search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சங்கராபுரத்தில் கள்ளச்சாவி போட்டு மோட்டார் சைக்கிள் திருட்டு
    X

    வாலிபர் மோட்டார் சைக்கிளை கள்ளச்சாவி போட்டு திருடும் சி.சி.டி.வி. காட்சி.

    சங்கராபுரத்தில் கள்ளச்சாவி போட்டு மோட்டார் சைக்கிள் திருட்டு

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தை சேர்ந்தவர் சத்தியமூர்த்தி. இவர் மொபைல் கடை வெளியே மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு கடைக்கு சென்று வெளியே வந்து பார்த்தபோது அவருடைய மோட்டார் சைக்கிள் திருடு போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    இது குறித்து சங்கராபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்ததை தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கடையில் உள்ள சி.சி.டி.வி காட்சியை ஆய்வு செய்து பார்த்தபோது பட்டப்பகலில் மோட்டர் சைக்கிளை கள்ளச்சாவி போட்டு அடையாளம் தெரியாத வாலிபர் ஒருவர் திருடிச் செல்லும் காட்சி பதிவாகி உள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    Next Story
    ×