search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "mailam"

    மயிலம் முருகன் கோவில் கோபுரமானது மயிலின் கொண்டை போல உச்சியில் இருக்கிறது. கோயிலைப் போலவே இந்த மலையையும் புனிதமாகக் கருதி பக்தர்கள் வழிபடுகிறார்கள்.
    விழுப்புரம் மாவட்டம் மயிலத்தில் முருகன் கோவில் உள்ளது. இந்த கோவில் ஒரு சிறிய குன்றின் மீது, நெடிய ராஜகோபுரத்துடன் விளங்குகிறது. பசுமையான மரங்கள் சூழ்ந்து இருப்பதால், தூரத்திலிருந்து பார்க்கும்போது அந்த குன்று ஒரு மயில் தோகை விரித்திருப்பது போல் அழகாகக் காட்சியளிக்கிறது.

    கோபுரமானது மயிலின் கொண்டை போல உச்சியில் இருக்கிறது. கோயிலைப் போலவே இந்த மலையையும் புனிதமாகக் கருதி பக்தர்கள் வழிபடுகிறார்கள்.
    முருகப்பெருமானால் போரில் சூரபத்மன் தோற்கடிக்கப்பட்டான் அவன் மனம் திருந்தி, இறையருள் வேண்டி... மயிலம் வந்து மயில் வடிவ மலையாக மாறி கடும் தவம் புரிந்தான். தவத்தில் மகிழ்ந்து முருகன் அவனுக்கு காட்சி தந்தார். அப்போது ‘‘என்னை தங்கள் வாகனமாக ஏற்றுக் கொள்ள வேண்டும்!’’ என முருகனிடம் சூரபத்மன் வேண்டினான்.

    மேலும் ‘‘மயில் வடிவ மலையாக இருந்து நான் தவம் புரிந்த இந்த மலைக்கு ‘மயூராசலம்’ எனப் பெயர் வழங்க வேண்டும். தாங்கள் எந்த நாளும் இங்கு வீற்றிருந்து அன்பர்களுக்கு அருள் புரிய வேண்டும்!’’ என்றும் கோரிக்கை வைத்தான்.

    உடனே முருகன் அவனிடம் ‘‘எதிர்காலத்தில் பாலசித்தர் என்பவர் இங்கு தவம் புரிவார். அப்போது உன் விருப்பம் நிறைவேறும்!’’ என்று கூறிவிட்டு மறைந்தார். சூரபத்மன், அதுவரை மலையாக நிலை கொண்டு அங்கு காத்திருந்தான். ‘மயூராசலம்’ என்ற இந்தப் பெயரே பின்னர் மயிலம் என்று மருவியது என்கிறார்கள்.
    விழுப்புரம் மாவட்டம் மயிலத்தில் விவசாயி வீட்டின் ரூ.2½ லட்சம் மதிப்பிலான நகை மற்றும் பணத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
    மயிலம்:

    விழுப்புரம் மாவட்டம் மயிலம் குளக்கரை தெருவை சேர்ந்தவர் சதிஷ் (வயது 28), விவசாயி. இவரது மனைவி மகாலட்சுமி (25). இவர்கள் 2 பேரும் அதே பகுதியில் இருக்கும் தங்களது விவசாய நிலத்துக்கு செல்வதற்காக வீட்டை பூட்டி சாவியை கதவின் மேல் வைத்து விட்டு சென்றனர்.

    இதனை நோட்டமிட்ட மர்ம மனிதர்கள் அங்கு வந்தனர். அவர்கள் சாவியை எடுத்து கதவை திறந்து உள்ளே புகுந்தனர். பீரோவை உடைத்து அதில் இருந்த 8½ பவுன் தங்க நகை மற்றும் ரூ.84 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை கொள்ளையடித்தனர்.

    பின்னர் கதவை பூட்டிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். கொள்ளை போன பொருள்களின் மொத்த மதிப்பு ரூ.2½ லட்சம் ஆகும். விவசாய நிலத்துக்கு சென்றிருந்த சதிஷ், மகாலட்சுமி ஆகியோர் வீடு திரும்பினர்.

    வீட்டுக்குள் சென்று பார்த்த போது அங்கு பொருட்கள் சிதறி கிடந்தன. பீரோ உடைக்கப்பட்டு இருந்தது. பீரோவில் இருந்த நகை-பணம் கொள்ளை போய் இருப்பது தெரிய வந்தது. இதைப்பார்த்து 2 பேரும் அதிர்ச்சி அடைந்தனர்.

    இது குறித்து மயிலம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். சப்-இன்ஸ்பெக்டர் சதீஷ்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். கொள்ளை நடந்த வீட்டை பார்வையிட்டனர். கைரேகை நிபுணர்கள் வீட்டில் பதிவாதி இருந்த ரேகைகளை சேகரித்தனர்.

    கொள்ளை சம்பவம் குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை வலைவீசி தேடிவருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #Tamilnews
    ×