search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "thiruvarur"

    கஜா புயல் காரணமாக அரியலூர் மாவட்டத்தில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.#GajaStorm
    அரியலூர்:

    கஜா புயல் காரணமாக அரியலூர் மாவட்டத்தில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    கஜா புயல் கரையைக் கடந்து வரும் சூழலில் விடிய, விடிய  அரியலூர் மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்த நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படுவதாக ஆட்சியர் விஜயலட்சுமி தெரிவித்துள்ளார்.

    சற்று முன் கஜா புயல் கரையைக் கடந்து வரும் சூழலில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சிவகங்கையில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படுவதாக ஆட்சியர் ஜெயகாந்தன் தெரிவித்துள்ளார்.

    கஜா புயல் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, புதுச்சேரி, காரைக்கால், மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு  இன்று விடுமுறை அளித்து உத்தரவிட்டுள்ளது.

    இதேபோல், புதுச்சேரி, காரைக்காலிலும் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

    ஏற்கனவே, கஜா புயல் காரணமாக நாகை, கடலூர், ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களின் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது. #GajaStorm
    கஜா புயல் காரணமாக சிவகங்கை மாவட்டத்தில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.#GajaStorm
    சிவகங்கை:

    கஜா புயல் காரணமாக சிவகங்கை மாவட்டத்தில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    கஜா புயல் கரையைக் கடந்து வரும் சூழலில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படுவதாக ஆட்சியர் ஜெயகாந்தன் தெரிவித்துள்ளார்.

    கஜா புயல் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு  இன்று விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளார்.

    இதேபோல், புதுச்சேரி, காரைக்காலிலும் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

    ஏற்கனவே, கஜா புயல் காரணமாக நாகை, கடலூர், ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களின் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது. #GajaStorm
    கஜா புயல் காரணமாக தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். #GajaStorm
    தஞ்சாவூர்:

    வங்கக்கடலில் உருவான கஜா புயல் கடலூர் - ஸ்ரீஹரிகோட்டா இடையே கரையை கடக்கும் என்று முதலில் கணிக்கப்பட்டது. அதன்பின்னர் புயல் நகரும் திசை மற்றும் அதன் வேகத்தில் மாற்றம் ஏற்பட்டதால் கடலூருக்கும் - பாம்பனுக்கும் இடையில் கரையை கடக்கும் என்று கூறப்பட்டுள்ளது.  
     
    இந்நிலையில் கஜா புயல் இன்று இரவு கரையை கடக்கும் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

    புயல் கரை கடக்கும்போது கடலூர், நாகை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் பலத்த மழை பெய்யலாம் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

    கஜா புயல் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு  நாளை விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். 

    இதேபோல், புதுச்சேரி, காரைக்காலிலும் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

    ஏற்கனவே, கஜா புயல் காரணமாக நாகை, கடலூர், ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களின் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது. #GajaStorm
    திருவாரூர், திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலை நடத்த மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்யும்படி தமிழக தலைமை தேர்தல் அதிகாரிக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. #HCMaduraiBench #Byelection #Thiruvarur #Thiruparankundram
    மதுரை:

    தமிழகத்தில் காலியாக உள்ள திருவாரூர், திருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தலை நடத்த உத்தரவிடக் கோரி மதுரையை சேர்ந்த ரமேஷ் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் இன்று விசாரணைக்கு வந்தது.

    அப்போது இடைத்தேர்தல் நடத்தாத தேர்தல் ஆணையம் மீது அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், திருவாரூர், திருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தலை நடத்த எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை என்ன? என கேள்வி எழுப்பினர்.



    மேலும் தேர்தலுக்கான கால அட்டவணை இருக்கிறதா? என்று கேட்ட நீதிபதிகள், தேர்தல் நடவடிக்கை குறித்த அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என தமிழக தேர்தல் அதிகாரிக்கு உத்தரவு பிறப்பித்து வழக்கை ஒத்திவைத்தனர். #HCMaduraiBench #Byelection #Thiruvarur #Thiruparankundram 
    திருவாரூரில் விவசாயி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருவாரூர்:

    திருவாரூர் மடப்புரம் பகுதியை சேர்ந்தவர் அருணாசலம் (வயது 50). விவசாயி. கடந்த சில நாட்களுக்கு முன்பு இவரது சகோதரர் இறந்து விட்டார். இதில் மனமுடைந்த நிலையில் இருந்த அருணாசலம் நேற்று வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இது பற்றி அருணாசலத்தின் மகள் லாவண்யா திருவாரூர் டவுன் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் குலோத்துங்கன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    திருவாரூர் தியாகராஜ சாமி கோவிலில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவினர் ஆய்வு நடத்துவது பக்தர்கள் மற்றும் பொது மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #Idol #IdolSmuggling
    திருவாரூர்:

    திருவாரூர் தியாகராஜர் திருக்கோவில் உலோக சிலைகள் பாதுகாப்பு மையத்தில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு கூடுதல் கண்காணிப்பாளர் ராஜாராமன் தலைமையில் தொல்லியல் துறை அதிகாரிகள் உள்ளிட்ட 50 -க்கும் மேற்பட்டவர்கள் 2-வது நாளாக இன்றும் ஆய்வு மேற்கொண்டு உள்ளனர்.

    தமிழகம் முழுவதும் கோவில்களில் உள்ள சாமி சிலைகள் காணாமல் போனது குறித்தும், கோவில்களில் உள்ள சிலைகள் உண்மையான வையா என்பது குறித்தும் தொல்லியல் நிபுணர்கள் மற்றும் சிலை கடத்தல் பிரிவினர் பல்வேறு இடங்களில் ஆய்வு மேற் கொண்டு வருகின்றனர்.

    திருவாரூர் தியாகராஜர் கோவிலில் உள்ள உலோக திருமேனி பாதுகாப்பு மையத்தில் 4,359 -க்கும் மேற்பட்ட ஐம்பொன் சிலைகள் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இந்த சிலைகள் திருவாரூர் , தஞ்சாவூர் , நாகப்பட்டிணம், கடலூர். மாவட்டங்களில் உள்ள 626 சிறிய கோவில்களுக்குரிய ஐம்பொன் சிலைகள் ஆகும்.

    இந்த சிலைகள் அந்த கோவில்களின் திருவிழாவின் போது அறநிலையத் துறை உதவி ஆணையர் அனுமதி பெற்று சிலைகள் கோவிலுக்கு எடுத்து செல்லப்பட்டு திருவிழா முடிந்த பிறகு மீண்டும் திருவாரூரில் சிலைகள் பாதுகாப்பு மையத்தில் ஒப்படைக்கப்பட்டு வருகிறது.

    இந்தநிலையில் பாதுகாப்பு மையத்தில் உள்ள இந்த சிலைகளின் உண்மை தன்மை குறித்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ராஜாராமன் தலைமையில் நேற்று முதல் ஆய்வு நடைபெற்று வருகிறது.

    இந்த ஆய்வில் மத்திய தொல்லியல் துறை தென் மண்டல இயக்குனர் நம்பிராஜன் தலைமையில் 16 பேர் சிலைகளை ஆய்வு நடத்தி வருகின்றனர். இந்த ஆய்விற்கு சிலை கடத்தல் பிரிவினர் உரிய பாதுகாப்பினை வழங்கி வருகின்றனர்.

    இதற்கிடையே கோவில் சிலைகள் பாதுகாப்பகத்தில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிலைகள் உள்ளது. தொல்லியல் துறையினர் நவீன கருவிகளை கொண்டு தினமும் குறைந்தது 80 சிலைகளை தான் ஆய்வு செய்ய முடியும். எனவே அனைத்து சிலைகளையும் தொடர்ந்து ஆய்வு செய்ய தொல்லியல் துறையினர் முடிவு செய்துள்ளனர்.

    இது குறித்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ராஜாராமன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    உலோக சிலைகளின் தொன்மை தன்மை குறித்து தொல்லியல் துறையின் மண்டல இயக்குனர் நம்பிராஜன் தலைமையில் குழுவினர் ஆய்வு நடத்தி வருகின்றனர்.இதில் உலோக சிலைகள் மட்டுமே ஆய்விற்கு உட்படுத்தப்படுகிறது. தற்போது கற்சிலைகள் ஆய்விற்கு உட்படுத்தப்படவில்லை. தமிழகத்தில் உள்ள அனைத்து சிலைகளும் ஆய்வு செய்ய நீதிமன்ற உத்தரவுபடி இந்த ஆய்வானது மேற்கொள்ளப்படுகிறது

    இங்கு 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிலைகள் இருப்பதாக தகவல் கிடைத்ததின் பேரில் இந்த ஆய்வு தொடர்ந்து நடத்தப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார். #Idol #IdolSmuggling

    திருவாரூரில் மின்வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    திருவாரூர்:

    திருவாரூர் மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு சி.ஐ.டி.யூ. மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு திட்ட தலைவர் சகாயராஜ் தலைமை தாங்கினார். திட்ட துணைத்தலைவர் சுப்பிரமணியன், திட்ட செயலாளர் ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சி.ஐ.டி.யூ. மாவட்ட செயலாளர் முருகையன், மாவட்ட துணைச்செயலாளர்கள் வைத்தியநாதன், பழனிவேல் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

    தொழிற்சங்க உரிமைகளை நிலை நாட்ட வேண்டும். தொழிலாளர்கள் சட்டங்களை அமல்படுத்த வேண்டும். இந்திய பன்னாட்டு நிறுவனங்களின் சட்ட விரோத நடவடிக்கைகளை தடுத்து நிறுத்த வேண்டும்.

    போராடும் தொழிற்சங்கத்தோடு உடனடியாக பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். பல்வேறு தனியார் வாகன நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்களின் கோரிக்கைகளை ஏற்று தீர்வு காண வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

    இதில் திட்ட துணைத்தலைவர்கள் ராமசாமி, கண்ணன், கோட்ட செயலாளர் தமிழரசன், கோட்ட தலைவர் முரளிதரன், மன்னார்குடி கோட்ட செயலாளர் வீரபாண்டியன், திட்ட துணை செயலாளர் வினோத் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் திட்ட பொருளாளர் ஜெயச்சந்திரன் நன்றி கூறினார்.
    திருவாரூரில் தொழிலாளர் நல சட்டங்களை அமல்படுத்தக்கோரி இந்திய தொழிற்சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
    திருவாரூர்:

    திருவாரூர் தலைமை தபால் நிலையம் முன்பு சி.ஐ.டி.யூ. இந்திய தொழிற்சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு சி.ஐ.டி.யூ. மாவட்ட செயலாளர் முருகையன் தலைமை தாங்கினார். மாநில துணை பொதுச்செயலாளர் குமார் கலந்து கொண்டு பேசினார். இதில் முன்னாள் எம்.எல்.ஏ. மகேந்திரன், சி.ஐ.டி.யூ. மாவட்ட துணைத்தலைவர் பழனிவேல், மாவட்ட பொருளாளர் பாண்டியன், மாவட்ட துணைச்செயலாளர் அனிபா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    தொழிலாளர் நல சட்டங் களை அமல்படுத்த வேண்டும். தொழிற்சங்கங்களுக்கான உரிமைகளை வழங்க வேண்டும். இந்திய, பன்னாட்டு நிறுவனங்களின் சட்ட விரோத நடவடிக்கைகளை தடுத்து நிறுத்த வேண்டும். போராட்டம் நடத்தும் தொழிற்சங்கத்தோடு அரசு உடனடியாக பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். பல்வேறு நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகளை தீர்வு காண வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக வருகிற 3- ந்தேதி திருவாரூர் வருகை தர உள்ளார். #TNGovernor #BanwarilalPurohit
    திருவாரூர்:

    தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக வருகிற 3- ந்தேதி திருவாரூர் வருகை தர உள்ளார்.

    3-ந்தேதி மதியம் திருவாரூருக்கு வருகை தரும் புரோகித்திற்கு மாவட்ட எல்லையான வலங்கைமானில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மாவட்ட கலெக்டர் நிர்மல்ராஜ் தலைமையில் வரவேற்பு அளிக்கப்படுகிறது.

    அதனை தொடர்ந்து திருவாரூர் வருகை தரும் கவர்னர் பன்வாரிலால் திருவாரூர் விளமல் சுற்றுலா மாளிகையில் மாவட்ட அளவிலான அதிகாரிகளுடன் வளர்ச்சி பணிகள் குறித்து ஆய்வு செய்கிறார்.

    இதனை தொடர்ந்து மதியம் 2 மணி முதல் 4.20 மணி வரை பொதுமக்களை சந்தித்து மனுக்கள பெறுகிறார். அதன் பின்னர் திருவாரூர் தெற்குவீதியில் அமைக்கப்பட்டுள்ள மத்திய அரசின் நலத்திட்டங்கள் குறித்த கண்காட்சியை திறந்து வைத்து பார்வையிடுகிறார்.

    அதன் பிறகு அகர திருநல்லூர் கிராமத்திற்கு சென்று சுகாதார பணிகளை பார்வையிடுகிறார். தூய்மை செய்யும் பணியிலும் தன்னை ஈடுபடுத்திக் கொள்கிறார். அதன்பின்னர் திருவாரூர் விளமல் சுற்றுலா மாளிகை வரும் ஆளுநர் இரவு ஓய்வு எடுக்கிறார். அன்று இரவு கவர்னர் பன்வாரிலால் திருவாரூரில் இருந்து கார் மூலம் திருச்சிக்கு புறப்பட்டு அங்கிருந்து விமானம் மூலம் சென்னைக்கு புறப்பட்டு செல்கிறார்.

    முன்னதாக 3-ந் தேதி காலை கும்பகோணத்துக்கு கவர்னர் பன்வாரிலால் செல்கிறார். காலை 10.30 மணிக்கு கும்பகோணம் அருகே அருகே உள்ள திப்பிராஜபுரம் அரசுபள்ளியில் புதிய கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொள்ளும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.

    அதனைத்தொடர்ந்து கே.ஆர்.எஸ். கவுசல்யா மகாலில் டாக்டர் செண்பகராமன் பிள்ளையின் உருவச்சிலையை திறந்து வைத்து பேசுகிறார். பின்னர் பிரதமரின் பசுமை புரட்சி திட்டத்தின் சார்பில் திப்பிராஜபுரத்தை தத்து எடுத்து கொள்வதை முறைப்படி அறிவித்து, பல்வேறு துறையில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்ற 50 வயதுக்கு மேற்பட்ட 4 பேரை பாராட்டி நினைவு பரிசு வழங்குகிறார். திப்புராஜபுரம் கிராமத்தில் 20 இடங்களில் கண்காணிப்பு கேமிரா பொருத்தியுள்ளதை இயக்கி வைக்கிறார்.

    இதில் தஞ்சை மாவட்ட கலெக்டர் அண்ணாதுரை, அறக்கட்டளையின் கிராமிய திட்ட ஆலோசகர் சென்னை கீதா ராஜசேகர் ஆகியோர் பேசுகின்றனர்.

    விழா நிகழ்ச்சிகளை முடித்து கொண்டு கும்பகோணத்தில் இருந்து கார் மூலம் கவர்னர் பன்வாரிலால் திருவாரூருக்கு புறப்பட்டு செல்கிறார். #TNGovernor #BanwarilalPurohit
    திருப்பரங்குன்றம், திருவாரூர் இடைத்தேர்தல்களில் அ.தி.மு.க.தான் வெற்றி பெறும் என்று துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் கூறினார். #ADMK #OPanneerSelvam
    திருப்போரூர்:

    திருப்போரூர் முருகன் கோவிலில் இன்று காலை அ.தி.மு.க. பிரமுகர் ஒருவரது இல்லத் திருமண விழா நடந்தது. இதில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    திருப்பரங்குன்றம், திருவாரூர் இடைத்தேர்தல்களில் நாங்கள்தான் வெற்றி பெறுவோம். பொறுத்திருந்து பாருங்கள்.

    திருச்சி முக்கொம்பு அணையில் பொதுப்பணித்துறையின் பராமரிப்பு நன்றாக இருந்தது. அணை உடைந்தது குறித்து ஆய்வு செய்ய முதல்-அமைச்சர் சென்றுள்ளார். அவர் ஆய்வு செய்து விளக்கம் அளிப்பார்.

    அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட்டால் தான் அ.தி.மு.க.வை வலுப்படுத்த முடியும்.

    இவ்வாறு அவர் கூறினார்.


    இதைத் தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம் கோவிலில் இருந்து காரில் புறப்பட்டார். கண்ணகப்பட்டு சென்றபோது கட்சி பிரமுகர் ஒருவரது டீக்கடைக்கு சென்றார். அங்கு அமர்ந்து டீ குடித்தார். அப்போது டீ நன்றாக உள்ளதாக பாராட்டினார்.

    உடன் எம்.பி.க்கள் மைத்ரேயன், மரகதம் குமரவேல், மாவட்ட செயலாளர் ஆறுமுகம், ஒன்றிய செயலாளர் குமரவேல் மற்றும் கட்சி நிர்வாகிகள் இருந்தனர்.

    முன்னதாக திருப்போரூர் வந்த ஓ.பன்னீர்செல்வத்துக்கு கண்ணகப்பட்டு மற்றும் கோவில் குளம் அருகே மேளதாளம் முழங்க வரவேற்பு அளிக்கப்பட்டது. #ADMK #OPanneerSelvam
    காவிரி ஆற்றில் அதிக நீர் திறக்கப்பட உள்ளதால் கரூர், திருவாரூர் மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. #Karur #Thanjavore #FloodAlert
    கரூர்:

    சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அணையில் தற்போது தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் காவிரி ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகின்றது. இதனால், ஆற்றில் யாரும் குளிக்க வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டிருந்தது.

    மேட்டூர் அணையின் கிழக்கு மற்றும் மேற்கு கரைகளில் இருந்து இரவு 8 மணி முதல் நீர் திறக்கப்பட உள்ளது. முதலில் 200 கன அடி தண்ணீர் திறக்கப்படும். பின்னர் அது படிப்படியாஅக 1000 கன அடி தண்ணீர் திறக்கப்படும். எனவே, கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளனர் என சேலம் மாவட்ட கலெக்டர் ரோகிணி தெரிவித்துள்ளார்.
      
    இந்நிலையில், காவிரி ஆற்றில் அதிக நீர் திறக்கப்பட உள்ளதால் கரூர் மற்றும் திருவாரூர் மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக, கரூர் மாவட்ட ஆட்சியர் அன்பழகன் கூறுகையில், காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. காவிரியில் இருந்து நீர் திறப்பு அதிகரித்து வருவதால் கரையோரத்தில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடத்துக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். மேலும், பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் யாரும் காவிரி ஆற்றில் இறங்கி குளிக்க வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

    இதேபோல், கல்லணையில் இருந்து நீர் திறக்கப்பட்டுள்ளதால் காவிரி ஆற்றை பொதுமக்கள் யாரும் கடந்து செல்ல வேண்டாம் என்றும், காவிரி ஆற்றில் பொதுமக்கள் இறங்கவோ அல்லது குளிக்கவோ கூடாது என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது என தஞ்சை மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார். #Karur #Thanjavore #FloodAlert
    மேட்டூர் அணையை திறக்கும் அளவிற்கு அணையில் நீர் இருப்பு இல்லை என்று திருவாரூரில் அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார். #MetturDam #TNMinister #Kamaraj
    திருவாரூர்:

    திருவாரூரில் கூட்டுறவுத்துறை சார்பில் பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனை நிலையம் இன்று திறக்கப்பட்டது. விழாவில் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் கலந்து கொண்டு பெட்ரோல்- டீசல் விற்பனை நிலையத்தை திறந்து வைத்து முதல் விற்பனையை தொடங்கி வைத்தார்.  இதில் மாவட்ட கலெக்டர் நிர்மல்ராஜ்  மற்றும் கூட்டுறவு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    இதையடுத்து அமைச்சர் காமராஜ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    கூட்டுறவு சங்கங்களின் தலைவர்கள் இல்லையென்றாலும் அதன் நிர்வாகிகள் விவசாயிகளுக்கு தேவையான அனைத்து திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறார்கள். குறுவை தொகுப்பு திட்டத்தின் மூலம் சாகுபடிக்கு தேவையான அனைத்து உதவிகளையும் கூட்டுறவு சங்கங்கள் மூலமாக விவசாயிகள் பெற்றுக் கொள்ளலாம்.


    தற்போது மேட்டூர் அணையை திறக்கும் அளவிற்கு அணையில் நீர் இருப்பு இல்லை. அதேநேரத்தில் கர்நாடக மாநிலத்தில் மழை காரணாக கபினி அணை திறந்து விடப்பட்டுள்ளதால் நீர்வரத்து அதிகரித்து வருகிறது. நீர்மட்டத்தின் உயர்வை பொறுத்து மேட்டூர் அணை திறப்பது குறித்து முடிவு செய்யப்படும்.
     
    தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்களுக்கு சட்டப்பேரவையில் பேச உரிய வாய்ப்பும், நேரமும் வழங்கப்படுகிறது. ஆனால் அவர்கள் நொண்டி சாக்கு சொல்லிக் கொண்டு வெளிநடப்பு என்ற நாடகத்தை நடத்துகின்றனர். இது மக்களுக்கு எந்த பயனையும் அளிக்காது. கூட்டுறவு சங்க தேர்தல் நடைபெறாததால் பணிகள் தொய்வடையவில்லை. வங்கி செயலாளர்கள் பணிகளை சிறப்பாக செய்து வருவதால் விவசாயிகளுக்கு எந்த பிரச்சனையும் ஏற்படவில்லை.

    மேலும் தமிழக முதல்வர் விவசாயிகளுக்கு பயனளிக்கும் வகையில் ரூ.115 கோடி மதிப்பில் குறுவை தொகுப்பு திட்டம் அறிவித்திருப்பதின் மூலம் குறுவை சாகுபடி காவிரி டெல்டாவில் சிறப்பாக நடைபெறும்.

     இவ்வாறு அவர் கூறினார். #MetturDam #TNMinister #Kamaraj
    ×