search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வெங்கல் அருகே கிருஷ்ணா கால்வாயில் கல்லூரி மாணவர் பலி
    X

    வெங்கல் அருகே கிருஷ்ணா கால்வாயில் கல்லூரி மாணவர் பலி

    • பூண்டி ஏரியில் இருந்து புழல் ஏரிக்கு கிருஷ்ணா கால்வாயில் அதிகஅளவு தண்ணீர் அனுப்பப்பட்டு வருகிறது.
    • தண்ணீரின் வேகத்தில் இமானுவேல் இழுத்து செல்லப்பட்டார்.

    பெரியபாளையம்:

    வெங்கல் அருகே உள்ள பட்டாபிராம் அடுத்த தண்டுரை பகுதியை சேர்ந்தவர் இமானுவேல் (வயது18). இவர் பூந்தமல்லியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.டெக் படித்து வருகிறார்.

    தற்போது பூண்டி ஏரியில் இருந்து புழல் ஏரிக்கு கிருஷ்ணா கால்வாயில் அதிகஅளவு தண்ணீர் அனுப்பப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று மாலை இமானுவேல், தனது நண்பர்களுடன் புழல் ஏரிக்கு செல்லும் கிருஷ்ணா கால்வாயில் இறங்கி குளித்தார்.

    அப்போது தண்ணீரின் வேகத்தில் இமானுவேல் இழுத்து செல்லப்பட்டார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த நண்பர்கள் அவரை காப்பாற்ற முயன்றும் முடியவில்லை.

    இதுகுறித்து வெங்கல் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் மற்றும் திருவூர் பகுதியில் இருந்து வந்த தீயணைப்பு வீரர்கள் கிருஷ்ணா கால்வாயில் மூழ்கிய மாணவர் இமானுவேலை தேடினர். இரவு வரை தேடியும் அவரை மீட்க முடியவில்லை.

    இந்த நிலையில் இன்று 2-வது நாளாக இமானுவேலை தேடும் பணி நடந்தது. அப்போது அதே பகுதியில் இருந்து சிறிது தூரத்தில் இமானுவேல் உடல் மீட்கப்பட்டது. இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×