search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Chennai accident"

    • கும்பகோணத்தில் இருந்து சென்னை கோயம்பேடு நோக்கி வந்த அரசு விரைவு பஸ் எதிர்பாராதவிதமாக ரிஷி கவுதம் மீது வேகமாக மோதியது.
    • விபத்து ஏற்படுத்திய பஸ் டிரைவரான ரட்சக ராஜன் என்பவரை போலீசார் கைது செய்தனர்.

    போரூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி பகுதியை சேர்ந்தவர் ரிஷி கவுதம் (வயது24). சாப்ட்வேர் என்ஜினீயரான இவர் சென்னையில் தங்கி தரமணியில் உள்ள ஐ.டி.நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.

    இவர் தொடர் விடுமுறையை முன்னிட்டு சொந்த ஊருக்கு சென்று விட்டு இன்று அதிகாலை 5மணி அளவில் பஸ் மூலம் சென்னை திரும்பினார். அசோக் நகர் அடுத்த ஜாபர்கான்பேட்டை காசி தியேட்டர் சிக்னல் அருகே பஸ்சில் இருந்து கீழே இறங்கிய ரிஷி கவுதம் பின்னர் 100 அடி சாலையை கடக்க முயன்றார்.

    அப்போது அவ்வழியே கும்பகோணத்தில் இருந்து சென்னை கோயம்பேடு நோக்கி வந்த அரசு விரைவு பஸ் எதிர்பாராதவிதமாக ரிஷி கவுதம் மீது வேகமாக மோதியது. இதில் பஸ்சின் சக்கரத்தில் சிக்கிய ரிஷிகவுதம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். தகவல் அறிந்ததும் கிண்டி போக்குவரத்து புலனாய்வு போலீசார் ரிஷிகவுதமின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    விபத்து ஏற்படுத்திய பஸ் டிரைவரான ரட்சக ராஜன் (58) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.

    • விபத்து குறித்து, அடையார் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    • விபத்து ஏற்படுத்திய வேன் டிரைவர் சரவணனை போலீசார் கைது செய்தனர்.

    சென்னை:

    சென்னை அடையாறு எல்.பி ரோட்டில் பின்பக்கமாக சென்ற வேன் மோதியதில் சுமார் 65 வயது மதிக்கத்தக்க முதியவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

    விபத்து குறித்து, அடையார் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விபத்து ஏற்படுத்திய வேன் டிரைவர் சரவணனை போலீசார் கைது செய்தனர்.

    • ரெயில் நகர் சந்திப்பு அருகே வந்தபோது அவ்வழியாக வந்த லாரி ஒன்று எதிர்பாராத விதமாக லட்சுமி நாராயணன் மோட்டார் சைக்கிள் மீது வேகமாக மோதியது.
    • கோயம்பேடு போக்குவரத்து புலனாய்வு போலீசார் விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    போரூர்:

    கடலூர் மாவட்டம் நெய்வேலி பகுதியை சேர்ந்தவர் லட்சுமி நாராயணன் (வயது 21). மதுரவாயலில் உள்ள தனியார் பல்கலைக் கழகம் ஒன்றின் விடுதியில் தங்கி 4-ம் ஆண்டு சட்ட படிப்பு படித்து வந்தார்.

    இவர் இன்று அதிகாலை 4 மணி அளவில் உடன் படிக்கும் நண்பரான ரோகித் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் கோயம்பேடு நோக்கி சென்று கொண்டிருந்தார். ரெயில் நகர் சந்திப்பு அருகே வந்தபோது அவ்வழியாக வந்த லாரி ஒன்று எதிர்பாராத விதமாக லட்சுமி நாராயணன் மோட்டார் சைக்கிள் மீது வேகமாக மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் சென்ற இருவரும் சாலையில் தூக்கி வீசப்பட்டனர்.

    இதில் மோட்டார் சைக்கிளை ஓட்டி சென்ற லட்சுமிநாராயணன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் பலத்த காயமடைந்த ரோகித்தை அக்கம்பக்கம் உள்ளவர்கள் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தகவல் அறிந்து வந்த கோயம்பேடு போக்குவரத்து புலனாய்வு போலீசார் விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பஸ்சின் பின்பக்க சக்கரத்தில் சிக்கிக் கொண்ட சூர்யா உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தார்.
    • கோயம்பேடு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து பஸ் டிரைவரை கைது செய்தனர்.

    போரூர்:

    சென்னை புளியந்தோப்பு பகுதியை சேர்ந்தவர் ஏழுமலை. இவரது மகன் சூர்யா (வயது19). கோயம்பேட்டில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் 3-ம் ஆண்டு படித்து வந்தார்.

    இவர் நேற்று மாலை வழக்கம் போல கல்லூரி முடிந்து கோயம்பேடு நூறடி சாலையில் தே.மு.தி.க. அலுவலகம் எதிரே உள்ள பஸ் நிறுத்தத்திற்கு வந்தார்.

    பின்னர் வீட்டிற்கு செல்வதற்காக அவ்வழியே வந்த மாநகர பஸ்சில்(எண்48சி) முன்பக்க படிக்கட்டு வழியாக ஏறினார். அப்போது திடீரென டிரைவர் பஸ்சை வேகமாக இயக்கியதாக தெரிகிறது. இதனால் படிகட்டில் நின்ற சூர்யா எதிர்பாராதவிதமாக கால் தவறி பஸ்சில் இருந்து கீழே விழுந்தார். இதில் பஸ்சின் பின்பக்க சக்கரத்தில் சிக்கிக் கொண்ட சூர்யா உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து கோயம்பேடு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து பஸ் டிரைவரான சின்ன காஞ்சிபுரம் பகுதியை சேர்ந்த வெங்கடேசன் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அண்ணா சதுக்கம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
    • வாலிபரின் உயிரை பறித்த கார் அதன் பிறகும் வேகமாக சென்று பச்சையப்பன் கல்லூரி சுவற்றில் மோதி நின்றது.

    சென்னை:

    சென்னை கீழ்ப்பாக்கம் மண்டபம் ரோடு 5-வது தெருவை சேர்ந்தவர் திருமகன். டிரைவரான இவர் தனது மோட்டார் சைக்கிளில் இன்று வீட்டில் இருந்து புறப்பட்டார்.

    கீழ்ப்பாக்கம் பச்சையப்பன் கல்லூரி அருகே அதிகாலை 5.30 மணி அளவில் சென்று கொண்டிருந்தபோது அந்த வழியாக வந்த கார் திடீரென தாறுமாறாக ஓடியது. இதில் திருமகன் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது கார் வேகமாக மோதியது. இதில் திருமகன் தூக்கி வீசப்பட்டு அவரது தலை மற்றும் உடலில் பலத்த காயங்கள் ஏற்பட்டன.

    இதனால் சம்பவ இடத்திலேயே திருமகன் துடிதுடித்து பலியானார். திருமணமான அவருக்கு ஒரு குழந்தை உள்ளது.

    இதுபற்றி தகவல் கிடைத்ததும் அண்ணா சதுக்கம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

    வாலிபரின் உயிரை பறித்த கார் அதன் பிறகும் வேகமாக சென்று பச்சையப்பன் கல்லூரி சுவற்றில் மோதி நின்றது. இதைப் பார்த்து சாலையில் சென்றவர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். சம்பவ இடத்தில் விசாரணை நடத்திய போலீசார் காரை ஓட்டி வந்த நபர் குறித்து விசாரித்தனர். அப்போது 18 வயது கல்லூரி மாணவரான ஸ்ரீசிஜிவ் விக்ரம் காரை ஓட்டி வந்தது தெரியவந்தது. சீட் பெல்ட் அணியாமல் காரை ஓட்டிய அவரும் விபத்தில் காயம் அடைந்தார். சிகிச்சைக்காக தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    நுங்கம்பாக்கத்தை சேர்ந்த இவர் ஓட்டுனர் உரிமத்துக்காக விண்ணப்பித்திருப்பதும், இன்னும் லைசென்ஸ் எடுக்கவில்லை என்பதும் தெரிய வந்தது.

    இது தொடர்பாக வாலிபர் விக்ரம் மற்றும் அவரது பெற்றோரிடம் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    • விபத்தில் உயிரிழந்த விஷ்ணுராம் பழைய கார்களை வாங்கி விற்பனை செய்யும் தொழில் செய்து வந்துள்ளார்.
    • கார் மரத்தில் மோதியபோது முன்பகுதியில் பாதுகாப்புக்காக இருந்த பலூன் விரிந்துள்ளது.

    சென்னை:

    சென்னை சைதாப்பேட்டை கோர்ட்டு அருகே இன்று அதிகாலை 3.50 மணி அளவில் மின்னல் வேகத்தில் தாறுமாறாக ஓடிய கார் அங்கிருந்த மரத்தில் மோதி சுக்கு நூறாக நொறுங்கியது.

    இதில் காரை ஓட்டிச்சென்ற விஷ்ணுராம் என்ற வாலிபர் உயிரிழந்தார். அவருடன் காரில் பயணம் செய்த திலீபன் பலத்த காயத்துடன் உயிர் தப்பினார்.

    இதுபற்றி தகவல் கிடைத்ததும் கிண்டி போக்குவரத்து போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

    விபத்தில் உயிரிழந்த விஷ்ணுராம் பழைய கார்களை வாங்கி விற்பனை செய்யும் தொழில் செய்து வந்துள்ளார். திலீபன் ஆயில் மில் வைத்து நடத்தி வருகிறார். இருவரும் தொழில் விஷயமாக சென்னை வந்து உள்ளனர்.

    இந்த நிலையில்தான் இன்று அதிகாலையில் கார் மரத்தில் மோதி விபத்துக்குள்ளாகி இருக்கிறது. கார் மரத்தில் மோதியபோது முன்பகுதியில் பாதுகாப்புக்காக இருந்த பலூன் விரிந்துள்ளது. இருப்பினும் காரை ஓட்டிச் சென்ற விஷ்ணுராம் உயிரிழந்திருக்கிறார்.

    விஷ்ணுராம் உயிரிழந்தது தொடர்பாக அவரது உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனைக்கு பிறகு விஷ்ணுராம் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட உள்ளது.

    • சரவணன் இன்று அதிகாலை மோட்டார் சைக்கிளில் வில்லிவாக்கம் நாதமுனி தியேட்டர் அருகே சென்று கொண்டு இருந்தார்.
    • அப்போது முன்னால் சென்ற வாகனத்தின் மீது இடிக்காமல் இருப்பதற்காக சரவணன் திடீரென பிரேக் பிடித்தார்.

    அம்பத்தூர்:

    கீழ்ப்பாக்கம் டெய்லர்ஸ் சாலையை சேர்ந்தவர் சரவணன்(வயது38). இவர் தமிழக அரசின் தொழிலாளர் நலத்துறை பிரிவில் உதவியாளராக பணிபுரிந்து வந்தார். இன்று அதிகாலை அவர் மோட்டார் சைக்கிளில் வில்லிவாக்கம் நாதமுனி தியேட்டர் அருகே சென்று கொண்டு இருந்தார்.

    அப்போது முன்னால் சென்ற வாகனத்தின் மீது இடிக்காமல் இருப்பதற்காக சரவணன் திடீரென பிரேக் பிடித்தார். இதில் கட்டுப்பாட்டை இழந்த அவர் மோட்டார் சைக்கிளோடு கீழே விழுந்தார். தலையில் பலத்த காயம் அடைந்த சரவணன் பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து திருமங்கலம் போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விபத்து நடந்ததும் சரக்குவேன் டிரைவர் சம்பவ இடத்தில் இருந்து தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்து மணலி புதுநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கொடிராஜ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
    திருவொற்றியூர்:

    மணலி புதுநகரை அடுத்த கவுண்டர் பாளையம் திருநிலை கிராமத்தை சேர்ந்தவர் செல்லப்பா. பூம்பூம் மாட்டுக்காரர். இவருடைய மகள் சத்யா(வயது 8). அதே பகுதியில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளி பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வந்தார்.

    இந்த நிலையில் சிறுமி சத்யா வீட்டின் அருகே நின்று விளையாடி கொண்டிருந்தார். அப்போது அங்கு நிறுத்தப்பட்டு இருந்த சரக்கு வேனை டிரைவர் பின்புறமாக இயக்கினார்.

    இதில் விளையாடிக்கொண்டிருந்த மாணவி சத்யா மீது சரக்குவேன் மோதியது. இதில் அவள் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடினாள்.

    இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அருகில் இருந்தவர்கள் மாணவி சத்யாவை மீட்டு பாடியநல்லூரில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே மாணவி சத்யா இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    விபத்து நடந்ததும் சரக்குவேன் டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்து மணலி புதுநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கொடிராஜ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
    கத்திவாக்கம் மேம்பாலத்தில் இன்று காலை கலவை எந்திரம் மீது பஸ் மோதி விபத்துக்குள்ளானது. இதனால் கத்திவாக்கம் மேம்பாலத்தில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    திருவொற்றியூர்:

    திருவான்மியூரில் இருந்து எண்ணூர் நோக்கி இன்று காலை மாநகர பஸ் (எண்1சி) வந்து கொண்டு இருந்தது.

    கத்திவாக்கம் மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்த போது முன்னால் டிராக்டர் மூலம் இழுத்து செல்லப்பட்ட கட்டுமான கலவை எந்திரம் திடீரென நிலை தடுமாறி சாலையில் கவிழ்ந்தது.

    அப்போது அந்த எந்திரத்தின் மீது பஸ் பயங்கரமாக மோதியது. இதில் பஸ்சின் படிக்கட்டு உடைந்தது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த பஸ்சில் இருந்த பயணிகள் கூச்சலிட்டனர். இதனையடுத்து டிரைவர் உடனடியாக பஸ்சை நிறுத்தினார்.

    இந்த விபத்தில் டிரைவர் சாமர்த்தியமாக பஸ்சை நிறுத்தியதாலும், படிக்கட்டில் பயணிகள் பயணம் செய்யாததாலும் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

    இதைத் தொடர்ந்து பஸ்சில் இருந்த பயணிகள் அனைவரும் மற்றொரு பஸ்சில் அனுப்பி வைக்கப்பட்டனர். இதனால் கத்திவாக்கம் மேம்பாலத்தில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    சர்வீஸ் சாலையில் போக்குவரத்து மாற்றி இயக்கப்பட்டன. இதுகுறித்து மாதவரம் போக்குவரத்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
    அரும்பாக்கம், எம்.எம்.டி.ஏ. காலனி அருகே மோட்டார் சைக்கிளில் சென்றபோது மாநகர பஸ் சக்கரத்தில் சிக்கி 12-ம் வகுப்பு மாணவர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
    போரூர்:

    அரும்பாக்கம், எம்.எம்.டி.ஏ. காலனி பசும்பொன் தெருவைச் சேர்ந்தவர் அமுதன். ஓட்டல் நடத்தி வருகிறார்.

    இவரது மகன் அழகு சுந்தரம் (வயது 18) அருகில் உள்ள தனியார் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்தார்.

    இன்று காலை அழகுசுந்தரம் மோட்டார் சைக்கிளில் பள்ளிக்கு சென்றார். எம்.எம். டி.ஏ. காலனி மெயின் ரோட்டில் உள்ள தபால் நிலையம் அருகே சென்ற போது அந்த வழியே சென்ற மாநகர பஸ்சை முந்தி செல்ல முயன்றார்.

    அப்போது எதிர்பாராத விதமாக பஸ் மீது மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் பஸ்சின் சக்கரத்தில் சிக்கிய அழகுசுந்தரம் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்து அண்ணாநகர் போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சென்னை தியாகராயநகரில் பால்கனி இடிந்து விழுந்ததில் காயம் அடைந்த மூதாட்டி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
    சென்னை:

    தியாகராய நகர் அபிபுல்லா சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் சரோஜாம்மாள் (65).

    2-வது மாடியில் உள்ள சொந்த வீட்டில் இவர் 20 ஆண்டுகளாக குடியிருந்தார். இவருடைய கணவர் ராஜகோபால் 10 வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார்.

    நேற்று மாலை 4.30 மணியளவில் வீட்டின் பால்கனியில் சரோஜாம்மாள் உட்கார்ந்து இருந்தார். அப்போது திடீர் என்று அந்த பால்கனி இடிந்து விழுந்தது.

    இதனால் 2-வது மாடியில் இருந்து கீழே விழுந்த சரோஜாம்மாள் படுகாயம் அடைந்தார். அவருடைய தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. 2 கால்களும் உடைந்தன.

    அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். இடிபாடுகளில் இருந்து சரோஜாம்மாளை மீட்டு ராயப்பேட்டை ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு சிகிச்சை பலனின்றி சரோஜாம்மாள் பரிதாபமாக உயிர் இழந்தார். பாண்டிபஜார் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

    பால்கனி இடிந்து உயிர் இழந்த சரோஜாம்மாளுக்கு 2 மகன்களும், 2 மகள்களும் உள்ளனர். அனைவரும் திருமணம் ஆகி வேறு இடங்களில் வசிக்கிறார்கள். தகவல் அறிந்ததும் குடும்பத்தினர் அங்கு வந்தனர். எதிர் பாராமல் நடந்த இந்த சம்பவம் அவர்களை சோகத் தில் ஆழ்த்தியுள்ளது.
    சென்னையில் இன்று மின்சார ரெயிலில் படிக்கட்டில் தொங்கிக்கொண்டு பயணம் செய்தபோது, தடுப்புச்சுவரில் மோதி விழுந்து 4 பேர் உயிரிழந்தனர். #StThomasMountStation #ChennaiAccident #TrainAccident
    சென்னை:

    சென்னை மற்றும் புறநகர் பகுதி மக்களின் போக்குவரத்துக்கு பெரிதும் கை கொடுப்பது மின்சார ரெயில்கள்தான்.

    புறநகர் மக்களை சென்னை நகரோடு இணைக்கும் பாலமாக இருக்கும் மின்சார ரெயில்கள் சென்னை மக்களின் வாழ்க்கையோடு பின்னி பிணைந்துள்ளது என்றே சொல்லலாம்.

    அதிகாலை தொடங்கி நள்ளிரவு வரை இயக்கப்படும் சென்னை மின்சார ரெயில்களை நம்பிதான் லட்சக்கணக்கான மக்கள் உள்ளனர். ஆனால் போதுமான அளவுக்கு ரெயில் சேவைகள் இல்லாததால் அடிக்கடி விபத்துகள் ஏற்படும் கொடூரம் நடக்கிறது.

    நேற்று இரவு பரங்கிமலை ரெயில் நிலையத்தில் 4-வது பிளாட்பாரத்துக்கும் 3-வது பிளாட்பாரத்துக்கும் இடை யில் உள்ள சிமெண்ட் தடுப்பு சுவரில் மோதி 2 பயணிகள் பரிதாபமாக உயிர் இழந்தனர். கூட்ட நெரிசலில் ரெயில் பெட்டி வாசலில் தொங்கியபடி பயணம் செய்த அவர்களுக்கு சிமெண்ட் தடுப்பு சுவர் எமனாக மாறியது.

    சம்பவ இடத்திலேயே அவர்கள் இறந்தனர். இந்த நிலையில் இன்று காலை அதே இடத்தில், அதே சுவரில் மோதி 4 பேர் உயிர் இழக்க நேரிட்டுள்ளது. இந்த பரிதாப சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

    சென்னை கடற்கரை-தாம்பரம் இடையே இன்று அதிகாலை வழக்கம் போல மின்சார ரெயில் சேவை தொடங்கி நடந்தபடி இருந்தது. காலை 7 மணி அளவில் கோடம்பாக்கம்-மாம்பலம் இடையே உயர்மின் அழுத்த கம்பி அறுந்து விழுந்தது.

    இதனால் கடற்கரையில் இருந்து தாம்பரம் நோக்கி சென்ற மின்சார ரெயில்கள், தாம்பரத்தில் இருந்து கடற்கரை நோக்கி வரும் மின்சார ரெயில்கள் சேவையில் கடும் பாதிப்பு ஏற்பட்டது. அனைத்து மின்சார ரெயில்களும் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டன.

    மின்தடை பற்றி தகவல் அறிந்ததும் ரெயில்வே தொழில்நுட்ப ஊழியர்கள் அங்கு விரைந்து சென்று உயர்மின் அழுத்த வயர்களை சீரமைத்தனர். இந்த பணி முடிவடைவதற்கு சுமார் 2 மணி நேரம் ஆனது. இதனால் கடற்கரை முதல் தாம்பரம் வரை அனைத்து ரெயில் நிலையங்களிலும் பயணிகள் கூட்டம் கட்டுக்கடங்காத அளவுக்கு அதிகரித்தது.

    மின்சார ரெயிலை எதிர்பார்த்து அனைத்து ரெயில் நிலையங்களிலும் பயணிகள் காத்து கொண்டே நின்றனர். 2 மணி நேரத்திற்கு பிறகு அனைத்து ரெயில்களும் தாமதமாக சேவையை தொடங்கின. நீண்ட நேரமாக காத்து நின்றதால் பயணிகள் அனைவரும் கிடைத்த ரெயில்களில் முண்டியடித்தபடி ஏறி சென்றனர்.

    சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம், செங்கல்பட்டு வழியாக திருமால்பூர் வரை செல்லும் விரைவு ரெயில் கடற்கரையில் வழக்கமாக காலை 7.05 மணிக்கு புறப்படும். ஆனால் இன்று காலை மின்வயர் அறுந்து விழுந்து தடை ஏற்பட்டதால் அந்த ரெயில் 7.40 மணிக்கு தான் புறப்பட்டது.

    தாமதம் மற்றும் அதிக விரைவு ரெயில் சேவை இல்லாத காரணத்தால் சென்னையில் இருந்து புறநகர் பகுதிகளுக்கு வேலைக்கு செல்பவர்களும், பள்ளி-கல்லூரி மாணவர்களும் ஆயிரக்கணக்கில் அந்த ரெயிலில் ஏறினார்கள். இதனால் அந்த ரெயிலில் அனைத்து பெட்டிகளிலும் கூட்டம் நிரம்பி வழிந்தது.

    கடற்கரைக்கு பிறகு கோட்டை, பார்க், எழும்பூர், சேத்துபட்டு, நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், மாம்பலம், சைதாப்பேட்டை, கிண்டி ஆகிய 9 ரெயில் நிலையங்களிலும் ஏராளமானவர்கள் அந்த விரைவு ரெயிலில் ஏறினார்கள். இதனால் நிறைய பயணிகள் ஒவ்வொரு ரெயில் பெட்டி வாசலிலும் தொங்கி கொண்டே பயணம் செய்ய நேரிட்டது.

    காலை 8.25 மணிக்கு அந்த ரெயில் பரங்கிமலை ரெயில் நிலையத்துக்குள் வந்தது. தாமதம் காரணமாக அந்த ரெயில் சற்று வேகமாக வந்ததாக கூறப்படுகிறது.

    இதற்கிடையே அந்த ரெயில் வழக்கமான பிளாட்பாரத்துக்குள் செல்லாமல் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் செல்லும் 4-வது பிளாட்பாரத்திற்கு திருப்பி விடப்பட்டு இருந்தது. இதுதான் இன்று காலை நடந்த பரிதாப விபத்துக்கு காரணமாகி விட்டது.

    4-வது பிளாட்பாரத்திற்கும், 3-வது பிளாட்பாரத்திற்கும் இடையில் இருந்த சிமெண்ட் தடுப்பு சுவரை ரெயில் பெட்டி வாசல்களில் தொங்கிக் கொண்டு வந்த பயணிகள் கவனிக்கவில்லை. ரெயில் பிளாட்பாரத்தில் நுழைந்ததும் தொங்கிக் கொண்டு இருந்த பயணிகளில் ஒருவரது முதுகில் தொங்கவிட்டு இருந்த பை சிமெண்ட் தடுப்பு சுவரில் மாட்டிக் கொண்டது.

    இதனால் அந்த பயணி நிலை தடுமாறி கீழே விழுந்தார். அப்போது அவரோடு சேர்த்து அவர் அருகில் தொங்கிக் கொண்டு இருந்த 8 பயணிகள் அடுத்தடுத்து சிமெண்ட் தடுப்பு சுவரில் மோதி கீழே விழுந்தனர்.

    சிமெண்ட் தடுப்பு சுவரில் மோதிய வேகத்தில் 2 பயணிகளின் தலை துண்டாகி சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தனர். மற்றொரு பயணி தலை நசுங்கி உயிர் இழந்தார். 6 பயணிகள் படுகாயங்களுடன் உயிருக்கு போராடியபடி கிடந்தனர்.

    9 பயணிகள் கீழே விழுந்த தகவல் அறிந்ததும் டிரைவர் ரெயிலை அங்கேயே நிறுத்தினார். பயணிகள் அனைவரும் அலறியடித்தபடி கீழே இறங்கினார்கள். ரெயில்வே போலீசாருக்கு இதுபற்றி தகவல் தெரிவிக்கப்பட்டது.



    ரெயில்வே போலீசார் ஆம்புலன்ஸ் வேனுடன் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். உயிருக்கு போராடிய 6 பேரையும் மீட்டு ஆம்புலன்ஸ் வேனில் ஏற்றினார்கள். அப்போது நவீன்குமார் என்ற பயணி இறந்தார்.

    முதலில் பலியானவர்கள் விவரம் தெரியாமல் இருந்தது. பிறகு அவர்களது உடமைகளை ஆய்வு செய்து அவர்கள் யார் என்று கண்டுபிடித்தனர்.

    பலியானவர்களில் ஒருவர் சிவக்குமார். இவர் பல்லாவரத்தில் உள்ள வேல்ஸ் கல்லூரில் படித்து வந்தார். இன்று காலை கல்லூரிக்கு செல்லும் வழியில் விபத்தில் சிக்கி பலியாகி விட்டார்.

    மற்றொருவர் பரத் என்று தெரிய வந்துள்ளது. இவர் தாம்பரம் ஜெயகோபால் கரோடியா பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்தார். மற்றவர்கள் யார் என்பதை போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    இதற்கிடையே காயம் அடைந்த 4 பேரில் 2 பேர் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையிலும், 2 பேர் ஸ்டான்லி மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் ஒரு பயணிக்கு 2 கால்களும் துண்டாகி விட்டதாக கூறப்படுகிறது. மற்றொருவருக்கு கை நசுங்கி உள்ளது.

    அவர்களை காப்பாற்ற டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். சிகிச்சை பெற்று வருபவர்களின் விவரங்களை ரெயில்வே போலீசார் சேகரித்து வருகிறார்கள்.

    4 பேரை பலிகொண்ட இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் ரெயில்வே ஏ.டி.ஜி.பி. சைலேந்திரபாபு, தென்சென்னை கூடுதல் கமி‌ஷனர் சாரங்கன், ரெயில்வே பாதுகாப்பு படை ஐ.ஜி. பீஜேந்திரசிங், அடையாறு துணை கமி‌ஷனர் சஷாங்சாய் ஆகியோர் பரங்கிமலைக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். விபத்து நடந்த சிமெண்ட் தடுப்பு சுவர் பகுதியையும் பார்வையிட்டனர்.

    நேற்று இரவும், இன்று காலையிலும் அடுத்தடுத்த சம்பவங்களில் 6 பேர் உயிர் இழந்து இருப்பதால் இதுபற்றி ஆய்வு செய்ய ரெயில்வே அதிகாரிகள் உத்தரவிட்டனர். #StThomasMountStation #ChennaiAccident #TrainAccident 
    ×