search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    3 கடைகளில் பணம்- மளிகை பொருட்கள் திருட்டு
    X

    3 கடைகளில் பணம்- மளிகை பொருட்கள் திருட்டு

    • கடையின் பூட்டு உடைக்கப் பட்டு இருந்தது.
    • கடையில் இருந்த ரூ.50 ஆயிரம் பணம் காணாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    அம்மாபேட்டை:

    ஈரோடு மாவட்டம் அம்மா பேட்டை, சிங்கம் பேட்டை பவானி- மேட்டூர் ரோடு பகுதியில் மளிகை கடை உள்பட பல்வேறு கடைகள் செயல்பட்டு வருகிறது.

    அதே போல் அம்மா பேட்டை அருகே உள்ள குதிரைக்கல் மேடு பகுதியை சேர்ந்தவர் பிரபாவதி (வயது 31) என்பவர் அதே பகுதியில் மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார்.

    அவர் தினமும் வியாபாரத்தை முடித்து கொண்டு இரவில் கடையை மூடி விட்டு செல்வது வழக்கம்.

    அதே போல் அவர் நேற்று இரவும் கடையை பூட்டி விட்டு சென்று விட்டார். இன்று காலை கடையை மீண்டும் திறக்க வந்தார். அப்போது கடையின் பூட்டு உடைக்கப் பட்டு இருந்தது.

    இதையடுத்து அவர் கடையின் உள்ளே சென்று பார்த்தார். அப்போது கடையில் இருந்த ரூ.50 ஆயிரம் பணம் காணாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    இந்த பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது.

    இதே போல் சுள்ளிமேடு பகுதியை சேர்ந்தவர் மாதேஸ்வரன் (50). இவர் சிங்கம்பேட்டை பகுதியில் மளிகை கடை வைத்துள்ளார்.

    இவரது மளிகை கடையின் பூட்டை மர்ம நபர்கள் உடைத்து கடையில் இருந்த 3 சிப்பம் அரிசி மூட்டைகள் மற்றும் மளிகை பொருட்களை திருடி சென்று விட்டனர்.

    மேலும் அம்மாபேட்டை அடுத்த குதிரைக்கல் மேடு பகுதியில் உள்ள ஒரு மளிகை கடையின் பூட்டை உடைத்து அங்கு வைத்து இருந்த ரூ.2700 பணத்தை மர்ம நபர்கள் திருடி சென்று விட்டனர்.

    இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் இன்று காலை சம்பவ இடத்துக்கு சென்று ஆய்வு செய்து விசாரணை நடத்தினர்.

    மேலும் குதிரைக்கல் மேடு பகுதியில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமிரா காட்சிகளையும் ஆய்வு செய்தனர்.

    அப்போது பவானி- மேட்டூர் மெயின் ரோட்டில் ஒரு ஆம்னி கார் அதிகாலை 2.30 மணி அளவில் வந்தது.

    அந்த காரில் இருந்து இறங்கிய ஒருவர் அந்த பகுதியில் உள்ள பிரபா வதியின் மளிகை கடையின் பூட்டை உடைத்து பணம் கொள்ளையடித்து சென்றது பதிவாகி இருந்தது.

    தொட ர்ந்து அவர்கள் மேட்டூர் ரோட்டில் காரில் வந்து மேலும் 2 கடைகளில் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டது தெரிய வந்தது.

    காரில் வந்து கொள்ளை யடித்தவர்கள் யார் என்பது குறித்து அம்மாபேட்டை போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மேலும் போலீசார் அந்த பகுதியில் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இதனால் இன்று காலை அந்த பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.

    Next Story
    ×