search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Karnataka Dams"

    • அணையில் இருந்து வினாடிக்கு 1939 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
    • கபினி அணையின் நீர்மட்டம் 74.85 அடியாக இருந்தது.

    கர்நாடகாவில் உள்ள கிருஷ்ண ராஜ சாகர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 100.84 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 3182 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 1939 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    இதே போல் கபினி அணையின் நீர்மட்டம் 74.85 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 622 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 300 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    2 அணைகளில் இருந்தும் காவிரி ஆற்றில் நேற்று வினாடிக்கு 1991 கனஅடி திறந்து விடப்பட்ட நிலையில் இன்று 2239 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

    • அணையில் இருந்து ஆற்றில் 2ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
    • 2 அணைகளில் இருந்தும் தண்ணீர் திறப்பு வினாடிக்கு 5ஆயிரத்து 607கனஅடியாக அதிகரிக்கப்பட்டு வருகிறது.

    சேலம்:

    கர்நாடகாவில் உள்ள கிருஷ்ணராஜசாகர் அணையின் மொத்த நீர்மட்டம் 124.80 அடியாகும். இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 100.92 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 3ஆயிரத்து 503 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 3 ஆயிரத்து 607கனஅடி தண்ணீர் காவிரி ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    இதேபோல் கபினி அணையின் மொத்த நீர்மட்டம் 84 அடியாகும். இன்று காலை நிலவரப்படி இந்த அணை நீர்மட்டம் 76.52 அடியாக உள்ளது. இந்த அணைக்கு 1261 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து ஆற்றில் 2ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. 2 அணைகளில் இருந்தும் தண்ணீர் திறப்பு வினாடிக்கு 5ஆயிரத்து607கனஅடியாக அதிகரிக்கப்பட்டு வருகிறது.

    • கர்நாடக அணைகளில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் ஒகேனக்கல்லை வந்தடைந்தது.
    • இதனால் நீர்வரத்து வினாடிக்கு 4 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது.

    தர்மபுரி:

    தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்ததை தொடர்ந்து கேரளா மாநிலம் வயநாடு மற்றும் கர்நாடக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் ஹேமாவதி, ஹாரங்கி அணைகள் முழு கொள்ளளவை எட்டி உள்ளன. இதனால் இந்த அணைகளில் இருந்து உபரிநீர் திறந்து விடப்பட்டுள்ளது.

    கிருஷ்ணராஜசாகர் அணை முழு கொள்ளளவான 124 அடியில் தற்போது 100 அடியை எட்டி உள்ளது. அணைக்கு வினாடிக்கு 48 ஆயிரத்து 25 கனஅடி தண்ணீர் வருகிறது. இந்த அணையில் இருந்து வினாடிக்கு 2,680 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

    கபினி அணை தனது மொத்த கொள்ளளவான 84 அடியில் தற்போது 80 அடியை எட்டி உள்ளது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 25 ஆயிரத்து 896 கனஅடியாக உள்ளது. இந்த அணையில் இருந்து பாதுகாப்பு கருதி வினாடிக்கு 11,250 கனஅடி தண்ணீர் தற்போது திறந்து விடப்பட்டுள்ளது.

    இந்நிலையில் கிருஷ்ணராஜசாகர், கபினி அணைகளில் இருந்து மொத்தம் வினாடிக்கு 13 ஆயிரத்து 930 கனஅடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. இந்த தண்ணீர் நேற்று ஒகேனக்கல்லை வந்தடைந்தது. கர்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரித்தது.

    அதன்படி நேற்று மாலை 7 மணி நிலவரப்படி ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 4 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது. இதனால் மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.

    கர்நாடகத்தில் கே.ஆர்.எஸ். அணையில் இருந்து தண்ணீர் திறப்பு முற்றிலும் நிறுத்தப்பட்டது. கபினி அணையில் இருந்து இன்று நீர்திறப்பு 20 ஆயிரம் கனஅடியாக குறைக்கப்பட்டது. #KarnatakaDams #Cauvery
    ஒகேனக்கல்:

    கர்நாடக அணைகளில் இருந்து 2 லட்சத்துக்கும் மேற்பட்ட தண்ணீர் திறக்கப்பட்டதால் கடந்த 10 நாட்களுக்கு மேலாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

    தற்போது காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் நீர்திறப்பும் குறைக்கப்பட்டுள்ளது. நேற்று காலை கே.ஆர்.எஸ். அணையில் இருந்து 73 அயிரத்து 134 கனஅடி தண்ணீர் தமிழகத்துக்கு திறக்கப்பட்டது.

    இன்று காலை கே.ஆர்.எஸ். அணையில் இருந்து தண்ணீர் திறப்பு முற்றிலும் நிறுத்தப்பட்டது. கபினி அணையில் இருந்து நேற்று 27 ஆயிரத்து 83 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது. இன்று நீர்திறப்பு 20 ஆயிரம் கனஅடியாக குறைக்கப்பட்டது.

    கபினி மற்றும் கே.ஆர்.எஸ். அணைகளில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் பிலிகுண்டுலு, ஒகேனக்கல் வழியாக மேட்டூரை வந்து அடைகிறது. நேற்று ஒகேனக்கல்லுக்கு 1 லட்சம் கனஅடி வீதம் தண்ணீர் வந்தது. இன்று நீர்வரத்து மேலும் குறைந்து 70 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் வருகிறது.

    வெள்ளப்பெருக்கு குறைந்ததால் கடந்த 5 நாட்களாக ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் கிருஷ்ணகிரி- தருமபுரி மாவட்டங்களுக்கு குடிநீர் விநியோகம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. நேற்று மாலை முதல் மீண்டும் குடிநீர் விநியோகம் தொடங்கியது.

    நீர்வரத்து குறைந்தாலும் இன்று சுற்றுலா பயணிகள் குளிக்கவும், பரிசல் இயக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.



    ஒகேனக்கல் மெயின் அருவியில் தடுப்புகள் கம்பிகள் சேதமடைந்து உள்ளது. அங்கு குப்பை கூளங்களும் அதிக அளவில் தேங்கி உள்ளன. இவற்றை சீரமைத்து தடுப்பு கம்பிகள் அமைக்கப்பட்ட பிறகுதான் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படுவார்கள். #KarnatakaDams #Cauvery

    கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறப்பு குறைக்கப்பட்டுள்ளது. அந்த அணைகளில் இருந்து வினாடிக்கு 1.30 லட்சம் கனஅடி நீர் செல்கிறது. #KabiniDam #KRSDam
    மைசூரு:

    கர்நாடகத்தில் கடந்த மே மாதம் இறுதியில் இருந்து தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது. குறிப்பாக கர்நாடக கடலோர மாவட்டங்களாக தட்சிண கன்னடா, உடுப்பி, கார்வார் மற்றும் மலைநாடு என அழைக்கப்படும் சிக்கமகளூரு, குடகு, சிவமொக்கா ஆகிய மாவட்டங்களில் தொடர்ந்து பலத்த மழை கொட்டி வருகிறது. இதன்காரணமாக கர்நாடகத்தில் உள்ள முக்கிய அணைகள் நிரம்பின.

    முக்கியமாக குடகு மற்றும் கேரள மாநிலம் வயநாடு பகுதிகளில் கொட்டி தீர்த்து வரும் கனமழையால் மண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கப்பட்டணா தாலுகா கண்ணம்பாடி பகுதியில் உள்ள கிருஷ்ணராஜ சாகர் (கே.ஆர்.எஸ்.) அணையும், மைசூரு மாவட்டம் எச்.டி.கோட்டை தாலுகா பீச்சனஹள்ளி பகுதியில் உள்ள கபினி அணையும் கடந்த 2 மாதங்களில் 2 முறை முழு கொள்ளளவை எட்டி நிரம்பின. இதனால் இந்த அணைகளில் இருந்து வினாடிக்கு 2 லட்சம் கனஅடிக்கும் அதிகமாக திறக்கப்பட்டது. இதன்காரணமாக, காவிரி ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

    நேற்று காலை நிலவரப்படி 124.80 அடி கொள்ளளவு கொண்ட கே.ஆர்.எஸ். அணையில் 121.65 அடி தண்ணீர் உள்ளது. அணைக்கு வினாடிக்கு 94,382 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து வினாடிக்கு 84,060 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. இதேபோல, கடல் மட்டத்தில் இருந்து 2,284 அடி கொள்ளளவு கொண்ட கபினி அணையில் 2,280.13 அடி தண்ணீர் இருந்தது. அணைக்கு வினாடிக்கு 47,529 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 46,667 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது.



    இந்த அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை குறைந்துள்ளதால், அணைகளுக்கு வரும் தண்ணீரின் அளவும் குறைந்துள்ளது. இதனால் தமிழகத்திற்கு திறக்கப்படும் தண்ணீரின் அளவும் குறைக்கப்பட்டுள்ளது.

    இரு அணைகளில் இருந்தும் நேற்று முன்தினம் வினாடிக்கு 1.62 லட்சம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டிருந்தது. ஆனால் நேற்று இரு அணைகளில் இருந்தும் வினாடிக்கு 1.30 லட்சம் கனஅடி தண்ணீர் தமிழகத்திற்கு திறந்துவிடப்பட்டுள்ளது. தமிழகத்திற்கு திறக்கப்படும் தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டாலும், காவிரி மற்றும் கபிலா ஆறுகளில் தொடர்ந்து காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு செல்கிறது.

    இதனால், கரையோரத்தில் வசிக்கும் மக்கள் தொடர்ந்து பாதுகாப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். காவிரி, கபிலா ஆறுகளில் வெள்ளம் குறைந்த பின்னர் தான், அவர்கள் கரையோர பகுதிகளுக்கு அனுமதிக்கப்படுவார்கள் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.  #KabiniDam #KRSDam
     
    கர்நாடகாவில் மழை தீவிரம் குறைந்ததால் கபினி மற்றும் கிருஷ்ண ராஜசாகர் அணைகளில் இருந்து திறந்துவிடப்படும் உபரிநீர் குறைக்கப்பட்டுள்ளது. #KarnatakaRains #cauverywater
    மேட்டூர்:

    கர்நாடக மாநிலத்தில் காவிரி நீர்பிடிப்பு பகுதி மற்றும் கேரள மாநிலம் வயநாடு பகுதிகளில் கடந்த 20 நாட்களுக்கு மேலாக கொட்டித்தீர்த்த கனமழையால் கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளிலிருந்து 2.26 லட்சம் கன அடி வரை காவிரியில் தண்ணீர் திறந்துவிடப்பட்டது.

    இதனால் மேட்டூர் அணையும் நிரம்பி, அணைக்கு வரும் நீர் அப்படியே வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் காவிரி ஆற்றில் பயங்கர வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கரையோர கிராமங்கள் தண்ணீரில் தத்தளித்து வருகின்றன. அங்கு வசித்த பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

    காவிரி டெல்டா மாவட்டங்களில் சில இடங்களில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணைக்கு நேற்று மாலை 2 லட்சம் கனஅடி தண்ணீர் வந்தது.

    இதனால் அணை மின் நிலையம், சுரங்க மின் நிலையம் மற்றும் 16 கண் பாலம் மதகு வழியாக 2 லட்சத்து 5 ஆயிரத்து 800 கன அடி வீதம் தண்ணீர் திறந்துவிடப்பட்டது.

    மேட்டூர் அணையின் 84 ஆண்டு கால வரலாற்றில் 3-வது முறையாக நேற்று 2 லட்சத்து 5ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக காவிரி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

    இந்த சூழ்நிலையில் கர்நாடகம் மற்றும் கேரள மாநிலத்தில் மழை சற்று தணிந்து வருவதால் கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து தமிழகத்திற்கு திறக்கப்படும் உபரிநீரின் அளவு படிப்படியாக குறைக்கப்பட்டு வருகிறது.


    கடந்த 10 நாட்களுக்கும் மேலாக இந்த அணைகளில் இருந்து 2 லட்சம் கன அடி வரை தண்ணீர் திறக்கப்பட்டது. நேற்று முன்தினம் 1 லட்சத்து 65 ஆயிரம் கன அடியாக இருந்த நீர் திறப்பு நேற்று 1 லட்சத்து 25 ஆயிரம் கன அடியாக குறைக்கப்பட்டது.

    இன்று காலை மேலும் குறைக்கப்பட்டு கபினி அணையில் இருந்து 40 ஆயிரம் கனஅடி தண்ணீரும், கிருஷ்ண ராஜசாகர் அணையில் இருந்து 70 ஆயிரம் கனஅடி தண்ணீரும், மொத்தம் 1 லட்சத்து 10 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது. இதன்காரணமாக காவிரி ஆற்றில் வரும் நீர்வரத்து குறையத்தொடங்கி உள்ளது.

    ஒகேனக்கல்லுக்கு கடந்த 10 நாட்களுக்கு மேலாக 1 லட்சத்து 75 ஆயிரம் முதல் 2 லட்சத்து 20 ஆயிரம் கனஅடி வரை தண்ணீர் வந்தது. நேற்று 2 லட்சத்து 5 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் வந்தது. இன்று காலை நீர்வரத்து 1 லட்சத்து 60 ஆயிரம் கனஅடியாக குறைந்தது.

    இருந்தாலும் ஒகேனக்கல் ஐந்தருவி, மெயின் அருவி, சினிபால்ஸ் அருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இன்று 42-வது நாளாக சுற்றுலா பயணிகள் குளிக்கவும், பரிசல் இயக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

    மேட்டூர் அணைக்கு நேற்று மாலை 2 லட்சம் கன அடி தண்ணீர் வந்தது. இன்று காலை இது 1.80 லட்சம் கன அடியாக குறைந்தது.

    அணையில் இருந்து நேற்று காலை 2 லட்சத்து 5ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது. இன்று காலை இது 1.80 லட்சம் கனஅடியாக குறைக்கப்பட்டது. நீர் வரத்தைவிட கூடுதலாக தண்ணீர் திறக்கப்படுவதால் ஒருவாரத்திற்கு பிறகு மேட்டூர் அணை நீர்மட்டம் 119.53 அடியாக குறைந்தது.

    கர்நாடக அணைகளில் தண்ணீர் திறப்பு குறைக்கப்பட்டு உள்ளதால் நாளை முதல் மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து மேலும் குறைவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

    இதனால் காவிரி ஆற்றில் தற்போது பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம் படிப்படியாக சீராகும் சூழ்நிலை உருவாகி உள்ளது. #KarnatakaRains #cauverywater
    கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் வினாடிக்கு 1.75 லட்சம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் காவிரி கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. #Hogenakkal #Cauvery
    பென்னாகரம்:

    கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் வினாடிக்கு 2 லட்சம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் காவிரி கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

    கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் நேற்று முன்தினம் இரவு கிருஷ்ணராஜ சாகர் (கே.ஆர்.எஸ்). அணைக்கு நீர்வரத்து திடீரென்று அதிகரித்தது. இதையடுத்து நேற்று மாலை 5 மணி நிலவரப்படி கே.ஆர்.எஸ். அணையில் இருந்து 23 மதகுகள் வழியாக வினாடிக்கு 1 லட்சத்து 50 ஆயிரம் கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது.

    இதேபோல் கபினி அணையில் இருந்து வினாடிக்கு 55 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. இதையடுத்து கபினி, கே.ஆர்.எஸ். அணைகளில் இருந்து வினாடிக்கு 2 லட்சம் கனஅடி தண்ணீர் தமிழகத்துக்கு காவிரியில் கரைபுரண்டு ஓடியது.

    இன்று காலை நிலவரப்படி கே.ஆர்.எஸ் அணையிலிருந்து 1.20 லட்சம் கனஅடியும், கபிணி அணையிலிருந்து 50 லட்சம் கனஅடியும் திறக்கப்படுகிறது.

    சிவமொக்கா மாவட்டம் சாகர் தாலுகாவில் உலக புகழ்பெற்ற ஜோக் நீர்வீழ்ச்சி உள்ளது. இந்த நீர்வீழ்ச்சி 830 அடி உயரத்தில் அமைந்துள்ளது. கனமழை காரணமாக லிங்கனமக்கி அணை நிரம்பியதால் அதில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது.

    இதனால், ஜோக் நீர்வீழ்ச்சியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. 4 ஆண்டுகளுக்கு பிறகு ஜோக் நீர்வீழ்ச்சியில் தண்ணீர் கொட்டுவதால் அங்கு சுற்றுலா பயணிகள் குவிந்த வண்ணம் உள்ளனர்.

    தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலு வழியாக தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு நேற்று காலை 9 மணி நிலவரப்படி வினாடிக்கு 1 லட்சத்து 20 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. கர்நாடக அணைகளில் இருந்து அதிக அளவு தண்ணீர் திறக்கப்பட்டதால் ஒகேனக்கலுக்கு நேற்று மாலை 5 மணி நிலவரப்படி வினாடிக்கு 1 லட்சத்து 90 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்தது. இதனால் ஒகேனக்கல்லில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

    ஐந்தருவி இருப்பதே தெரியாத அளவிற்கு தண்ணீர் செல்கிறது. மெயின் அருவிக்கு செல்லும் நடைபாதைக்கு மேல் தண்ணீர் அதிக அளவில் செல்கிறது. மெயின் அருவி, சினிபால்சில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. மேலும் காவிரி கரையோரத்தில் இருந்த 6 வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. இதையடுத்து அங்கு குடியிருந்தவர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். நீர்வரத்து அதிகரித்துக்கொண்டே இருப்பதால் சுற்றுலா பயணிகள் ஒகேனக்கல்லுக்கு வருவதை தவிர்க்க வேண்டும் எனவும், காவிரி கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறும் மாவட்ட நிர்வாகம் சார்பில் தண்டோரா மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    கொள்ளிடம் ஆற்றில் வெள்ளம்

    ஒகேனக்கல்லுக்கு அதிக அளவில் தண்ணீர் வந்த ஆண்டுகள் விவரம் வருமாறு:-

    1961- வினாடிக்கு 3 லட்சம் கனஅடி.

    2005-வினாடிக்கு 2 லட்சத்து 40 ஆயிரம் கனஅடி.

    2013-வினாடிக்கு 1 லட்சத்து 80 ஆயிரம் கனஅடி.

    2018-வினாடிக்கு 1 லட்சத்து 90 ஆயிரம் கனஅடி.

    ஒகேனக்கல்லில் இருந்து சேலம் மாவட்டம் மேட்டூர் அணைக்கு நேற்று மதியம் 2 மணிக்கு வினாடிக்கு 1 லட்சத்து 35 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் வந்தது. அணையில் இருந்து 1 லட்சத்து 40 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறந்துவிடப்பட்டது. நேற்று இரவு அணைக்கு வினாடிக்கு 1 லட்சத்து 55 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. இதையடுத்து அணையில் இருந்து வினாடிக்கு 1 லட்சத்து 60 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டது.

    மேட்டூர் அணை உபரிநீர் போக்கியான 16 கண் பாலத்தின் வழியாகவும் தண்ணீர் திறக்கப்பட்டதால் உபரிநீர் வெளியேறும் பாதை அருகே அமைந்துள்ள வீடுகளை காவிரி வெள்ளம் சூழ்ந்தது. எனவே காவிரி கரையோர பகுதியில் வசிக்கும் மக்களுக்கு தண்டோரா மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    காவிரி பாயும் திருச்சி, தஞ்சை, திருவாரூர் மாவட்டங்களிலும் முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன.

    இன்று காலை நிலவரப்படி கே.ஆர்.எஸ் அணை, கபிணி அணையிலிருந்து  1.75 லட்சம் கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது. #Hogenakkal #Cauvery
    கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் 1 லட்சத்து 13 ஆயிரத்து 212 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. #KarnatakaDams #Cauvery
    மேட்டூர்:

    கர்நாடகாவில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளான குடகு மாவட்டத்தில் மடிக்கேரி, பாகமண்டலா, பகுதிகளில் 3 வாரங்களாக தொடர்ந்து பலத்த மழை பெய்து வருவதால் காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    அடுத்த 48 மணி நேரத்திற்கு அங்கு கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளதால் குடகு, மாண்டியா மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. குடகு மாவட்டம் முழுவதும் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளதுடன் பாலங்கள் தண்ணீரில் மூழ்கி உள்ளன.

    ஹாரங்கி, ஹேமாவதி அணைகள் முழு கொள்ளளவை எட்டி உள்ளதால் அந்த அணைகளில் இருந்து திறந்து விடப்படும் உபரி நீர் கிருஷ்ணராஜசாகர் அணைக்கு வந்து கொண்டிருக்கிறது.

    124 அடி உச்ச நீர்மட்டம் கொண்ட கிருஷ்ணராஜசாகர் அணையின் நீர்மட்டம் நேற்று 123.21 அடியாக இருந்தது. அணைக்கு நீர்வரத்து 51 ஆயிரத்து 676 கன அடியாக இருந்த நிலையில் அணையில் இருந்து 73 ஆயிரத்து 159 கன அடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டது.

    இன்று காலை அணையின் நீர்மட்டம் 123.2 அடியாக உயர்ந்தது. அணைக்கு நீர்வரத்து 66 ஆயிரத்து 240 அடியாக இருந்ததால் அணையில் இருந்து 80 ஆயிரத்து 712 கன அடி தண்ணீர் காவிரி ஆற்றில் தமிழகத்திற்கு திறந்து விடப்பட்டுள்ளது.

    இதே போல கேரள மாநிலம் வயநாடு மலைப்பகுதிகளிலும் கடந்த சில நாட்களாக கன மழை பெய்ததால் கபினி அணைக்கு நேற்று 40 ஆயிரத்து 2 கன அடி தண்ணீர் வந்தது. 84 அடி உச்ச நீர்மட்டம் கொண்ட கபினி அணையின் நீர்மட்டம் நேற்று 81.27 அடியாக இருந்ததால் அணையில் இருந்து 40ஆயிரத்து 416 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது.

    கபினி அணை நீர்மட்டம் இன்று காலை 81.66 அடியாக இருந்தது. அணைக்கு 36 ஆயிரத்து 137 கன அடி தண்ணீர் வந்த நிலையில் அணையில் இருந்து 32 ஆயிரத்து 500 கன அடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது.

    கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து காவிரியில் திறந்து விடப்பட்டுள்ள 1 லட்சத்து 13 ஆயிரத்து 212 கன அடி தண்ணீர் தமிழகத்திற்கு காவிரி ஆற்றில் சீறி பாய்ந்து வருகிறது. இதனால் காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    கிருஷ்ணராஜசாகர் அணையில் இருந்து கூடுதலாக திறக்கப்பட்ட தண்ணீர் நேற்று மாலை ஒகேனக்கல் காவிரி ஆற்றிக்கு வந்தடைந்தது. இதனால் காலையில் 44 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து பிற்பகல் 3 மணிக்கு 60 ஆயிரம் கனஅடியாகவும், இரவு 9 மணியளவில் 80 ஆயிரம் கன அடியாகவும் அதிகரித்தது.

    இன்று காலை ஒகேனக்கலில் நீர்வரத்து மேலும் அதிகரித்து 96 ஆயிரம் கன அடியானது. நீரின் அளவை கர்நாடக-தமிழக எல்லையான பிலி குண்டுலுவில் மத்திய நீர்பாசன அதிகாரிகள் கண்காணித்து வருகிறார்கள்.

    நீர்வரத்து அதிகரிப்பால் ஒகேனக்கல் முதல் மேட்டூர் வரை காவிரி ஆற்றின் இரு கரைகளையும் தொட்டபடி தண்ணீர் செல்கிறது. ஒகேனக்கல் மெயின் அருவி, ஐவர் பாணி, சினி பால்ஸ் உள்பட அனைத்து அருவிகளையும் தண்ணீர் மூழ்கடித்து செல்கிறது.

    கடந்த 2013-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 5-ந்தேதி ஒகேனக்கல்லுக்கு அதிகபட்சமாக 1 லட்சத்து 78 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்தது. 5 ஆண்டுகளுக்கு பிறகு தற்போதுதான் 96 ஆயிரம் கனஅடி தண்ணீர் வருகிறது. இந்த நீர்வரத்து மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

    ஒகேனக்கல் அருவிகள் மற்றும் காவிரி ஆற்றில் பொங்கி பாயும் வெள்ளத்தால் இன்று 8-வது நாளாக சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல பரிசல் இயக்கவும் தடை நீடிக்கிறது.

    இந்த நிலையில் நேற்று மாலை முதல் சுற்றுலா பயணிகள் ஒகேனக்கல்லில் உள்ள லாட்ஜூகள் மற்றும் தங்கும் விடுதிகளில் தங்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    மேலும் ஒகேனக்கல் மற்றும் காவிரி கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டு வருகிறார்கள். அவர்கள் கால்நடைகளையும், மேடான இடங்களுக்கு அழைத்து சென்றுள்ளனர். இதில் சில இடங்களில் வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது.

    போலீசாரும் ஊர்காவல் படையினரும் காவிரி கரையோரப் பகுதிகளில் ரோந்து சுற்றி வருகிறார்கள். காவிரி ஆற்றில் யாரும் இறங்கி குளிக்கக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். தீயணைப்பு துறை, வருவாய்த் துறை, பொதுப் பணி மற்றும் வனத் துறையினர் தயார் நிலையில் உள்ளனர்.

    ஒகேனக்கல் முதல் மேட்டூர் வரை 75 கிலோ மீட்டர் தூரத்துக்கு காவிரி ஆறு செல்வதால், ஆற்றின் கரையோரம் உள்ள கிராம மக்களுக்கும் தண்டோரா மூலம் காவிரி ஆற்றை கடக்க வேண்டாம் என்றும், மேடான பகுதிகளுக்கு செல்லுமாறும் அறிவுறுத்தப்பட்டது.

    தமிழக-கர்நாடக எல்லை பகுதியான ஒகேனக்கலை அடுத்துள்ள மாறுகொட்டாய் கிராமத்தில் 50 குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். இவர்கள் ஒகேனக்கல்லுக்கு பரிசலில் வந்து பொருட்களை வாங்கி செல்வார்கள். மேலும் இவர்களது குழந்தைகள் ஒகேனக்கல் பகுதிகளில் உள்ள பள்ளிகளில் படித்து வருகின்றனர்.

    கடந்த 1 வாரமாகவே காவிரி ஆற்றில் தண்ணீர் அதிகமாக வருவதால் குழந்தைகளை பள்ளிகளுக்கு அனுப்பவில்லை. வெளியூரில் விடுதிகளில் தங்கி படித்து வரும் மாறுகொட்டாய் கிராம மாணவ-மாணவிகளை சொந்த ஊருக்கு வர வேண்டாம் என்று அவர்களது குடும்பத்தினர் அறிவுறுத்தி உள்ளனர்.

    பிலிகுண்டுலுவிலிருந்து மேட்டூர் அணை வரையிலான காவிரி கரையோரத்தில் வெள்ளம் தொடர்பான உதவிக்கு கட்டணம் இல்லா தொலைபேசி 1077 ஐ தொடர்பு கொள்ளலாம் என்று மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

    சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலத்தில் உள்ள பேரிடர் மேலாண்மை கட்டுப்பாட்டறையில் 24 மணி நேரமும் தொடர்ந்து அலுவலர்கள் பணியமர்த்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள்.

    ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வரும் தண்ணீர் நேராக மேட்டூர் அணைக்கு வருகிறது. இதனால் நேற்று காலை 46 ஆயிரத்து 613 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று மேலும் அதிகரித்து 60 ஆயிரத்து 120 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது.

    கர்நாடக அணைகளில் இருந்து 1 லடசத்து 13 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து இன்று மாலை 1 லட்சம் கன அடியாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    நேற்று 83.2 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 87.92 அடியாக உயர்ந் தது. இதனால் அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 5 அடி உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. பிற்பகல் அணையின் நீர்மட்டம் 90 அடியை தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    கர்நாடகாவில் இன்னும் 2 நாட்களுக்கு கன மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் அங்குள்ள அணைகளில் இருந்து மேலும் கூடுதல் தண்ணீர் திறக்க வாய்ப்புள்ளதால் இனி வரும் நாட்களில் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

    வழக்கமாக மேட்டூர் அணை 90 அடியை எட்டும் போது காவிரி டெல்டா பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்படும். இன்று பிற்பகலுக்குள் மேட்டூர் அணை நீர்மட்டம் 90 அடியை தாண்ட வாய்ப்புள்ளதால் ஓரிரு நாளில் மேட்டூர் அணையில் இருந்து காவிரியில் தண்ணீர் திறக்க வாய்ப்புள்ளது. இது குறித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று மாலை அல்லது நாளைக்குள் அறிவிப்பார் என்று கூறப்படுகிறது.

    மேட்டூர் காவிரி கரையோரம் வசிக்கும் பொதுமக்களுக்கு தண்டோரா மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்ட காட்சி.


    மேட்டூர் அணைக்கு இன்று பிற்பகல் முதல் 1 லட்சம் கன அடி தண்ணீர் வர வாய்ப்புள்ளதால் மேட்டூர் காவிரிக்கரையில் உள்ள அடிப்பாலாறு, செட்டிபட்டி, பண்ணவாடி, மூலக்காடு, தின்னப்பட்டி, சின்ன மேட்டூர் பகுதிகளில் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் மேடான பாதுகாப்பான பகுதிகளுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

    மேலும் அந்தந்த பகுதி கிராம நிர்வாக அலுவலர்கள் ,கிராம உதவியாளர்கள் மூலம் தண்டோரா அடித்து வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதனால் கரையோரங்களில் இருந்த மீனவர்கள் மேடான பகுதிகளுக்கு முகாம்களை மாற்றி வருகிறார்கள்.

    விவசாயிகள் தங்களது விளை பயிர்களை அப்படியே விட்டு விட்டு கிராமங்களை நோக்கி செல்கிறார்கள். விடுமுறை நாளான நேற்று பண்ணவாடி பகுதியில் கடல் போல காட்சியளிக்கும் காவிரியை காண மாவட்டத்தில் பல பகுதிகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வந்து பார்வையிட்டு சென்றனர்.

    மேட்டூர் அணையில் இருந்து ஓரிரு நாளில் காவரி ஆற்றில் தண்ணீர் திறக்க வாய்ப்புள்ளதால் சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள பூலாம்பட்டி, கூடக்கல், குப்பனூர் உள்பட காவிரி கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    தண்டோரா அடித்து பொது மக்களுக்கு விடுக்கப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கையில் கரையோர குடியிருப்புகளில் வசிக்கும் மக்கள் முன்னெச்சரிக்கையுடன் முன்னதாகவே தங்கள் உடமைகளையும், பொருட்களையும் பாதுகாப்பான இடங்களுக்கு எடுத்து செல்ல வேண்டும் எனவும், கரையோர விவசாயிகள் வெள்ள நீர் வடிகால்களை அமைப்பதுடன் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் உள்ள மேய்ச்சல் நிலங்களுக்கு தங்கள் கால்நடைகள் செல்லாத வண்ணம் கவனித்திட வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.

    மேலும் கரையோர மக்கள் ஆற்றில் ஆழமான பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் எனவும் , கரையோர மீனவர்கள் வெள்ள பெருக்கினை கவனத்தில் கொண்டு முன் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் எனவும், பயணிகள் விசைப்படகுகளை ஓட்டுபவர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் மிதமான வேகத்தில் பாதுகாப்பான பகுதிக்குள் விசைப்படகை செலுத்த வேண்டும் எனவும் அதில் கூறப்பட்டுள்ளது. #KarnatakaDams #Cauvery #WaterReleased
    ×