search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காட்டாங்கொளத்தூரில் விபத்து- மோட்டார் சைக்கிள் மோதி கல்லூரி மாணவி பலி
    X

    காட்டாங்கொளத்தூரில் விபத்து- மோட்டார் சைக்கிள் மோதி கல்லூரி மாணவி பலி

    • விபத்தில் மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த வாலிபரும் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
    • போலீஸ் விசாரணையில் அவரது பெயர் சர்மா என்பது தெரியவந்தது.

    காட்டாங்கொளத்தூர்:

    காட்டாங்கொளத்தூரில் தனியார் பல்கலைக்கழகத்தில் படித்து வந்தவர் தாமரை செல்வி.

    எம்.எஸ்.சி. முதலாம் ஆண்டு மாணவியான இவர் காட்டாங்கொளத்தூரில் சாலையை கடந்தார். அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள், மாணவி தாமரைச் செல்வி மீது பயங்கரமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவருக்கு உடலில் பல இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டது.

    ரத்த வெள்ளத்தில் தாமரை செல்வி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பலியானார். இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த வாலிபரும் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    போலீஸ் விசாரணையில் அவரது பெயர் சர்மா என்பது தெரியவந்தது. அரியானாவை சேர்ந்த இவர் அப்பகுதியில் தங்கி இருந்து என்ஜினீயரிங் படித்து வந்தார். ஆஸ்பத்திரியில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக தாம்பரம் போக்குவரத்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×