search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இளம்பெண்"

    • சேலம் பொன்னம்மாபேட்டை புத்துமாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் விஸ்வநாதன்.
    • பெற்றோர் மீனாவை மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

    சேலம்:

    சேலம் பொன்னம்மாபேட்டை புத்துமாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் விஸ்வநாதன். இவரது மகள் மீனா (22). இவருக்கும் இவரது சகோதரிக்கும் நேற்று இரவு வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் மனம் உடைந்த மீனா வீட்டில் திடீரென தூக்கு போட்டுக் கொண்டார். இதை கண்ட பெற்றோர் மீனாவை மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்த தகவலின் பேரில் அம்மாபேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 14-ந்தேதி லேல் அடிமை போட்டில் சிலருடன் சேர்ந்து மீன்பிடிப்பதற்காக சென்றுவிட்டார்
    • ஆன்சி மற்றும் நான்சி ஆகியோர் வீட்டில் இல்லை

    ராஜாக்கமங்கலம் :

    வெள்ளிச்சந்தை அருகே முட்டத்தை சேர்ந்தவர் லேல் அடிமை. கடல் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி ஆன்சி (வயது 29). இவர்களுக்கு 9 வயதில் நான்சி உள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் கடந்த 14-ந்தேதி லேல் அடிமை போட்டில் சிலருடன் சேர்ந்து மீன்பிடிப்பதற்காக சென்றுவிட்டார். நேற்று காலை அவர் திரும்பி வந்தபோது வீடு பூட்டி இருந்தது. அவரது மனைவி ஆன்சி மற்றும் நான்சி ஆகியோர் வீட்டில் இல்லை. இதையடுத்து அவர்களை லேல் அடிமை பல்வேறு இடங்களில் தேடினார். எனினும் அவர்களை கண்டு பிடிக்க முடியவில்லை.

    இதுகுறித்து லேல் அடிமை வெள்ளிச்சந்தை போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் வழக்குப்பதிவு செய்து மாயமானவர்களை தேடி வருகிறார்

    • காதல் விவகாரம் இளம்பெண்ணின் பெற்றோருக்கு தெரிய வரவே அவர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
    • பெற்ேறார் மாயமான மகளை கண்டுபிடித்து தரும்படி நெகமம் போலீசில் புகார் செய்தனர்.

    கோவை,

    கோவை மாவட்டம் நெகமம் அருகே உள்ள எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் 22 வயது இளம்பெண். பட்டதாரியான இவர் பொள்ளாச்சியில் கணினி பயிற்சி வகுப்பிற்கு சென்று வந்தார்.

    இந்தநிலையில் இளம் பெண்ணுக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இன்ஸ்டாகிராம் மூலம் நாமக்கல்லை சேர்ந்தவரும் சவுதி அரேபியாவில் வேலை பார்த்து வருபவருமான 27 வயது டிரைவர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. ஆரம்பத்தில் 2 பேரும் நண்பர்களாக பழகி வந்தார். பின்னர் இது காதலாக மாறியது. 2 பேரும் செல்போன் மூலமாக பேசி அவர்களது காதலை வளர்த்து வந்தனர்.

    இந்த காதல் விவகாரம் இளம்பெண்ணின் பெற்றோருக்கு தெரிய வரவே அவர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் அவர்கள் இளம் பெண்ணுக்கு மணமகனை தேடி வந்தனர். இது குறித்து அவர் தனது காதலனிடம் தெரிவித்தார்.

    கடந்த 27-ந் தேதி இளம் பெண்ணின் காதலன் விடுமுறையில் நாமக்கல்லுக்கு வந்தார்.

    இதனையடுத்து வீட்டில் இருந்து வெளியேறிய இளம்பெண் தனது பெற்றோரிடம் பயிற்சி வகுப்பிற்கு செல்வதாக கூறி விட்டு நாமக்கல்லுக்கு வெளிநாட்டில் இருந்து வந்த காதலனை பார்க்க சென்றார். வெளியே சென்ற இளம்பெண் நீண்ட நேரம் ஆகியும திரும்பி வராததால் சந்தேகம் அடைந்த பெற்றோர் அவரை அக்கம் பக்கத்தில் தேடினர். ஆனால் அவரை கண்டு பிடிக்க முடியவில்லை.

    பின்னர் இதுகுறித்து அவர்கள் மாயமான மகளை கண்டுபிடித்து தரும்படி நெகமம் போலீசில் புகார் செய்தனர்.

    புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் இளம் பெண் வெளிநாட்டில் இருந்து வந்த காதலனை தேடி நாமக்கல்லுக்கு சென்றது தெரியவந்தது. போலீசார் இளம் பெண்ணை மீட்கும் பணியை மேற்கொண்டு வருகின்றனர்.

    • காதலருடன் இளம்பெண் மாயமானார்.
    • தளவாய்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    சிவகாசி சிதம்பராபுரம் பகுதியை சேர்ந்தவர் அழகர்சாமி. இவரது மகள் அர்ச்சனாதேவி(வயது20). தனியார் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வருகிறார். மேலும் ஒரு ஆடிட்டரிடம் பயிற்சி பெற்று வருகிறார். சம்பவத்தன்று பயிற்சி வகுப்புக்கு சென்றவர் மாயமானார். எங்கு சென்றார்? என தெரியவில்லை. இந்த நிலையில் உறவுக்கார வாலிபர் ஒருவர் அழகர்சாமிக்கு செல்போனில் அழைத்து அர்ச்சனாதேவி தன்னுடன் இருப்பதாகவும் தேட வேண்டாம் என்றும் கூறி உள்ளார்.

    சிறிது நேரத்திற்கு பின்பு அர்ச்சனாதேவி போன் செய்து தன்னை தேடவேண்டாம் என கூறிவிட்டு செல்போனை அணைத்து விட்டதாக கூறப்படுகிறது. இதை தொடர்ந்து மகளை கண்டுபிடித்து தருமாறு அழகர்சாமி ஆமத்தூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மற்றொரு சம்பவம்

    ராஜபாளையம் அருகே உள்ள தளவாய்புரம் பழைய டெலிபோன் ஆபிஸ் தெருவை சேர்ந்தவர் நேரு. இவரது மகள் பாலசங்கீதா(25). வீட்டில் இருந்தவர் திடீரென மாயமானார். இதுகுறித்து தளவாய்புரம் போலீஸ் நிலையத்தில் நேரு புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • இளம்பெண்-குழந்தைகளுக்கு கொலை மிரட்டல் விடுத்த 3 பேர் மீது வழக்குப்பதிந்துள்ளனர்.
    • அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தி கார்த்திகேயன் மற்றும் அவரது பெற்றோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    வெம்பகோட்டை அருகே உள்ள சிவலிங்கா புரத்தை சேர்ந்தவர் விமலா(வயது34). இவர் ஸ்ரீவில்லிபுத்தூர் அனைத்து மகளிர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில் கடந்த 2012ம் ஆண்டு எனக்கும், தென்காசி மாவட்டம் குறிஞ்சா குளத்தை சேர்ந்த கார்த்தி கேயன்(43) என்பவருக்கும் திருமணம் நடந்தது. அப்போது 55 பவுன் நகை, ரூ.1 லட்சம் சீர்வரிசை பொருட்கள் கொடுக்கப்பட்டது.

    இந்தநிலையில் திடீரெ ன்று கணவர் விவாகரத்து பத்திரத்தில் கையெ ழுத்திடுமாறு வற்புறுத்தி யுள்ளார். இதற்கு மறுக்கவே, கூடுதலாக ரூ.5 லட்சம் ரொக்கம், 50 பவுன் நகை கொண்டு வருமாறு கார்த்திகேயன் கூறியுள்ளார். இதற்கும் மறுத்ததால் துன்புறுத்தி னார்.

    இது தொடர்பான பிரச்சினையில் கணவர் மற்றும் அவரது பெற்றோர் மோகன்-கிருஷ்ணவேணி ஆகியோர் தகராறு செய்து எனக்கும் , என் குழந்தைகளுக்கும் கொலை மிரட்டல் விடுத்தனர் என குறிப்பிடப்பட்டிருந்தது.

    இதனை விசாரித்த நீதிமன்றம் நடவடிக்கை எடுக்கு மாறு போலீசாருக்கு உத்த ரவிட்டது. அதன் அடிப்படையில் ராஜ பாளையம் அனைத்து மகளிர் போலீசார் விசா ரணை நடத்தி கார்த்திகேயன் மற்றும் அவரது பெற்றோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஷாலினி பண்ருட்டியில் உள்ள தாத்தா வீட்டில் வசித்து வந்தார்.
    • அக்கம், பக்கம், உறவினர்கள் வீடுகளில் தேடியும் கண்டு பிடிக்க முடியவில்லை.

    கடலுார்: 

    பண்ருட்டி- கடலுார் சாலையை சேர்ந்தவர் முருகவேல். இவர் கோயம்புத்தூரில் தங்கி பணிபுரிந்து வருகிறார். இவரது மகள் ஷாலினி (வயது 19). கோயம்புத்தூரில் பி.எஸ்.சி. ரேடியோலஜி படித்து வருகிறார். இந்நிலையில் ஷாலினி கடந்த ஒரு மாதமாக பண்ருட்டி யில் உள்ள தாத்தா வீட்டில் வசித்து வந்தார். இரவு சாப்பிட்டுவிட்டு ஷாலினி தூங்க சென்றார். இன்று காலை எழுந்து பார்த்த போது ஷாலினியை காணவில்லை. அக்கம், பக்கம், உறவினர்கள் வீடுகளில் தேடியும் கண்டு பிடிக்க முடியவில்லை. இதுகுறித்து பண்ருட்டி போலீசில் ஷாலினியின் தாய் விஜயா கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து ஷாலினியை தேடி வருகின்றனர்.

    • ராமநாதபுரம் அருகே இளம்பெண்ணை மிரட்டிய வாலிபரை கைது செய்தனர்.
    • சப்-இன்ஸ்பெக் டர் முனியாண்டி வழக்குப்பதிவு செய்து ராஜசேகரை கைது செய்தார்.

    மண்டபம்

    ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அருகே பிரப்பன் வலசை கிராமத்தை சேர்ந்த வர் அஸ்லாம் மனைவி அல் ஜாமைமா(36). கணவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். உசிலங் காட்டு வலசை கிராமத்தை சேர்ந்தவர் மருங்கப்பன் மகன் ராஜசேகர்(36), அவர் அல்ஜாமைமா வீட்டுக்கு சென்று உங்களது கணவர் தனக்கு பணம் தரவேண்டும் என்று கூறினார். அந்த பணத்தை உடனே வட்டியு டன் கொடுக்க வேண்டும் என்று கூறி அவரை மிரட்டி வீட்டின் கதவை பூட்டினார். அவருடைய குழந்தைகள் இருவரையும் பிடித்து வைத்துக்கொண்டு பணம் தந்தால் மட்டுமே விடுவிப்ப தாகவும் கூறியதாக தெரி கிறது.

    இதையடுத்து அல்ஜாமை மா ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்க ராஜிடம் புகார் அளித்தார். அவரது உத்திரவின் பேரில் உச்சிப்புளி சப்-இன்ஸ்பெக் டர் முனியாண்டி வழக்குப் பதிவு செய்து ராஜசேகரை கைது செய்தார்.

    • உடல் அழுகிய நிலையில் கிடப்பதாக சேத்தியாத்தோப்பு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
    • காக்கா வலிப்பு நோய் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதும் தெரியவந்தது.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அடுத்த குமாரகுடி வெள்ளாற்றங்கரையில் 30 வயது மதிக்கத்தக்க பெண் உடல் அழுகிய நிலையில் கிடப்பதாக சேத்தியாத்தோப்பு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி சப்-இன்ஸ்பெக்டர் வாசுதேவன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். பெண்ணின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

    விசாரணையில், அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் வட்டம், பாப்பாக்குடி கிராமத்தைச் சேர்ந்த ரத்தினசாமி மகள் சூர்யா (வயது 30) என்பது போலீசாருக்கு தெரியவந்தது. இவருக்கு காக்கா வலிப்பு நோய் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து சூரியாவின் உடலை முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோகதனைக்காக அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார், சூரியாவின் உடலை அவரது பெற்றோரிடம் ஓப்படைத்தனர்.

    • திருமணமானதில் இருந்தே இவர்களுக்குக்குள் பிரச்சினை இருந்து வருவதாக தெரிகிறது.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து கேரளாவில் சுற்றித்திரியும் அபிஷாவை தேடி வருகின்றனர்.

    இரணியல் :

    இரணியல் அருகே குருந்தன்கோட்டை அடுத்த முக்கலம்பாடை பகுதியைச் சேர்ந்தவர் வினோத் ஜாண் (வயது 35). தக்கலை அருகே காப்பீடு முகவராக பணி புரிந்து வருகிறார். இவர் செட்டிச் சார் விளையை சேர்ந்த சுந்தர்ராஜ் மகள் அபிஷா என்பரை கடந்த 2018-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். திருமணமானதில் இருந்தே இவர்களுக்குக்குள் பிரச்சினை இருந்து வருவதாக தெரிகிறது.

    இந்த நிலையில் கடந்த மாதம் 25-ந்தேதி அபிஷாவை திடீெரன காணவில்லை. வீட்டு பீரோ வில் இருந்த வினோத்ஜாண் தாயின் 18½ பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.50 ஆயிரம் ரொக்கப் பணத்தை யும் அவர் எடுத்து சென்று விட்டதாகவும் தெரிகிறது. இதனிடையே அபிஷா ஆகஸ்ட் 28-ந்தேதி கோட்ட யத்தில் சுற்றி திரிவதாக வினோத்ஜா ணுக்கு தகவல் கிடைத்தது.

    நகைகள் மற்றும் பணத்துடன் அபிஷா மாயமானது குறித்து இரணியல் போலீஸ் நிலையத்தில் வினோத்ஜாண் புகார் தெரிவித்தார். ஆனால் அபிஷாவை இது வரை கண்டுபிடிக்க முடியவில்லை. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கேரளாவில் சுற்றித்திரியும் அபிஷாவை தேடி வருகின்றனர்.

    • போதையில் இளம்பெண்ணிடம் போலீஸ்காரர் அத்துமீறி நடந்துள்ளார்.
    • போலீஸ் சூப்பிரண்டு ஸ்டாலின் அந்த காவலர் மீது துறை ரீதியாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

    தேவகோட்டை

    தேவகோட்டை டவுன் போலீஸ் நிலையத்தில் காவலராக பணியாற்றி வருபவர் கோர்பச்சேவ். இவர் இதற்கு முன்பு பணியாற்றிய இடத்தில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதால் தேவ கோட்டை டவுன் போலீஸ் நிலையத்திற்கு பணி மாறுதல் செய்யப்பட்டார்.

    நேற்று மதுபோதையில் சீருடை அணிந்து காவலர் பணிக்கு சென்றுள்ளார். இரவு 8 மணியளவில் பஸ் நிலையம் அருகே அவர் நின்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக ஒரு இளம் பெண் ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அந்த பெண்ணை தனது மோட்டார் சைக்கிளில் காவலர் பின் தொடர்ந்து சென்றார். ஒத்தக்கடை ஆற்றுப்பாலம் அருகே இருள் சூழ்ந்த பகுதியில் சென்ற போது திடீரென காவலர் அந்தப் பெண்ணை வழிமறித்துள்ளார். ஏன் ஹெல்மெட் போட வில்லை? என போதையில் உளறியபடி அந்த பெண்ணிடம் அத்துமீறி நடக்க முயன்றுள்ளார்.

    அந்த பெண் கூச்சலிட்டதால் அந்த வழியாக சென்றவர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் அங்கு திரண்டனர். அவர்கள் காவலரை சிறைபிடித்து போலீசுக்கு தகவல் கொடுத்தனர். டவுன் போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களின் பிடியிலிருந்த காவலரை மீட்டு போலீஸ் நிலையம் அழைத்துச் சென்றனர்.

    இதுகுறித்து தகவலறிந்த கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஸ்டாலின் அந்த காவலர் மீது துறை ரீதியாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

    • இருவரும் அடிக்கடி சந்தித்து உல்லாசமாக இருந்துள்ளனர்.
    • திருமணம் செய்து கொள்ள முடியாது என்று கூறியுள்ளார்.

    கள்ளக்குறிச்சி:

    கடலூர் மாவட்டம் ஸ்ரீ முஷ்ணம் அடுத்த சோழத்த ரம் கிராமத்தைச் சேர்ந்தவர் தம்பியாபிள்ளை மகன் லெனின் (வயது 30). அதே ஊரைச் சேர்ந்த சேர்ந்த 27 வயது பெண்ணை கடந்த 2017-ல் இருந்து காதலித்துள் ளார். இருவரும் அடிக்கடி சந்தித்து உல்லாசமாக இருந்துள்ளனர். இதில் அந்த பெண் கருவுற்றார். திருமணம் செய்து கொள்ள இளம்பெண் வலியுறத்தி னார். தனது அக்காவிற்கு திருமணம் முடிந்தவுடன் திருமணம் செய்து கொள்வ தாக உறுதி கூறிய லெனின், இளம்பெண்ணின் கருவை கலைத்ததாக கூறப்படு கிறது.

    கடந்த மார்ச் மாதம் லெனின் அக்காவிற்கு திரு மணம் நடந்துள்ளது. இருந்த போதும் இளம் பெண்ணை திருமணம் செய்து கொள்ளாமல் காலங்கடத்தி யுள்ளார். இதனால் அதிர்ச்சி யடைந்த இளம்பெண், சேத்தியாத் தோப்பு மகளிர் போலீ சாரிடம் புகார் அளித்தார். இது தொடர்பான விசாரணையில், ஜூன் அல்லது ஜூலை மாதத்தில் திருமணம் செய்து கொள்வ தாக போலீசாரிடம் லெனின் உறுதியளித்துள் ளார். இதையடுத்து அந்த இளம்பெண் லெனினை தொடர்பு கொண்டு கேட்ட போது, திருமணம் செய்து கொள்ள முடியாது என்று கூறியுள்ளார். மேலும், ஊரை விட்டு வெளியூ ருக்கும் சென்று விட்டார். இந்நிலையில் பாதிக்கப் பட்ட இளம்பெண், சேத்தி யாத்தோப்பு மகளிர் போலீ சாரிடம் மீண்டும் புகார் அளித்தார். இது தொடர்பாக இன்ஸ்பெக்டர் மீனா மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இளம்பெண்ணை ஏமாற்றிய லெனினை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

    • காலை சேகரும், இவரது மனைவி திலகம் வேலைக்கு சென்றுவிட்டனர்.
    • சேகர் மகள் தூக்கில் பிணமாக தொங்குவதை பார்த்து அதிர்ந்து வளவனூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் வளவனூர் குடுமியான்குப்பம் பகுதியை சேர்ந்தவர் சேகர். தொழிலாளி இவருக்கு திருமணமாகி ஒரு மகன், 2 மகள்கள் உள்ளனர். இந்நிலையில் இவரது முதல் மகள் ஜெயலட்சுமி (வயது 22) பி.எஸ்.சி பட்டதாரி. நேற்று காலை சேகரும், இவரது மனைவி திலகம் வேலைக்கு சென்றுவிட்டனர். 

    வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் ஜெயலட்சுமி வீட்டில் உள்ள மின்விசிறியில் தனது துப்பட்டாவால் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். பின்னர் மாலை வீட்டிற்கு வந்த சேகர் மகள் தூக்கில் பிணமாக தொங்குவதை பார்த்து அதிர்ந்து வளவனூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். தகவல் அறிந்த வளவனூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து தூக்கில் பிணமாக தொங்கிய ஜெயலட்சுமி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுபற்றி போலீசார் வழக்குபதிவு செய்து ஜெயலட்சுமியின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×