என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கர்நாடகாவில் இருந்து நீர் திறப்பு அதிகரிப்பு - காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
Byமாலை மலர்14 Aug 2018 11:16 AM GMT (Updated: 14 Aug 2018 11:16 AM GMT)
கர்நாடகாவில் இருந்து தமிழகத்துக்கு திறக்கப்படும் நீரின் அளவு அதிகரித்துள்ளதால் காவிரி கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி மத்திய நீர் ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. #FloodAlert #CauveryRiver
புதுடெல்லி:
கர்நாடகா மாநிலத்தில் பெய்யும் அதிகப்படியான மழை காரணமாக தமிழகம் கேட்காமலேயே தண்ணீர் வாரி வழங்கப்படுகிறது. மேலும், தமிழகத்திலும் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருவதால் ஆங்காங்கே நீர்நிலைகள் நிரம்பி வருகின்றன.
காவிரி ஆற்றில் திறக்கப்படும் அதிகப்படியான நீரின் காரணமாக மேட்டூர் அணை இதுவரை 2 முறை தனது முழு கொள்ளளவை எட்டியது.
இந்நிலையில், தற்போது கர்நாடகாவில் இருந்து தமிழகத்துக்கு 1 லட்சத்து 40 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்படுவதால் காவிரி கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி மத்திய நீர் ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி, தஞ்சாவூர், நாகை ஆகிய மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுபோன்ற அதிகப்படியான நீர் திறக்கப்படும்போதிலும் கூட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நீரை சேமிக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனவும், விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் விவசாயிகள் கோரியுள்ளனர். #FloodAlert #CauveryRiver
கர்நாடகா மாநிலத்தில் பெய்யும் அதிகப்படியான மழை காரணமாக தமிழகம் கேட்காமலேயே தண்ணீர் வாரி வழங்கப்படுகிறது. மேலும், தமிழகத்திலும் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருவதால் ஆங்காங்கே நீர்நிலைகள் நிரம்பி வருகின்றன.
காவிரி ஆற்றில் திறக்கப்படும் அதிகப்படியான நீரின் காரணமாக மேட்டூர் அணை இதுவரை 2 முறை தனது முழு கொள்ளளவை எட்டியது.
இந்நிலையில், தற்போது கர்நாடகாவில் இருந்து தமிழகத்துக்கு 1 லட்சத்து 40 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்படுவதால் காவிரி கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி மத்திய நீர் ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி, தஞ்சாவூர், நாகை ஆகிய மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுபோன்ற அதிகப்படியான நீர் திறக்கப்படும்போதிலும் கூட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நீரை சேமிக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனவும், விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் விவசாயிகள் கோரியுள்ளனர். #FloodAlert #CauveryRiver
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X