search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "electricity distribution"

    பெரம்பலூரில் குறைந்த அழுத்த மின்விநியோகத்தை கண்டித்து பொதுமக்கள் மெழுகுவர்த்தி ஏந்தி நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    பெரம்பலூர்:

    பெரம்பலூர் அருகே கோனேரிபாளையம் ஊராட்சிக்குட்பட்ட முத்து நகரில் நூற்றுக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதியில் குறைந்த அழுத்த மின்சாரம் விநியோகம் செய்யப்படுவதாக கூறப்படுகிறது. இதனால் இப்பகுதி மக்கள் தண்ணீர் இறைக்கும் மின் மோட்டார், கிரைண்டர், மிக்ஸி, ஏசி உள்ளிட்ட மின் சாதனங்களை பயன்படுத்த முடியாமல் அவதிப்படுகின்றனர்.

    இதனால் மின்சார பழுதினை சீரமைத்து தட்டுபாடின்றி மின் விநியோகம் வழங்க நடவடிக்கை எடுக்ககோரி பல முறை மின்வாரிய அதிகாரிகளிடம் புகார் செய்தும் மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை கூறப்படுகிறது.

    இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் பெரம்பலூர் கோட்ட மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தி நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    தகவலறிந்த மின்வாரிய அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுப்பட்ட மக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தி மின்விநியோக குறைபாடை போக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததையடுத்து மக்கள் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனர்.
    கூடலூர் மற்றும் பந்தலூரில் பலத்த மழை பெய்தது. இதனால் மின் வினியோகம் பாதிக்கப்பட்டது.
    கூடலூர்:

    கூடலூரில் கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் கோடை வெயில் சுட்டெரித்தது. இதனால் ஏற்பட்ட வறட்சியால், வனப்பகுதிகள் பசுமையை இழந்தன. நீர்நிலைகள் வறண்டதால் குடிநீர் தட்டுப்பாடு நிலவியது. ஆனால் கடந்த சில நாட்களாக மாலை அல்லது இரவு நேரங்களில் கோடை மழை பெய்து வருகிறது. இதனால் வனப்பகுதிகள் பசுமைக்கு திரும்பி உள்ளன. மேலும் நீர்நிலைகளிலும் தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது. இருப்பினும் பலத்த மழையுடன் சூறாவளி காற்று வீசியதால், வாழைகள் சாய்ந்தன. இதனால் விவசாயிகள் நஷ்டம் அடைந்து உள்ளனர்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு கூடலூரில் பலத்த மழை பெய்தது. ஆனால் நேற்று காலை வழக்கம்போல் வெயில் அடித்தது. இதற்கிடையில் மதியம் 12.45 மணியளவில் கூடலூர், பந்தலூர் தாலுகா முழுவதும் மின் வினியோகம் பாதிக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் அவதி அடைந்தனர். இதுகுறித்து மின் வாரிய அதிகாரிகள் கூறியதாவது:-

    சிங்காரா மின் உற்பத்தி நிலையத்தில் இருந்து முதுமலை வனப்பகுதி வழியாக கூடலூருக்கு வரும் உயர் கோபுர மின் அழுத்த கம்பிகள் பலத்த மழை காரணமாக பல இடங்களில் அறுந்து விழுந்துள்ளன. இதனால் மின் வினியோகம் பாதிக்கப்பட்டு உள்ளது. அவற்றை சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. சீரமைப்பு பணி முடிந்ததும் மின் வினியோகம் தொடங்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள். கோடை மழை பெய்தாலும் கூடலூர் பகுதியில் வெப்பத்தின் தாக்கம் குறையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    இதேபோன்று பந்தலூர், மேங்கோரேஞ்சு, கொளப்பள்ளி, அய்யன்கொல்லி, உப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்தது. மேலும் சூறாவளி காற்று வீசியதால் கொளப்பள்ளியில் இருந்து பந்தலூர் செல்லும் சாலையிலும், பந்தலூரில் இருந்து சேரம்பாடி செல்லும் சாலையிலும், கோழிக்கோடு செல்லும் சாலையில் உள்ள மேங்கோரேஞ்சு பகுதியிலும் மரக்கிளைகள் முறிந்து விழுந்து, மின்கம்பங்கள் சாய்ந்தன. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து மின்சார துறையினர் விரைந்து வந்து மின்கம்பங்களை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். அதன்பின்னர் போக்குவரத்து சீரானது. நெலாக்கோட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகில் ஆயிஷா என்பவரது வீட்டில் மின்னல் தாக்கி மின்சாதன பொருட்கள் சேதம் அடைந்தன. மேலும் ஜன்னல் கண்ணாடிகளும் நொறுங்கின. 
    ×