search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வழிப்பறி, திருட்டு சம்பவங்களில் தலைமறைவாக இருந்த 2 பேர் கைது
    X

    வழிப்பறி, திருட்டு சம்பவங்களில் தலைமறைவாக இருந்த 2 பேர் கைது

    • போலீசார் தர்மராஜை கைது செய்தனர்.
    • கொண்டலாம்பட்டி போலீசார் கடந்த ஜூலை மாதம் வீடு புகுந்து திருடிய வழக்கில் தேடி வந்தனர்.

    சேலம்:

    சேலம் தாதகாப்பட்டி தாகூர் தெருவை சேர்ந்தவர் சேகர். இவரது மகன் தர்மன் என்கிற தர்மராஜ் (27). இவரை வழிப்பறி வழக்கில் அன்னதானப்பட்டி போலீசார் தேடி வந்தனர்.

    இந்த நிலையில் இன்று காலை போலீசார் தர்மராஜை கைது செய்தனர். இதே போல் அமானி கொண்டலாம்பட்டி பழனியப்பன்காடு பகுதியைச் சேர்ந்தவர் சரவணன் என்கிற காட்டுக்கார சரவணன் (40).

    இவரையும் கொண்டலாம்பட்டி போலீசார் கடந்த ஜூலை மாதம் வீடு புகுந்து திருடிய வழக்கில் தேடி வந்தனர். இன்று அதிகாலை சரவணனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×