search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Adolescent"

    நிழற்குடையில் இருந்த சேர்களை சம்பவத் தன்று இரவு எந்திரத்தின் உதவியுடன் வெட்டி எடுத்து சென்றுவிட்டனர்.

    விழுப்புரம்:

    திருவெணைநல்லூர் அரசு கலைக்கல்லூரி அருகே பஸ் நிறுத்தம் உள்ளது. இங்கு பயணியர் நிழற்குடை அமைக்கப் பட்டுள்ளது. இதில் பஸ்சிற் காக காத்திருக்கும் பயணி கள் அமர்வதற்காக இரும்பி லான சேர்கள் போடப்பட்டி ருந்தது.இந்த நிழற்குடையில் இருந்த சேர்களை சம்பவத் தன்று இரவு எந்திரத்தின் உதவியுடன் வெட்டி எடுத்து சென்றுவிட்டனர். இது குறித்த தகவலின் பேரில் கிராம நிர்வாக அலுவலர் கலியமூர்த்தி, திருவெண்ணைநல்லூர் போலீசாரிடம் புகார் கொடுத்தார்.

    புகாரின் பேரில் போலீ சார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதில் மணக்குப் பத்தை சேர்ந்த ரமேஷ் (வயது 22) என்பவர் பயணியர் நிழற்குடையில் இருந்த இரும்பு சேர்களை திருடிச் சென்றது தெரிய வந்தது. இதையடுத்து மணக்குப் பத்திற்கு விரைந்து சென்ற போலீசார் ரமேஷை கைது செய்தனர்.

    • மனவேதனை காரணமாக அய்யப்பன் விஷம் குடித்தார்.
    • மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

    திருவாரூர்:

    முத்துப்பேட்டையை அடுத்த கோவிலூர் வடகாடு கிராமத்தை சேர்ந்தவர் அய்யப்பன் (வயது32). கடந்த சில நாட்களாக கடும் மனஉளைச்சலில் இருந்த அவர் கடந்த 30-ந்தேதி விஷம் குடித்தார். இதனை பார்த்த அவரது உறவினர்கள் அவரை மீட்டு திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அய்யப்பன் இறந்தார். இதுகுறித்து அய்யப்பன் சகோதரி மகேஸ்வரி முத்துப்பேட்டை போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தற்கொலை செய்து கொண்ட அய்யப்பனுக்கு இன்னும் திருமணமாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    • கடந்த 13-3-2019 அன்று மதியம் 12 மணி அளவில் லட்சுமியின் கருவை கலைக்குமாறு கவுதம் நிர்ப்பந்தம் செய்துள்ளார்
    • குற்றம் சாட்டப்பட்ட கவுதமுக்கு 3 ஆண்டு கடுங்காவல் சிறைத்தண்டனையும், ரூ.2500 அபராதமும விதிக்கப்பட்டது.

    திருப்பூர்:

    திருப்பூர் அருகே திருமுருகன்பூண்டி பக்கம் உள்ள ஆத்துப்பாளையம் பாரதிநகரை சேர்ந்தவர் சந்திரன். இவரது மகன் கவுதம் (வயது 27). இவர், ஆந்திரா மாநிலத்தை சேர்ந்த லட்சுமி (வயது 21) என்பவரை காதலித்து வந்ததாக தெரிகிறது. பின்னர் இரண்டு பேரும் திருப்பூர் அருகே உள்ள பொங்குபாளையம் கிராமம், காளம்பாளையத்தில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கி வந்துள்ளனர். அப்போது லட்சுமி நிறைமாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். இந்நிலையில் கடந்த 13-3-2019 அன்று மதியம் 12 மணி அளவில் லட்சுமியின் கருவை கலைக்குமாறு கவுதம் நிர்ப்பந்தம் செய்துள்ளார். இதனை லட்சுமி மறுத்துள்ளார். இதனால் இரண்டு பேருக்கும் சண்டை வந்துள்ளதாக தெரிகிறது. அப்போது ஆத்திரம் அடைந்த கவுதம், மண்எண்ணையை எடுத்து லட்சுமி மீது ஊற்றி தீ வைத்துள்ளார். இதில் படுகாயம் அடைந்த லட்சுமி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.பின்னர் அவர் இதுகுறித்து பெருமாநல்லூர் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து, கவுதமை கைது செய்து, கோர்ட்டில் ஆஜர் படுத்தினர். பின்னர் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. திருப்பூர் மகிளா அமர்வு நீதிமன்ற நீதிபதி டி.பாலு வழக்கை விசாரணை செய்தார். இதில் குற்றம் சாட்டப்பட்ட கவுதமுக்கு 3 ஆண்டு கடுங்காவல் சிறைத்தண்டனையும், ரூ.2500 அபராதமும விதிக்கப்பட்டது. இதை கட்டத்தவறினால் மேலும் 6 மாத கடுங்காவல் சிறைத்தண்டனை வழங்கப்படும் என்றும், மேலும் மற்ெறாரு பிரிவில், ஆயுள் சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. இதை கட்டத்தவறினால் மேலும் 6 மாதம் கடுங்காவல் சிறை தண்டனை வழங்கப்படும் என்றும் தீர்ப்பு அளிக்கப்பட்டது. 

    • அருப்புக்கோட்டை அருகே வாலிபர்-நர்சு மாயமானார்கள்.
    • ஆவியூர், வீரசோழன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    அருப்புக்கோட்டை அருகே உள்ள ஆவியூர் பகுதியை சேர்ந்தவர் பிரபாகரன். இவருக்கு 2014ம் ஆண்டு திருமணம் நடந்தது. ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இவர் வேலைக்கு செல்லாமல் ஊர் சுற்றி வந்தார். இதனால் கணவன்-மனைவி இடையே பிரச்சினை இருந்து வந்தது.

    சம்பவத்தன்று மனைவி வேலைக்கு செல்லுமாறு பிரபாகரனிடம் கூறி யுள்ளார். இந்தநிலையில் வீட்டில் இருந்தவர் திடீரென மாயமானார். எங்கு சென்றார்? என்று தெரியவில்லை. பல இடங்களில் தேடிப் பார்த்தும் பலனில்லை. இதைத்தொடர்ந்து அவரது தந்தை சந்திரன் ஆவியூர் போலீஸ் நிலை யத்தில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வீரசோழன் வடக்கு தெருவை சேர்ந்தவர் கதிரேசன். இவரது மகள் மீனாள்(20). நர்சிங் படிப்பை முடித்துவிட்டு கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் வேலை பார்த்து வருகிறார்.

    பெற்றோர் இவருக்கு திருமண ஏற்பாடுகளை செய்து வந்தனர். இந்த நிலையில் மீனா ஊருக்கு வந்தார். பெற்றோர் வெளியே சென்றுவிட்டு திரும்பி வந்து பார்த்தபோது வீட்டில் மகள் இல்லை. பல இடங்களில் தேடிப் பார்த்தும் எங்கு சென்றார்? என கண்டுபிடிக்க முடிய வில்லை.

    இதைத்தொடர்ந்து மகளை கண்டுபிடித்து தருமாறு வீரசோழன் போலீஸ் நிலையத்தில் கதிரேசன் புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மனைவியை விவாகரத்து செய்து விட்டதாக ஏமாற்றி வாலிபர், இளம்பெண்ணை கர்ப்பமாக்கினார்.
    • இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து வீரபிரபுவை தேடி வருகின்றனர்.

    விருதுநகர்

    அருப்புக்கோட்டை அருகே உள்ள எம்.தொட்டியங்குளம் பகுதியை சேர்ந்தவர் 23 வயது இளம் பெண். இவருக்கு குறிஞ்சாபுரம் பகுதியை சேர்ந்த வீரபிரபு என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. அவர் தனக்கு 5 வருடங்களுக்கு முன்பு விவாகரத்து ஆகி விட்டதாகவும், இளம் பெண்ணை திருமணம் செய்து கொள்ள விரும்புவ தாகவும் ஆசைவார்த்தை கூறியுள்ளார்.

    இதனால் இருவரும் நெருங்கிப் பழக தொடங்கி னர். இளம்பெண் வீட்டில் தனியாக இருந்த போது வீரபிரபு பலமுறை அங்கு சென்று நெருக்கமாக இருந்துள்ளார். இதனால் அந்த இளம்பெண் 4 மாத கர்ப்பிணியானார்.

    இதை யடுத்து தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வீரபிரபுவை வற்புறுத்தி னார். ஆனால் அவர் பதில் சொல்லாமல் தட்டிக்கழித்து வந்தார். இதனால் சந்தேகம் அடைந்த இளம்பெண் வீரபிரபு குறித்து விசாரித்துள்ளார். அதில், வீரபிரபு தனது மனைவியை விவாகரத்து செய்யவில்லை என்பதும், மனைவியுடன் வசித்து வருகிறார் என்பதும் தெரியவந்தது.

    இதையடுத்து தான் ஏமாற்றப்பட்டது குறித்து அருப்புக்கோட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் இளம்பெண் புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து வீரபிரபுவை தேடி வருகின்றனர்.

    • காதலருடன் இளம்பெண் மாயமானார்.
    • தளவாய்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    சிவகாசி சிதம்பராபுரம் பகுதியை சேர்ந்தவர் அழகர்சாமி. இவரது மகள் அர்ச்சனாதேவி(வயது20). தனியார் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வருகிறார். மேலும் ஒரு ஆடிட்டரிடம் பயிற்சி பெற்று வருகிறார். சம்பவத்தன்று பயிற்சி வகுப்புக்கு சென்றவர் மாயமானார். எங்கு சென்றார்? என தெரியவில்லை. இந்த நிலையில் உறவுக்கார வாலிபர் ஒருவர் அழகர்சாமிக்கு செல்போனில் அழைத்து அர்ச்சனாதேவி தன்னுடன் இருப்பதாகவும் தேட வேண்டாம் என்றும் கூறி உள்ளார்.

    சிறிது நேரத்திற்கு பின்பு அர்ச்சனாதேவி போன் செய்து தன்னை தேடவேண்டாம் என கூறிவிட்டு செல்போனை அணைத்து விட்டதாக கூறப்படுகிறது. இதை தொடர்ந்து மகளை கண்டுபிடித்து தருமாறு அழகர்சாமி ஆமத்தூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மற்றொரு சம்பவம்

    ராஜபாளையம் அருகே உள்ள தளவாய்புரம் பழைய டெலிபோன் ஆபிஸ் தெருவை சேர்ந்தவர் நேரு. இவரது மகள் பாலசங்கீதா(25). வீட்டில் இருந்தவர் திடீரென மாயமானார். இதுகுறித்து தளவாய்புரம் போலீஸ் நிலையத்தில் நேரு புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • காடாம்புலியூர் போலீசார் விசாரணை
    • உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி - கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் நேற்று முன்தினம் இரவு சுமார் 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் பலத்த காயங்களுடன் சாலை ஓரத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். இது பற்றி தகவல் அறிந்ததும் காடாம்புலியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ தாமரை பாண்டியன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வாலிபரை மீட்டு பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    மேல் சிகிச்சைக்காக கடலூர் கொண்டு செல்லப்பட்டார். ஆபத்தான நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? எதற்காக பண்ருட்டிக்கு வந்தார்? எவ்வாறு காயம் ஏற்பட்டது? என்பது குறித்து காடாம்புலியூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து விட்டு வீட்டில் மயங்கி கிடந்துள்ளார்.
    • சிகிச்சை பலனின்றி பரிதாபமாக தண்டபாணி உயிரிழந்தார்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் பண்டாரவாடை ஊராட்சி தென்பிடாகை மேலத்தெருவை சேர்ந்தவர் தண்டபாணி (வயது 24). கூலித்தொழிலாளி இவருக்கு குடிப்பழக்கம் இருந்ததாக தெரிகிறது.

    இவருக்கு திருமணம் ஆகவில்லை. இதனால் மனவேதனையில் இருந்த தண்டபாணி நேற்று முன்தினம் காலை வயலுக்கு தெளிக்கும் பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து விட்டு வீட்டில் மயங்கி கிடந்துள்ளார்.

    இது குறித்து தகவல் அறிந்ததும் அக்கம் பக்கத்தினர் விரைந்து சென்று தண்டபாணியை மீட்டு சிகிச்சைக்காக

    ல் திருமருகல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக தண்டபாணி உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்த திட்டச்சேரி போலீசார் தண்டபாணியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • பட்டுக்கோட்டையில் இருந்து சென்று கொண்டிருந்த கார் எதிர்பாராதவிதமாக மோதியது.
    • அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்டம், சேதுபாவாசத்திரம் அருகே உள்ள விளங்குளம் பகுதியை சேர்ந்தவர் பிரான்சிஸ் (வயது 50).

    இவருடைய மகன் அருள்செபஸ்டியான் (19).

    இவர் சம்பவத்தன்று உறவினரை அழைப்பதற்காக தனது வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் கிழக்கு கடற்கரை சாலை வழியாக சேதுபாவாசத்திரம் சென்று கொண்டிருந்தார்.

    சம்பைபட்டினம் அருகே சென்று கொண்டிருந்தபோது எதிரே பட்டுக்கோட்டையில் இருந்து மானாமதுரை நோக்கி சென்று கொண்டிருந்த கார் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட அருள்செபஸ்டியான் தலையில் பலத்த காயம் அடைந்தார்.

    ஆபத்தான நிலையில் இருந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு மணமேல்குடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

    அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதுகுறித்து சேதுபாவாசத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கிணற்றில் அழுகிய நிலையில் மீட்கப்பட்ட இளம்பெண் சாவில் மர்மம் நீடிக்கிறது.
    • தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அலங்காநல்லூர்

    மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே குலமங்கலம்-குமாரம் செல்லும் சாலையில் வடுகபட்டியில் உள்ள ஒரு விவசாய கிணற்றில் அடையாளம் தெரியாத சுமார் 25 வயது மதிக்கத்தக்க இளம் பெண் சடலம் ஒன்று அழுகிய நிலையில் மீட்கப்பட்டது.

    இதுகுறித்து அலங்கா நல்லூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து இளம் பெண்ணை கொன்று கிணற்றில் வீசியது யார்? என விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த 13 நாட்களாகியும் துப்பு ஏதும் கிடைக்கவில்லை. இறந்த பெண்ணின் கை, கால்கள் கட்டப்பட்டி ருந்ததால் கொலை செய்து கொண்டு வந்து இந்த கிணற்றில் வீசி இருப்பதாக போலீசார் சந்தேகிக்கின்றனர்.

    இறந்த பெண்ணின் சடலம் கைப்பற்றப்பட்ட பகுதியில் இருந்து வரும் வழியில் உள்ள கண்காணிப்பு காமிராக்களை ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் துண்டு பிரசுரங்கள் அச்சிட்டு தமிழகத்தில் உள்ள 37 மாவட்ட காவல் நிலையங்களுக்கும் தகவலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

    இறந்த இளம்பெண் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்ற விபரம் தெரியாததால் சமீபத்தில் யாரேனும் அருகிலுள்ள காவல் நிலையத்தில் காணாமல் போன பெண் பற்றிய புகார் ஏதும் உள்ளதா? என்று தீவிர விசாரணையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். மேலும் இறந்த பெண், ரோஸ் கலர் சுடிதார், காட்டன் பேண்ட், அணிந்துள்ளார், காலில் கருப்பு கயிறு கட்டியுள்ளார்.

    இது தவிர இந்த பெண்ணின் சடலத்தை காரில் தான் கொண்டு வந்து போட்டிருக்க வேண்டும் என போலீசார் சந்தேகத்தில் விசாரணையை தீவிரபடுத்தி உள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு சிவபிரசாத், உத்தர வின்பேரில், துணை சூப்பிரண்டு பாலசுந்தரம், இன்ஸ்பெக்டர் கீதா, மற்றும் போலீசார் கொண்ட தனி படையினர் குற்றவாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.

    • இருட்டில் நிலை தடுமாறிய சின்னமணி தவறி விழுந்து ஏரி நீரில் மூழ்கியுள்ளார்.
    • ஏரி நீரில் தவறி விழுந்திருக்கலாம் என கருதி, நேற்றிரவு முதல் இன்று காலை வரை தீவிரமாக தேடினர்.

    விழுப்புரம்: 

    விழுப்புரம் மாவட்டம் கெடார் அடுத்த வீரமூர் கிராமத்தை சேர்ந்தவர் வீராசாமி மகன் சின்னமணி (வயது 32), சென்னையில் பூ கட்டும் தொழில் செய்து வந்தார். இவருக்கு திருமணம் ஆகி 2 வருடம் ஆகிறது. இந்நிலையில் நேற்று இரவு நண்பர்களுடன் அதே ஊரில் உள்ள பெரிய ஏரிக்கு சென்றார். அப்போது இரவு இருட்டில் நிலை தடுமாறிய சின்னமணி தவறி விழுந்து ஏரி நீரில் மூழ்கியுள்ளார்.

    அவருடன் வந்த நண்பர்கள் சிறிது நேரம் கழித்து உடன் வந்த சின்னமணியை காணவில்லை என தேடினர். இத்தகவல் உறவினர்களுக்கு தெரிந்து அவர்களும் ஏரி பகுதிக்கு வந்து தேடினர். அவர் கிடைக்காததால் இதுகுறித்து கெடார் போலிசாருக்கும். அன்னியூர்தீயணைப்பு துறையினருக்கும் தகவல் அளித்தனர். கெடார் போலிசார், தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். காணாமல் போனவர் ஏரி நீரில் தவறி விழுந்திருக்கலாம் என கருதி, நேற்றிரவு முதல் இன்று காலை வரை தீவிரமாக தேடினர்.

    இதில் ஏரி நீரில் மூழ்கி இறந்து கடந்த சின்னமணியின் உடலை இன்று காலை 8 மணியளவில் தீயணைப்பு துறையினர் கைப்பற்றினர். அதனை கைப்பற்றிய கெடார் போலீசார் பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பாலகுருவிடம் உங்களது மகளை எனக்கு திருமணம் செய்து கொடுக்குமாறு கூறியுள்ளார்.
    • போலீசார் வழக்குபதிவு செய்து பாலகுரு, கார்த்திகேயன் உள்பட 7 பேரை கைது செய்தனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் அருகே உள்ள கம்பர் நத்தம் அக்கரை நெடுந்தரை அருகே நெய்வாசல் வாய்க்காலில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பணத்தை விட்டு காயங்களுடன் வாலிபர் உடல் கரை ஒதுங்கி கிடந்தது.

    இதையடுத்து அந்த வாலிபர் உடலை அம்மாபேட்டை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து இறந்து கிடந்தவர் யார் ? அவரை கொலை செய்து ஆற்றில் வீசியது யார் என்பது குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வந்தனர்.

    போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் இறந்து கிடந்தவர் தஞ்சை அருகே உள்ள திருமலை சமுத்திரம் பகுதியை சேர்ந்த சக்திவேல் (வயது 23 ) என்பதும், அவரை திருமலைசமுத்திரம் அருகே 7 பேர் கொண்ட கும்பல் அரிவாளால் வெட்டி ஆற்றில் வீசியதும், உடல் அம்மாபேட்டை அருகே கரை ஒதுங்கியதும் தெரியவந்தது.

    இதையடுத்து இந்த வழக்கு வல்லம் போலீஸ் நிலையத்துக்கு மாற்றப்பட்டது.

    தொடர்ந்து வல்லம் போலீசார் நடத்திய விசாரணையில், சக்திவேல் அய்யாசாமி பட்டி பகுதியை சேர்ந்த பாலகுரு என்பவரது மகளை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

    பின்னர் வீட்டிற்கு சென்று பாலகுருவிடம் உங்களது மகளை எனக்கு திருமணம் செய்து கொடுக்குமாறு கூறியுள்ளார்.

    அப்போது பாலகுருவுக்கும் சக்திவேலுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

    பின்னர் சக்திவேலை தீர்த்து கட்ட பாலகுரு முடிவு செய்தார்.

    அதன்படி மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் பகுதியை சேர்ந்த கிரிவாசன் (45), மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தை சேர்ந்த கார்த்திகேயன் ( 35), சிவகங்கையை சேர்ந்த சந்தோஷ் ராஜா (39) உள்பட ஆறு பேருடன் சேர்ந்து திருமலை சமுத்திரம் அருகே உள்ள ஒரு இடத்தில் சக்திவேலை அரிவாளால் வெட்டி கொலை செய்து உடலை ஆற்றில் வீசியது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து பாலகுரு, கார்த்திகேயன் உள்பட 7 பேரை கைது செய்தனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×