என் மலர்

    நீங்கள் தேடியது "college student dead"

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • விபத்தில் மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த வாலிபரும் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
    • போலீஸ் விசாரணையில் அவரது பெயர் சர்மா என்பது தெரியவந்தது.

    காட்டாங்கொளத்தூர்:

    காட்டாங்கொளத்தூரில் தனியார் பல்கலைக்கழகத்தில் படித்து வந்தவர் தாமரை செல்வி.

    எம்.எஸ்.சி. முதலாம் ஆண்டு மாணவியான இவர் காட்டாங்கொளத்தூரில் சாலையை கடந்தார். அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள், மாணவி தாமரைச் செல்வி மீது பயங்கரமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவருக்கு உடலில் பல இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டது.

    ரத்த வெள்ளத்தில் தாமரை செல்வி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பலியானார். இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த வாலிபரும் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    போலீஸ் விசாரணையில் அவரது பெயர் சர்மா என்பது தெரியவந்தது. அரியானாவை சேர்ந்த இவர் அப்பகுதியில் தங்கி இருந்து என்ஜினீயரிங் படித்து வந்தார். ஆஸ்பத்திரியில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக தாம்பரம் போக்குவரத்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • விபத்தை ஏற்படுத்திய தனியார் பஸ் நிற்காமல் சென்றதால் அப்பகுதி மக்கள் விரட்டிச்சென்று பஸ்சை நிறுத்தினர்.
    • சப்-இன்ஸ்பெக்டர் அசோக் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.

    மேலசொக்கநாதபுரம்:

    தேனி அருகில் உள்ள கோடாங்கிபட்டியை சேர்ந்த முத்துகிளி மகன் லோகேஸ்வரன்(19). போடியில் உள்ள அரசு பொறியியல் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வருகிறார். இவர் இன்று தனது நண்பரான நாட்டுத்துரை(19) என்பவருடன் பைக்கில் கல்லூரிக்கு வந்து கொண்டிருந்தார்.

    அப்போது தேனியில் இருந்து போடி நோக்கி வந்த தனியார் பஸ் இவர்கள் மீது பயங்கரமாக மோதியது. இதில் பைக்கில் வந்த மாணவர் லோகேஸ்வரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். உடன் வந்த நாட்டுத்துரை படுகாயங்களுடன் போடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். பின்னர் மேல்சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார்.

    விபத்தை ஏற்படுத்திய தனியார் பஸ் நிற்காமல் சென்றதால் அப்பகுதி மக்கள் விரட்டிச்சென்று பஸ்சை நிறுத்தினர். இதுகுறித்து போடி டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் அசோக் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். விபத்தை ஏற்படுத்திய தனியார் பஸ் டிரைவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மாணவர் கார்த்திக் இறந்த சம்பவம் குறித்து ராஜபாளையம் தெற்கு போலீஸ் நிலையத்தில் அவரது சகோதரி இளவரசி புகார் அளித்தார்.
    • இன்ஸ்பெக்டர் மன்னவன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    ராஜபாளையம்:

    தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் தாலுகா பெருமாள்பட்டியை சேர்ந்தவர் காளையப்பன். இவரது மகன் கார்த்திக் (வயது 19). இவர் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.

    கடந்த வாரம் கார்த்திக்குக்கு கடும் வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இவர்களது ஊர் விருதுநகர் மாவட்டத்தின் அருகில் இருக்கிறது. இதனால் கார்த்திக்கை அவரது குடும்பத்தினர், ராஜபாளையம் சத்திரப்பட்டி ரோட்டில் எம்.ஜி.ஆர். சிலை அருகே உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச்சென்றனர்.

    அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவருக்கு குடல் இறக்கம் ஏற்பட்டுள்ளதாகவும், சிறிய அறுவை சிகிச்சை செய்தால் சரியாகிவிடும் என்றும் தெரிவித்துள்ளனர். இதையடுத்து அவரை அந்த ஆஸ்பத்திரியில் சேர்த்து அறுவை சிகிச்சை செய்ய அவரது குடும்பத்தினர் ஏற்பாடுகளை செய்தனர்.

    நேற்று அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய டாக்டர்கள் முடிவு செய்தனர். அதன்படி கார்த்திக், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அறுவை சிகிச்சைக்காக அழைத்து செல்லப்பட்டார். பின்னர் இரண்டு மணி நேரம் கழித்து அறுவை சிகிச்சை அறையில் இருந்து தீவிர சிகிச்சை வார்டுக்கு மாற்றுவதற்காக கார்த்திக்கை அழைத்துச் சென்றுள்ளனர்.

    அப்போது அவர் அசைவின்றி படுத்திருப்பதை பார்த்து அவரது சகோதரி இளவரசிக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அது பற்றி கேட்டபோது, மயக்க நிலையில் இருப்பதாக தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் சிறிது நேரத்தில் கார்த்திக் சிகிச்சை பலனின்றி இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த கார்த்திக்கின் சகோதரி மற்றும் உறவினர்கள் மருத்துவர்கள் மற்றும் பணியாளர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தவறான சிகிச்சையளித்ததால் அவர் இறந்ததாக குற்றம் சாட்டினர். இதுகுறித்து தகவலறிந்த போலீசார், மாணவர் இறந்த ஆஸ்பத்திரிக்கு சென்றனர்.

    அங்கு கார்த்திக்கின் உடலை மீட்டு விருதுநகர் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மாணவர் கார்த்திக் இறந்த சம்பவம் குறித்து ராஜபாளையம் தெற்கு போலீஸ் நிலையத்தில் அவரது சகோதரி இளவரசி புகார் அளித்தார்.

    அதன்பேரில் இன்ஸ்பெக்டர் மன்னவன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சென்ற கல்லூரி மாணவர் இறந்த சம்பவம் ராஜபாளையத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மாணவி மரணத்தில் திடீர் திருப்பமாக தந்தை மற்றும் அவரது அத்தை ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    • செல்வமணி மற்றும் மல்லிகா ஆகிய இருவரையும் போலீசார் இன்று கைது செய்தனர். பின்னர் அவர்கள் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

    திருச்சி:

    திருச்சி மாவட்டம் ஜீயபுரம் எலமனூர் தபோவனம் பகுதியில் உள்ள ஒரு புதரில் கடந்த 5-ந்தேதி பிறந்து சில மணி நேரங்களான ஒரு அழகான ஆண் சிசு வீசப்பட்டு அழுது கொண்டிருந்தது. இதுபற்றி அப்பகுதி மக்கள் கொடுத்த தகவலின் பேரில் ஜீயபுரம் போலீசார் அந்த குழந்தையை மீட்டு திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு அந்த குழந்தை பராமரிக்கப்பட்டு வருகிறது. பின்னர் நடத்தப்பட்ட விசாரணையில், குழந்தையை பெற்றெடுத்தவர் ஜீயபுரம் எலமனூர் பகுதியைச் சேர்ந்த செல்வமணி மகள் கலைவாணி (வயது 19) என்பது தெரியவந்தது. கல்லூரி மாணவியான அவர் திருமணம் ஆகாத நிலையில் காதலன் மூலமாக கர்ப்பம் தரித்து குழந்தை பெற்றுள்ளார்.

    பின்னர் சமூகத்தில் அசிங்கமாகி விடும் என நினைத்து மனதை கல்லாக்கி கொண்டு குழந்தையை அவர் முதலில் வீசியது தெரியவந்தது. அவரிடம் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்திருந்த நிலையில், குழந்தை பெற்ற அந்த மாணவி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்று திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்ட தகவல் வெளியானது.

    இந்த நிலையில் சிகிச்சை பலன் அளிக்காமல் கலைவாணி நேற்று அதிகாலை 3.30 மணியளவில் பரிதாபமாக இறந்தார். இதற்கிடையே சிகிச்சையில் இருக்கும் போது கலைவாணி திருச்சி மாஜிஸ்திரேட்டிடம் மரண வாக்குமூலம் அளித்துள்ளார். அதில் தனது பெற்றோர் வாயில் விஷம் ஊற்றியதாக கூறியுள்ளதாக பரபரப்பு தகவல் வெளியானது.

    அதைத்தொடர்ந்து போலீசார் திருப்பராய்த்துறை கிராம நிர்வாக அலுவலர் சுரேஷ் பாபு அளித்த புகாரின் பேரில், மாஜிஸ்ட்ரேட்டுவிடம் மாணவி அளித்த வாக்குமூலத்தை பெற்று விசாரணை நடத்தினர். இதில் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன. கலைவாணியின் தாயார் தோட்டத்துக்கு சென்ற நிலையில் மாணவியின் தந்தை செல்வமணி, அவரது சகோதரி மல்லிகா (கலைவாணியின் அத்தை) ஆகியோர் பூச்சிக்கொல்லி மருந்தை கலைவாணியிடம் கொடுத்து குடிக்க வலியுறுத்தியதாக எழுத்து மூலமாக மாஜிஸ்திரேட்விடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.

    அந்த அடிப்படையில் மர்மச்சாவு கொலை வழக்காக மாற்றப்பட்டது. மேற்கண்ட 2 பேர் மீதும் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஏற்கனவே போலீசாரின் கஸ்டடியில் இருக்கும் செல்வமணி மற்றும் மல்லிகா ஆகிய இருவரையும் போலீசார் இன்று கைது செய்தனர். பின்னர் அவர்கள் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

    மாணவி மரணத்தில் திடீர் திருப்பமாக தந்தை மற்றும் அவரது அத்தை ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • நீரின் வேகத்திற்கு ஒன்றும் செய்ய முடியாமல் ஜீவா மூச்சுத்திணறியும், உடலில் காயங்களுடன் இழுத்துச் செல்லப்பட்டு உயிரிழந்தார்.
    • உறவினர்கள் நிலக்கோட்டை தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். நிலைய அலுவலர் ஜோசப் தலைமையிலான வீரர்கள் அங்கு விரைந்து வந்தனர்.

    நிலக்கோட்டை:

    கரூர் மாவட்டம், அரவக்குறிச்சியை சேர்ந்த சின்னத்துரை மகன் ஜீவா(20). கல்லூரியில் படித்து வந்தார். இவரது உறவினரான நிலக்கோட்டை அருகே உள்ள சி.புதூரை சேர்ந்த தி.மு.க பிரமுகர் ஈஸ்வரன் இல்ல துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக ஜீவா வந்திருந்தார்.

    பின்னர் இவர் குளிப்பதற்காக சி. புதூர் அருகே வைகை அணையில் இருந்து விவசாய பாசனத்திற்காக தற்போது திறந்து விட்டுள்ள பெரியாறு பிரதான கால்வாய் நீரில் குளிக்க சென்றார். அப்போது கால்வாயில் நீரின் வேகம் அதிகமாக இருந்ததால் ஜீவாவை நீர் அடித்துச் சென்றது.

    இதனை எதிர்பாராத அவர் தன்னை காப்பாற்றுமாறு கூச்சலிட்டார். உடனே அக்கம்பக்கத்தினர் அவரை காப்பாற்ற முயற்சி செய்தனர். ஆனால் நீரின் வேகத்திற்கு ஒன்றும் செய்ய முடியாமல் ஜீவா மூச்சுத்திணறியும், உடலில் காயங்களுடன் இழுத்துச் செல்லப்பட்டு உயிரிழந்தார். இதனை தொடர்ந்து உறவினர்கள் நிலக்கோட்டை தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். நிலைய அலுவலர் ஜோசப் தலைமையிலான வீரர்கள் அங்கு விரைந்து வந்தனர்.

    அவர்கள் நீரில் சிக்கிய ஜீவாவின் உடலை நீண்டநேரம் போராடி மீட்டனர். பின்னர் அவரது உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. ஜீவாவின் உடலை பார்த்து உறவினர்கள் கதறி அழுதனர். இதுகுறித்து சின்னத்துரை கொடுத்த புகாரின்படி விளாம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் வனிதா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். துக்க நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த வாலிபர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • வடக்கு மாவிலியூத்து கிராமத்தில் உள்ள கோவில் கொடை விழாவிற்கு பிரதீப் தனது நண்பர்களுடன் சென்றுள்ளார்.
    • அப்போது அங்கு பக்கத்து ஊரை சேர்ந்தவர்களுக்கும், பிரதீப் தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

    சங்கரன்கோவில்:

    தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள குருக்கள்பட்டியை சேர்ந்தவர் முருகன். இவரது மகன் பிரதீப்(வயது 20). இவர் மேலநீலிதநல்லூரில் உள்ள கல்லூரியில் 2-ம் ஆண்டு பட்டப்படிப்பு படித்து வந்தார்.

    நேற்று வடக்கு மாவிலியூத்து கிராமத்தில் உள்ள கோவில் கொடை விழாவிற்கு பிரதீப் தனது நண்பர்களுடன் சென்றுள்ளார். அப்போது அங்கு பக்கத்து ஊரை சேர்ந்தவர்களுக்கும், பிரதீப் தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

    தொடர்ந்து வாக்குவாதம் முற்றவே பிரதீப் மற்றம் அவரது நண்பர்களை எதிர்தரப்பினர் தாக்க முயன்றதாகவும், அவர்களிடம் இருந்து தப்பிக்க பிரதீப் தரப்பினர் ஓடியதாகவும் கூறப்படுகிறது.

    அப்போது எதிர்பாராதவிதமாக பிரதீப் அங்குள்ள கிணற்றில் தவறி விழுந்துள்ளார். உடனே அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் பிரதீப் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

    இதுதொடர்பாக சின்னகோவிலான்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கல்லூரி மாணவர் பிரதீப் மற்றும் அவரது நண்பர்களை துரத்தியவர்களில் சுரண்டையை சேர்ந்த போலீஸ்காரர் இருப்பதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

    எனினும் இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவரின் சொந்த கிராமத்தை சேர்ந்த மக்கள் திரண்டு உள்ளதால் அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஈரோடு-காங்கேயம் ரோட்டில் மோட்டார்சைக்கிளில் கல்லூரி மாணவர் ஜோஸ்வா சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே மற்றொரு மோட்டார் சைக்கிளில் ஒருவர் வந்து கொண்டிருந்தார்.
    • அப்போது எதிர்பாராதவிதமாக 2 மோட்டார்சைக்கிளும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இதில் ஜோஸ்வா தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்து உயிருக்கு போராடினார்.

    மொடக்குறிச்சி:

    ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அடுத்த அவல்பூந்துறை அருகே உள்ள குப்பகவுண்டன்வலசு பகுதியை சேர்ந்தவர் ஜோஸ்வா (வயது 22). இவர் ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் படித்து வந்தார்.

    இந்நிலையில் நேற்று மாலை ஜோஸ்வா ஈரோடு-காங்கேயம் ரோட்டில் மோட்டார்சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே மற்றொரு மோட்டார் சைக்கிளில் ஒருவர் வந்து கொண்டிருந்தார்.

    அப்போது எதிர்பாராதவிதமாக 2 மோட்டார்சைக்கிளும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இதில் ஜோஸ்வா தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்து உயிருக்கு போராடினார். எதிரே மற்றொரு மோட்டார்சைக்கிளில் வந்தவருக்கு லேசான காயம் ஏற்பட்டது.

    விபத்து நடந்ததும் அக்கம் பக்கத்தினர் ஜோஸ்வாவை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த ஜோஸ்வா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து அரச்சலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் கல்லூரி மாணவர் உயிரிழந்தது அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மாணவியின் தந்தை சங்கர் விபத்தில் இறந்து விட்ட நிலையில் தாத்தா மதியழகன் ஏற்பாட்டில் தான் கோபிகா படித்துள்ளார்.
    • கடந்த சில நாட்களுக்கு முன்பு தந்தையின் தேவசத்திற்கு தாத்தா வீட்டிற்கு சென்ற கோபிகா விடுதியில் தங்கி படிக்க மனமில்லை என்று உறவினர்களிடம் கூறி உள்ளார்.

    சேலம்:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் வடக்கனந்தல் அம்மாப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் சங்கர். இவர் கடந்த ஆண்டு விபத்தில் இறந்து விட்டார். இவரது மகள் கோபிகா (வயது 18), இவர் தலைவாசலில் உள்ள தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பி.ஏ. முதலாம் ஆண்டு படித்து வந்தார். கல்லூரி விடுதியில் தங்கி கல்லூரிக்கு சென்று வந்தார்.

    இந்த நிலையில் கோபிகா நேற்றிரவு கல்லூரி விடுதி அறையில் துப்பட்டாவால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இரவு சாப்பாட்டிற்கு அவரை கூப்பிட சென்ற மாணவிகளான காவிய நிலா, ஜெயந்தி, கல்பனா ஆகிய 3 பேரும் இதனை பார்த்து மயக்கம் அடைந்தனர்.

    இதனை அறிந்த விடுதி நிர்வாகிகள் தூக்கில் தொங்கிய கோபிகாவை மீட்டு ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து தலைவாசல் போலீசார் கல்லூரி நிர்வாகம் மற்றும் சக மாணவிகள், உறவினர்களிடம் விசாரணை நடத்தினர்.

    அப்போது மாணவியின் தந்தை சங்கர் விபத்தில் இறந்து விட்ட நிலையில் தாத்தா மதியழகன் ஏற்பாட்டில் தான் கோபிகா படித்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு தந்தையின் தேவசத்திற்கு தாத்தா வீட்டிற்கு சென்ற கோபிகா விடுதியில் தங்கி படிக்க மனமில்லை என்று உறவினர்களிடம் கூறி உள்ளார். ஆனால் உறவினர்கள் இன்னும் 2 ஆண்டுகள் தானே படிப்பை முடி, பின்னர் வீட்டிற்கு வந்து விடலாம் என்று கூறி அனுப்பி உள்ளனர்.

    இதையடுத்து கல்லூரிக்கு வந்து ஒரு வாரம் ஆன நிலையில் அவருடன் ஒரே அறையில் தங்கியிருந்த 3 மாணவிகளும் சொந்த ஊருக்கு சென்றதால் தனியாக இருந்த கோபிகா அதே அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்தது தெரிய வந்தது.

    இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இதற்கிடையே மயக்கம் அடைந்த 3 மாணவிகளும் சிகிச்சை பெற்று விடுதிக்கு திரும்பினர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகே ரெயில் சக்கரத்தில் சிக்கி கல்லூரி மாணவர் மரணமடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    கள்ளக்குறிச்சி:

    விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகே உள்ள ஒகையூர் பகுதியை சேர்ந்தவர் விவசாயி தர்மலிங்கம்(வயது 45). இவரது மகன் செல்வக்குமார்(19). இவர் திருச்சியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி.2-ம் ஆண்டு படித்து வந்தார்.

    கடந்த வாரம் தர்மலிங்கம் ஒகையூர் பகுதியில் சென்று கொண்டிருக்கும்போது விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தார். பின்னர் அவரை சிகிச்சைக்காக சென்னையில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்தநிலையில் ஆஸ்பத்திரியில் இருந்த அவரது உறவினர்கள் தர்மலிங்கத்தின் ஆதார் கார்டு கொண்டு வரும்படி செல்போன் மூலம் தர்மலிங்கத்தின் மகன் செல்வக்குமாரிடம் கூறினர்.

    இதனைத்தொடர்ந்து தர்மலிங்கத்தின் ஆதார் கார்டை எடுத்துக் கொண்டு செல்வக்குமார் ஒகையூரில் இருந்து சின்னசேலம் ரெயில் நிலையத்துக்கு சென்றார். நேற்று இரவு 11 மணிக்கு சேலத்தில் இருந்து சென்னை செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் வந்தது.

    ரெயிலில் பயணிகளின் கூட்டம் அதிகமாக இருந்தது. செல்வக்குமார் அந்த ரெயிலில் ஏறினார். ரெயில் புறப்படத் தொடங்கியது. அப்போது ரெயில் படிக்கட்டில் நின்றுகொண்டிருந்த செல்வகுமார் நிலைத் தடுமாறி கீழே விழுந்தார்.

    இதில் ரெயில் சக்கரத்தில் சிக்கிய அவர் உடல் துண்டாகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். விபத்து குறித்து சேலம் ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் சந்தானம் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விபத்தில் பலியான செல்வக்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    விபத்துகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கல்லூரி மாணவர் ரெயிலில் சிக்கி பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. #Tamilnews
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    சத்தியமங்கலம் அருகே மோட்டார் சைக்கிளும் டிராக்டரும் மோதிக் கொண்ட விபத்தில் கல்லூரி மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
    சத்தியமங்கலம்:

    விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள நந்தவனப்பட்டியை சேர்ந்தவர் ரகீம்ஷேட். இவரது மகன் முகமது அனாஸ் (வயது 22).

    ஈரோடு பெருந்துறை ரோடு, கே.சி.பி. தோட்டத்தை சேர்ந்தவர் ‌ஷகின் அலி. இவரது மகன் முகமது மசூத் அலி (21). இவர்கள் 2 பேரும் சத்தியமங்கலத்தில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் 3-ம் ஆண்டு மாணவர்கள்.

    இவர்கள் நேற்று மோட்டார் சைக்கிளில் கல்லூரியில் இருந்து சத்தியமங்கலம் நோக்கி வந்து கொண்டு இருந்தனர். மோட்டார் சைக்கிளை முகமது மசூத் அலி ஓட்டினார்.

    சத்தியமங்கலம்-அத்தாணி சாலையில் உள்ள தனியார் மண்டபம் அருகே வந்தபோது அந்த வழியாக வந்த டிராக்டரும், மோட்டார் சைக்கிளும் மோதின.

    இதில் தூக்கி வீசப்பட்ட 2 பேரும் பலத்த காயம் அடைந்தனர். அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காமல் முகமது அனாஸ் பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து சத்தியமங்கலம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். #Tamilnews
    ×