search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கரூர்"

    • மரங்கள் சூழ்ந்து வனப்புடன் எழில்மிகுந்து காணப்படும்.
    • இறைவனின் இருப்பிடமாக கோவில்களுடன் காட்சியளிக்கின்றன.

    பல்லுயிர்களின் வாழ்விடமாக விளங்குவது மலைகள். நிலத்தினின்றும் உயர்ந்து மரங்கள் சூழ்ந்து வனப்புடன் எழில்மிகுந்து காணப்படும் சில மலைகளை மேகங்கள் உச்சி முகர்ந்து செல்லும். இது ஒரு வகையென்றால் சில மலைகள் பாறை அடுக்குகளாக காட்சியளிக்கும்.

    இவை போன்று எத்தகையதாயினும் பல மலைகள் இறைவனின் இருப்பிடமாக கோவில்களுடன் காட்சியளிக்கின்றன என்றால் அது மிகையாகாது. அத்தகைய மலைகளுள் ஒன்றாக விளங்குவதுதான் கரூர் மாவட்டத்தில் உள்ள தாந்தோன்றிமலை. ஊரின் பெயரும் அதுவே.

    தாந்தோன்றிமலை என்பதற்கு நேராக பொருள் கொண்டால் தானாக தோன்றிய மலை என்றாகிறது. மேலும் தாமான் தோன்றிக்கோள் எனும் குறுநில மன்னன் இந்த மலையை தனது இருப்பிடமாக கொண்டு, சுற்றியுள்ள பகுதிகளை ஆண்டுவந்தான் என்பது புறநானூற்று பாடல் மூலம் அறியப்படும் செய்தியாகும்.

    இதனால் இந்த மன்னனின் நினைவாக இவ்வூர் இப்பெயரை பெற்றிருக்கக்கூடும் என்றும் கூறப்படுகிறது. இந்த மலை இறைவனால் தோற்றுவிக்கப்பட்டதாகவும், அடியார்களால் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் பல்வேறு கருத்துகளும் உள்ளன.

    இதேபோல் இந்த மலையை சம்பந்தப்படுத்தி ஒரு புராண கதையும் உள்ளது. அதாவது ஒரு சமயத்தில், திருப்பாற்கடலில் திருமால் தனது அந்தப்புரத்தில் திருமகளுடன் மகிழ்ச்சியுடன் பேசிக்கொண்டிருந்தார். வாயிலின் வெளியே ஆதிசேஷன் காவல் புரிந்தார். அப்போது இறைவனை தரிசிப்பதற்காக அங்கு வந்த வாயுபகவான் உள்ளே நுழைய முயன்றார். ஆனால் ஆதிசேஷனோ, வாயுபகவானை உள்ளே செல்ல அனுமதிக்காமல் தடுத்து நிறுத்தினார். இதனால் அவர்களுக்கு இடையே கடுமையான வாக்குவாதமும், யார் பலசாலி என்பது பற்றிய சச்சரவும் ஏற்பட்டது.

    அந்த நேரத்தில் வெளியே வந்த திருமால், 2 பேருக்கும் இடையே மத்தியஸ்தம் செய்தார். அப்போது இருவருக்கும் ஒரு போட்டியையும் வைத்தார். அதாவது ஆதிசேஷன் திருவேங்கட மலையை தனது உடலால் அழுத்தி பிடித்துக்கொள்ள வேண்டும். வாயுபகவான் அதை தனது பலத்தால் அசைத்து தன்வசப்படுத்த வேண்டும் என்பது அந்த போட்டியாகும். அதனை அவர்கள் ஏற்றுக்கொள்ள போட்டி தொடங்கியது.

    போட்டியின் விதிப்படி ஆதிசேஷன் திருவேங்கட மலையை தனது உடலால் சுற்றி இறுக அழுத்தி கொண்டார். வாயு பகவான் அதனை பெயர்த்தெடுக்க முயன்றார். ஆனால் வெற்றி கிட்டவில்லை. கோபம் கொண்ட வாயு பகவான் தனது முழு பலமும் கொண்டு பெரும் புயலாக வீசியபோது அம்மலையின் சிறுசிறு பாகங்கள் சிதறுண்டு நாலா பக்கமும் விழுந்தன.

    அவ்வாறு சிதறி விழுந்த குன்றுகளில் ஒன்றுதான் இந்த தாந்தோன்றிமலை ஆகும், என்பதே அந்த கதையாகும். அதனால் திருவேங்கட மலைக்கு தெய்வீக சக்தி இருப்பது போன்று, அதனில் இருந்து சிதறிய குன்றுகளுக்கும் தெய்வீக சக்தி உண்டு என்று கூறப்படுகிறது. இதன் காரணமாகவே இம்மலை தென் திருப்பதி என்றும் அழைக்கப்படுகிறது.

    குடைவரை கோவில்

    தென் திருப்பதி என்ற பெயருக்கு ஏற்ப இங்கு இறைவன் கல்யாண வெங்கடரமண சுவாமியாக கோவில் கொண்டுள்ளார். தமிழ்நாட்டில் பொதுவாக கோவில்கள் கிழக்கு நோக்கியே அமைந்திருக்கும். ஆனால் இந்த கோவிலோ மேற்கு நோக்கி அமைந்துள்ளது. இக்கோவில் ஒரு குடைவரைக் கோவில் ஆகும். அதற்கேற்ப கருவறை விளங்குகிறது.

    இங்கு பாறையோடு ஒட்டிய நிலையில் கல்யாண வெங்கடரமண சுவாமி தன் மார்பில் லட்சுமியைத் தாங்கி நின்ற வண்ணம் மேற்கு நோக்கி காட்சி தருகிறார். அவர் நான்கு கைகளை கொண்டுள்ளார். கோவிலின் அர்த்த மண்டபம், நுழைவு மண்டபம் ஆகியவை பிற்காலத்தில் கட்டப்பட்டுள்ளன.

    கரூர் மாவட்டம் பல்வேறு பகுதிகளில் வெல்லம் உற்பத்தி அதிகரிப்பால் விலை வீழ்ச்சி அடைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.


    வேலாயுதம்பாளையம்,

    கரூர் மாவட்டம் நொய்யல், மரவாபாளையம், சேமங்கி, காளிபாளையம், குளத்துப்பாளையம், வேட்டமங்கலம், ஓலப்பாளையம், ஒரம்புப்பாளையம் , நல்லிக்கோவில், முத்தனூர், கவுண்டன்புதூர், பேச்சிப்பாறை , நடையனூர் ,கொங்கு நகர், திருக்காடுதுறை, தவுட்டுப்பாளையம் ,நன்செய் புகளூர், தளவாபாளையம், கடம்பங்குறிச்சி, வாங்கல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் கரும்பு பயிர் செய்யப்பட்டுள்ளது. இப்பகுதிகளில் விளையும் கரும்புகளை வெட்டிச்செல்வதற்காக விவசாயிகள் புகளூரில் உள்ள தனியார் சர்க்கரை ஆலைக்கு பதிவு செய்துள்ளனர். பதிவு செய்யாத விவசாயிகள் வெல்லம் தயாரிக்கும் ஆலை உரிமையாளர்களுக்கு விற்பனை செய்கின்றனர்.ஆலைகளில் தயாரிக்கப்பட்ட வெல்லம் ஏலச் சந்தை மூலமாக விற்பனைக்கு வரும். கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் 30 கிலோ கொண்ட உருண்டை வெல்லம் சிப்பம் ஒன்று ரூ.1,300- வரையிலும், அச்சு வெல்லம் சிப்பம் ஒன்று ரூ.1,300 வரையிலும் ஏலம் போனது. நேற்று சனிக்கிழமை நடைபெற்ற ஏலத்தில் உருண்டை வெல்லம் சிப்பம் ஒன்று ரூ.1,230 வரையிலும், அச்சு வெல்லம் சிப்பம் ஒன்று1,230 வரையிலும் ஏலம் போனது. வெல்லம் உற்பத்தி அதிகரிப்பால் விலை வீழ்ச்சி அடைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.


    • தவிட்டுப்பாளையம் பகுதியில் மக்களைத் தேடி மருத்துவம் திட்ட சிறப்பு முகாம்
    • சுகாதாரத்துறை சார்பில் சிறப்பு முகாம் நடைபெற்றது


    வேலாயுதம்பாளையம்,

    கரூர் மாவட்டம் தட்டுப்பாளையம் பகுதியில் சுகாதாரத்துறை சார்பில் மக்களை தேடி மருத்துவம் திட்ட சிறப்பு முகாம் நடைபெற்றது. முகாமில் ஓலப்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர்கள் மற்றும் சுகாதார தன்னார்வலர்கள் கொண்ட குழுவினர் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின்கீழ் அப்பகுதியில் உள்ள ஒவ்வொரு வீடுகளுக்கும் நேரடியாகச் சென்று வீடுகளில் உள்ள முதியவர்கள், பாலூட்டும் தாய்மார்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் நோயாளிகள் மற்றும் பொது மக்களுக்கு ரத்தப் பரிசோதனை செய்து ரத்தத்தில் சர்க்கரை அளவு, ரத்த அழுத்த அளவு, மற்றும் உடல் பரிசோதனை,தலைவலி, காய்ச்சல், உடல் வலி, சளி, இருமல் உள்ளிட்ட பல்வேறு பரிசோதனைகளை செய்து அவர்களுக்கு தேவையான உரிய மருந்து, மாத்திரைகளை வழங்கினார்கள்.


    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சோதனையிட வந்திருந்த அதிகாரிகள் மற்றும் திமுக-வினர் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
    • கரூரில் நடைபெற்ற அனைத்து வருமான வரி சோதனையும் நிறுத்தம்.

    தமிழகத்தின் சென்னை, கோயம்புத்தூர் மற்றும் கரூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று காலை முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். தமிழ் நாடு மின்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வுத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்கள், உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு சொந்தமான பல்வேறு பகுதிகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

    சோதனை துவங்கிய சில மணி நேரங்களில் சம்பவ இடத்திற்கு விரைந்த திமுக-வினர் முற்றுகையிட முயன்றதால் அந்த பகுதியில் பதற்றம் நிலவியது. முற்றுகையை தொடர்ந்து, அங்கு சோதனையிட வந்திருந்த அதிகாரிகள் மற்றும் திமுக-வினர் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது வருமான வரித்துறை அதிகாரி திமுக பிரமுகரை தாக்கியதாக கூறப்படுகிறது.

    இதையடுத்து அதிகாரிகளை திமுக-வினர் தாக்கினர். மேலும் அவர்களது வாகனத்தையும் அடித்து நொறுக்கினர். அதிகாரிகளின் பாதுகாப்புக்காக அவர்கள் கரூர் காவல் நிலையம் விரைந்தனர். இதே போல் கரூரில் மற்ற இடங்களிலும் வருமான வரி சோதனைக்கு திமுகவினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் கரூரில் நடைபெற்ற அனைத்து வருமான வரி சோதனையும் நிறுத்தப்பட்டது. அதிகாரிகள் எஸ்பி அலுவலகத்தில் தஞ்சம் அடைந்தனர். இது குறித்து கரூர் மாவட்ட எஸ்பி சுந்தரவதனன் கூறியதாவது.,

    "கரூரில் வருமான வரித்துறை சோதனைக்கு முறையாக தகவல் தெரிவிக்கவில்லை. வருமான வரித்துறை அதிகாரிகள் தங்களது பாதுகாப்புக்காக மத்திய ரிசர்வ் காவல் படையினரையும் அழைத்து வரவில்லை. சோதனைக்கு வந்த அதிகாரிகள் கார் கண்ணாடி உடைக்கப்பட்டதாக தகவல் கிடைத்தவுடன், போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்."

    "சோதனை நடக்கும் இடங்களில் 150-க்கும் அதிகமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். வருமான வரித்துறை அதிகாரிகள் புகார் அளித்தால் வழக்கு பதிவு செய்யப்படும். ," என்று தெரிவித்தார். 

    • கொள்ளையர்கள் அந்த மூதாட்டி அணிந்திருந்த செயின் மற்றும் கம்மல்களை திருடிக் கொண்டு தப்பி சென்றனர்.
    • தோட்டத்தில் தங்கியிருந்த வயதான தம்பதியினரை கொன்று நகை கொள்ளை அடிக்கபட்ட சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    கரூர்:

    கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட செங்குந்தபுரத்தை சேர்ந்தவர் சரவணகுமார். தொழிலதிபரான இவருக்கு சொந்தமான மாந்தோப்பு வாங்கல் ஓடையூரில் உள்ளது.

    இந்த தோப்பினை திருச்சி மாவட்டம் காட்டுப் புத்தூர் பெருமாள் காட்டுப் புத்தூரைச் சேர்ந்த தங்கவேல் (வயது 64)என்பவர் குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வந்தார். கடந்த 15 ஆண்டுகளாக அவர் தனது மனைவி மயிலியுடன் தோட்டத்திலேயே தங்கி இருந்தார்.

    இந்த வயதான தம்பதி தங்குவதற்கு தோட்டத்தில் ஒரு சிறிய குடிசை அமைக்கப்பட்டுள்ளது. இதில் வழக்கம் போல் நேற்று இரவு சமையல் செய்து சாப்பிட்டு விட்டு கணவன்-மனைவி இருவரும் படுத்து உறங்கினர்.

    இதற்கிடையே நேற்று நள்ளிரவு மர்ம நபர்கள் குடிசை வீட்டின் கதவை தட்டினர். உடனே தங்கவேல் திடுக்கிட்டு எழுந்து கதவை திறந்தார். அடுத்த நொடி கொள்ளையர்கள் தாங்கள் எடுத்து வந்த மிளகாய் பொடியை கணவன்-மனைவி இருவர் மீதும் தூவி சரமாரியாக தாக்கினர். இதில் பலத்த காயமடைந்த தங்கவேல், அவரது மனைவி மயிலி ஆகிய இருவரும் மயங்கி விழுந்து இறந்தனர்.

    பின்னர் கொள்ளையர்கள் அந்த மூதாட்டி அணிந்திருந்த செயின் மற்றும் கம்மல்களை திருடிக் கொண்டு தப்பி சென்றனர்.

    இந்த நிலையில் இன்று காலை அந்த மாந்தோப்பு தோட்டத்தில் வயதான தம்பதியினரின் நடமாட்டம் இல்லாததால் கிராம மக்கள் குடிசை வீட்டுக்கு சென்று பார்த்தனர். அப்போது கணவன் மனைவி இருவரும் ரத்த காயங்களுடன் பிணமாக கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் உடனடியாக வாங்கல் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த போலீசார் மோப்பநாய் மற்றும் கைரேகை நிபுணர்களுடன் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

    மேலும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினார். கொள்ளையர்கள் பற்றி எந்த துப்பும் கிடைக்கவில்லை.

    தோட்டத்தில் தங்கியிருந்த வயதான தம்பதியினரை கொன்று நகை கொள்ளை அடிக்கபட்ட சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • பொறியியல் பராமரிப்பு பணி நடைபெறுகிறது.
    • தேவையான இடத்தில் 1 மணி நேரம் முறைப்படுத்தி இயக்கப்படும்.

    திருப்பூர் :

    பொறியியல் பராமரிப்பு பணி நடைபெறுவதால் பாலக்காடு-திருச்சி ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி நாளை (ஞாயிற்றுக்கிழமை) பாலக்காடு-திருச்சி ரெயில் (எண்.16844) கரூர்-திருச்சி இடையே ரத்து செய்யப்பட்டுள்ளது. 

    இந்த ரெயில் பாலக்காட்டில் இருந்து கரூர் வரை மட்டுமே இயக்கப்படும். இதுபோல் திருச்சி-பாலக்காடு ரெயில் (எண்.16843) நாளை தேவையான இடத்தில் 1 மணி நேரம் முறைப்படுத்தி இயக்கப்படும். இந்த தகவலை சேலம் கோட்ட ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    • கரூர் மாவட்டத்தில் ஆதரவின்றி சுற்றி திரிந்த 19 பேர் மீட்பு
    • கரூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு, தனியார் காப்பகங்களில் சேர்க்க ப்பட்டனர்.

    கரூர்,

    கரூர், குளித்தலை பகுதிகளில் வசிப்பிடம், ஆதரவின்றி கோவில், பஸ் நிலையத்தில் , சாலையோரம் தங்கி யாசகம் பெற்று சுற்றிக்கொண்டிருந்த, 19 பேரை போலீசார் மீட்டு விசாரணை செய்தனர். அவரில் சிலர் மனநலம் பாதிக்கப்பட்டு இருந்தனர். அவர்கள் அனைவரும் கரூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு, தனியார் காப்பகங்களில் சேர்க்க ப்பட்டனர்.

    இது போன்று ஆதரவின்றி உள்ள நபர்களை பிச்சை எடுக்க வைத்து, பணம் சம்பாதிக்கும் நோக்கத்தில், யாராவது செயல்பட்டால், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எஸ்.பி சுந்தரவதனம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    • பொதுபல்கலைக்கழக நுழைவுத்தேர்வு (சி.யு.இ.டி. யு.ஜி) அடுத்த மாதம் 20-ந்தேதி வரை பல்வேறு பாடப்பிரிவுகளுக்கு நடைபெற உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
    • சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி, கரூர், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்–பட்டுள்ளன. இந்த மையங்க–ளில் திரளான மாணவ- மாணவிகள் ஆர்வமுடன் தேர்வு எழுதினர்.

    சேலம்:

    மத்திய பல்கலைக்–கழகங்கள்-44, மாநில பல்கலைக்–கழகங்கள்- 12, நிகர்நிலை பல்கலைக்– கழகங்கள்- 11, தனியார் பல்கலைக்கழகங்கள்-19 ஆகியவற்றில் இளநிலை கலை மற்றும் அறிவியல் பட்டப்படிப்புகளில் சேர்க்கை பெறுவதற்கான 2022-2023 -ம் ஆண்டு முதல் பொது பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு (சி.யு.இ.டி. யு.ஜி.) அறிவிப்பு தேசிய தேர்வு முகமை வெளியிட்டது. இந்த தேர்வுக்கு 14 லட்சத்து 90 ஆயிரம் பேர் பதிவு செய்தனர். குறிப்பாக சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி, கரூர், ஈரோடு, கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் பிளஸ்-2 முடித்து உயர்படிப்புக்காக காத்திருக்கும் மாணவ, மாணவிகள் பலர் விண்ணப்பித்தனர்.

    இதனை தொடர்ந்து பொது பல்கலைக்கழக இளநிலை நுழைவு தேர்வு இன்று நாடு முழுவதும் 500 நகரங்களில் தொடங்கியது. சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி, கரூர், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்–பட்டுள்ளன. இந்த மையங்க–ளில் திரளான மாணவ- மாணவிகள் ஆர்வமுடன் தேர்வு எழுதினர். காலையில் தாள்-1 தேர்வு 3 மணி நேரம் 15 நிமிடங்கள் வரையிலும், மாலையில் தாள்-2 தேர்வு 3 மணி நேரம் 45 நிமிடங்கள் வரையிலும் நடைபெற்றது. அதாவது தாள்-1 தேர்வு காலை 9 மணிக்கு தொடங்கி மதியம் 12.15 மணிக்கு முடிவடைந்தது. தொடர்ந்து தாள்-2 தேர்வு பிற்பகல் 3 மணிக்கு தொடங்கி மாலை 6.45 மணி வரை நடைபெற்றது.

    இன்று முதல் தொடர்ந்து பொதுபல்கலைக்கழக நுழைவுத்தேர்வு (சி.யு.இ.டி. யு.ஜி) அடுத்த மாதம் 20-ந்தேதி வரை பல்வேறு பாடப்பிரிவுகளுக்கு நடைபெற உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

    ×