search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "villupuram"

    திண்டிவனத்தை சேர்ந்த சாராய வியாபாரியை தடுப்புக்காவல் சட்டத்தின் கீழ் மயிலம் போலீசார் கைது செய்தனர்.
    விழுப்புரம்:

    திண்டிவனம் கிடங்கல்-2 பகுதியை சேர்ந்தவர் பிரேம்நாத் (வயது 35). சாராய வியாபாரியான இவர் மீது சாராயம் விற்பனை செய்தல், கடத்துதல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன.

    கடந்த மாதம் மயிலம் பகுதியில் சாராய விற்பனையில் ஈடுபட்டதாக பிரேம்நாத்தை மயிலம் போலீசார் கைது செய்தனர். இவர் சாராய விற்பனையில் தொடர்ந்து ஈடுபட்டு வந்ததால் பிரேம்நாத்தை தடுப்புக்காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட கலெக்டருக்கு போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் பரிந்துரை செய்தார்.

    இதையடுத்து பிரேம்நாத்தை தடுப்புக்காவல் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்கும்படி போலீஸ் சூப்பிரண்டுக்கு கலெக்டர் சுப்பிரமணியன் உத்தரவிட்டார். அதன்பேரில் சாராய வியாபாரி பிரேம்நாத்தை மயிலம் போலீசார் நேற்று தடுப்புக்காவல் சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.  #Tamilnews
    சென்னையில் இருந்து திண்டுக்கல் நோக்கி சென்ற தனியார் பேருந்து விழுப்புரம் அருகே சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் 20 பேர் காயமடைந்தனர். #VillupuramBusAccident

    விழுப்புரம்:

    சென்னையில் இருந்து திண்டுக்கல் நோக்கி தனியார் பேருந்து ஒன்று இன்று சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்து விழுப்புரம் புறவழிச்சாலையில் சென்று கொண்டிருந்தபோது சாலையோரம் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்து பேருந்து விபத்துக்குள்ளானது. 

    இதில் அந்த பேருந்தில் பயணம் செய்த 20 பேர் காயமடைந்தனர். காயமடைந்த அனைவரும் ஒண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். #VillupuramBusAccident
    உளுந்தூர்பேட்டை செங்குறிச்சியில் உள்ள சுங்கச்சாவடியை சேதப்படுத்திய வழக்கில் கைதான வேல்முருகன் தாக்கல் செய்த ஜாமீன் மனு மீதான விசாரணை வருகிற 4-ந்தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது. #VelMurugan
    விழுப்புரம்:

    காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்தும், சுங்கச்சாவடிகளை நிரந்தரமாக அகற்றக்கோரியும் விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை செங்குறிச்சியில் உள்ள சுங்கச்சாவடியை கடந்த ஏப்ரல் மாதம் 1-ந்தேதி தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் தலைமையில் கட்சியினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

    இந்த போராட்டத்தின்போது சுங்கச்சாவடியை அடித்து நொறுக்கி சேதப்படுத்தினர். இதுதொடர்பாக வேல்முருகன் உள்பட 13 பேர் மீது 7 பிரிவுகளின் கீழ் உளுந்தூர்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் கடந்த 26-ந் தேதி வேல்முருகனை போலீசார் கைது செய்து திருக்கோவிலூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சென்னை புழல் சிறையில் அடைத்தனர்.

    இந்நிலையில் இந்த வழக்கில் ஜாமீன் கேட்டு தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் தனது வக்கீல் காந்திகுமார் மூலம் விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் கடந்த 28-ந் தேதி மனுதாக்கல் செய்தார்.

    இந்த மனு நீதிபதி (பொறுப்பு) திருமகள் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. இதையடுத்து இந்த ஜாமீன்மனு விசாரணையை வருகிற ஜூன் 4-ந் தேதிக்கு தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டார். #VelMurugan
    செங்குறிச்சியில் உள்ள சுங்கச்சாவடியை சேதப்படுத்தியதாக தொடரப்பட்ட வழக்கில் கைதாகி சிறையில் உள்ள வேல்முருகன் விழுப்புரம் நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்தார்.
    விழுப்புரம்:

    காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்தும், சுங்கச்சாவடிகளை நிரந்தரமாக அகற்றக்கோரியும் விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை செங்குறிச்சியில் உள்ள சுங்கச்சாவடியை கடந்த ஏப்ரல் மாதம் 1-ந்தேதி தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் தலைமையில் கட்சியினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

    இந்த போராட்டத்தின்போது சுங்கச்சாவடியை அடித்து நொறுக்கி சேதப்படுத்தினர். இதுதொடர்பாக வேல்முருகன் உள்பட 13 பேர் மீது 7 பிரிவுகளின் கீழ் உளுந்தூர்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் கடந்த 26-ந் தேதி வேல்முருகனை போலீசார் கைது செய்து திருக்கோவிலூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சென்னை புழல் சிறையில் அடைத்தனர்.

    இந்நிலையில் இந்த வழக்கில் ஜாமீன் கேட்டு தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் தனது வக்கீல் காந்திகுமார் மூலம் விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நேற்று மனுதாக்கல் செய்தார்.

    இந்த மனுவை நீதிபதி (பொறுப்பு) திருமகள் ஏற்றுக்கொண்டார். மனு மீதான விசாரணை நாளை (புதன்கிழமை) நடைபெறும் என்று கூறினார். #Velmurugan
    விழுப்புரம் மாவட்டம் மயிலத்தில் விவசாயி வீட்டின் ரூ.2½ லட்சம் மதிப்பிலான நகை மற்றும் பணத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
    மயிலம்:

    விழுப்புரம் மாவட்டம் மயிலம் குளக்கரை தெருவை சேர்ந்தவர் சதிஷ் (வயது 28), விவசாயி. இவரது மனைவி மகாலட்சுமி (25). இவர்கள் 2 பேரும் அதே பகுதியில் இருக்கும் தங்களது விவசாய நிலத்துக்கு செல்வதற்காக வீட்டை பூட்டி சாவியை கதவின் மேல் வைத்து விட்டு சென்றனர்.

    இதனை நோட்டமிட்ட மர்ம மனிதர்கள் அங்கு வந்தனர். அவர்கள் சாவியை எடுத்து கதவை திறந்து உள்ளே புகுந்தனர். பீரோவை உடைத்து அதில் இருந்த 8½ பவுன் தங்க நகை மற்றும் ரூ.84 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை கொள்ளையடித்தனர்.

    பின்னர் கதவை பூட்டிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். கொள்ளை போன பொருள்களின் மொத்த மதிப்பு ரூ.2½ லட்சம் ஆகும். விவசாய நிலத்துக்கு சென்றிருந்த சதிஷ், மகாலட்சுமி ஆகியோர் வீடு திரும்பினர்.

    வீட்டுக்குள் சென்று பார்த்த போது அங்கு பொருட்கள் சிதறி கிடந்தன. பீரோ உடைக்கப்பட்டு இருந்தது. பீரோவில் இருந்த நகை-பணம் கொள்ளை போய் இருப்பது தெரிய வந்தது. இதைப்பார்த்து 2 பேரும் அதிர்ச்சி அடைந்தனர்.

    இது குறித்து மயிலம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். சப்-இன்ஸ்பெக்டர் சதீஷ்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். கொள்ளை நடந்த வீட்டை பார்வையிட்டனர். கைரேகை நிபுணர்கள் வீட்டில் பதிவாதி இருந்த ரேகைகளை சேகரித்தனர்.

    கொள்ளை சம்பவம் குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை வலைவீசி தேடிவருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #Tamilnews
    வானூர் அருகே தி.மு.க. பிரமுகர் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து ரூ.4 லட்சம் மதிப்பிலான நகை மற்றும் பணத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
    வானூர்:

    விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே உள்ளது பூத்துறை கிராமம். இந்த பகுதியை சேர்ந்தவர் முரளி (வயது 52). இவர் வானூர் ஒன்றிய தி.மு.க. செயலாளராக உள்ளார். இவரது மனைவி உஷா (48).

    முரளியுடன் அவரது தந்தை திருக்காமு (55), தாய் வசந்தி (75) ஆகியோரும் வசித்து வருகிறார்கள். இவர்கள் வசிக்கும் வீடு பழமை வாய்ந்த அரண்மனை போன்ற பல அறைகளை கொண்டதாகும். வீட்டின் பின்புறம் சவுக்கு தோப்பும், தென்னந்தோப்பும் உள்ளது.

    நேற்று இரவு வீட்டின் வரண்டா பகுதியில் முரளியும், அவரது தந்தை திருக்காமும் படுத்து தூங்கி கொண்டிருந்தனர். வீட்டில் உள்ள மற்றொரு அறையில் உஷாவும், வசந்தியும் தூங்கினர்.

    இந்த நிலையில் நள்ளிரவு 2 மணி அளவில் மர்ம மனிதன் தோட்டத்தின் வழியாக வந்து வீட்டின் பின்பக்க கதவை கடப்பாரையால் உடைத்தான்.

    பின்னர் வீட்டுக்குள் புகுந்து அங்கு மேஜை டிராயரில் இருந்த ரூ.65 ஆயிரத்தை திருடினான். அங்கிருந்த பீரோவை உடைத்து அதில் இருந்த 73 ஆயிரம் ரூபாயை கொள்ளையடித்தான்.

    அதன் பிறகு உஷா தூங்கி கொண்டிருந்த அறைக்கு சென்றான். அவரின் கழுத்தில் கிடந்த 15 பவுன் தாலிச்செயினை அறுத்தான். திடுக்கிட்டு எழுந்த உஷா வீட்டுக்குள் மர்ம மனிதன் நிற்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். திருடன்... திருடன்... என கூச்சலிட்டார்.

    அவரது அலறல் சத்தம் கேட்டு வசந்தி மற்றும் முரளி, திருக்காமு ஆகியோர் எழுந்து ஓடி வந்தனர். அதற்குள் நகையை பறித்த கொள்ளையன் அங்கிருந்து தப்பி ஓடி விட்டான். கொள்ளை போன நகை- பணத்தின் மதிப்பு ரூ.4 லட்சம் ஆகும்.

    இது குறித்து வானூர் போலீசில் முரளி புகார் செய்தார். உடனே இன்ஸ்பெக்டர் எழிலரசி, சப்- இன்ஸ்பெக்டர்கள் வெங்கடேசன், பரசுராமன் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

    மேலும் இந்த கொள்ளையில் துப்பு துலக்க விழுப்புரத்தில் இருந்து கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் அங்கு பதிவான ரேகைகளை பதிவு செய்தனர்.

    கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம மனிதன் ஜட்டி மட்டும் அணிந் திருந்ததாக கூறப்படுகிறது.

    கொள்ளையனை போலீசார் தேடிவருகின்றனர். பூத்துறை கிராமத்தில் அடிக்கடி வழிப்பறி சம்பவங்களும், ஆடு-மாடுகள் திருட்டுப்போவதாகவும் அந்த பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

    எனவே, அந்த கிராமத்தில் இரவு நேரத்தில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். #Tamilnews
    கவர்னர் ஆய்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் செய்த முன்னாள் அமைச்சர் பொன்முடி உள்பட 700 பேரை போலீசார் கைது செய்தனர்.
    விழுப்புரம்:

    தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் இன்று விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே உள்ள பூத்துறை கிராமத்துக்கு சென்று அங்கு தூய்மை திட்டப்பணிகளை ஆய்வு செய்தார்.

    கவர்னரின் ஆய்வு பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து விழுப்புரம் மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பொன்முடி எம்.எல்.ஏ. தலைமையில் தி.மு.க.வினர் விழுப்புரம் கலெக்டர் அலுவலகம் முன்பு இன்று மதியம் 1 மணிக்கு கருப்புக் கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் செய்தனர்.

    அவர்கள் கருப்பு சட்டையும் அணிந்திருந்தனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கவர்னருக்கு எதிராக கோ‌ஷங்களை எழுப்பினர்.

    இதில் வடக்கு மாவட்ட செயலாளர் செஞ்சி மஸ்தான் எம்.எல்.ஏ., தெற்கு மாவட்ட செயலாளர் அங்கயற்கண்ணி மற்றும் எம்.எல்.ஏ.க்கள் ராதாமணி, உதயசூரியன், டாக்டர் மாசிலாமணி, சீத்தாபதி சொக்கலிங்கம், வசந்தம் கார்த்திகேயன் மற்றும் ஏராளமான தி.மு.க.வினர் கலந்து கொண்டனர்.

    மேலும் காங்கிரஸ் அமைப்பு செயலாளர் ஸ்ரீவை ராமமூர்த்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு முன்னாள் எம்.எல்.ஏ. ராமமூர்த்தி, இந்திய கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் சரவணன், விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் சரவணன், இரணியன் உள்பட திரளானவர்கள் கலந்து கொண்டனர்.

    கவர்னருக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் செய்த முன்னாள் அமைச்சர் பொன்முடி உள்பட 700 பேரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்களை வேன்களில் ஏற்றி அங்குள்ள திருமண மண்டபத்துக்கு அழைத்து சென்றனர். #Tamilnews
    விழுப்புரம் மாவட்டம் பூத்துறை அருகே நடைபெறும் தூய்மை இந்தியா திட்டப்பணிகளை கவர்னர் பன்வாரிலால் புரோகித் ஆய்வு செய்தார். #TNGovernor #BanwarilalPurohit
    விழுப்புரம்:

    தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் அவ்வப்போது பல்வேறு மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தூய்மை இந்தியா திட்டம், பிரதமரின் வீடு கட்டும் திட்டம் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்து வருகிறார்.

    மேலும் துறை ரீதியாக அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி அனைத்து தரப்பினரிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்று வருகிறார்.

    இதையொட்டி கவர்னருக்கு தி.மு.க. மற்றும் விடுதலை சிறுத்தை கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் விழுப்புரம் மாவட்டத்துக்கு இன்று காலை வருகை தந்தார். அவர் சென்னையில் இருந்து கார் மூலம் புறப்பட்டு திண்டிவனம் வழியாக வானூர் அருகே உள்ள பூத்துறை கிராமத்துக்கு 11.35 மணிக்கு வந்தார். அங்கு அவரை கலெக்டர் சுப்பிரமணியன், போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

    அதன்பின்பு அங்கு தூய்மை இந்தியா திட்டப்பணிகளை கவர்னர் ஆய்வு செய்தார். இதையடுத்து தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் நடத்தப்படும் கிராமப்புற கல்வி மேம்பாட்டு பணிகளை பார்வையிட்டார்.

    அங்குள்ள மாணவ- மாணவிகளுக்கு நடைபெற்ற விளையாட்டு போட்டிகள், அறிவுத்திறன் போட்டிகளையும் பார்வையிட்டார். அதன் பின்னர் அவர் மாணவர்களுடன் கலந்துரையாடினார்.


    இந்த நிகழ்ச்சி முடிந்ததும் கவர்னர் பன்வாரிலால் புரோகித் கார் மூலம் விழுப்புரம் கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள சுற்றுலா மாளிகைக்கு சென்றார். அங்கு ஓய்வு எடுத்தார்.

    பின்னர் மாலை 3.30 மணிக்கு பொதுமக்கள் பிரதிநிதிகள், தொண்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள், அரசியல் கட்சி பிரமுகர்கள் உள்ளிட்டோரை சந்தித்து கோரிக்கை மனுக்களை பெறுகிறார்.

    இந்த நிகழ்ச்சி முடிந்ததும் மாலை 6 மணிக்கு விழுப்புரத்தில் இருந்து புறப்பட்டு சென்னை செல்கிறார்.

    கவர்னர் விழுப்புரம் மாவட்டத்துக்கு வந்ததையொட்டி டி.ஐ.ஜி. சந்தோஷ்குமார் மேற்பார்வையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் தலைமையில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் அனுசுயா டெய்சி எர்னஸ்ட், ராஜராஜன் மற்றும் 12 துணை போலீஸ் சூப்பிரண்டுகள், 25 இன்ஸ்பெக்டர்கள், 75 சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்பட 600-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கவர்னர் தங்க உள்ள விழுப்புரம் சுற்றுலா மாளிகையில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.  #TNGovernor #BanwarilalPurohit
    விழுப்புரம் மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்வில் தேர்ச்சி விகிதம் குறைந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக முதன்மை கல்வி அதிகாரி கூறினார்.
    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்ச்சி விகிதம் கடந்த ஆண்டை விட குறைந்து உள்ளது. தரவரிசை பட்டியலில் விழுப்புரம் மாவட்டம் கடைசி இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. இது பற்றி மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி முனுசாமியிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

    விழுப்புரம் மாவட்டத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வில் தேர்ச்சி விகிதம் 60 சதவீதத்துக்கும் குறைந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களிடம் விளக்கம் கேட்டு நோட்டீசு அனுப்ப முடிவு செய்யப்பட்டு உள்ளது.

    வரும் கல்வியாண்டில் தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும். பள்ளிகளில் திடீர் ஆய்வுகள் நடத்தப்பட்டு கல்வி சார்ந்த செயல்பாடுகள் குறித்து ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள் ஆகியோரிடம் கேட்டறிந்து தகுந்த அறிவுரைகளும், மாணவர் களின் தேர்ச்சியை அதிகரிக்க தகுந்த ஆலோசனைகளும் வழங்கப்படும். அதுபோல் மாதந்தோறும் தலைமை ஆசிரியர்களுக்கான ஆய்வுக் கூட்டமும் நடத்தப்பட்டு உரிய ஆலோசனை வழங்கப்படும்.

    மேலும் பள்ளிகளில் தினமும் காலை, மாலை வேளைகளில் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்த ஏற்பாடு செய்யப்படும். வாரந்தோறும் ஒவ்வொரு பாடம் முடிந்ததும் மாணவ-மாணவிகளுக்கு குறுந்தேர்வுகள் நடத்தப்படும்.

    இதுதவிர மாதந்தோறும் பள்ளிகளில் பெற்றோர் ஆசிரியர் கழக கூட்டம் நடத்தி மாணவர்களின் செயல்பாடுகள் மற்றும் கல்வித்தரத்தை மேம்படுத்துவது தொடர்பாக அறிவுரைகள் வழங்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் விழுப்புரம் மாவட்டத்துக்கு நாளை வருகிறார். அவர் காலை சென்னையில் இருந்து கார் மூலம் புறப்பட்டு வானூர் தாலுகாவில் உள்ள பூந்துறைக்கு செல்கிறார்.
    விழுப்புரம்:

    தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் பல்வேறு மாவட்டங்களுக்கு சென்று பொதுமக்களிடம் குறைகள் கேட்டும், ஆய்வுகள் மேற்கொண்டும் வருகிறார்.

    கவர்னர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க. சார்பில் கருப்பு கொடி காட்டி ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறார்கள்.

    இந்த நிலையில் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் விழுப்புரம் மாவட்டத்துக்கு நாளை வருகிறார். அவர் காலை சென்னையில் இருந்து கார் மூலம் புறப்பட்டு வானூர் தாலுகாவில் உள்ள பூந்துறைக்கு செல்கிறார்.

    அங்கு தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் நடைபெற்றுள்ள கிராமப்புற கல்வி மேம்பாட்டு பணிகளை பார்வையிடுகிறார்.

    அனைத்தொடர்ந்து மாணவர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். நிகழ்ச்சி முடிந்ததும் கார் மூலம் விழுப்புரம் கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள சுற்றுலா மாளிகைக்கு கவர்னர் செல்கிறார்.

    அங்கு ஓய்வு எடுத்து கொள்கிறார். பின்னர் அங்கு மாலை 3.30 மணிக்கு மக்கள் பிரதிநிதிகள், தொண்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள், அரசியல் கட்சி பிரமுகர்கள் உள்ளிட்டோரை சந்தித்து கோரிக்கை மனுக்களை பெறுகிறார்.

    விழுப்புரம் மாவட்டத்துக்கு கவர்னர் வருகையையொட்டி போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் தலைமையில் 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    விழுப்புரத்தில் கவர்னர் ஆய்வு பணி நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கலெக்டர் அலுவலகம் முன்பு விழுப்புரம் மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளர் பொன்முடி எம்.எல்.ஏ. தலைமையில் தி.மு.க.வினர் கருப்பு கொடி ஆர்ப்பாட்டம் நடத்துகிறார்கள்.

    இதில் வடக்கு மாவட்ட செயலாளர் செஞ்சி மஸ்தான் எம்.எல்.ஏ., தெற்கு மாவட்ட செயலாளர் அங்கயற்கண்ணி மற்றும் எம்.எல்.ஏ.க்கள் ராதாமணி, உதயசூரியன், டாக்டர் மாசிலாமணி, சீத்தாபதி சொக்கலிங்கம், வசந்தம் கார்த்திகேயன் மற்றும் ஏராளமான தி.மு.க.வினர் கலந்து கொள்கின்றனர்.  #TNGovernor #BanwarilalPurohit
    தமிழகம் முழுவதும் இன்று பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. விழுப்புரம் மாவட்டம் 83.35 சதவீதம் பெற்று கடைசி இடத்தை பெற்றுள்ளது.
    விழுப்புரம்:

    பிளஸ்-2 தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டது. இந்த ஆண்டு பிளஸ்-2 தேர்வில் 91.01 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவிகள் 94.01 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர். மாணவர்கள் 87.07 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர்.

    மாவட்ட அளவில் விருதுநகர் மாவட்டம் 97.5 சதவீதம் பெற்று முதல் இடத்தையும், ஈரோடு மாவட்டம் 96.35 சதவீதம் பெற்று 2-வது இடத்தையும், திருப்பூர் மாவட்டம் 96.18 சதவீதம் பெற்று 3-வது இடத்தையும் பிடித்துள்ளது.

    ராமநாதபுரம் மாவட்டம் 95.88 சதவீதம் பெற்று 4-வது இடத்தையும், நாமக்கல் மாவட்டம் 95.72 சதவீதம் பெற்று 5-வது இடத்தையும், சிவகங்கை மாவட்டம் 95.60 சதவீதம் பெற்று 6-வது இடத்தில் உள்ளது.

    விழுப்புரம் மாவட்டத்தில் இந்த ஆண்டு மொத்தம் 39 ஆயிரத்து 539 பேர் பிளஸ்-2 தேர்வு எழுதினர். இதில் மாணவர்கள் 19 ஆயிரத்து 391 பேரும், மாணவிகள் 20 ஆயிரத்து 148 பேரும் தேர்வு எழுதினர்.

    இதில் 32 ஆயிரத்து 9.55 பேர் தேர்ச்சி பெற்றனர். மாணவர்கள் 15 ஆயிரத்து 129 பேரும், மாணவிகள் 17 ஆயிரத்து 826 பேரும் தேர்ச்சி பெற்றனர். மாணவர்களை விட மாணவிகள் 10.46 சதவீதம் கூடுதல் தேர்ச்சி பெற்றுள்ளனர். விழுப்புரம் மாவட்டம் 83.35 சதவீதம் பெற்று கடைசி இடத்தை பெற்றுள்ளது.

    கடந்த ஆண்டு 86.36 சதவீதம் தேர்ச்சி பெற்றிருந்தது.
    பிளஸ்-2 தேர்வில் மாணவி தோல்வி அடைந்ததால் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    கள்ளக்குறிச்சி:

    விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகே உள்ள நல்லாத்தூரை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகள் இளமதி (வயது 17). இவர் நல்லாத்தூர் அருகே உள்ள குதிரைசந்தல் அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.

    இன்று பிளஸ்-2 தேர்வு முடிவு வெளியிடப்பட்டது. இதில் மாணவி இளமதி 2 பாடங்களில் தோல்வி அடைந்தார்.

    இதனால் மாணவி மனவேதனை அடைந்தார். பின்னர் அவர் அங்குள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

    இது குறித்து தகவல் அறிந்ததும் கிராம நிர்வாக அலுவலர் கிருஷ்ணவேணி, கச்சிராயப்பாளையம் போலீசில் புகார் செய்தார்.

    அதன் பேரில் போலீசார் விரைந்து சென்று கிணற்றில் பிணமாக மிதந்த இளமதியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். #Tamilnews
    ×