என் மலர்
நீங்கள் தேடியது "கர்நாடக அணைகள்"
- கர்நாடகாவில் மழை தீவிரம் அடைந்து உள்ளதால் அங்குள்ள கிருஷ்ணராஜசாகர் மற்றும் கபினி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது.
- தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
மேட்டூர்:
கர்நாடகாவில் மழை தீவிரம் அடைந்து உள்ளதால் அங்குள்ள கிருஷ்ணராஜசாகர் மற்றும் கபினி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது. 2 அணைகளில் இருந்து மொத்தம் 95ஆயிரம் கனஅடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறக்கப்பட்டு உள்ளது. எனவே அந்த தண்ணீர் மேட்டூர் அணைக்கு விரைவில் வர தொடங்கி அணை மீண்டும் இந்த ஆண்டில் 5-வது முறையாக நிரம்பும் வாய்ப்பு உள்ளது.
இதையடுத்து உபரிநீர் எந்த நேரத்திலும் மேட்டூர் அணையில் இருந்து காவிரி ஆற்றில் 50ஆயிரம் கனஅடி முதல் 70ஆயிரம் கனஅடி வரை திறந்து விடப்படலாம். இதுதொடர்பாக நீர்வளத்துறை சார்பில் காவிரி கரையோரம் உள்ள சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், திருச்சி, தஞ்சாவூர், நாகை உள்பட 11 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. மேலும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
மேட்டூர் அணையின் உபரிநீர் போக்கி எதிரே உள்ள தங்கமாபுரி பட்டணம், அண்ணாநகர், பெரியார் நகர், சேலம் கேம்ப் பகுதியில் வருவாய் துறையினர் பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்தனர்.
- அணையில் இருந்து ஆற்றில் 2ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
- 2 அணைகளில் இருந்தும் தண்ணீர் திறப்பு வினாடிக்கு 5ஆயிரத்து 607கனஅடியாக அதிகரிக்கப்பட்டு வருகிறது.
சேலம்:
கர்நாடகாவில் உள்ள கிருஷ்ணராஜசாகர் அணையின் மொத்த நீர்மட்டம் 124.80 அடியாகும். இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 100.92 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 3ஆயிரத்து 503 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 3 ஆயிரத்து 607கனஅடி தண்ணீர் காவிரி ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது.
இதேபோல் கபினி அணையின் மொத்த நீர்மட்டம் 84 அடியாகும். இன்று காலை நிலவரப்படி இந்த அணை நீர்மட்டம் 76.52 அடியாக உள்ளது. இந்த அணைக்கு 1261 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து ஆற்றில் 2ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. 2 அணைகளில் இருந்தும் தண்ணீர் திறப்பு வினாடிக்கு 5ஆயிரத்து607கனஅடியாக அதிகரிக்கப்பட்டு வருகிறது.
- அணையில் இருந்து வினாடிக்கு 1939 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
- கபினி அணையின் நீர்மட்டம் 74.85 அடியாக இருந்தது.
கர்நாடகாவில் உள்ள கிருஷ்ண ராஜ சாகர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 100.84 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 3182 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 1939 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
இதே போல் கபினி அணையின் நீர்மட்டம் 74.85 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 622 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 300 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
2 அணைகளில் இருந்தும் காவிரி ஆற்றில் நேற்று வினாடிக்கு 1991 கனஅடி திறந்து விடப்பட்ட நிலையில் இன்று 2239 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
- கிருஷ்ண ராஜசாகர் அணையின் மொத்த நீர்மட்ட உயரம் 124.80 அடியாகும். அணையில் தற்போது 81.45 அடிக்கு தண்ணீர் உள்ளது.
- கபினி அணையின் நீர்மட்ட உயரம் 84 அடி ஆகும். தற்போது அணையில் 58.29 அடிக்கு தண்ணீர் உள்ளது.
பெங்களூரு:
கர்நாடகாவில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. குறிப்பாக குடகு மாவட்டத்தில் மழை தீவிரம் அடைந்து வருகிறது. இதன் காரணமாக அங்குள்ள கிருஷ்ண ராஜசாகர் மற்றும் கபினி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது.
கிருஷ்ண ராஜசாகர் அணையின் மொத்த நீர்மட்ட உயரம் 124.80 அடியாகும். அணையில் தற்போது 81.45 அடிக்கு தண்ணீர் உள்ளது. அணைக்கு இன்று காலை நிலவரப்படி வினாடிக்கு 1971 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 500 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டு இருக்கிறது.
இதே போல் கபினி அணையின் நீர்மட்ட உயரம் 84 அடி ஆகும். தற்போது அணையில் 58.29 அடிக்கு தண்ணீர் உள்ளது. இன்று காலை நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 4356 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 300 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.






