என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மயிலத்தில் விவசாயி வீட்டில் ரூ.2½ லட்சம் நகை-பணம் கொள்ளை
Byமாலை மலர்24 May 2018 10:57 AM GMT (Updated: 24 May 2018 10:57 AM GMT)
விழுப்புரம் மாவட்டம் மயிலத்தில் விவசாயி வீட்டின் ரூ.2½ லட்சம் மதிப்பிலான நகை மற்றும் பணத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
மயிலம்:
விழுப்புரம் மாவட்டம் மயிலம் குளக்கரை தெருவை சேர்ந்தவர் சதிஷ் (வயது 28), விவசாயி. இவரது மனைவி மகாலட்சுமி (25). இவர்கள் 2 பேரும் அதே பகுதியில் இருக்கும் தங்களது விவசாய நிலத்துக்கு செல்வதற்காக வீட்டை பூட்டி சாவியை கதவின் மேல் வைத்து விட்டு சென்றனர்.
இதனை நோட்டமிட்ட மர்ம மனிதர்கள் அங்கு வந்தனர். அவர்கள் சாவியை எடுத்து கதவை திறந்து உள்ளே புகுந்தனர். பீரோவை உடைத்து அதில் இருந்த 8½ பவுன் தங்க நகை மற்றும் ரூ.84 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை கொள்ளையடித்தனர்.
பின்னர் கதவை பூட்டிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். கொள்ளை போன பொருள்களின் மொத்த மதிப்பு ரூ.2½ லட்சம் ஆகும். விவசாய நிலத்துக்கு சென்றிருந்த சதிஷ், மகாலட்சுமி ஆகியோர் வீடு திரும்பினர்.
வீட்டுக்குள் சென்று பார்த்த போது அங்கு பொருட்கள் சிதறி கிடந்தன. பீரோ உடைக்கப்பட்டு இருந்தது. பீரோவில் இருந்த நகை-பணம் கொள்ளை போய் இருப்பது தெரிய வந்தது. இதைப்பார்த்து 2 பேரும் அதிர்ச்சி அடைந்தனர்.
இது குறித்து மயிலம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். சப்-இன்ஸ்பெக்டர் சதீஷ்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். கொள்ளை நடந்த வீட்டை பார்வையிட்டனர். கைரேகை நிபுணர்கள் வீட்டில் பதிவாதி இருந்த ரேகைகளை சேகரித்தனர்.
கொள்ளை சம்பவம் குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை வலைவீசி தேடிவருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #Tamilnews
விழுப்புரம் மாவட்டம் மயிலம் குளக்கரை தெருவை சேர்ந்தவர் சதிஷ் (வயது 28), விவசாயி. இவரது மனைவி மகாலட்சுமி (25). இவர்கள் 2 பேரும் அதே பகுதியில் இருக்கும் தங்களது விவசாய நிலத்துக்கு செல்வதற்காக வீட்டை பூட்டி சாவியை கதவின் மேல் வைத்து விட்டு சென்றனர்.
இதனை நோட்டமிட்ட மர்ம மனிதர்கள் அங்கு வந்தனர். அவர்கள் சாவியை எடுத்து கதவை திறந்து உள்ளே புகுந்தனர். பீரோவை உடைத்து அதில் இருந்த 8½ பவுன் தங்க நகை மற்றும் ரூ.84 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை கொள்ளையடித்தனர்.
பின்னர் கதவை பூட்டிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். கொள்ளை போன பொருள்களின் மொத்த மதிப்பு ரூ.2½ லட்சம் ஆகும். விவசாய நிலத்துக்கு சென்றிருந்த சதிஷ், மகாலட்சுமி ஆகியோர் வீடு திரும்பினர்.
வீட்டுக்குள் சென்று பார்த்த போது அங்கு பொருட்கள் சிதறி கிடந்தன. பீரோ உடைக்கப்பட்டு இருந்தது. பீரோவில் இருந்த நகை-பணம் கொள்ளை போய் இருப்பது தெரிய வந்தது. இதைப்பார்த்து 2 பேரும் அதிர்ச்சி அடைந்தனர்.
இது குறித்து மயிலம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். சப்-இன்ஸ்பெக்டர் சதீஷ்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். கொள்ளை நடந்த வீட்டை பார்வையிட்டனர். கைரேகை நிபுணர்கள் வீட்டில் பதிவாதி இருந்த ரேகைகளை சேகரித்தனர்.
கொள்ளை சம்பவம் குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை வலைவீசி தேடிவருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #Tamilnews
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X