search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இளம்பெண்ணை உல்லாசத்திற்கு  அழைத்த வாலிபர் ஜெயிலில் அடைப்பு
    X

    இளம்பெண்ணை உல்லாசத்திற்கு அழைத்த வாலிபர் ஜெயிலில் அடைப்பு

    • இளம்பெண் ஒருவரை அவருக்கு தெரியாமல் ஆபாசமாக செல்போனில் படம் எடுத்துள்ளார்.
    • பிறகு அந்த படத்தை காட்டி தனது ஆசைக்கு இணங்கி உல்லாசமாக இருக்க வரும்படி தொந்தரவு செய்துள்ளார்.

    சேலம்:

    சேலம் மல்லூர் பாரப்பட்டி மேச்சேரியாம்பா ளையத்தை சேர்ந்தவர் செல்வகுமார் (வயது 32). இவர், இளம்பெண் ஒருவரை அவருக்கு தெரியாமல் ஆபாசமாக செல்போனில் படம் எடுத்துள்ளார். பிறகு அந்த படத்தை காட்டி தனது ஆசைக்கு இணங்கி உல்லாசமாக இருக்க வரும்படி தொந்தரவு செய்துள்ளார். மேலும் அந்த படத்தை வாட்ஸ் அப்பிலும் அனுப்பி உள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் இது பற்றி தனது கணவரிடம் தெரிவித்தார்.

    இதையடுத்து மல்லூர் போலீஸ் நிலையத்தில் செல்வகுமார் மீது புகார் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் வினோத்குமார் விசாரணை நடத்தி, ஆபாசமாக படம் எடுத்து கொலை மிரட்டல் விடுத்தல், பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, செல்வகுமாரை கைது செய்து சேலம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, சேலம் மத்திய ெஜயிலில் அடைத்தார்.

    Next Story
    ×