search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காவிரியில் அதிக நீர் திறப்பு - கரூர், திருவாரூர் மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
    X

    காவிரியில் அதிக நீர் திறப்பு - கரூர், திருவாரூர் மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

    காவிரி ஆற்றில் அதிக நீர் திறக்கப்பட உள்ளதால் கரூர், திருவாரூர் மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. #Karur #Thanjavore #FloodAlert
    கரூர்:

    சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அணையில் தற்போது தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் காவிரி ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகின்றது. இதனால், ஆற்றில் யாரும் குளிக்க வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டிருந்தது.

    மேட்டூர் அணையின் கிழக்கு மற்றும் மேற்கு கரைகளில் இருந்து இரவு 8 மணி முதல் நீர் திறக்கப்பட உள்ளது. முதலில் 200 கன அடி தண்ணீர் திறக்கப்படும். பின்னர் அது படிப்படியாஅக 1000 கன அடி தண்ணீர் திறக்கப்படும். எனவே, கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளனர் என சேலம் மாவட்ட கலெக்டர் ரோகிணி தெரிவித்துள்ளார்.
      
    இந்நிலையில், காவிரி ஆற்றில் அதிக நீர் திறக்கப்பட உள்ளதால் கரூர் மற்றும் திருவாரூர் மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக, கரூர் மாவட்ட ஆட்சியர் அன்பழகன் கூறுகையில், காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. காவிரியில் இருந்து நீர் திறப்பு அதிகரித்து வருவதால் கரையோரத்தில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடத்துக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். மேலும், பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் யாரும் காவிரி ஆற்றில் இறங்கி குளிக்க வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

    இதேபோல், கல்லணையில் இருந்து நீர் திறக்கப்பட்டுள்ளதால் காவிரி ஆற்றை பொதுமக்கள் யாரும் கடந்து செல்ல வேண்டாம் என்றும், காவிரி ஆற்றில் பொதுமக்கள் இறங்கவோ அல்லது குளிக்கவோ கூடாது என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது என தஞ்சை மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார். #Karur #Thanjavore #FloodAlert
    Next Story
    ×