search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திருட்டு"

    • அடுக்குமாடி குடியிருப்பில் உள்ளவர்கள் திரும்பி வந்தபோது மொத்தம் 6 வீடுகளில் கொள்ளை நடந்து இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
    • மழைவெள்ள பாதிப்பில் உடமைகளை இழந்த மக்களுக்கு இது மேலும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.

    தாம்பரம்:

    மிச்சாங் புயல் காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை கொட்டித்தீர்த்தது.

    தாம்பரம் அடுத்த முடிச்சூர், வரதராஜபுரம் பகுதிகளில் குடியிருப்புகளை சுற்றி வெள்ள நீர் சூழ்ந்தது. தரை தளத்தில் உள்ள வீடுகள் முழுவதும் மூழ்கும் அளவுக்கு தண்ணீர் நின்றதால் பெரும்பாலானோர் வீடுகளை பூட்டுவிட்டு மற்ற பகுதிகளில் உள்ள உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடுகளில் தஞ்சம் அடைந்தனர்.

    மழை வெள்ளத்தில் சிக்கியவர்களை பேரிடர் மீட்பு குழுவினர் படகுகளில் சென்று மீட்டனர். மேலும் வீட்டின் மாடிகளில் தஞ்சம் அடைந்தவர்களுக்கு அத்தியாவசிய உணவு பொருட்கள் ஹெலிகாப்டர்களிலும் வழங்கப்பட்டது.

    இந்நிலையில் வெள்ள நீர் வடிந்து உள்ளதால் வீடுகளுக்கு மக்கள் திரும்பி உள்ளனர். அவர்கள் இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறார்கள்.

    மழை வெள்ளத்தில் மூழ்கிய வீட்டில் இருந்த பெரும்பாலான பொருட்கள் மற்றும் பிரிட்ஜ், டி.வி. உள்ளிட்ட எலெக்ட்ரிக் பொருட்கள் அனைத்தும் சேதம் அடைந்து உள்ளதை பார்த்து உரிமையாளர்கள் கண்ணீர் வடித்தனர்.

    இதற்கிடையே முடிச்சூர், வரதராஜபுரம் பகுதியில் வெள்ளம் வடிந்த பகுதியில் பொதுமக்கள் திரும்பி வரத்தொடங்கி உள்ளனர். அப்போது வீடுகளில் கொள்ளை நடந்து இருப்பதை கண்டு உரிமையாளர்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.

    வரதராஜபுரம் பகுதியில் விஷ்னு என்ற அடுக்கு மாடி குடியிருப்பில் 17 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

    கனமழை காரணமாக முடிச்சூர் முழுவதும் மழை நீரால் மூழ்கி போனதால் அடுக்குமாடி குடியிருப்புகளில் உள்ள அனைவரும் வீட்டை பூட்டிவிட்டு வெளியேறி உறவினர் மற்றும் நண்பர்கள் வீடுகளில் தஞ்சம் அடைந்து இருந்தனர். தற்போது இந்த அடுக்குமாடி குடியிருப்பில் உள்ளவர்கள் திரும்பி வந்தபோது மொத்தம் 6 வீடுகளில் கொள்ளை நடந்து இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    சரத்குமார் என்பவர் வீட்டில் 17 பவுன் நகை, ரூ.2 லட்சம் ரொக்கம், கண்ணண் என்பவரது வீட்டில் 15 நகை, விஜயலட்சுமி என்பவர் வீட்டில் 7 பவுன் நகை, ரூ. 1 லட்சம் ரொக்கம், கார்த்திக் என்பவர் வீட்டில் 7 பவுன் நகை, அருண் என்பவர் வீட்டில் 15 பவுன் நகை என மொத்தம் 60 பவுன் நகை மற்றும் ரூ. 3 லட்சம் ரொக்கத்தை அள்ளிச் சென்று உள்ளனர்.

    சிறுக சிறுக சேர்த்து வைத்த பணம் மற்றும் வாங்கிய நகைகளை மழை வெள்ளத்தை பயன்படுத்தி கொள்ளையர்கள் சுருட்டி சென்று இருப்பதை கண்டு அதனை பறி கொடுத்தவர்கள் கதறி அழுதது பரிதாபமாக இருந்தது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த சோமங்கலம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    முடிச்சூர் பகுதியில் மழை வெள்ளம் காரணமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிராக்கள் எதுவும் செயல்படவில்லை. இதனால் குற்றவாளியை கண்டுபிடிப்பதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது.

    ஏற்கனவே அதே பகுதியில் 3 மாதத்திற்கு முன்பு 50 பவுன் தங்க நகைகள் கொள்ளை போன நிலையில் குற்றவாளிகள் இதுவரை சிக்கவில்லை தற்போது மீண்டும் கை வரிசை காட்டி உள்ளனர்.

    மழைவெள்ள பாதிப்பில் இருந்து தப்பிக்கும் அவசரத்தில் வீட்டில் இருந்த நகை மற்றும் ரொக்கப்பணத்தை பெரும்பாலானோர் அப்படியே விட்டுச்சென்று இருந்தனர்.

    வெள்ளத்தின் போது பூட்டிகிடக்கும் வீடுகளை நோட்டமிட்ட கொள்ளை கும்பல் நகை-பணத்தை அள்ளிச்சென்று உள்ளனர். மழைவெள்ள பாதிப்பில் உடமைகளை இழந்த மக்களுக்கு இது மேலும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இதேபோல் முடிச்சூர் பகுதியிலும் சில வீடுகளில் கொள்ளை நடந்து உள்ளது. இது தொடர்பாகபோலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மழை பாதிப்பில் சிக்கியவர்களுக்கு உதவுவது போல் நடித்து மனிதாபிமானம் இல்லாமல் கொள்ளையில் ஈடுபட்ட கும்பல் மீது போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் ஆதங்கத்துடன் தெரிவித்தனர்.

    • ஓசூரில் தனி ஒருவனாக 52 இருசக்கர வாகனங்களை திருடியவர் கைது
    • போலீசாருக்கு எஸ்.பி. பாராட்டு

    ஓசூர் மாநகர பகுதிகளில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் தனி ஒருவனாக 52 இருசக்கர வாகனங்களை திருடி விற்ற பலே திருடனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஒசூர் பகுதியில் கடந்த மாதம் தொடர் இரு சக்கர வாகனத் திருட்டு கடை வீதி பகுதிகளில் நடந்து வந்தது. இது குறித்து தொடர்ந்து புகார்கள் வந்தன. சம்பவம் நடந்த பகுதிகளில் வைத்திருந்த சி.சி.டிவி கேமாரா பதிவுகளை கைபற்றி போலீசார் ஆய்வு மேற்கொண்டனர். அதில் ஒரே நபர் வாகனத்தை எடுத்து செல்லும் காட்சி பதிவானது.

    இதனையடுத்து அந்த திருடன் குறித்து போலீசார் பல்வேறு இடங்களில் விசாரணை நடத்தினர் அதில் தருமபுரி மாவட்டம், ஜிட்டான்டஅள்ளியை சேர்ந்த கண்ணன்(24) என்பவரை பிடித்து விசாரணை நடத்தினர். அவர் தான் ஓசூர் நகர பகுதிகளில், தனி ஒருவானக விலை உயர்வான 52 இருசக்கர வாகனங்களை திருடி விற்றது தெரியவந்தது. இதனையடுத்து அவரை கைது செய்து அவர் மீது பல்வேறு வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர். விரைவாக செயல்பட்டு திருடனை பிடித்த ஓசூர் அட்கோ போலீஸ் இன்ஸ் பெக்டர் பத்மாவதி, சப்-இன்ஸ்பெக்டர் வினோத் உள்ளிட்ட போலீசாருக்கு, மாவட்ட எஸ்.பி. சரோஜ் டாகூர் பாராட்டு, தெரிவித்தார்.

    • போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வந்தனர்.
    • வீரப்பூர் என்ற பகுதியில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    ஸ்ரீவில்லிபுத்தூர்:

    விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் இடைய பொட்டல் தெருவை சேர்ந்த ராமர் என்பவரது மனைவி சுமதி (வயது56). இவர் கடந்த ஜூலை 1-ந் தேதி சனி பிரதோஷத்தை முன்னிட்டு மடவார் வளாகம் வைத்தியநாத சுவாமி கோவிலுக்கு சாமி கும்பிட சென்றார்.

    அப்போது கூட்டத்தில் சுமதி கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் தங்க செயின் திருடு போனது. இதுகுறித்த புகாரில் ஸ்ரீவில்லிபுத்தூர் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வந்தனர்.

    இந்த செயின் பறிப்பு வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள் திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே வீரப்பூர் என்ற பகுதியில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து அங்கு சென்ற போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரவி தலைமையிலான தனிப்படையினர் திருட்டு வழக்கில் தொடர்புடைய தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி மந்திதோப்பு பகுதியை சேர்ந்த முருகன் (55), அவரது மனைவி அலமேலு (45) ஆகியோரை கைது செய்தனர்.


    மேலும் அவர்களுடன் இருந்த கோவில்பட்டியைச் சேர்ந்த பொன்மணி (32), மாரிமுத்து (26), செல்வி (34), நாகம்மாள் (57) ஆகியோரை கைது செய்தனர்.

    இவர்கள் கடந்த 2022-ம் ஆண்டு ஆகஸ்டு 18-ந் தேதி மடவார் வளாகம் கோவிலுக்குச் சென்ற மூதாட்டியிடம் 2 பவுன் நகை பறித்தது, கடந்த ஜூன் மாதம் வ.புதுப்பட்டி ரேணுகா தேவி அம்மன் கோவில் கும்பாபிஷேகத்தில் மகாலட்சுமி என்பவரிடம் 6 பவுன் செயின் பறித்தது தெரியவந்தது. கைது செய்த 6 பேரிடமிருந்து 9 பவுன் நகை மற்றும் கார் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    இவர்கள் கோவில் திருவிழாக்கள் நடைபெறும் ஊர்களுக்கு குழுவாக சென்று கூட்ட நெரிசலை பயன்படுத்தி நகை திருட்டில் ஈடுபட்டது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

    • பரமத்திவேலூர் பஸ் நிலையத்தில் இருந்து வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்த இவரை பின்தொடர்ந்து சென்ற வாலிபர் ஒருவர் நைசாக பேசி மணிமேகலை அணிந்திருந்த 13 பவுன் நகைகளை திருடி சென்றார்.
    • மூதாட்டியை ஏமாற்றி நகைகளை திருடி சென்ற மர்ம நபர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் சுல்தான்பேட்டை சேடர் தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் மணிமேகலை (65). பரமத்திவேலூர் பஸ் நிலையத்தில் இருந்து வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்த இவரை பின்தொடர்ந்து சென்ற வாலிபர் ஒருவர் நைசாக பேசி மணிமேகலை அணிந்திருந்த 13 பவுன் நகைகளை திருடி சென்றார்.

    இதுகுறித்து வேலூர் போலீசில் மணிமேகலை புகார் அளித்தார். அதன்பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் சம்பவம் நடந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களின் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து மூதாட்டியை ஏமாற்றி நகைகளை திருடி சென்ற மர்ம நபர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • போலீசார் தர்மராஜை கைது செய்தனர்.
    • கொண்டலாம்பட்டி போலீசார் கடந்த ஜூலை மாதம் வீடு புகுந்து திருடிய வழக்கில் தேடி வந்தனர்.

    சேலம்:

    சேலம் தாதகாப்பட்டி தாகூர் தெருவை சேர்ந்தவர் சேகர். இவரது மகன் தர்மன் என்கிற தர்மராஜ் (27). இவரை வழிப்பறி வழக்கில் அன்னதானப்பட்டி போலீசார் தேடி வந்தனர்.

    இந்த நிலையில் இன்று காலை போலீசார் தர்மராஜை கைது செய்தனர். இதே போல் அமானி கொண்டலாம்பட்டி பழனியப்பன்காடு பகுதியைச் சேர்ந்தவர் சரவணன் என்கிற காட்டுக்கார சரவணன் (40).

    இவரையும் கொண்டலாம்பட்டி போலீசார் கடந்த ஜூலை மாதம் வீடு புகுந்து திருடிய வழக்கில் தேடி வந்தனர். இன்று அதிகாலை சரவணனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பெட்ரோல் நிலையத்தில் டிரைவர் வேனை நிறுத்திய போது, டிரைவரை தாக்கி இனிப்புகளுடன் வேனை மர்மநபர்கள் திருடி சென்றுள்ளனர்.
    • புகாரின் பேரில் போலீசார் கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

    ஆஸ்திரேலியாவில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் களை கட்ட தொடங்கி உள்ளது. இந்நிலையில், நியூ சவுத்வேல்சில் உள்ள ஒரு ஸ்வீட் கடையில் இருந்து ரூ.22 லட்சம் மதிப்புள்ள 10 ஆயிரம் டோனட்ஸ் அடங்கிய கிரீம் வகை இனிப்புகள் ஒரு வேனில் ஏற்றப்பட்டு டெலிவரிக்காக கொண்டு செல்லப்பட்டது.

    அப்போது பெட்ரோல் நிலையத்தில் டிரைவர் வேனை நிறுத்திய போது, டிரைவரை தாக்கி இனிப்புகளுடன் வேனை மர்மநபர்கள் திருடி சென்றுள்ளனர். இதுதொடர்பான புகாரின் பேரில் போலீசார் கொள்ளையர்களை தேடி வருகின்றனர். அங்கிருந்த சி.சி.டி.வி. காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது வேனை திருடியது ஒரு பெண் என தெரிய வந்துள்ளது. அதன்மூலம் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

    • பல ஏக்கர் பரப்பளவில் பச்சை மிளகாய் பயிரிட்டு விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர்.
    • 2 பேரில் ஒருவரை கட்டி வைத்து மற்றொருவரை கட்டப்பட்டவரின் தோள் மீது ஏற்றி நிறுத்தி வைத்து கடுமையாக தண்டித்துள்ளனர்.

    பெங்களூரு:

    கர்நாடக மாநிலம் கதக் மாவட்டத்தில் ஏராளமான விவசாயிகள் பச்சை மிளகாய் பயிரிட்டு சாகுபடி செய்து வருகின்றனர். அங்கு விளைவிக்கக் கூடிய பச்சை மிளகாய்க்கு சந்தைகளில் அமோக வரவேற்பு உள்ளதோடு அதிக விலையும் கிடைத்து வருவதால் விவசாயிகள் இதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

    இதனால் பல ஏக்கர் பரப்பளவில் அந்த பகுதிகளில் பச்சை மிளகாய் பயிரிட்டு விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர். கடந்த சில தினங்களாக அந்த கிராமத்தில் உள்ள விளை நிலங்களில் பச்சை மிளகாய் அறுவடைக்கு தயாராக இருந்த சூழலில் அவ்வப்பொழுது பச்சை மிளகாய் திருட்டு போய் வந்தது. இதனால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து விவசாயிகள் பச்சை மிளகாய் பயிரிட்ட தோட்டத்தில் காவல் காத்து வந்தனர்.

    இந்த நிலையில் அதே கிராமத்தை சேர்ந்த வாலிபர்கள் சிவன், மஞ்சுநாத் ஆகியோர் அதிகாலை வேளையில், விளை நிலங்களில் புகுந்து செழிப்பாக விளைந்திருந்த பச்சை மிளகாய்களை பறித்துக் கொண்டு அவர்கள் கொண்டு வந்திருந்த துணிகளில் மூட்டை கட்டிக்கொண்டு திருடி செல்ல முயன்றனர்.

    அப்போது தோட்டத்தில் காவலுக்கு இருந்து வந்த விவசாயிகளில் சிலர், 2 வாலிபர்களையும் சுற்றி வளைத்து கையும் களவுமாக பிடித்து தர்ம அடி கொடுத்தனர். மேலும், திருடிய மிளகாய்களுடன் இருவரையும் கிராமத்தில் தெருத்தெருவாக அடித்து இழுத்துச் சென்றனர். தொடர்ந்து, அந்தப் பகுதியில் இருந்த கோவில் தூணில் அவர்கள் திருடிய மிளகாய்களுடன், 2 பேரில் ஒருவரை கட்டி வைத்து மற்றொருவரை கட்டப்பட்டவரின் தோள் மீது ஏற்றி நிறுத்தி வைத்து கடுமையாக தண்டித்துள்ளனர்.

    இதுபற்றி தகவல் அறிந்து அங்கு வந்த கிராமத்தின் முக்கியஸ்தர்கள் 2 பேரையும் மீட்டு, மீண்டும் இது போன்ற சம்பவங்களில் ஈடுபடக் கூடாது என அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.

    பச்சை மிளகாய் திருடிய வாலிபர்களை கட்டி வைத்து அடித்த இந்த சம்பவம் தொடர்பான வீடியோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

    • கடையின் பூட்டு உடைக்கப் பட்டு இருந்தது.
    • கடையில் இருந்த ரூ.50 ஆயிரம் பணம் காணாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    அம்மாபேட்டை:

    ஈரோடு மாவட்டம் அம்மா பேட்டை, சிங்கம் பேட்டை பவானி- மேட்டூர் ரோடு பகுதியில் மளிகை கடை உள்பட பல்வேறு கடைகள் செயல்பட்டு வருகிறது.

    அதே போல் அம்மா பேட்டை அருகே உள்ள குதிரைக்கல் மேடு பகுதியை சேர்ந்தவர் பிரபாவதி (வயது 31) என்பவர் அதே பகுதியில் மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார்.

    அவர் தினமும் வியாபாரத்தை முடித்து கொண்டு இரவில் கடையை மூடி விட்டு செல்வது வழக்கம்.

    அதே போல் அவர் நேற்று இரவும் கடையை பூட்டி விட்டு சென்று விட்டார். இன்று காலை கடையை மீண்டும் திறக்க வந்தார். அப்போது கடையின் பூட்டு உடைக்கப் பட்டு இருந்தது.

    இதையடுத்து அவர் கடையின் உள்ளே சென்று பார்த்தார். அப்போது கடையில் இருந்த ரூ.50 ஆயிரம் பணம் காணாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    இந்த பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது.

    இதே போல் சுள்ளிமேடு பகுதியை சேர்ந்தவர் மாதேஸ்வரன் (50). இவர் சிங்கம்பேட்டை பகுதியில் மளிகை கடை வைத்துள்ளார்.

    இவரது மளிகை கடையின் பூட்டை மர்ம நபர்கள் உடைத்து கடையில் இருந்த 3 சிப்பம் அரிசி மூட்டைகள் மற்றும் மளிகை பொருட்களை திருடி சென்று விட்டனர்.

    மேலும் அம்மாபேட்டை அடுத்த குதிரைக்கல் மேடு பகுதியில் உள்ள ஒரு மளிகை கடையின் பூட்டை உடைத்து அங்கு வைத்து இருந்த ரூ.2700 பணத்தை மர்ம நபர்கள் திருடி சென்று விட்டனர்.

    இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் இன்று காலை சம்பவ இடத்துக்கு சென்று ஆய்வு செய்து விசாரணை நடத்தினர்.

    மேலும் குதிரைக்கல் மேடு பகுதியில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமிரா காட்சிகளையும் ஆய்வு செய்தனர்.

    அப்போது பவானி- மேட்டூர் மெயின் ரோட்டில் ஒரு ஆம்னி கார் அதிகாலை 2.30 மணி அளவில் வந்தது.

    அந்த காரில் இருந்து இறங்கிய ஒருவர் அந்த பகுதியில் உள்ள பிரபா வதியின் மளிகை கடையின் பூட்டை உடைத்து பணம் கொள்ளையடித்து சென்றது பதிவாகி இருந்தது.

    தொட ர்ந்து அவர்கள் மேட்டூர் ரோட்டில் காரில் வந்து மேலும் 2 கடைகளில் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டது தெரிய வந்தது.

    காரில் வந்து கொள்ளை யடித்தவர்கள் யார் என்பது குறித்து அம்மாபேட்டை போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மேலும் போலீசார் அந்த பகுதியில் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இதனால் இன்று காலை அந்த பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தை சேர்ந்தவர் சத்தியமூர்த்தி. இவர் மொபைல் கடை வெளியே மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு கடைக்கு சென்று வெளியே வந்து பார்த்தபோது அவருடைய மோட்டார் சைக்கிள் திருடு போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    இது குறித்து சங்கராபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்ததை தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கடையில் உள்ள சி.சி.டி.வி காட்சியை ஆய்வு செய்து பார்த்தபோது பட்டப்பகலில் மோட்டர் சைக்கிளை கள்ளச்சாவி போட்டு அடையாளம் தெரியாத வாலிபர் ஒருவர் திருடிச் செல்லும் காட்சி பதிவாகி உள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • இளம்பிள்ளை சின்னப்பம்பட்டி பிரதான சாலையில் உள்ள பாப்பாபட்டி பெட்ரோல் பங்க் அருகே அடுத்தடுத்து 2 டாஸ்மாக் கடைகள் செயல்படுகின்றன.
    • இந்த பகுதியில் கடை அருகில் மது பிரியர்கள் அமர்ந்து குடித்துவிட்டு அடிக்கடி ரகளையில் ஈடுபடுகின்றனர்.

    காக்காபாளையம்:

    சேலம் மாவட்டம் இளம்பிள்ளை சின்னப்பம்பட்டி பிரதான சாலையில் உள்ள பாப்பாபட்டி பெட்ரோல் பங்க் அருகே அடுத்தடுத்து 2 டாஸ்மாக் கடைகள் செயல்படுகின்றன. இந்த பகுதியில் உள்ள சாலை மார்க்கமாக தினமும் 100-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் மற்றும் 4 சக்கர வாகனங்கள் சென்றபடியே பரபரப்பாக காணப்படும்.

    இந்த பகுதியில் கடை அருகில் மது பிரியர்கள் அமர்ந்து குடித்துவிட்டு அடிக்கடி ரகளையில் ஈடுபடுகின்றனர். மேலும் அந்த வழியாக செல்லும் பள்ளி, கல்லூரி மாணவிகள் மற்றும் குடியிருப்பு வாசிகளிடம் தகராறு செய்வதும், வாகனங்கள் செல்லாதவாறு ரோட்டில் நின்று கொண்டு அடிக்கடி சண்டை போடுவதும் வழக்கமாக உள்ளது.

    இந்த நிலையில் நள்ளிரவில் மர்ம நபர்கள் டாஸ்மாக் (கடை எண். 7165) யின் ஷட்டரை உடைத்து கடையில் இருந்த 15 குவாட்டர் பாட்டில், 10 பீர் பாட்டில்களையும் அள்ளிச் சென்றனர். வழக்கம்போல் இன்று காலையில் பணிக்கு வந்த ஊழியர்கள் கடையின் ஷட்டர் உடைக்கப்பட்டு மதுபாட்டில்கள் திருடப்பட் டுள்ளதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    இது குறித்த புகாரின்பேரில் மகுடஞ்சாவடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அந்த பகுதியில் ஒரு சந்து கடை செயல்படுவதாக கிடைத்த தகவலின்பேரில் இது பற்றியும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    • விவசாய தோட்டத்தில் 80 செம்மறி ஆடுகளை வளர்த்து, அதனை பராமரித்து வருகிறார்.
    • 4 பேரையும் கைது செய்த போலீசார், கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    முத்தூர்:

    திருப்பூர் மாவட்டம் காங்கயம் அருகே உள்ள பாப்பினி, பாலசமுத்திரம், முருங்ககாட்டுத்தோட்டம் பகுதியை சேர்ந்தவர் சிவகோகுல் (வயது 24). இவரது விவசாய தோட்டத்தில் 80 செம்மறி ஆடுகளை வளர்த்து, அதனை பராமரித்து வருகிறார். இந்த நிலையில் சம்பவத்தன்று ஆடுகளை மேய்ச்சல் முடித்து, மாலையில் அனைத்து ஆடுகளையும் தோட்டத்தில் உள்ள பட்டியில் அடைத்து விட்டு வீட்டுக்கு சென்று விட்டார்.

    பின்னர் அடுத்த நாள் காலையில் வழக்கம் போல பட்டிக்கு சென்று பார்த்தவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. பட்டியில் அடைத்து வைக்கப்பட்டு இருந்த 3 செம்மறி ஆடுகள் மற்றும் 5 செம்மறி ஆட்டுக்குட்டிகள் என மொத்தம் 8 ஆடுகள் காணாமல் போயிருந்தது. உடனே அக்கம் பக்கத்தில் சென்று தேடிப்பார்த்தும், விசாரித்து பார்த்தும் எந்த தகவலும் கிடைக்கவில்லை.

    மர்ம நபர்கள் ஆடுகளை திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து சிவகோகுல் காங்கயம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரை தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆடுகளை திருடிய நபர்களை தீவிரமாக தேடி வந்தனர். இந்தநிலையில் நேற்று (வியாழக்கிழமை) காங்கயம் அருகே உள்ள நத்தக்காடையூர் பகுதியில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை நடத்தினர். அதுசமயம் காரில் இருந்தவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர்.

    இதனால் சந்தேகம் அடைந்த போலீசார், காரில் இருந்த 4 பேரையும் பிடித்து தீவிரமாக விசாரித்த போது அவர்கள் ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி பக்கம் உள்ள பச்சாபாளையம் கரடு பகுதியை சேர்ந்த அருண்குமார் (வயது 38), ஈரோடு, வெங்கியம்பாளையம் பகுதியை சேர்த்த விஜயகுமார் (35), ஈரோடு, கடைசி குப்பி வாய்க்கால் பகுதியை சேர்ந்த பேரறிவாளன் (24), ஹரிமுகேஷ் (21) என்பதும் இவர்கள் 4 பேரும் செம்மறி ஆடுகளை திருடியது தெரியவந்தது.

    மேலும் இவர்கள் 4 பேரும் விவசாய, கூலி வேலைக்கு சென்று கொண்டு இதுபோல் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு வந்தது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து 4 பேரையும் கைது செய்த போலீசார், கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • திருடனின் குறட்டை சத்தம் கேட்டு வீட்டு உரிமையாளர்களில் ஒருவரான டாங் என்ற பெண் கண் விழித்துள்ளார்.
    • திருடன் மீது ஏற்கனவே வழக்குகள் இருப்பதாகவும், கடந்த ஆண்டு ஒரு வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்டவர் என்றும் போலீசார் தெரிவித்தனர்.

    தென்மேற்கு சீனாவில் உள்ள யுனான் மாகாணத்தை சேர்ந்தவர் டாங். சம்பவத்தன்று இவரது வீட்டுக்குள் ஒரு திருடன் கொள்ளையடிப்பதற்காக நுழைந்துள்ளான். அப்போது வீட்டில் இருப்பவர்கள் பேசி கொண்டிருக்கும் சத்தம் கேட்டுள்ளது. இதனால் வீட்டில் உள்ளவர்கள் தூங்கும் வரை காத்திருக்கலாம் என திட்டம் தீட்டிய கொள்ளையன் அங்குள்ள ஒரு அறையில் காத்திருந்தார். அப்போது சுருட்டு பற்ற வைத்து புகைத்த திருடன் சிறிது நேரத்தில் கண் அயர்ந்து தூங்கி உள்ளார்.

    சிறிது நேரத்தில் அவர் குறட்டையும் விட்டுள்ளார். இதற்கிடையே வீட்டில் உள்ளவர்களும் கண் அயர்ந்து உறங்கிய நிலையில், திருடனின் குறட்டை சத்தம் கேட்டு வீட்டு உரிமையாளர்களில் ஒருவரான டாங் என்ற பெண் கண் விழித்துள்ளார். முதலில் பக்கத்து வீட்டில் இருந்து தான் குறட்டை சத்தம் வருகிறதோ என கருதிய அவர் சத்தம் பக்கத்து அறையில் இருந்து வருவதை உணர்ந்து அங்கு சென்ற போது திருடன் பதுங்கி இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

    உடனடியாக வீட்டில் உள்ளவர்களை எழுப்பியதோடு, போலீசாருக்கும் தகவல் தெரிவித்ததின் அடிப்படையில் போலீசார் விரைந்து சென்று திருடனை கைது செய்தனர். திருடன் மீது ஏற்கனவே வழக்குகள் இருப்பதாகவும், கடந்த ஆண்டு ஒரு வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்டவர் என்றும் போலீசார் தெரிவித்தனர்.

    ×