட்டியில் முக்கிய பங்காற்ற போகின்றார்கள். ஆனாலும், அனைவரும் அவர்களால் முடிந்த பங்களிப்பை வழங்க வேண்டும்."

    "வங்காளதேசம் அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் விராட் கோலி விளையாடவில்லை. ஆனால் இந்த போட்டிக்கு முன்பு அவர் போதுமான பயிற்சியை எடுத்துக் கொண்டுள்ளார். உலகின் பல்வேறு பகுதிகளிலும், மிக முக்கிய தொடர்களில் விளையாடிய அனுபவம் கொண்டவர் விராட். அந்த அனுபவத்தை எதுவும் வீழ்த்த முடியாது," என்று தெரிவித்தார். 

    • டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறும்.
    • நியூயார்க்கில் உள்ள நாசாவ் கவுண்டி மைதானத்தில் இன்று அரங்கேறுகிறது.

    9-வது 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 20 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டு தங்களுக்குள் தலா ஒரு முறை மோதுகின்றன. லீக் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறும்.

    இந்த கிரிக்கெட் திருவிழாவில் ரசிகர்கள் ஆவலோடு எதிர்நோக்கும் பரம எதிரிகளான இந்தியா- பாகிஸ்தான் இடையிலான லீக் ஆட்டம் (ஏ பிரிவு) நியூயார்க்கில் உள்ள நாசாவ் கவுண்டி மைதானத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) அரங்கேறுகிறது.

    34 ஆயிரம் இருக்கை வசதி கொண்ட இந்த ஸ்டேடியத்திற்கு இந்திய ரசிகர்களின் வருகையே அதிகமாக இருக்கும் என்பதால், அவர்களின் உற்சாகம் நமது வீரர்களுக்கு கூடுதல் உத்வேகத்தை கொடுக்கும்.

    இந்திய அணி

    ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி தனது தொடக்க ஆட்டத்தில் அயர்லாந்தை 8 விக்கெட் வித்தியாசத்தில் பந்தாடியது. அயர்லாந்தை 96 ரன்னில் மடக்கிய இந்தியா 12.2 ஓவர்களிலேயே இலக்கை எட்டிப்பிடித்தது.

    கேப்டன் ரோகித் சர்மாவின் அரைசதமும், துணை கேப்டன் ஹர்திக் பாண்ட்யா (3 விக்கெட்), அர்ஷ்தீப்சிங் (2 விக்கெட்), ஜஸ்பிரித் பும்ரா (2 விக்கெட்) ஆகியோரது விக்கெட் ஜாலமும் வெற்றியை சுலபமாக்கின.

    ஆனால் பாகிஸ்தானுக்கு எதிரான சவால் வேறு மாதிரியானது. அந்த அணியில் ஷகீன் ஷா அப்ரிடி, முகமது அமிர், நசீம் ஷா, ஹாரிஸ் ரவுப் என்று அபாயகரமான வேகப்பந்து வீச்சாளர்கள் இருக்கிறார்கள்.

    நியூயார்க் ஆடுகளத்தில் பந்து தாறுமாறாக பவுன்ஸ் ஆவதால், இவர்களை திறம்பட சமாளிப்பதை பொறுத்தே வெற்றி வாய்ப்பு கிட்டும். அதை மனதில் வைத்து விராட் கோலி, கேப்டன் ரோகித் சர்மா சிறப்பு பயிற்சியில் ஈடுபட்டனர்.

    பயிற்சியின் போது கேப்டன் ரோகித் சர்மாவுக்கு பந்து தாக்கி பெருவிரலில் காயம் ஏற்பட்டது. ஆனால் களம் இறங்குவதில் சிக்கல் இருக்காது என்று தெரிகிறது. சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட், ஷிவம் துபே ஆகியோரும் பேட்டிங்கில் கவனமுடன் செயல்பட வேண்டியது அவசியமாகும். பந்து வீச்சில் பும்ரா, அர்ஷ்தீப்சிங், சிராஜ், பாண்ட்யா கூட்டணி மிரட்ட காத்திருக்கிறது.

    பாகிஸ்தான் அணி

    பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி தனது முதல் ஆட்டத்தில் அமெரிக்காவிடம் சூப்பர் ஓவரில் மண்ணை கவ்வியது. இதனால் பாகிஸ்தானுக்கு நெருக்கடி அதிகம். ஏனெனில் இந்தியாவிடமும் தோற்றால் ஏறக்குறைய அவர்களின் சூப்பர்8 கனவு கலைந்து விடும்.

    எனவே களத்தில் முழுமூச்சுடன் போராடுவார்கள். பாபர் அசாம், முகமது ரிஸ்வான், இப்திகர் அகமது, பஹர் ஜமான் ஆகியோரைத் தான் அந்த அணி பேட்டிங்கில் நம்பி இருக்கிறது. இவர்கள் நிலைத்து நின்று ஆடினால் வலுவான ஸ்கோரை எட்ட முடியும்.

    இந்த தொடரை பொறுத்தவரை ஆடுகளம் தான் இப்போது ஹீரோ. வழக்கத்துக்கு மாறாக பந்து வீச்சுக்கு நிறையவே ஒத்துழைக்கிறது. இந்த ஆடுகளத்தில் நிறைய வெடிப்புகள் காணப்படுவதால் சீரற்ற பவுன்ஸ்களை எதிர்கொள்ள முடியாமல் பேட்ஸ்மேன்கள் திணறுகிறார்கள்.

    ஆடுகளம் சரியில்லை என்று ஐ.சி.சி. வரை புகார் சென்று விட்டது. 150-160 ரன் எடுத்தாலே அது பெரும்பாலும் வெற்றிக்குரிய ஸ்கோராக பார்க்கப்படுகிறது. அதனால் நெருக்கடியை சாதுர்யமாக கையாண்டு, சூழலுக்கு ஏற்ப தங்களை கனகச்சிதமாக மாற்றிக் கொண்டு எந்த அணி ஆடுகிறதோ அந்த அணியின் கையே ஓங்கும் என்பதில் சந்தேகமில்லை.

    இந்தியா- பாகிஸ்தான் ஆட்டத்துக்கு பயங்கரவாத தாக்குதல் அச்சுறுத்தல் இருப்பதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகின. இதனால் போட்டிக்கு மைதானத்தை சுற்றிலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

    இந்தியா: ரோகித் சர்மா (கேப்டன்), விராட் கோலி, ரிஷப் பண்ட், சூர்யகுமார் யாதவ், ஷிவம் துபே அல்லது ஜெய்ஸ்வால், ஹர்திக் பாண்ட்யா, ரவீந்திர ஜடேஜா, அக்ஷர் பட்டேல் அல்லது குல்தீப் யாதவ், பும்ரா, அர்ஷ்தீப்சிங், முகமது சிராஜ்.

    பாகிஸ்தான்: முகமது ரிஸ்வான், பாபர் அசாம் (கேப்டன்), உஸ்மான் கான், பஹர் ஜமான், ஷதப் கான், அசம் கான் அல்லது சைம் அயுப், இப்திகர் அகமது, ஷகீன் ஷா அப்ரிடி, ஹாரிஸ் ரவுப், நசீம் ஷா, முகமது அமிர் அல்லது அப்பாஸ் அப்ரிடி.

    இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.

    • டி20 உலகக் கோப்பையில் இந்தியா , பாகிஸ்தான் அணிகள் நாளை மோதுகின்றன.
    • இம்முறை இந்தியாவை வீழ்த்துவதற்கு பாகிஸ்தானுக்கு வாய்ப்புள்ளது என்கிறார் கம்ரான் அக்மல்.

    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தான் முன்னாள் விக்கெட் கீப்பரான கம்ரான் அக்மல் தனியார் யூ டியூப் சேனலுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் பேசியதாவது:

    இந்தியாவின் பேட்டிங் வரிசை சரியாக இருப்பதாக எனக்கு தெரியவில்லை. விராட் கோலி 3-வது இடத்தில் களமிறங்கினால் அழுத்தத்தை உள்வாங்கி வெற்றிகரமாக முடித்துக் கொடுப்பார். அதுவே இந்திய அணிக்கு மிகவும் முக்கியமானது.

    யஷஸ்வி ஜெய்ஸ்வால் தொடக்க வீரராக களமிறங்கி, விராட் கோலி 3-வது இடத்தில் வரவேண்டும். விராட் கோலியை இந்தியா தொடக்கமாக களமிறக்கினால் அவர்கள் ஏதோ ஒரு இடத்தில் சிக்கக்கூடும். பொதுவாக விராட் கோலி ஒருபக்கம் நங்கூரமாக நின்று போட்டியை வெற்றிகரமாக முடிக்கக்கூடியவர்.

    எனவே, விராட் கோலியை தொடக்கத்தில் களமிறக்கி இந்தியா மிகப்பெரிய தவறு செய்துள்ளது என நினைக்கிறேன். இந்தியா தன்னம்பிக்கையுடன் இருப்பார்கள். பும்ரா, சிராஜ் ஆகியோர் நன்றாக பந்து வீசுகின்றனர். ஹர்திக் பாண்ட்யா விக்கெட்டுகளை எடுத்தார். ஒரே மைதானத்தில் அவர்களுக்கு 3 போட்டிகள் நடைபெறுவது கண்டிப்பாக சாதகமாக இருக்கும். இதுபோன்ற போட்டிகளுக்கு ஐ.சி.சி. தரமான மைதானத்தை அமைக்கவேண்டும். இல்லை என்றால் ரசிகர்கள் சென்றுவிடுவார்கள் என தெரிவித்தார்.

    ×