search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Cauvery flood"

    காவிரி மற்றும் பவானி வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்ட பகுதிளை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று நேரில் சென்று பார்வையிட்டார். #EdappadiPalaniswami #Cauveryflood

    ஈரோடு:

    இந்த ஆண்டு பருவமழை தீவிரம் அடைந்ததால் காவிரி ஆற்றில் வரலா காணாத அளவுக்கு வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

    கர்நாடக அணைகளில் திறக்கப்படும் 2 லட்சம் கன அடி தண்ணீர் மேட்டூர் அணைக்கு வருகிறது. அணை நிரம்பியதால் 2 லட்சம் கன அடி காவிரியில் திறந்து விடப்படுகிறது.

    காவிரி வெள்ளத்துடன் பவானி சாகர் அணையில் திறக்கப்படும் 50 ஆயிரம் கன அடி தண்ணீரும், அமராவதி ஆற்றுத் தண்ணீரும் கலப்பதால் 3 லட்சம் கன அடி தண்ணீர் வரை காவிரியில் பெருக்கெடுத்து ஓடுகிறது. பல ஆண்டுகளுக்கு பிறகு இரு கரைகளையும் தொட்டுச் செல்லும் காவிரி வெள்ளம் ஊருக்குள் புகுந்து பாதிப்பு ஏற்படுத்தியுள்ளது.

    பவானி ஆற்றின் சீற்றத்தால் சத்தியமங்கலத்தில் 300 வீடுகளில் வெள்ளம் புகுந்தது. 400 வீடுகளை வெள்ளம் சூழந்தது. வீடுகளில் வசித்தவர்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.


    இதேபோல் பவானி நகரமும் வெள்ளத்தால் கடும் பாதிப்புக்குள்ளானது. சின்னாற்றுப்பாலம், மார்க்கெட் வீதி உள்பட பல்வேறு இடங்களில் 550 வீடுகளில் வெள்ளம் புகுந்தது. ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. அந்த வீடுகளை சேர்ந்த பொதுமக்கள் திருமண மண்டபங்களிலும் பள்ளிகளிலும் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

    நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம், பள்ளிபாளையம் ஆகிய பகுதிகளிலும் சுமார் 1500 வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. அப்பகுதி மக்களும் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பாக இடங்களில் தங்கி உள்ளனர்.

    இதேபோல் காவிரி வெள்ளத்தால் ஈரோடு கருங்கல்பாளையம் பகுதிகளில் 50 வீடுகளிலும் கொடுமுடி, ஊஞ்சலூர் பகுதிகளில் 250 வீடுகளிலும் தண்ணீர் புகுந்துள்ளது.

    காவிரி மற்றும் பவானி வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்ட பகுதிளை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று நேரில் சென்று பார்வையிட்டார்.

    சென்னையிலிருந்து விமானம் மூலம் கோவை வந்த அவர் கார் மூலம் ஈரோடு மாவட்டம் பவானி சென்றார்.

     


    அங்குள்ள கல்யாண மண்டப முகாமில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ள பொதுமக்களை சந்தித்து ஆறுதல் கூறினார். அவர்களுக்கு நிவாரணப் பொருட்களையும் வழங்கினார்.

    பவானியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நடந்து சென்று பார்வையிட்டார். அப்போது கால் முட்டு அளவுக்கு தண்ணீர் தேங்கி இருந்தது. வேட்டியை மடித்தபடி அந்த தண்ணீரில் இறங்கி பொதுமக்களிடம் குறைகளை கேட்டார்.

    தொடர்ந்து பவானி- குமாரபாளையம் பழைய காவிரி ஆற்று பாலத்தையும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பவானி மார்க்கெட் பகுதியையும் பார்வையிட்டார்.

    பிறகு முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம், பள்ளிபாளையம் பகுதிகளில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டார்.

    அங்குள்ள முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருந்த பொதுமக்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.

    மீண்டும் ஈரோடு கருங்கல்பாளையம் வந்த முதல்- அமைச்சர் அங்கு வெள்ள சேத பகுதிகளை பார்வையிட்டு நிவாரணம் வழங்கினார். முதல்-அமைச்சருடன் அமைச்சர்கள் செங்கோட்டையன் கருப்பணன், விஜயபாஸ்கர், தங்கமணி சென்றனர்.

    இதைத்தொடர்ந்து ஈரோடு காலிங்கராயன் பயணியர் விடுதியில் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஈரோடு, நாமக்கல் மற்றும் சேலம் மாவட்ட கலெக்டர்கள், அதிகாரிகளுடன் வெள்ள சேதம் குறித்து ஆலோசனை நடத்தினார்.

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி காவிரி வெள்ளப்பகுதிகளை நாளை பார்வையிடுகிறார். நாளை காலை அவர் ஈரோடு, நாமக்கல், கரூர் மாவட்டத்தை பார்வையிடுகிறார். #TNCM #EdappadiPalaniswami
    சென்னை:

    காவிரியில் வெள்ளம் 3 லட்சம் கன அடி அளவுக்கு பாய்ந்தோடுகிறது. இதனால் தமிழகத்தில் காவிரி கரையோரப் பகுதியில் வெள்ளம் புகுந்துள்ளது. அங்கு வசித்த மக்கள் மீட்கப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி காவிரி வெள்ளப்பகுதிகளை நாளை பார்வையிடுகிறார். இதற்காக இன்று அவர் சேலம் செல்கிறார்.

    நாளை காலை அவர் ஈரோடு, நாமக்கல், கரூர் மாவட்டத்தை பார்வையிடுகிறார். பவானியில் தொடங்கி காளிங்கராயன் பாளையம், குமாராபாளையம், பள்ளிபாளையம் ஆகிய இடங்களையும், பின்னர் கரூர் மாவட்டத்தில் வெள்ளப் பகுதிகளையும் பார்வையிடுகிறார்.

    நாளை மாலை ஈரோட்டில் வெள்ள நிவாரண பணிகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளையும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்குகிறார். #TNCM #EdappadiPalaniswami

    காவிரி நதி நீர் கால்வாய்களில் நீர் வெளியேறும்போது செல்பி எடுத்தல், நீச்சல், மீன்பிடித்தல் போன்ற நடவடிக்கைகளில் மக்கள் ஈடுபடக்கூடாது அமைச்சர் உதயகுமார் கூறினார். #MinisterUdayakumar #Cauveryflood
    சென்னை:

    அமைச்சர் உதயகுமார் சென்னையில் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:-

    மத்திய நீர்வள ஆணையம் கடந்த 9-ந்தேதி கேரளா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் கனமழை பெய்து வருவதால் கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகளிலிருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு வினாடிக்கு 1 லட்சம் கன அடி வீதம் இரு தினங்களில் மேட்டூர் அணைக்கு வந்து சேரும் எனவும், காவிரி ஆற்றுப்படுகைகளில் அமைந்துள்ள மாவட்டங்கள் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் எனவும் எச்சரிக்கை விடுத்தது.

    அதனை தொடர்ந்து காவிரி கரையோர மாவட்டங்களான தர்மபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி, அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் கடலூர் மாவட்ட ஆட்சியர்கள் அனைவருக்கும், மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள் குறித்து விரிவான சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

    காவிரி நதி நீர் கால்வாய்கள் மற்றும் பிற நீர் நிலைகளில் நீர் வெளியேறும்போது செல்பி எடுத்தல், நீச்சல், மீன்பிடித்தல் மற்றும் பிற பொழுதுபோக்கு போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது என்று மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.



    தாழ்வான பகுதிகளில் வாழும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    ஆற்றங்கரையில் குழந்தைகள் குளிக்கவும் மற்றும் விளையாடவும் அனுமதிக்கக் கூடாது எனவும் பெற்றோர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    கால்நடைகளை பாதுகாப்பான இடங்களில் கட்டிவைக்க வேண்டும் என விவசாயிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    மக்கள் மற்றும் வாகனங்கள் செல்லும் உயர்மட்ட பாலங்கள் தவிர ஆற்றின் குறுக்கே செல்லும் பாதைகளை அடையாளம் காண்பதற்கு தரைமட்ட பாலங்களிலும் எச்சரிக்கை பதாகைகள் அமைக்க உள்ளாட்சி அமைப்புகள் மூலம் அறிவுறுத்தப்பட்டுள்ளது

    பாதிப்பிற்குள்ளாகும் மக்களை பாதுகாப்பாக வெளியேற்றி நிவாரண முகாம்களில் தங்க வைத்திடவும் மாவட்ட ஆட்சியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    மேட்டூர் அணை உயரம்-120.2 அடி, கொள்ளளவு- 93.79 டி.எம்.சி, வினாடிக்கு 1,30,000 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையிலிருந்து-வினாடிக்கு 1,35,000 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

    ஆற்றங்கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க ஒலிப்பெருக்கிகள் மற்றும் தண்டோரா மூலம் அறிவுறுத்தப்பட்டு வருகின்றனர்.

    சேலம், ஈரோடு மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 359 பேர் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு 4 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

    நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் மலைப்பகுதிகளில் ஆங்காங்கே 13 மற்றும் 14-ந்தேதிகளில் கனமழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார். #MinisterUdayakumar #Cauveryflood


    ×