என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
இளம்பெண் கள்ளக்காதலனுடன் மாயம்?
- 2 குழந்தைகளை தவிக்க விட்டு கள்ளக்காதலனுடன் மாயமான இளம்பெண்ணை தேடிவருகின்றனர்.
- அமீன் சென்னையில் வேலை பார்த்து வருவதால் ஜாரியத்துல் சபரியா தாய் வீட்டில் வசித்து வந்தார்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் ஈசா பள்ளி வாசல் தெருவை சேர்ந்தவர் ஜமீல் கான். இவரது மகள் ஜாரியத்துல் சபரியா (வயது25). இவருக்கும் அமீன் என்பவருக்கும் கடந்த 2014-ம் ஆண்டு திருமணம் நடந்து 2 ஆண் குழந்தைகள் உள்ளனர்.
அமீன் சென்னையில் வேலை பார்த்து வருவதால் ஜாரியத்துல் சபரியா தாய் வீட்டில் வசித்து வந்தார்.
கடந்த 2016-ம் ஆண்டு வீட்டின் அருகே வசிக்கும் நெப்போலியனுக்கும், ஜாரியத்துல் சபரியாவுக்கும் பழக்கம் ஏற்பட்டது. இதையடுத்து 2பேரும் வீட்டை விட்டு வெளி யேறினர். இதனால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் போலீசில் புகார் கொடுத்த னர். போலீசார் ஜாரியத்துல் சபரியாவை மீட்டு ஒப்படைத்தனர்.
இந்த நிலையில் கடந்த 5-ந் தேதி வீட்டில் இருந்த ஜாரியத்துல் சபரியா மீண்டும் 2 குழந்தைகளை தவிக்கவிட்டு மாயமானார். பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தும்அவரை கண்டு பிடிக்க முடியவில்லை.
இதுகுறித்து ராமநாதபுரம் பஜார் போலீசில் பெண் னின் தாயார் புகார் செய்தார். இது தொடர்பாக இன்ஸ்பெக்டர் ரஞ்சித் வழக்குப்பதிவு செய்த போலீசார் ஜாரியத்துல் சபரியா ஏற்கனவே மாயமான நெப்போலியனுடம் சென்றி ருக்கலாம் என சந்தேகிக்க ப்படுகிறது. எனவே நெப்போ லியனை போலீசார் தேடி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்