search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "villupuram"

    விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகே நடத்தையில் சந்தேகம் பட்டு இளம்பெண்ணை எரித்து கொன்ற வழக்கில் கணவனை போலீசார் கைது செய்தனர்.
    திருக்கோவிலூர்:

    விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள மேட்டுச்சேரி கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 35). இவர் சென்னையில் டைல்ஸ் மேஸ்திரியாக வேலை பார்த்து வந்தார். இதற்காக சென்னையில் தங்கியிருந்து விடுமுறை நாட்களில் சொந்த ஊருக்கு வந்து சென்றார். இவரது மனைவி ரீனா (31). இவர்களுக்கு 1 மகள், 2 மகன்கள் உள்ளனர்.

    ரமேசுக்கு தனது மனைவி ரீனாவின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டது. இதனால் அவர்களுக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு ரமேஷ் சென்னையில் இருந்து மேட்டுச்சேரிக்கு வந்தார். நீ நடந்து கொள்ளும் விதம் சரியில்லை. இனிமேல் ஒழுங்காக இரு என ரீனாவிடம் கூறினார். அதற்கு ரீனா, நீங்கள் தான் என்மேல் தேவையில்லாமல் சந்தேகம் படுகிறீர்கள் என்றார். இதில் கணவன்-மனைவிக்கிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

    வாக்குவாதம் முற்றி ரமேஷ் ஆத்திரம் அடைந்து வீட்டில் இருந்த மண்எண்ணை எடுத்து ரீனாவின் உடலில் ஊற்றி தீ வைத்தார். காப்பாற்றுங்கள்.. காப்பாற்றுங்கள்.. என்று ரீனா அலறினார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் திரண்டு வந்தனர்.

    உடல் கருகிய நிலையில் இருந்த ரீனாவை மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக அவர் புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு அனுப்பப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இருப்பினும் சிகிச்சை பலன்அளிக்காமல் நேற்று இரவு ரீனா பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து மணலூர்பேட்டை போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் ஜெயவேல், சப்-இன்ஸ்பெக்டர் சிவச்சந்திரன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து ரமேசை கைது செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. #Tamilnews
    விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகே ரெயில் சக்கரத்தில் சிக்கி கல்லூரி மாணவர் மரணமடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    கள்ளக்குறிச்சி:

    விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகே உள்ள ஒகையூர் பகுதியை சேர்ந்தவர் விவசாயி தர்மலிங்கம்(வயது 45). இவரது மகன் செல்வக்குமார்(19). இவர் திருச்சியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி.2-ம் ஆண்டு படித்து வந்தார்.

    கடந்த வாரம் தர்மலிங்கம் ஒகையூர் பகுதியில் சென்று கொண்டிருக்கும்போது விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தார். பின்னர் அவரை சிகிச்சைக்காக சென்னையில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்தநிலையில் ஆஸ்பத்திரியில் இருந்த அவரது உறவினர்கள் தர்மலிங்கத்தின் ஆதார் கார்டு கொண்டு வரும்படி செல்போன் மூலம் தர்மலிங்கத்தின் மகன் செல்வக்குமாரிடம் கூறினர்.

    இதனைத்தொடர்ந்து தர்மலிங்கத்தின் ஆதார் கார்டை எடுத்துக் கொண்டு செல்வக்குமார் ஒகையூரில் இருந்து சின்னசேலம் ரெயில் நிலையத்துக்கு சென்றார். நேற்று இரவு 11 மணிக்கு சேலத்தில் இருந்து சென்னை செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் வந்தது.

    ரெயிலில் பயணிகளின் கூட்டம் அதிகமாக இருந்தது. செல்வக்குமார் அந்த ரெயிலில் ஏறினார். ரெயில் புறப்படத் தொடங்கியது. அப்போது ரெயில் படிக்கட்டில் நின்றுகொண்டிருந்த செல்வகுமார் நிலைத் தடுமாறி கீழே விழுந்தார்.

    இதில் ரெயில் சக்கரத்தில் சிக்கிய அவர் உடல் துண்டாகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். விபத்து குறித்து சேலம் ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் சந்தானம் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விபத்தில் பலியான செல்வக்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    விபத்துகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கல்லூரி மாணவர் ரெயிலில் சிக்கி பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. #Tamilnews
    விழுப்புரத்தில் தலைமை ஆசிரியரின் வீட்டின் பூட்டை உடைத்து ரூ.3 லட்சம் மதிப்பிலான நகைகளை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
    விழுப்புரம்:

    விழுப்புரம் கலெக்டர் அலுவலகம் பின்புறம் உள்ள விவேகானந்தா நகர் பகுதியை சேர்ந்தவர் கோபால்(வயது47).

    இவர் கப்பியாம்புலியூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் தலைமை ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார்.

    ரஜினி நடித்து வெளியான காலா திரைபடத்தை பார்ப்பதற்காக கோபால் நேற்று இரவு தனது வீட்டை பூட்டி விட்டு குடும்பத்தினருடன் தியேட்டருக்கு சென்றார்.

    இதை நோட்டமிட்ட மர்ம மனிதர்கள் சிலர் வீட்டின் முன்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் அவர்கள் பீரோ இருந்த அறைக்கு சென்றனர்.

    பீரோவை உடைத்து அதில் இருந்த தங்கம் மற்றும் வெள்ளி பொருட்களை கொள்ளையடித்து கொண்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.

    படம் பார்த்து விட்டு கோபால் தனது குடும்பத்தினருடன் வீட்டிற்கு வந்தார். வீட்டின் முன்பக்க கதவு திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

    உள்ளே சென்று பார்த்தபோது வீட்டில் இருந்த பொருட்கள் அனைத்தும் சிதறி கிடந்தன. உடனே பீரோ இருக்கும் அறைக்கு சென்று பார்த்தார். அங்கு பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 13 பவுன் தங்க நகைகள் மற்றும் அரை கிலோ வெள்ளி பொருட்கள் கொள்ளை போயிருந்தன.

    பின்னர் இது குறித்து கோபால் விழுப்புரம் தாலுகா போலீசில் புகார் செய்தார். உடனே இன்ஸ்பெக்டர் ராஜன் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

    மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் கொள்ளை நடந்த வீட்டில் தடயங்களை சேகரித்தனர். மோப்ப நாயும் வரவழைக்கபட்டது. அது கொள்ளை நடந்த வீட்டில் மோப்பம் பிடித்து சிறிது தூரம் ஓடி நின்றது யாரையும் கவ்வி பிடிக்கவில்லை .

    மர்ம மனிதர்கள் கொள்ளையடித்து சென்ற தங்கம் மற்றும் வெள்ளி பொருட்களின் மதிப்பு ரூ.3 லட்சம் ஆகும்.

    இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய மர்ம நபர்களை வலை வீசி தேடி வருகின்றனர்.

    அந்த பகுதி பொது மக்கள் கூறியதாவது:

    நாங்கள் வசித்து வரும் விவேகானந்தா நகர் பகுதியில் கடந்த 1 வருடமாகவே அடிக்கடி கொள்ளை சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. இதனால் நாங்கள் ஒருவித அச்சத்துடன் வசித்து வருகிறோம்.

    எனவே கொள்ளை சம்பவங்களில் ஈடுபடும் மர்ம மனிதர்களை போலீசார் விரைந்து கைது செய்ய வேண்டும் என அந்த பகுதி பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    கலெக்டர் அலுவலகத்தின் பின்புறம் உள்ள நகரில் நடந்துள்ள இந்த கொள்ளை சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #Tamilnews
    விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சியில் இன்று அதிகாலை பர்னிச்சர் மற்றும் ஜவுளி கடையில் திடீரென்று ஏற்பட்ட தீவிபத்தால் சுமார் மூன்றரை கோடி மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமாயின.
    கள்ளக்குறிச்சி:

    விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி கச்சேரி சாலையில் உள்ள காம்ப்ளக்சில் பர்னிச்சர் மற்றும் ஜவுளி கடைகள் உள்ளன.

    கேரளாவை சேர்ந்த சஞ்சீவி (வயது 45) என்பவர் கடந்த 10 ஆண்டுகளாக பர்னிச்சர் கடையை நடத்தி வருகிறார். இந்த கடையின் அருகே திருப்பத்தூரை சேர்ந்த அன்பழகன் (43) என்பவரது ஜவுளி கடை உள்ளது.

    நேற்று இரவு வழக்கம்போல் வியாபாரத்தை முடித்துக் கொண்டு கடையை பூட்டி விட்டு அனைவரும் சென்று விட்டனர்.

    இந்த நிலையில் இன்று அதிகாலை கள்ளக்குறிச்சி இன்ஸ்பெக்டர் விஜயகுமார் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அவர்கள் கச்சேரி சாலையில் வந்தனர்.

    அந்த நேரத்தில் பர்னிச்சர் கடையில் தீப்பிடித்து எரிவதை பார்த்தனர். உடனே அவர்கள் கள்ளக்குறிச்சி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

    கள்ளக்குறிச்சி மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த 5 தீயணைப்பு வண்டிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தன. அவர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்க முயன்றனர்.

    அப்போது காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் கட்டுக்குள் கொண்டு வரமுடியவில்லை. இந்த நிலையில் அருகில் இருந்த அன்பழகனின் ஜவுளிக் கடைக்கும் அந்த தீ பரவியது.

    தீயணைப்பு படை வீரர்கள் 5 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இருப்பினும் பர்னிச்சர் கடையில் இருந்த பொருட்கள் அனைத்தும் தீயில் கருகி சேதமாகின. சேதமான பொருட்களின் மதிப்பு ரூ.3 கோடி ஆகும்.

    இதுபோல் ஜவுளிக்கடையில் இருந்த துணிகளும் தீயில் எரிந்து நாசமானது. அவற்றின் மதிப்பு ரூ.25 லட்சம்.

    மேலும் இந்த கடையின் அருகே இருந்த குளிர்பான கடையிலும் தீ பரவியது. இதில் அந்த கடையில் இருந்த பொருட்கள் எரிந்து சேதமானது.

    இந்த சம்பவம் குறித்து கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் பர்னிச்சர் கடையில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாகவே இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது தெரிய வந்தது.

    தீ விபத்து பற்றி தகவல் அறிந்த கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ. பிரபு, துணை போலீஸ் சூப்பிரண்டு கோமதி ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டனர்.

    அதிகாலை நேரத்தில் இந்த தீ விபத்து ஏற்பட்டதால் உயிர்ச்சேதம் ஏற்படவில்லை.

    இந்த சம்பவம் கள்ளக்குறிச்சி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. #Tamilnews
    செஞ்சி அருகே மணல் கடத்தலை தடுத்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரை டிராக்டர் ஏற்றி கொல்ல முயன்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
    செஞ்சி:

    விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள அனந்தபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பழனி மற்றும் போலீசார் மட்டப்பாறை கூட்ரோட்டில் ரோந்துப்பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

    அப்போது அந்த வழியாக மணல் ஏற்றிக்கொண்டு டிராக்டர் ஒன்று வேகமாக வந்தது. அந்த டிராக்டரை போலீசார் வழிமறித்தனர். இதை பார்த்த டிரைவர் டிராக்டரை நிறுத்தாமல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் மீது ஏற்றுவது போல் வேகமாக வந்தார்.

    அவருக்கு பின்னால் மணல் ஏற்றிக்கொண்டு வந்த மேலும் 2 டிராக்டர் டிரைவர்களும் அதேபோல் வந்தனர். இதையடுத்து அவர்கள் 3 பேரையும் போலீசார் மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அவர்கள் பெரியதச்சூர் கிராமத்தை சேர்ந்த சங்கர் (வயது 45), விஜயரங்கன் (25), வரிக்கல் கிராமத்தை சேர்ந்த கோவிந்தன் (38) ஆகிய 3 பேர் என்றும், மணல் கடத்தி வந்ததை தடுத்ததால் அவர்கள் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசாரை டிராக்டர் ஏற்றி கொல்ல முயன்றதும் தெரிய வந்தது.

    இதைத்தொடர்ந்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்கள் மணல் கடத்தி வந்த 3 டிராக்டர்களையும் பறிமுதல் செய்தனர். #Tamilnews
    விழுப்புரம் அருகே சாலையை கடக்க முயன்ற காவலாளி மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
    விழுப்புரம்:

    விழுப்புரம் அருகே உள்ள மேட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் கணேசன்(வயது 46). இவர் விழுப்புரத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார்.

    நேற்று இரவு செஞ்சி நான்குமுனை சந்திப்பில் கணேசன் சாலையை கடக்க முயன்றார். அப்போது அந்தவழியாக முண்டியம்பாக்கம் மருத்துவகல்லூரி மாணவர்கள் சூர்யா(20), அபிவர்மன்(20), பிரவீன்(20) ஆகிய 3 பேரும் ஒரே மோட்டார் சைக்கிளில் அங்கு வந்து கொண்டிருந்தனர். அவர்கள் வந்த மோட்டார் சைக்கிள் எதிர்பாரதவிதமாக சாலையை கடக்க முயன்ற கணேசன் மீது மோதியது.

    இதில் தூக்கிவீசப்பட்ட கணேசன் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். மோட்டார் சைக்கிளில் வந்த 3 மாணவர்களும் கீழே விழுந்து படுகாயம் அடைந்தனர்.

    விபத்து குறித்து தகவல் அறிந்த விழுப்புரம் தாலுகா போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விபத்தில் காயமடைந்த 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #Tamilnews
    உளுந்தூர்பேட்டை செங்குறிச்சியில் உள்ள சுங்கசாவடியை சேதப்படுத்திய வழக்கில் வேல்முருகனுக்கு வருகிற 22-ந்தேதி வரை காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.
    விழுப்புரம்:

    காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், சுங்க சாவடி கட்டணத்தை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த ஏப்ரல் 1-ந் தேதி தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் தலைமையில் கட்சியினர் உளுந்தூர்பேட்டை செங்குறிச்சியில் உள்ள சுங்கசாவடியை அடித்து நொறுக்கினர்.

    இந்த வழக்கு தொடர்பாக தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகனை கடந்த 26-ந் தேதி கைது செய்து திருக்கோவிலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். வேல்முருகனை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க கோர்ட்டு உத்தரவிட்டது. பின்னர் அவர் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

    இந்த வழக்கில் ஜாமீன் வழங்கக்கோரி வேல்முருகன் சார்பில் விழுப்புரம் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுமீதான விசாரணை நேற்று நடந்தது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட பின்னர் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி சரோஜினிதேவி உத்தரவிட்டார்.

    இந்த நிலையில் வேல்முருகனின் 15 நாள் நீதிமன்ற காவல் இன்றுடன் முடிந்தது. இதையடுத்து அவரை விழுப்புரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக சென்னை புழல் சிறையில் இருந்து விழுப்புரத்துக்கு தனி வேனில்பலத்த பாதுகாப்புடன் போலீசார் அழைத்து வந்தனர்.

    இன்று மதியம் 12 மணிக்கு வேல்முருகனை விழுப்புரம் கோர்ட்டுக்கு கொண்டு வந்தனர். பின்னர் நீதிபதி லதா முன்னிலையில் ஆஜர்படுத்தினர். அவரை வரும் 22-ந் தேதி வரை காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். அதை தொடர்ந்து போலீசார் பலத்த பாதுகாப்புடன் வேல்முருகனை சென்னைக்கு கொண்டு சென்றனர்.

    இதற்கிடைய வேல்முருகனை விழுப்புரம் கோர்ட்டுக்கு அழைத்து வரும் தகவல் அறிந்ததும் அவரது ஆதரவாளர்கள் கோர்ட் முன்பு திரண்டனர். வேல்முருகனை விடுதலை செய்ய கோரி அவர்கள் கோ‌ஷம் எழுப்பினர். இதையொட்டி அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.  #velmurugan

    உளுந்தூர்பேட்டை செங்குறிச்சியில் உள்ள சுங்கச்சாவடியை சேதப்படுத்திய வழக்கில் கைதான வேல்முருகனின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து விழுப்புரம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
    விழுப்புரம்:

    காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்தும், சுங்கச்சாவடிகளை நிரந்தரமாக அகற்றக்கோரியும் விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை செங்குறிச்சியில் உள்ள சுங்கச்சாவடியை கடந்த ஏப்ரல் மாதம் 1-ந் தேதி தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் தலைமையில் கட்சியினர் முற்றுகையிட்டனர்.

    பின்னர் சுங்கச்சாவடியை அவர்கள் அடித்து நொறுக்கி சேதப்படுத்தினார்கள். இதுதொடர்பாக வேல்முருகன் உள்பட 13 பேர் மீது 7 பிரிவுகளின் கீழ் உளுந்தூர்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் கடந்த 26-ந் தேதி வேல்முருகனை போலீசார் கைது செய்து சென்னை புழல் சிறையில் அடைத்தனர்.

    இந்த வழக்கில் ஜாமீன் கேட்டு தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் தனது வக்கீல் காந்தி குமார் மூலம் விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் கடந்த 28-ந் தேதி மனுதாக்கல் செய்தார்.

    இந்த மனு விழுப்புரம் மாவட்டம் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இன்று மதியம் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி சரோஜினிதேவி ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். #Velmurugan
    டாக்டராகி மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்று எண்ணிய பிரதீபாவை இழந்து தவித்து வருவதாக அவருடைய பெரியப்பா கண்ணீர் மல்க தெரிவித்தார். #NEET2018 #Pratheeba #TNStudentSuicide
    விழுப்புரம்:

    நீட் தேர்வில் தோல்வி அடைந்ததால் மாணவி பிரதீபா தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக மாணவியின் பெரியப்பா முருகன் கூறியதாவது:-

    நீட் தேர்வு எழுதி எப்படியாவது அரசு மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து டாக்டராகி விட வேண்டும் என்பது பிரதீபாவின் கனவாக இருந்தது.

    கடந்த மே மாதம் நடந்த நீட் தேர்வில் பிரதீபாவுக்கு வேலூரில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டது. அங்கு சென்று தேர்வு எழுதினார். அந்த தேர்வு முடிவு நேற்று வெளியிடப்பட்டது. இதில் பிரதீபா குறைவான மதிப்பெண் பெற்றிருந்தாள். இதனால் அவள் மனதளவில் பாதிப்படைந்து காணப்பட்டார். அவளுக்கு நாங்கள் ஆறுதல் கூறினோம். இருப்பினும் அவளால் அதனை சகித்து கொள்ள முடியவில்லை.

    தற்கொலை செய்து கொண்ட மாணவி பிரதீபா

    தான் கண்ட டாக்டர் கனவு நிறைவேறாமல் போய் விட்டதே என்று எண்ணிய பிரதீபா வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். டாக்டராகி மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்று எண்ணிய பிரதீபாவை இழந்து தவித்து வருகிறோம்.

    இவ்வாறு அவர் கண்ணீர் மல்க கூறினார். #NEET2018 #Pratheeba #TNStudentSuicide
    மோசமான சாலையால் விழுப்புரம் மாவட்டம் கல்வராயன் மலை பகுதியைச்சேர்ந்த கர்ப்பிணி பெண்ணுக்கு ஆம்புலன்சிலேயே குழந்தை இறந்து பிறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் கல்வராயன் மலை அருகில் உள்ள எழுதூர் பகுதியை சேர்ந்தவர் சரவணன். இவரது மனைவி துர்க்கையம்மாள் (வயது 26). நிறை மாத கர்ப்பிணி.

    சம்பவத்தன்று அதிகாலையில் துர்க்கையம்மாள் பிரசவ வேதனையால் துடித்தார். உடனடியாக ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதிகாலை 4 மணியளவில் துர்க்கையம்மாள் வீட்டுக்கு ஆம்புலன்ஸ் வந்தது.

    அதில் அவரை ஏற்றி 60 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அந்த பகுதியில் சாலைகள் மிகவும் மோசமாக இருந்தன. இதனால் 60 கிலோ மீட்டர் தூரத்தை கடக்க 6 மணி நேரம் ஆனது. இதனால் ஆம்புலன்சிலேயே குழந்தை இறந்தது.

    காலை 10 மணியளவில் துர்க்கையம்மாள் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு டாக்டர்கள் உடனடியாக ஆபரேசன் செய்தனர். அப்போது குழந்தை இறந்தே பிறந்தது. இதைக் கேட்டதும் சரவணனும் அவரது உறவினர்களும் அதிர்ச்சி அடைந்தனர்.

    மேலும் துர்க்கையம்மாளின் உடல் நிலையும் கவலைக்கிடமானது. அவருக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    துர்க்கையம்மாளின் கிராமத்தில் இருந்து 28 கி.மீ. தொலைவில் மாவடிபட்டு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. ஆனால் அங்கு அனுமதிக்காமல் ஆம்புலன்ஸ் டிரைவர் அவரை 60 கி.மீ. தொலைவில் உள்ள கள்ளக்குறிச்சி ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றார்.

    இது தொடர்பாக துர்க்கையம்மாளின் உறவினர்கள் கூறும் போது, ஆஸ்பத்திரிக்கு செல்லும் சாலை மிகவும் மோசமாக இருந்ததே குழந்தையின் உயிரை பலி வாங்கிவிட்டது என்று தெரிவித்தனர். #Tamilnews
    மரக்காணம் அருகே டி.வி.பார்த்ததை தாய் கண்டித்ததால் கல்லூரி மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
    மரக்காணம்:

    விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தை அடுத்த ஏரிமேடு பகுதியை சேர்ந்தவர் சரவணன் தொழிலாளி.

    இவரது மகள் ஷாலினி (வயது 18). இவர் புதுவை அருகே சேதாரபட்டில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி. முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

    இந்த நிலையில் ஷாலினி வீட்டில் டி.வி.பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ஷாலினியின் தாய் வீட்டில் எந்த வேலையும் செய்யாமல் இப்படி எப்பொழுதும் டி.வி. பார்த்து கொண்டிருக்கிறாயா? எனக் கூறி ஷாலினியை திட்டினார்.

    இதில் மனம் உடைந்த ஷாலினி வீட்டில் இருந்த வி‌ஷத்தை குடித்து மயங்கி விழுந்தார். வீட்டில் இருந்தவர்கள் இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். பின்னர் ஷாலினியை மீட்டு சிகிச்சைக்காக புதுவை தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் ஷாலினி இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இது குறித்து மரக்காணம் போலீசில் புகார் செய்யப்பட்டது. புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் பாபு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். #tamilnews
    திண்டிவனத்தை சேர்ந்த சாராய வியாபாரியை தடுப்புக்காவல் சட்டத்தின் கீழ் மயிலம் போலீசார் கைது செய்தனர்.
    விழுப்புரம்:

    திண்டிவனம் கிடங்கல்-2 பகுதியை சேர்ந்தவர் பிரேம்நாத் (வயது 35). சாராய வியாபாரியான இவர் மீது சாராயம் விற்பனை செய்தல், கடத்துதல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன.

    கடந்த மாதம் மயிலம் பகுதியில் சாராய விற்பனையில் ஈடுபட்டதாக பிரேம்நாத்தை மயிலம் போலீசார் கைது செய்தனர். இவர் சாராய விற்பனையில் தொடர்ந்து ஈடுபட்டு வந்ததால் பிரேம்நாத்தை தடுப்புக்காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட கலெக்டருக்கு போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் பரிந்துரை செய்தார்.

    இதையடுத்து பிரேம்நாத்தை தடுப்புக்காவல் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்கும்படி போலீஸ் சூப்பிரண்டுக்கு கலெக்டர் சுப்பிரமணியன் உத்தரவிட்டார். அதன்பேரில் சாராய வியாபாரி பிரேம்நாத்தை மயிலம் போலீசார் நேற்று தடுப்புக்காவல் சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.  #Tamilnews
    ×