search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கர்நாடக அணைகளில் இருந்து நீர் திறப்பு 20 ஆயிரம் கனஅடியானது
    X

    கர்நாடக அணைகளில் இருந்து நீர் திறப்பு 20 ஆயிரம் கனஅடியானது

    கர்நாடகத்தில் கே.ஆர்.எஸ். அணையில் இருந்து தண்ணீர் திறப்பு முற்றிலும் நிறுத்தப்பட்டது. கபினி அணையில் இருந்து இன்று நீர்திறப்பு 20 ஆயிரம் கனஅடியாக குறைக்கப்பட்டது. #KarnatakaDams #Cauvery
    ஒகேனக்கல்:

    கர்நாடக அணைகளில் இருந்து 2 லட்சத்துக்கும் மேற்பட்ட தண்ணீர் திறக்கப்பட்டதால் கடந்த 10 நாட்களுக்கு மேலாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

    தற்போது காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் நீர்திறப்பும் குறைக்கப்பட்டுள்ளது. நேற்று காலை கே.ஆர்.எஸ். அணையில் இருந்து 73 அயிரத்து 134 கனஅடி தண்ணீர் தமிழகத்துக்கு திறக்கப்பட்டது.

    இன்று காலை கே.ஆர்.எஸ். அணையில் இருந்து தண்ணீர் திறப்பு முற்றிலும் நிறுத்தப்பட்டது. கபினி அணையில் இருந்து நேற்று 27 ஆயிரத்து 83 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது. இன்று நீர்திறப்பு 20 ஆயிரம் கனஅடியாக குறைக்கப்பட்டது.

    கபினி மற்றும் கே.ஆர்.எஸ். அணைகளில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் பிலிகுண்டுலு, ஒகேனக்கல் வழியாக மேட்டூரை வந்து அடைகிறது. நேற்று ஒகேனக்கல்லுக்கு 1 லட்சம் கனஅடி வீதம் தண்ணீர் வந்தது. இன்று நீர்வரத்து மேலும் குறைந்து 70 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் வருகிறது.

    வெள்ளப்பெருக்கு குறைந்ததால் கடந்த 5 நாட்களாக ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் கிருஷ்ணகிரி- தருமபுரி மாவட்டங்களுக்கு குடிநீர் விநியோகம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. நேற்று மாலை முதல் மீண்டும் குடிநீர் விநியோகம் தொடங்கியது.

    நீர்வரத்து குறைந்தாலும் இன்று சுற்றுலா பயணிகள் குளிக்கவும், பரிசல் இயக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.



    ஒகேனக்கல் மெயின் அருவியில் தடுப்புகள் கம்பிகள் சேதமடைந்து உள்ளது. அங்கு குப்பை கூளங்களும் அதிக அளவில் தேங்கி உள்ளன. இவற்றை சீரமைத்து தடுப்பு கம்பிகள் அமைக்கப்பட்ட பிறகுதான் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படுவார்கள். #KarnatakaDams #Cauvery

    Next Story
    ×