search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Flood Alert"

    • காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
    • நீரில் அளவு மேலும் அதிகரிக்கப்படும்.

    கரூர்:

    கரூர் மாவட்டத்தில் காவிரி கரையோர மக்களுக்கு கலெக்டர் த.பிரபுசங்கர் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது, சேலம் மாவட்டம் மேட்டூர் அணை நீர்மட்டம் ஏற்கனவே 120 அடி இருப்பில் உள்ள நிலையில், மேட்டூர் அணையின் நீர்பிடிப்பு பகுதியில் கனமழை பெய்து வருவதால் மேட்டூர் அணைக்கு தற்போதைய நிலையில் 1.20 லட்சம் கன அடி தண்ணீர் வந்துக்கொண்டிருக்கும் நிலையில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக திறக்கப்படும் நீரில் அளவு மேலும் அதிகரிக்கப்படும்.

    எனவே, காவிரி ஆற்றின் கரையோர தாழ்வான பகுதிகளிலுள்ள பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்படுகின்றனர். மேலும் பொதுமக்கள் தனியாகவோ, கால்நடைகளுடனோ ஆற்றில் இறங்கவேண்டாம் என தெரிவித்துள்ளார். மேலும், காவிரி கரையோர பகுதிகளில் தண்டோரா மூலம் எச்சரிக்கை அறிவிப்பு செய்யப்பட்டது.

    கனமழை எதிரொலியாக முல்லைப்பெரியாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. #MullaperiyarDam
    கம்பம்:

    கேரளாவில் பெய்து வரும் கனமழை காரணமாக தமிழக- கேரள மாநில எல்லையில் குமுளி அருகே அமைந்துள்ள முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 142 அடியை எட்டியது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருவதால் அணைக்கு நீர்வரத்து அதிக அளவில் உள்ளது. அணையில் இருந்து வினாடிக்கு 21 ஆயிரம் கன அடி வீதம் உபரிநீர் திறக்கப்பட்டது.

    குமுளி அருகே உள்ள இரைச்சல் பாலம் வழியாக தமிழக பகுதிக்கு திறக்கப்படும் தண்ணீரின் அளவும் 2 ஆயிரத்து 200 கன அடியில் இருந்து, 2 ஆயிரத்து 336 கன அடியாக அதிகரிக்கப்பட்டது. இதனால் இரைச்சல் பாலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அப்பகுதியில் சாலை துண்டிக்கப்பட்டு உள்ளது.

    மேலும் தேனி மாவட்டம் கம்பம், சின்னமனூர், உத்தமபாளையம், வீரபாண்டி பகுதிகளில் பெய்த பலத்த மழையால் முல்லைப்பெரியாறு ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது. லோயர்கேம்ப் முதல் வைகை அணை வரை முல்லைப்பெரியாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து செல்கிறது.

    கம்பம் அருகே உள்ள சுருளி அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. கொடைக்கானல் மலைப்பகுதியில் கனமழை பெய்து வருவதால் பெரியகுளம் அருகே உள்ள கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. முல்லைப்பெரியாற்றின் கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது.

    மூல வைகை ஆற்றில் தண்ணீர் வருவதாலும், முல்லைப்பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படுவதாலும் 71 அடி உயரம் கொண்ட வைகை அணையின் நீர்மட்டம் நேற்று மாலை நிலவரப்படி 65 அடியை நெருங்கியது. வினாடிக்கு 5 ஆயிரத்து 400 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானிசாகர் அணைக்கு நேற்று மாலை வினாடிக்கு 62 ஆயிரத்து 749 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. அணையில் இருந்து அதே அளவு தண்ணீர் பவானி ஆற்றுக்கு திறக்கப்பட்டது. இதனால் பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. சத்தியமங்கலத்தில் 250 வீடுகளையும், பவானிசாகரில் 250 வீடுகளையும் வெள்ளம் சூழ்ந்தது.

    கோபியில் இருந்து சத்தியமங்கலம் அருகே உள்ள ஆலத்துக்கோம்பைக்கு தனியார் பள்ளி வேன் மாணவ- மாணவிகளை அழைத்து வருவதற்காக சென்றது. அங்குள்ள ரோட்டில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் பள்ளி வேன் தண்ணீரில் இழுத்து செல்லப்பட்டு பாதியளவு பகுதி தண்ணீரில் மூழ்கியது. வேனில் இருந்த டிரைவர், பெண் உதவியாளர் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். கோபி அருகே உள்ள கொடிவேரி அணை மூழ்கியபடி தண்ணீர் செல்கிறது.

    திருப்பூர் மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையில் கன மழை பெய்து வருவதால் அமராவதி, திருமூர்த்தி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது. அமராவதி அணையில் இருந்து வினாடிக்கு 11 ஆயிரத்து 685 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. இதனால் அமராவதி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    திருமூர்த்தி அணையில் இருந்து வினாடிக்கு 619 கன தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் கோவிலுக்கு சற்று உயரத்தில் அமைந்துள்ள பஞ்சலிங்க அருவியிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. திருப்பூர் நொய்யல் ஆற்றிலும் அதிக அளவு தண்ணீர் வந்து கொண்டு இருப்பதால் நொய்யல் ஆற்றின் கரையோர மக்களுக்கும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

    பலத்த மழை காரணமாக நெல்லை மாவட்டத்தில் உள்ள பாபநாசம் அணையில் இருந்து வினாடிக்கு 4 ஆயிரம் கன அடியும், சேர்வலாறு அணையில் இருந்து வினாடிக்கு 8 ஆயிரத்து 814 கனஅடியும், கடனா நதி அணையில் இருந்து வினாடிக்கு 1,132 கன அடியும், கருப்பாநதி அணையில் இருந்து வினாடிக்கு 1,150 கன அடியும் திறந்து விடப்பட்டது.

    குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவி, பாபநாசம் அகஸ்தியர் அருவி, மணிமுத்தாறு அருவி, களக்காடு தலையணை அருவி ஆகிய அருவிகளில் தண்ணீர் அதிக அளவு கொட்டுவதால் குளிக்க தொடர்ந்து தடை விதிக்கப்பட்டுள்ளது. பாபநாசம் முண்டந்துறை இரும்பு பாலம், சேரன்மாதேவி, ஏரல் தரைப்பாலங்களை மூழ்கடித்து தண்ணீர் செல்கிறது.

    தண்ணீர் ஆர்ப்பரித்து ஓடுவதால் நெல்லையில் உள்ள தாமிரபரணி ஆற்றில் நேற்று 2-வது நாளாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. நெல்லை குறுக்குத்துறை முருகன் கோவிலை வெள்ளம் சூழ்ந்தபடி செல்கிறது. கைலாசபுரத்தில் தாமிரபரணி ஆற்றுக்குள் இருக்கும் கல் மண்டபங்களை வெள்ளம் மூழ்கடித்து செல்கிறது.

    சிந்துபூந்துறையில் கீழத்தெருவில் உள்ள விநாயகர் சிலை முன்பு உள்ள படித்துறையை தொட்டபடி வெள்ளம் செல்கிறது. கொக்கிரகுளத்தில் புதிதாக பாலம் கட்டுவதற்காக போடப்பட்டிருந்த தளவாட பொருட்கள் தண்ணீரில் மூழ்கின. கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க எச்சரிக்கை விடப்பட்டது.

    குமரி மாவட்டம் முழுவதும் மிதமான மழை பெய்தது. நித்திரைவிளை, மங்காடு, பள்ளிக்கல் உள்ளிட்ட பகுதிகளில் 2-வது நாளாக நேற்றும் வெள்ளம் வடியவில்லை. அந்த பகுதி மக்கள் தற்காலிக முகாம்களில் தங்கி உள்ளனர். தெரிசணம்கோப்பை- அருமநல்லூர் சாலை, குற்றியாணி பகுதி ஆகிய இடங்களில் சாலை துண்டிக்கப்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.  #MullaperiyarDam

    கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் வினாடிக்கு 1.75 லட்சம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் காவிரி கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. #Hogenakkal #Cauvery
    பென்னாகரம்:

    கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் வினாடிக்கு 2 லட்சம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் காவிரி கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

    கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் நேற்று முன்தினம் இரவு கிருஷ்ணராஜ சாகர் (கே.ஆர்.எஸ்). அணைக்கு நீர்வரத்து திடீரென்று அதிகரித்தது. இதையடுத்து நேற்று மாலை 5 மணி நிலவரப்படி கே.ஆர்.எஸ். அணையில் இருந்து 23 மதகுகள் வழியாக வினாடிக்கு 1 லட்சத்து 50 ஆயிரம் கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது.

    இதேபோல் கபினி அணையில் இருந்து வினாடிக்கு 55 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. இதையடுத்து கபினி, கே.ஆர்.எஸ். அணைகளில் இருந்து வினாடிக்கு 2 லட்சம் கனஅடி தண்ணீர் தமிழகத்துக்கு காவிரியில் கரைபுரண்டு ஓடியது.

    இன்று காலை நிலவரப்படி கே.ஆர்.எஸ் அணையிலிருந்து 1.20 லட்சம் கனஅடியும், கபிணி அணையிலிருந்து 50 லட்சம் கனஅடியும் திறக்கப்படுகிறது.

    சிவமொக்கா மாவட்டம் சாகர் தாலுகாவில் உலக புகழ்பெற்ற ஜோக் நீர்வீழ்ச்சி உள்ளது. இந்த நீர்வீழ்ச்சி 830 அடி உயரத்தில் அமைந்துள்ளது. கனமழை காரணமாக லிங்கனமக்கி அணை நிரம்பியதால் அதில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது.

    இதனால், ஜோக் நீர்வீழ்ச்சியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. 4 ஆண்டுகளுக்கு பிறகு ஜோக் நீர்வீழ்ச்சியில் தண்ணீர் கொட்டுவதால் அங்கு சுற்றுலா பயணிகள் குவிந்த வண்ணம் உள்ளனர்.

    தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலு வழியாக தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு நேற்று காலை 9 மணி நிலவரப்படி வினாடிக்கு 1 லட்சத்து 20 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. கர்நாடக அணைகளில் இருந்து அதிக அளவு தண்ணீர் திறக்கப்பட்டதால் ஒகேனக்கலுக்கு நேற்று மாலை 5 மணி நிலவரப்படி வினாடிக்கு 1 லட்சத்து 90 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்தது. இதனால் ஒகேனக்கல்லில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

    ஐந்தருவி இருப்பதே தெரியாத அளவிற்கு தண்ணீர் செல்கிறது. மெயின் அருவிக்கு செல்லும் நடைபாதைக்கு மேல் தண்ணீர் அதிக அளவில் செல்கிறது. மெயின் அருவி, சினிபால்சில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. மேலும் காவிரி கரையோரத்தில் இருந்த 6 வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. இதையடுத்து அங்கு குடியிருந்தவர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். நீர்வரத்து அதிகரித்துக்கொண்டே இருப்பதால் சுற்றுலா பயணிகள் ஒகேனக்கல்லுக்கு வருவதை தவிர்க்க வேண்டும் எனவும், காவிரி கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறும் மாவட்ட நிர்வாகம் சார்பில் தண்டோரா மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    கொள்ளிடம் ஆற்றில் வெள்ளம்

    ஒகேனக்கல்லுக்கு அதிக அளவில் தண்ணீர் வந்த ஆண்டுகள் விவரம் வருமாறு:-

    1961- வினாடிக்கு 3 லட்சம் கனஅடி.

    2005-வினாடிக்கு 2 லட்சத்து 40 ஆயிரம் கனஅடி.

    2013-வினாடிக்கு 1 லட்சத்து 80 ஆயிரம் கனஅடி.

    2018-வினாடிக்கு 1 லட்சத்து 90 ஆயிரம் கனஅடி.

    ஒகேனக்கல்லில் இருந்து சேலம் மாவட்டம் மேட்டூர் அணைக்கு நேற்று மதியம் 2 மணிக்கு வினாடிக்கு 1 லட்சத்து 35 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் வந்தது. அணையில் இருந்து 1 லட்சத்து 40 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறந்துவிடப்பட்டது. நேற்று இரவு அணைக்கு வினாடிக்கு 1 லட்சத்து 55 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. இதையடுத்து அணையில் இருந்து வினாடிக்கு 1 லட்சத்து 60 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டது.

    மேட்டூர் அணை உபரிநீர் போக்கியான 16 கண் பாலத்தின் வழியாகவும் தண்ணீர் திறக்கப்பட்டதால் உபரிநீர் வெளியேறும் பாதை அருகே அமைந்துள்ள வீடுகளை காவிரி வெள்ளம் சூழ்ந்தது. எனவே காவிரி கரையோர பகுதியில் வசிக்கும் மக்களுக்கு தண்டோரா மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    காவிரி பாயும் திருச்சி, தஞ்சை, திருவாரூர் மாவட்டங்களிலும் முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன.

    இன்று காலை நிலவரப்படி கே.ஆர்.எஸ் அணை, கபிணி அணையிலிருந்து  1.75 லட்சம் கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது. #Hogenakkal #Cauvery
    கர்நாடகாவில் இருந்து தமிழகத்துக்கு திறக்கப்படும் நீரின் அளவு அதிகரித்துள்ளதால் காவிரி கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி மத்திய நீர் ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. #FloodAlert #CauveryRiver
    புதுடெல்லி:

    கர்நாடகா மாநிலத்தில் பெய்யும் அதிகப்படியான மழை காரணமாக தமிழகம் கேட்காமலேயே தண்ணீர் வாரி வழங்கப்படுகிறது. மேலும், தமிழகத்திலும் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருவதால் ஆங்காங்கே நீர்நிலைகள் நிரம்பி வருகின்றன.

    காவிரி ஆற்றில் திறக்கப்படும் அதிகப்படியான நீரின் காரணமாக மேட்டூர் அணை இதுவரை 2 முறை தனது முழு கொள்ளளவை எட்டியது.

    இந்நிலையில், தற்போது கர்நாடகாவில் இருந்து தமிழகத்துக்கு 1 லட்சத்து 40 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்படுவதால் காவிரி கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி மத்திய நீர் ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி, தஞ்சாவூர், நாகை ஆகிய மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    இதுபோன்ற அதிகப்படியான நீர் திறக்கப்படும்போதிலும் கூட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நீரை சேமிக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனவும், விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் விவசாயிகள் கோரியுள்ளனர். #FloodAlert #CauveryRiver
    கர்நாடக அணைகளில் இருந்து 1.15 லட்சம் கனஅடி உபரிநீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தின் 6 மாவட்டங்களுக்கு மத்திய அரசு வெள்ள அபாய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளது. #HeavyRain #KarnatakaFlood
    சேலம்:

    கர்நாடகா, கேரளாவில் கனமழை காரணமாக கே.ஆர்.எஸ்., கபினி அணைகள் நிரம்பி தமிழகத்திற்கு வினாடிக்கு 1.15 லட்சம் கனஅடி உபரிநீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தின் 6 மாவட்டங்களுக்கு மத்திய அரசு வெள்ள அபாய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளது.

    கர்நாடகத்தில் உள்ள காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும், கேரளாவின் வயநாடு மாவட்டத்திலும் கடந்த மே மாத இறுதியில் தென்மேற்கு பருவமழை பெய்யத் தொடங்கியது. தொடர்ந்து கொட்டித்தீர்த்த கனமழையால் கர்நாடகத்தின் முக்கிய அணைகளான கபினி, கே.ஆர்.எஸ். (கிருஷ்ணராஜசாகர்) ஆகிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது.



    இதன் காரணமாக கடந்த மாதம் 19-ந் தேதி இரு அணைகளும் நிரம்பின. இதனால் இரு அணைகளில் இருந்தும் தமிழகத்திற்கு வினாடிக்கு ஒரு லட்சம் கனஅடிக்கும் மேல் தண்ணீர் திறந்துவிடப்பட்டது.

    இதன் காரணமாக தமிழகத்தின் மேட்டூர் அணையின் நீர்மட்டமும் உயர்ந்ததால் கடந்த மாதம் 19-ந் தேதியில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டு வருகிறது. வினாடிக்கு ஒரு லட்சத்துக்கும் மேல் தண்ணீர் வந்ததால் ஜூலை 23-ந் தேதி மேட்டூர் அணையும் 120 அடியை எட்டி நிரம்பியது. கூடுதலாக வந்த தண்ணீர் காவிரியில் உபரியாகவும் திறக்கப்பட்டது.

    அதன்பின்னர் கர்நாடகத்தின் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை படிப்படியாக குறைந்தது. இதனால் கர்நாடக அணைகளில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவும் படிப்படியாக குறைக்கப்பட்டது. கடந்த 10 நாட்களாக இரு அணைகளில் இருந்தும் குறைவான அளவு நீர் திறந்துவிடப்பட்டது.

    இந்த நிலையில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த 2 நாட்களாக மீண்டும் கனமழை பெய்துவருகிறது. இதனால் கபினி, கே.ஆர்.எஸ். அணைகளுக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்ததால் நேற்று மாலை இரு அணைகளும் மீண்டும் நிரம்பின. நேற்று மாலை 4 மணி நிலவரப்படி கே.ஆர்.எஸ். அணையில் இருந்து வினாடிக்கு 45 ஆயிரம் கனஅடியும், கபினி அணையில் இருந்து வினாடிக்கு 70 ஆயிரம் கனஅடி நீரும் திறந்துவிடப்பட்டது.

    கூடுதல் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளதால் கர்நாடக பகுதியில் காவிரி, கபிலா ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்காக திறந்துவிடப்படும் தண்ணீரின் அளவைவிட நீர்வரத்து குறைவாக இருந்ததால் அணையின் நீர்மட்டம் கடந்த 2-ந் தேதி 119.98 அடியாக குறைந்தது. தொடர்ந்து நீர்மட்டம் குறைந்து நேற்று காலை 117.51 அடியானது.

    அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்காக நேற்று மதியம் தண்ணீர் திறப்பு வினாடிக்கு 30,800 கனஅடியாக அதிகரிக்கப்பட்டது. இதில் உபரிநீர் போக்கியான 16 கண் பாலம் வழியாக வினாடிக்கு 7,500 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது. அதேசமயம் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 8,751 கனஅடியாக இருந்தது.

    இந்த நிலையில் மத்திய நீர்வளத்துறை தமிழக அரசுக்கும், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், ஈரோடு, திருச்சி, தஞ்சை மாவட்ட கலெக்டர்களுக்கும் ஒரு உத்தரவு அனுப்பியுள்ளது.

    அதில், ‘கர்நாடகா மற்றும் கேரளாவில் பலத்த மழை பெய்வதால் கபினி, கே.ஆர்.எஸ். அணைகளில் இருந்து வினாடிக்கு ஒரு லட்சம் கனஅடிக்கும் மேல் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இந்த தண்ணீர் 2 நாட்களில் மேட்டூர் அணைக்கு வந்துசேரும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே காவிரி ஆற்றங்கரையோர பகுதிகளில் உரிய வெள்ள அபாய முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்கும்படி தெரிவிக்கப்படுகிறது’ என கூறப்பட்டுள்ளது.

    அதன்படி 6 மாவட்டங்களிலும் நிர்வாகம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது. மேட்டூர் அணையின் 16 கண் பாலத்தையொட்டி அமைந்துள்ள பகுதி மக்கள் தாழ்வான பகுதிகளில் இருந்து வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. வருவாய்த்துறையினர் காவிரி கரையோரங்களில் தண்டோரா போட்டு எச்சரிக்கை விடுத்து வருகிறார்கள்.

    ஒகேனக்கல்லுக்கு நேற்று வினாடிக்கு 9 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்தது. அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டாலும், பரிசல்கள் வழக்கம்போல் இயங்கின.

    கர்நாடக அணைகளில் இருந்து திறந்துவிடப்பட்ட 1.15 லட்சம் கனஅடி தண்ணீர் இன்று (வெள்ளிக்கிழமை) மாநில எல்லையான பிலிகுண்டுலுவையும், நாளை (சனிக்கிழமை) மேட்டூர் அணையையும் வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தண்ணீர் மேட்டூர் அணைக்கு வந்துசேர்ந்ததும் மீண்டும் அணை நிரம்பும் வாய்ப்பு உள்ளது. 120 அடியை எட்ட 3 அடி மட்டுமே தேவையாக உள்ளதால் 2 நாளில் நிரம்பிவிடும் என கூறப்படுகிறது.  #HeavyRain #KarnatakaFlood 
    காவிரி ஆற்றில் அதிக நீர் திறக்கப்பட உள்ளதால் கரூர், திருவாரூர் மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. #Karur #Thanjavore #FloodAlert
    கரூர்:

    சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அணையில் தற்போது தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் காவிரி ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகின்றது. இதனால், ஆற்றில் யாரும் குளிக்க வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டிருந்தது.

    மேட்டூர் அணையின் கிழக்கு மற்றும் மேற்கு கரைகளில் இருந்து இரவு 8 மணி முதல் நீர் திறக்கப்பட உள்ளது. முதலில் 200 கன அடி தண்ணீர் திறக்கப்படும். பின்னர் அது படிப்படியாஅக 1000 கன அடி தண்ணீர் திறக்கப்படும். எனவே, கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளனர் என சேலம் மாவட்ட கலெக்டர் ரோகிணி தெரிவித்துள்ளார்.
      
    இந்நிலையில், காவிரி ஆற்றில் அதிக நீர் திறக்கப்பட உள்ளதால் கரூர் மற்றும் திருவாரூர் மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக, கரூர் மாவட்ட ஆட்சியர் அன்பழகன் கூறுகையில், காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. காவிரியில் இருந்து நீர் திறப்பு அதிகரித்து வருவதால் கரையோரத்தில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடத்துக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். மேலும், பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் யாரும் காவிரி ஆற்றில் இறங்கி குளிக்க வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

    இதேபோல், கல்லணையில் இருந்து நீர் திறக்கப்பட்டுள்ளதால் காவிரி ஆற்றை பொதுமக்கள் யாரும் கடந்து செல்ல வேண்டாம் என்றும், காவிரி ஆற்றில் பொதுமக்கள் இறங்கவோ அல்லது குளிக்கவோ கூடாது என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது என தஞ்சை மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார். #Karur #Thanjavore #FloodAlert
    நெல்லை மாவட்டம் கடனாநதி அணையில் இருந்து வினாடிக்கு 1035 கன அடி நீர் வெளியேற்றப்பட்டுள்ளதால், கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. #FloodAlert #KadanaNathiDam
    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அணைகளில் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. உபரி நீர் திறக்கப்படுவதால் ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

    இந்நிலையில், கனமழையால் கடனாநதி அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்துள்ளது. எனவே, அணையில் இருந்து வினாடிக்கு 1035 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. எனவே, கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆற்றை ஒட்டி தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இதற்கிடையே, குற்றாலத்தில் கடும் வெள்ளப்பெருக்கு காரணமாக மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவிகளில் 2-வது நாளாக குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. #FloodAlert #KadanaNathiDam
    ஒகேனக்கல்லில் இருந்து மேட்டூர் வரை 75 கிலோ மீட்டர் தூரத்துக்கு காவிரி ஆற்றின் கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது. #Cauvery #MetturDam #Hogenakkal #KabiniDam
    தருமபுரி:

    கர்நாடகாவில் உள்ள காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் கபினி, கிருஷ்ணராஜசாகர் ஆகிய அணைகளில் இருந்து தமிழகத்துக்கு 55 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது. இதனால் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது.



    தமிழகத்தில் காவிரி பாயும் பகுதிகளில் முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மத்திய நீர்வளத்துறையும், தமிழக அரசை கேட்டுக் கொண்டுள்ளது. இன்று ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 40 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது. இதனால் ஐவர்பாணி மற்றும் மெயின் அருவிகளில் வெள்ள நீர் அதிகமாக கொட்டுகிறது.

    ஒகேனக்கல்லில் இருந்து மேட்டூர் வரை 75 கிலோ மீட்டர் தூரத்துக்கு காவிரி ஆற்றின் கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது. பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் காவிரி ஆற்றின் கரையோர பகுதிகளில் குளித்தல், துணி துவைத்தல் போன்ற செயல்களை தவிர்க்க வேண்டும் என்றும் அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.

    காவிரி ஆற்றின் கரையோர பகுதிகளில் குடிசை போட்டு வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறும் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.

    இதுகுறித்து தருமபுரி உதவி கலெக்டர் சிவனருள் கூறியதாவது:-

    ஒகேனக்கல் முதல் மேட்டூர் அணை வரை காவிரி ஆற்றின் கரையோர பகுதிகளில் உள்ள 50-க்கும் மேற்பட்ட கிராம பகுதிகளில் வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அதிகாரிகள், வருவாய் துறை ஊழியர்கள், போலீசார், தீயணைப்பு படையினர், ஊர்காவல் படையினர் கண்காணித்து வருகிறார்கள். வனத்துறையினரும் ரோந்து சுற்றி வருகின்றனர்.



    ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் மீன்பிடி தொழிலாளர்கள் மீன்பிடிக்க வேண்டாம். பரிசல் ஓட்டிகள் பரிசல்களை இயக்க வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்கிறேன்.

    நீர்வரத்து அதிகரித்து உள்ளதால் இன்று 4-வது நாளாக ஒகேனக்கல்லில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.  #Cauvery #MetturDam #Hogenakkal #KabiniDam

    ×